Jump to content

யாழ்ப்பாணத்தில் வீதியில் கிடந்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்தில் சிக்கியவர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

neethu-300x160.jpg
யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்குச் சென்று திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீத்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய வேளை, எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணித்தார்.

குறித்த மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

கழிப்பு கழிக்கிறதெண்டு நீத்து பூசணிக்காயை நடு  றோட்டிலை உடைச்சிருக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீத்துப் பூசணிக்காயை வெட்டி நடு றோட்டில போடுபவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் ...வர,வர யாழ்ப்பாணம் மூட நம்பிக்கையின் கூடாராமாய் மாறிட்டு வருது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

யாழ்ப்பாணத்தில் மட்டுமா மூடநம்பிக்கை..

லண்டனில் மட்டும் என்னவாம்.

புதுக்கார் வாங்கினால்.. பூசனிக்காய் உடைப்பு.. நாலு சில்லுக்கும் தேசிக்காய் வைச்சு நசுக்கல்.. வீட்டு வாசலில் தேசிக்காய்.. மிளகாய் கோர்த்துக்கட்டல்... இப்படி எத்தனையோ கூத்துக்களை நம்மவர்கள் அரங்கேற்றினமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

கழிப்பு கழிப்பது போன்ற மூடச்செயல்களில் ஈடுபடுவது அவரவர் தனி உரிமை. உங்கள் வீட்டுக்குள் என்ன கறுமத்தையாவது செய்யுங்கள்.

ஆனால் இப்படி வீதியில் போட்டு உடைத்து, கழிப்பு கழித்து ஒரு குடும்பத்தையே சாபத்தில் தள்ளி விட்டவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலை குற்றம் சாட்ட முடியாவிட்டாலும், கவனயீனம் காரணமாக சாவை ஏற்படுத்தியமைக்கு manslaughter வழக்கு போட்டு உள்ளே தள்ளினால்தான் அடுத்து ரோட்டில் பூசணியை உடைக்கும் போது யோசிப்பார்கள்.

இப்படி எழுதலாம் என்றுதான் நினைத்தேன், பிறகு கொஞ்சம் ஆற, அமர யோசித்துப்பார்த்தால், பிழை ரோட்டு கூட்டுபவர்கள் மீதும் வாகனமோட்டி மீதும்தான் என்று உறைத்தது.

வீதி நெடுகிலும் சிசிடிவி வைத்தும், டிரோன்கள் மூலமும், வீதியில் வீசப்படும் பூசணிகளை அடையாளம் கண்டு அரை மணிக்குள் நீக்கி இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டது இலங்கை அரசின் ஒரு அங்கமான ரோட்டு கூட்டுவோரின் பிழை.

இதை தமிழர்கள் மீதான அடக்குமுறையின் ஒரு அங்கம் எனவும் பார்கிறேன். 

அதைபோல, வாகன ஓட்டியும் வீதியில் பூசணி சிதறி கிடந்தால், அப்படியே திரும்பி மாற்றுபாதை வழியாக போய் இருக்கலாம்.

இதை எல்லாம் விடுத்து, மத அனுஸ்டானம் நிமித்தம் பூசணியை வீதியில் விட்டெறிந்தவரை நிந்திப்பது, அவர் தமிழ் இந்து என்பதாலேதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்படி நீத்துப் பூசணிக்காயை வெட்டி நடு றோட்டில போடுபவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும் ...வர,வர யாழ்ப்பாணம் மூட நம்பிக்கையின் கூடாராமாய் மாறிட்டு வருது 

யாழ்ப்பாணத்தான்  பூசணிக்காயை வீட்டு முகட்டிலை கட்டிலாலும் சரி ரோட்டிலை போட்டு உடைச்சாலும் சரி அது மோட்டு மூட நம்பிக்கை. அதையே வெள்ளைக்காரன் செய்தால் கலோவின். கலோவின் வாழ்த்துக்கள்.

