Jump to content

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு


Recommended Posts

லாலு பிரசாத் யாதவ்
 

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு

 

எல்லா தேர்தலைக் காட்டிலும் பீகார் தேர்தல் விறுவிறுப்போடு கடந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்லூரியில் தொடங்கிய லாலுவின் முற்போக்கு அரசியல் பயணம்

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள புல்வாரியா எனும் கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த லாலு,  பாட்னாவில் உள்ள பி.என் கல்லூரிக்கு நடந்தே தினமும் சென்றார்.  கல்லூரியில் பின்தங்கிய மாணவர்களுக்கான பேருந்து வசதிக்குப் போராடியதில் துவங்கியது அவரது அரசியல். 1973-ம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழக மாணவர் தலைவராக வெற்றி பெற்றார். அரசியல் பின்புலமும், சாதிய பின்புலமும், பண பலமும் கொண்டவர்களின்  வாரிசுகளை வீழ்த்தியதில் துவங்குகிறது அவரது வெற்றிப் பயணம். 

நிலப்பிரபுக்களின் கோட்டையாகவும், பெரும்பாலான நிலம், கல்வி அரசியல், அதிகாரம் என அனைத்தும் உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்த பீகாரில் இருந்து வரும் லாலு, அனைவருக்கும் விடுதலை எனும் கொள்கை கொண்ட சோசலிசவாதியான ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரோடு இணைகிறார்.

கல்லூரி காலத்திலேயே ABVP-க்கு எதிராக வேலை செய்த லாலு

ஜெயபிராகாஷ் நாராயணன் (எ) ஜெ.பி தலைமையில் அவருக்கு நெருக்கமான இளம் தலைவராக உருவாகினார். இதே காலகட்டத்தில் பாட்னா பல்கலைக்கழகத்தில் இன்றைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பீகார் பிஜேபி தலைவர் சுஷில்குமார் மோடி போன்ற ABVPஐ சேர்ந்தவர்களும் ஜெ.பி-யின் இயக்கத்தில் இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் லாலு-வின் செல்வாக்கு ABVB-ன் வேலைத்திட்டத்திற்கு எதிராக இருந்ததால், ஜெயபிரகாஷ் நாராயணனிடம் லாலு குறித்து அவதூறுகள் வைப்பதன் மூலம் மாணவர் அரசியலில் இருந்து அவரை அகற்ற நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. 

பீகார் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் மக்கள் தலைவரானார்

லாலுவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் 18.3.1974 அன்று நடந்த பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான். ஜெயபிரகாஷ் நாராயணனின் அழைப்பில் நடந்த போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு, தடியடி, துப்பாக்கிச் சூடு என சகல வழி அடக்குமுறைகளையும்   நிகழ்த்தியது காவல்துறை. துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார் என்கிற வதந்தி பரப்பினர்கள். பீகார் முழுக்க பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் மாணவர் தலைவர் மட்டுமல்ல, மக்கள் தலைவர் என்று நாடறிந்தது அதில்தான். 

ஊடகங்கள் லாலுவை ஜோக்கராகவும், எந்த விவரமும் தெரியாத பாமரனைப் போலவும் காட்டியது. ஆனால் அவர் பி.என் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்ததோடு, அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

lalu2.jpg

மிசா சட்டத்தில் சிறையிலிருந்தபடியே பெற்ற வெற்றி

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் ”மிசா” சட்டத்தில் லாலு கைது செய்யப்பட்டார். நெருக்கடி நிலையை தீவீரமாக எதிர்த்த இளம் தலைவரானார். இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிறகு நடந்த தேர்தல் அது. காங்கிரசைத் தோற்கடித்து மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அப்பொழுது சிறையில் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் லாலு. தனது 29-வது வயதில் மிக இளம் பாராளுமன்ற உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

lalu-and-his-wife.jpg
லாலுவும் அவரது மனைவி ராப்ரியும் தங்கள் இரு மகன்களுடன் / படம்: பிரவீன் ஜெயின்

1990-ல் முதலமைச்சரானார்

1980-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு 1989-ம் ஆண்டு பீகாரின் எதிர்க்கட்சித் தலைவராகிறார். 1990-ல் ஜனதா தளம் பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முதல்வருக்கான போட்டியில் ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார் லாலு. 

