Jump to content

ஓதியமலை படுகொலை - 36ஆவது நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

1984ஆம் ஆண்டு ஒதியமலையில் இலங்கை இராணுவத்தால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,  அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சனசமூக நிலைய வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது.

உயிரிழந்தவர்களை நினைத்து, அவர்களது உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, ஒதியமலை பிள்ளையார் கோவிலில் ஆத்மா சாந்தி பூஜைகளும் நடைபெற்றன. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சத்தியசீலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tamilmirror Online || 36ஆவது நினைவேந்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிக்குளம் படுகொலை

Cheddikulam-Massacre-1984.12.02.jpg

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வாழ்கின்றார்கள்.

1984.12.02 அன்று இராணுவத்தினரால் செட்டிகுளப் பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் செட்டிக்குளம் கிராமத்தினை காலை 5.30 மணியளவில் சுற்றிவளைக்கத் தொடங்கினார்கள். கிராம மக்களில் கூடுதலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். செட்டிகுள கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் கிராம மக்களில் ஆண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். இவர்களில் ஐம்பத்திரண்டு பேரைச் செட்டிகுளச் சந்தியில் வைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி மதவாச்சிக்குக் கொண்டு சென்றனர்.

இதன்பின் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இவர்கள் மதவாச்சியிலுள்ள ஓர் சிங்களக் கிராமத்தில் வைத்து இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனரென்றும் குற்றுயிராக இருந்தவர்கள் மீது டோசரை ஏற்றிக் கொன்றனரென்றும் செட்டக்குள மக்கள் கூறுகின்றனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியரான தி.யேசுதாசன் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில்…

“ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஐம்பத்திரண்டு ஆண்களைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் எனது தம்பியும் எனது அக்காவின் கணவரும் உயிரிழந்தனர். அத்துடன் எனது வீட்டில் வேலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்பு அவ்வூர் மக்கள் வன்னி, மடு, இந்தியா போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.”

02.12.1984 அன்று செட்டிக்குளப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:

01. சூசைப்பிள்ளை கிறிஸ்துராசா (வயது 32 – கமம்)
02. இராசையா.
03. இராமசாமி பொன்னுத்துரை (வயது 45 – கமம்)
04. ஊர்கனசாமி (வயது 23 – கமம்)
05. கந்தையா
06. கந்தையா கெங்காரட்ணம்
07. குமார் மோகன்
08. குமார் வரதராசா (வயது 19 – வியாபாரம்)
09. குருகுலசாமி (வயது 23 – கமம்)
10. குலசேகரம்பிள்ளை யூஜின் (வயது 18 – கமம்)
11. பாண்டியன் பெரியரசு
12. பி.அருள்பிரகாசம் (வயது 30 – கமம்)
13. பிலிப்பையா அருள்பிரகாசம் (வயது 38 – கமம்)
14. பரமலிங்கம் பரமநாதன்
15. ஐயம்பிள்ளை பரமநாதன் (வயது 33 – விவசாயம்)
16. துரையப்பா நாதன்
17. முத்துசாமி கோணார் கோபால்
18. முருகேசு சங்கரப்பிள்ளை (வயது 38 – தொழிலாளி)
19. அப்பாப்பிள்ளை வெற்றிவேற்பிள்ளை (கமம்)
20. அல்பின் றொபின்சன் (வயது 26 – கமம்)
21. அல்வின் அந்தோனிஸ்ரி வின்சன (வயது 24 – தச்சுத் தொழில்)
22. அல்வின் அலைக்சாண்டர் (வயது 21 – தச்சுத் தொழில்)
23. அல்வின் அன்ரன்
24. பொன்னுத்துரை கிறிஸ்துராசா
25. பொன்னுத்துரை தனநாயகம்
26. டொண்பொஸ்கோ றொமன்
27. சௌந்தரராசன் புஸ்பராசன் (வயது 27 – மரவேலை)
28. செல்லையா யூட்
29. செல்லையா கேதீஸ்வரன் (வயது 28 – கமம்)
30. செல்லர் மூர்த்தி
31. செல்லர் மகேந்திரன்
32. வேதநாயகம் செபமாலை(வயது 31 – கமம்)
33. வேலுப்பிள்ளை சிவபாலசிங்கம் (வயது 35 – விவசாயம்)
34. சந்தணப்பிள்ளை இருதையராசா (வயது 25 – கமம்)
35. சின்னக்குட்டி கந்தசாமி
36. சிவகணேசன்
37. சங்கரப்பிள்ளை பாலேந்திரன் (வயது 29 – கமம்)
38. வடிவேல் அசோக்குமார்
39. விநாயகமூர்த்தி யோகநாதன் (வயது 24 – கமம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

https://thesakkatru.com/cheddikulam-massacre-1984/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ், சிங்கள மக்கள் ஒரு நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை காட்டுகின்றது

D
1-14.jpg
 48 Views
‘தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” என சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்துள்ளார்.
 

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்  சிவசக்தி ஆனந்தன்  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து  அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும்  ஒதியமலை பகுதியில் 32பேரும்   செட்டிகுளம் பகுதியில் 22பேரும்  மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

FB_IMG_1606921165306.jpg

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த் ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர்.

இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை  செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும்(02-12-2020) வழமைபோன்று  உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.எனினும்,செட்டிகுளம் பகுதியில் பொலிஸார் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை  நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துச் சென்றிருக்கின்றார்கள்.

FB_IMG_1606921168815.jpg

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக பொலிஸார் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக் கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 
FB_IMG_1606921177101.jpg
இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர்நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” என்றார்.

 

https://www.ilakku.org/இலங்கை-அரசாங்கத்தின்-நடவ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.