இலங்கை வீதிகள் ஐரோப்பிய வீதிகள் போல் பாதுகாப்பானது இல்லை. எனவே வாகன ஓட்டுனர்களுக்கு இப்படியானம் இடைஞ்சல்கள் பழக்கப்பட்டதாகவே இருக்கும். நடு ரோட்டில் மாடுகள் நாய்கள் என படுத்திருக்கும் நாட்டில் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

யாழ்ப்பாணத்தில் மட்டுமா மூடநம்பிக்கை..

லண்டனில் மட்டும் என்னவாம்.

புதுக்கார் வாங்கினால்.. பூசனிக்காய் உடைப்பு.. நாலு சில்லுக்கும் தேசிக்காய் வைச்சு நசுக்கல்.. வீட்டு வாசலில் தேசிக்காய்.. மிளகாய் கோர்த்துக்கட்டல்... இப்படி எத்தனையோ கூத்துக்களை நம்மவர்கள் அரங்கேற்றினமே... 

நெடுக்கர்  அதுமட்டுமா ஊரிலை கழிப்பு செய்யும் பச்சை பூசணிக்காய் இங்கு கிழமைக்கு 500 கிலோ தேவை ஆந்திராகாரர்களின் முக்கிய உணவே அதுதான் அத்துடன் கோங்குரா எனப்படும் புளிச்ச கீரை இருந்தால் காணும் அவர்களுக்கு .

கேட்டால் உடம்பு ஊளைச்சதையை குறைக்குமாம் என்கிறார்கள் உண்மையோ தெரியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

தவிர்க்கப்படக் கூடிய விபத்து. வீதிபரிபாலனத்தாரின் கவனக்குறைவும் வாகனமோட்டுவோரின்.. அதிமேதாவித்தனமும் தான் இதற்கு முக்கிய காரணம். 

 

5 hours ago, goshan_che said:

மத அனுஸ்டானம் நிமித்தம் பூசணியை வீதியில் விட்டெறிந்தவரை நிந்திப்பது, அவர் தமிழ் இந்து என்பதாலேதான்.

 

5 hours ago, குமாரசாமி said:

இலங்கை வீதிகள் ஐரோப்பிய வீதிகள் போல் பாதுகாப்பானது இல்லை. எனவே வாகன ஓட்டுனர்களுக்கு இப்படியானம் இடைஞ்சல்கள் பழக்கப்பட்டதாகவே இருக்கும். நடு ரோட்டில் மாடுகள் நாய்கள் என படுத்திருக்கும் நாட்டில் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!

ஆயுத பூஜை; சாலைகளில் பூசணி உடைத்து விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை:  போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தல் | Action taken in case of accident,  pumpkin breaking on roads Advice ...

பூசணிக்காயை வீதியில் உடைத்துவிட்டு, 
அதற்கு சிவப்பு குங்குமம் பூசி விட்டுதான் செல்வார்கள்.
சிவப்பு என்பதன் அடையாளம், பாத்து கவனமாக போகவேண்டும் என்பதை...
எச்சரிக்கை, செய்வதற்காக பூசப் படுவதை, 
வாகன ஓட்டிகள் கவனிக்காமல் இருப்பதால்.. இப்படியான விபத்துகள் ஏற்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

 

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் சில பரிகாரங்கள்...!

ஆயுத பூஜை; சாலைகளில் பூசணி உடைத்து விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை:  போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தல் | Action taken in case of accident,  pumpkin breaking on roads Advice ...

பூசணிக்காயை வீதியில் உடைத்துவிட்டு, 
அதற்கு சிவப்பு குங்குமம் பூசி விட்டுதான் செல்வார்கள்.
சிவப்பு என்பதன் அடையாளம், பாத்து கவனமாக போகவேண்டும் என்பதை...
எச்சரிக்கை, செய்வதற்காக பூசப் படுவதை, 
வாகன ஓட்டிகள் கவனிக்காமல் இருப்பதால்.. இப்படியான விபத்துகள் ஏற்படுகின்றது. 

உண்மைதான்,

வீதி விளக்குகள் இல்லாத நிலையில், மம்மல் அல்லது இருட்டில் வரும் வாகன ஓட்டிகளும் பூசணியை இனம் காணும் வகையில், பூசணியை சுற்றி போக்கஸ் லைட் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காமல் விட்டது வீதிபரிபாலனத்தாரின் அசட்டையையே காட்டுகிறது.