1750204_1419941278-1024x649.jpg
முதல்வராக பதவியேற்ற லாலு

அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்திய லாலு

அந்த நாட்களில் லாலு பிற்படுத்தப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற தலைவராக உருவாகியிருந்தார். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மண்டல் கமிஷன் இடஒதுக்கீட்டை உறுதியாக ஆதரித்த தலைவர் அவர்.

கலவர நோக்கத்துடன் ரத யாத்திரை நடத்திய எல்.கே.அத்வானியை செப்டம்பர் 23, 1990 அன்று லாலுபிரசாத் சமஸ்திபூரில் கைது செய்தார். ராம ரத யாத்திரையை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தி பரபரப்பை உருவாக்கினார். வி.பி.சிங் அரசை பாரதிய ஜனதா கட்சி கவிழ்த்த போது, வி.பி.சிங் அரசையும் அவரையும் கடைசிவரை ஆதரித்தவர் லாலு.

 

1990-ம் ஆண்டு அத்வானியின் ரதயாத்திரையின் போது லாலுவின் எச்சரிக்கை

அத்வானியை ஏன் கைது செய்தீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நாட்டைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் என்று பதில் சொன்னார் லாலு. மேலும் ”அத்வானியின் ரதயாத்திரை மண்டல் கமிஷனை அமல்படுத்தியதன் விளைவுதான். இது மண்டலுக்கும் கமண்டலத்திற்குமான போர். இதில் கமண்டலம் நீண்ட நாள் வெல்ல அனுமதிக்க முடியாது” என்று கூறினார். 

OBC இடஒதுக்கீட்டை தடுக்கவே பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் இடித்தது என்றார்

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கவே பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் இடித்தது என்று உறுதியாகக் கூறுவார் லாலு. அதனை அவர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு பத்திரிகையாளர்களிடம் பேட்டியாகக் கூறினார்.

அப்போது லாலு பேசிய கீழ்காணும் வார்த்தைகள் முக்கியமானவை. 

“சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த இந்தியா அதன் மதச்சார்பற்ற செயல்பாடுகளால் கொண்டிருந்த புகழ் உலகறிந்தது. சங் பரிவாரங்களும், அதன் கிளை இந்துத்துவ அமைப்புகளும் எப்போதுமே அந்த புகழை சீர்குலைக்கும் முயற்சிகளோடு இயங்கி வருபவை. இனவாதமும், பிரிவினையும்தான் அவற்றின் கொள்கைகள்.

மண்டல் கமிஷனின் இடஒதுக்கீடு குறித்தான அறிக்கைக்குப் பின்னர், இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் நலன் அதிகரித்தது. அதைப் பலவீனப் படுத்துவதற்காகவே பாபர் மசூதி இடிப்பு நடத்தப்பட்டது. இடிக்கப்பட்டது பாபர் மசூதி என்றாலும், நொறுங்கிச் சிதறியது இந்திய தேசத்தின் இதயம்தான்.”

பீகார் முதல்வராக லாலு நிகழ்த்திய அதிரடிகள்

பீகாரின் முதல்வராக லாலு இருந்த காலத்தில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் அற்புதமானவை.

  • அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர் பாட்னா கோல்ஃப் மைதானத்தை அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது, 
  • பணக்காரர்களின் பொழுதுபோக்கு இடமாக  இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீத இடத்தை கையகப்படுத்தி ஏழை பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீட்டு திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான சமூகக் கூடமாக்கியது,
  • தலித்துகளுக்கு வீட்டு வசதியை உருவாக்கியது

என முக்கியமான விடயங்களை லாலு மேற்கொண்டார்.

லாலு மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு 

1995-ம் ஆண்டு மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார். ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை பதவி விலகச் செய்தார்கள். தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். 1997-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். 