எது எப்படியோ ஒரு வீதியின் பிரதான பயன்பாடு என்ன? பூசனியை போட்டு உடைப்பதுதானே? வீதியை ஏதோ போக்குவரத்துக்கு கட்டியது போல நினைக்கிறார்கள் இந்த வாகன ஓட்டிகள்.

பூசனி உடைக்கும் இடத்தால் கவனகுறைவாக வாகனம் ஓட்டியவர் சாவது அவரது தவறு.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

உண்மைதான்,

வீதி விளக்குகள் இல்லாத நிலையில், மம்மல் அல்லது இருட்டில் வரும் வாகன ஓட்டிகளும் பூசணியை இனம் காணும் வகையில், பூசணியை சுற்றி போக்கஸ் லைட் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காமல் விட்டது வீதிபரிபாலனத்தாரின் அசட்டையையே காட்டுகிறது.

எது எப்படியோ ஒரு வீதியின் பிரதான பயன்பாடு என்ன? பூசனியை போட்டு உடைப்பதுதானே? வீதியை ஏதோ போக்குவரத்துக்கு கட்டியது போல நினைக்கிறார்கள் இந்த வாகன ஓட்டிகள்.

பூசனி உடைக்கும் இடத்தால் கவனகுறைவாக வாகனம் ஓட்டியவர் சாவது அவரது தவறு.

சுவிற்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மூடன் இப்படி பூசனிக்காயை நடு ரோட்டில் உடைத்து கழிப்பு கழிப்பது போன்ற முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயலை செய்து ஒரு விபத்தை உண்டாக்கி இருந்தால்  அந்த மூடன் வாழ்ககை முழுவதும் நினைத்து நினைத்து வருந்தும் அளவுக்கு தண்டனையை பெற்று இருப்பான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

சுவிற்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மூடன் இப்படி பூசனிக்காயை நடு ரோட்டில் உடைத்து கழிப்பு கழிப்பது போன்ற முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயலை செய்து ஒரு விபத்தை உண்டாக்கி இருந்தால்  அந்த மூடன் வாழ்ககை முழுவதும் நினைத்து நினைத்து வருந்தும் அளவுக்கு தண்டனையை பெற்று இருப்பான். 

இதற்குத்தான் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்கிறோம். ஐரோப்பாவைப்போல் சட்டங்களை அரசியலை கொண்டுவாருங்கள் என்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, tulpen said:

சுவிற்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மூடன் இப்படி பூசனிக்காயை நடு ரோட்டில் உடைத்து கழிப்பு கழிப்பது போன்ற முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயலை செய்து ஒரு விபத்தை உண்டாக்கி இருந்தால்  அந்த மூடன் வாழ்ககை முழுவதும் நினைத்து நினைத்து வருந்தும் அளவுக்கு தண்டனையை பெற்று இருப்பான். 

தனிமனித பொறுப்புகூறல் அறவே அற்ற சமூகம் நாம். நாம் நடுரோட்டில் அசுத்தம் செய்வோம் ஆனால் நம் மீது ஒரு தவறும் இல்லை, அதை அள்ளாத உள்ளூராட்சி சபை மீதுதான் பிழை என்போம்🤣

இந்த எண்ணபோக்கை மாற்றாதவரை என்ன சட்டம் போட்டும் பலனில்லை. 

ஊரில் இருந்து ஐரோப்பா வந்து பல பத்து ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், பூசணிக்காயில்தான் பிழை, தோட்டம் வைத்த விவசாயி பூசணியை நீர்தன்மையாக வளர்த்ததுதான் பிழை என எழுதும், பூசணிகாயை நடுரோடில் எறிந்த முட்டாளின் தப்பை கண்டுகொள்ள முடியாத எம் உறவுகளுக்கே எம்மால் சொல்லி விளங்கபடுத்த முடியவில்லை.

இதை போய் இலங்கையில் 24 மில்லியனுக்கு சொல்லி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தனிமனித பொறுப்புகூறல் அறவே அற்ற சமூகம் நாம். நாம் நடுரோட்டில் அசுத்தம் செய்வோம் ஆனால் நம் மீது ஒரு தவறும் இல்லை, அதை அள்ளாத உள்ளூராட்சி சபை மீதுதான் பிழை என்போம்🤣

இந்த எண்ணபோக்கை மாற்றாதவரை என்ன சட்டம் போட்டும் பலனில்லை. 

ஊரில் இருந்து ஐரோப்பா வந்து பல பத்து ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், பூசணிக்காயில்தான் பிழை, தோட்டம் வைத்த விவசாயி பூசணியை நீர்தன்மையாக வளர்த்ததுதான் பிழை என எழுதும், பூசணிகாயை நடுரோடில் எறிந்த முட்டாளின் தப்பை கண்டுகொள்ள முடியாத எம் உறவுகளுக்கே எம்மால் சொல்லி விளங்கபடுத்த முடியவில்லை.

இதை போய் இலங்கையில் 24 மில்லியனுக்கு சொல்லி......

வீதி விபத்துகள் தொடர்பான செய்திகளில் வரும் இன்னுமொரு கருத்து இன்னும் வரவில்லை: "இனவாத சிங்கள பௌத்த அரசு, வீதிகளை தமிழர் பகுதிகளில் ஒரு shoulder கூட இல்லாமல் வைத்திருப்பதால் தான் இப்படியான விபத்துகள் நடக்கின்றன!" 

(பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!)

Link to comment
Share on other sites

17 minutes ago, goshan_che said:

தனிமனித பொறுப்புகூறல் அறவே அற்ற சமூகம் நாம். நாம் நடுரோட்டில் அசுத்தம் செய்வோம் ஆனால் நம் மீது ஒரு தவறும் இல்லை, அதை அள்ளாத உள்ளூராட்சி சபை மீதுதான் பிழை என்போம்🤣

இந்த எண்ணபோக்கை மாற்றாதவரை என்ன சட்டம் போட்டும் பலனில்லை. 

ஊரில் இருந்து ஐரோப்பா வந்து பல பத்து ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், பூசணிக்காயில்தான் பிழை, தோட்டம் வைத்த விவசாயி பூசணியை நீர்தன்மையாக வளர்த்ததுதான் பிழை என எழுதும், பூசணிகாயை நடுரோடில் எறிந்த முட்டாளின் தப்பை கண்டுகொள்ள முடியாத எம் உறவுகளுக்கே எம்மால் சொல்லி விளங்கபடுத்த முடியவில்லை.

இதை போய் இலங்கையில் 24 மில்லியனுக்கு சொல்லி......

சரியாக சொன்னீர்கள் கோஷான். 2009 ல் ஜெனீவா பேரணிக்கு சென்ற தமிழர்களின் பஸ் உண்வு அருந்துவதற்காக ஒரு motorway rest area வில் நிறுத்தப்பட்டு பின் புறப்பட்ட பின்னர் சில மீற்றர்களில் அந்த service area  பராமரி்ப்பாளரால்  நிறுத்தப்பட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்துமாறு பணிக்கப்பட்டனர். பார்கக அருவருக்கும்   அளவுக்கு மிக மோசமாக அந்த இடத்தை  ஆக்விகிவிட்டு  செல்ல முற்பட்டவர்கள் அனைவரும் தமக்கு  சுதந்திர நாடு வேண்டி முழக்கமிட சென்றவர்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

இதற்குத்தான் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்கிறோம். ஐரோப்பாவைப்போல் சட்டங்களை அரசியலை கொண்டுவாருங்கள் என்கிறோம்.

ஏதோ நீங்கள் இலங்கை அரசியலை மாற்றுங்கள் என்று கூற நாங்கள் தான் மாற்றவிடமல் இழுத்து பிடித்து வைத்திருப்பது போலிருக்கிறது உங்கள் கதை.

மகிந்த, கோத்தபாய போன்ற அதி உச்ச இனவெறியர்கள்  பதவிக்கு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திய அரசியல் அறிவிலிகளிடம் நீங்கள்  கேட்டிருக்கவேண்டும் இந்த கேள்வியை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

வீதி விபத்துகள் தொடர்பான செய்திகளில் வரும் இன்னுமொரு கருத்து இன்னும் வரவில்லை: "இனவாத சிங்கள பௌத்த அரசு, வீதிகளை தமிழர் பகுதிகளில் ஒரு shoulder கூட இல்லாமல் வைத்திருப்பதால் தான் இப்படியான விபத்துகள் நடக்கின்றன!" 

(பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!)

வீதியோரங்களில் சுச்சா போகும் இடங்களை ஏற்படுத்தி கொடுக்காமை அரசாத்தின் பிழை. ஐரோப்பாவில் இருப்பது போல் சேர்விஸ் ஸ்டேசன்களை இலங்கை அரசு ஏன் கட்டவில்லை?

அரசு கட்டித்தரவில்லை என்றால் நாங்கள் நடுவீதியில்தானே போகமுடியும்?

ஏதாவது ஒரு தேனீர்கடையில் ஓரமாக பாதுகாப்பாக நிப்பாடி விட்டு போகலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது - அதெல்லாம் எமது கலாச்சாரத்துக்கு ஒவ்வாது. 

அதனால் சுச்சா-நிறுத்தத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு.

தமது பகுதிகளில் மட்டும் வண்டியை பெருந்தெருவில் இருந்து இறக்கி ஓரம் கட்டிவிட்டு சுச்சா போகும் சிங்கள டிரைவர்மார் எமது பகுதியில் இப்படி செய்வது structural genocide இன்னொரு அங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கும் வீதிக்கும்  வித்தியாசம் தெரியாத சனத்திடம் எதை  எதிபார்க்கமுடியும்????

ஒரு உயிர் போச்சு

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள் கோஷான். 2009 ல் ஜெனீவா பேரணிக்கு சென்ற தமிழர்களின் பஸ் உண்வு அருந்துவதற்காக ஒரு motorway rest area வில் நிறுத்தப்பட்டு பின் புறப்பட்ட பின்னர் சில மீற்றர்களில் அந்த service area  பராமரி்ப்பாளரால்  நிறுத்தப்பட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்துமாறு பணிக்கப்பட்டனர். பார்கக அருவருக்கும்   அளவுக்கு மிக மோசமாக அந்த இடத்தை  ஆக்விகிவிட்டு  செல்ல முற்பட்டவர்கள் அனைவரும் தமக்கு  சுதந்திர நாடு வேண்டி முழக்கமிட சென்றவர்கள். 

நீங்கள் இதை சொல்லும் போது இன்னுமொன்று நினைவில் வந்தது - வெஸ்மினிஸ்டர் போராட்டகாலத்தில் ஓரளவு வயது வந்தவர்கள் சாப்பிட்ட பொருட்களை ஆங்காங்கே போட, அதே போராட்டத்தில் கலந்து கொண்ட இளவயது TYO பிள்ளைகள் bin bagஉம் கையுமாக அவற்றை பொறுக்கி, பொறுக்கி எடுதார்கள். 

ஆனால் 2009 க்கு முன் புலிகள் ஏற்பாடு செய்த மிகபெரிய கூட்டங்களில் கூட மிக ஒழுக்கமாக, நேர்தியாக நடைமுறைள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பூசணிக்காயை விடுங்கள், ஏ 9 வீதியை கார்பெற் வீதியாக மாற்றி, வாகனங்களின் வேகம் கூடிய பின்னரும், 20 தொன் ரிப்பர் லொறியை வீதியிலேயே நிறுத்தி வைத்து விட்டு சாரதி சுச்சா போகிற அளவுக்குத் தான் எங்கள் மக்களின் சமூக அக்கறை இருக்கிறது!

சுச்சா போறதுக்கு வீதியோரங்களில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு தூரம் மலசல கூடங்கள் கட்டி ஒழுங்கு செய்வது அரச கடமை. அது பொது மக்களாகிய குப்பன் சுப்பன் வேலையல்ல....வெளிநாடு வந்தும் இந்த அறிவு வரேல்லை எண்டால்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.