2000-ம் ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தலிலும் மக்கள் ஆதரவோடு ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. மாநில முதல்வர் பதவியை மனைவியிடம் கொடுத்த லாலு, பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார்.

பாஜக-வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்

1990-ம் ஆண்டு லாலு ஆட்சியை பிடிக்கும்போது, பாரதிய ஜனதா கட்சி  39 சட்டமன்ற உறுப்பினர்களோடு, 11.61% வாக்குகளோடு மூன்றாவது பெரிய கட்சியாக தன் சித்தாந்த எதிரியான லாலுவை வீழ்த்த வழி தேடிக் கொண்டிருந்தது. 

ஏனென்றால் 1990-ல் ஆட்சிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, ஜனதா தளம் கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சி உருவாகிற போதே அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் லாலு. பாஜக தலைவராக இருந்த வாஜ்பாய் பிரிட்டிஷ் ஆதரவாளராக செயல்பட்டதை லாலு அம்பலப்படுத்தினார். 

அதனைத் தொடர்ந்து தேவிலால் 1989-ம் ஆண்டு அகில இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் சங்கத்தின் சார்பாக ”வெள்ளையானே வேளியேறு இயக்கத்தினை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்த வாஜ்பாய் மிகப் பெரிய தேசபக்தர்” என்று துண்டறிக்கைகள் வெளியிடக் காரணமாக இருந்தது லாலுதான்.  

பாராளுமன்றத்தில் சாவர்க்கர் படம் வைக்க எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் சாவர்க்கர் படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டவருக்கு பாராளுமன்றத்தில் படம் திறக்கக் கூடாது என்று மக்களைவையில் பேசினார். அப்போது வாஜ்பாய் எதிர்த்ததையும் மீறி முழங்கினார். 

கோல்வால்கரின் Bunch Of Thoughts எரிப்பு

தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ் தத்துவ மூலமான கோல்வால்கரின் ’Bunch of Thoughts’ புத்தகத்தை எடுத்துச் சென்று மக்கள் திரளை அந்த புத்தகத்தை எரிக்க சொல்லி, முதல் ஆளாக அவரே எரித்தார். 

1990-ம் ஆண்டு காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே பாஜக எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருந்தார்.  

லாலுவை வீழ்த்த பாஜகவால் முன்னிறுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக முகம் நிதிஷ்குமார்

இப்படிப்பட்ட லாலுவை பாஜகவால் நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தான் இன்னொரு பிற்படுத்தப்பட்ட முகமான நிதிஷ்குமார் தேர்தெடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார். ஆமாம் நிதிஷ் குமாரின் முதுகில் ஏறி பாஜக வளரவில்லை. பாஜக தன் முதுகில் நிதிஷ்குமாரை ஏற்றி லாலுவிற்கு எதிராக வளர்த்தது. 

1995-ல் லாலு ஆட்சியைப் பிடித்த இரண்டவது தேர்தலில் 41 இடங்களைப் பிடித்து பாஜக எதிர்க்கட்சியாக வந்த போது, நிதிஷ் குமாரின் ’சமதா கட்சி’ பெற்ற வெற்றிகள் வெறும் 7 இடங்கள் 7.1% வாக்குகள் தான். 

1996-ம் ஆண்டு தன்னை சோசலிஸ்டாக மண்டலுக்குப் பின்னான தலைமையாக அடையாளம் காட்டிக் கொண்டிருந்த நிதிஷ் குமார்தான், தன் கைப்பாவையாக இருப்பதற்கான ஆளாக பாஜக தேர்வு செய்கிறது. அதன்பின் நிதிஷ் குமாரை அரசியலில் முன்னுக்கு இழுத்து வருகிறது பாஜக. 

2000-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 67 இடங்களைப் பெற்று இரண்டாவதாகவும், நிதிஷ்குமார் 34 இடங்களைப் பெற்று மூன்றாவது  கட்சியாகவும் தான் வந்தார். இந்த நிதிஷ் குமாரைத்தான் 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 88 இடங்களில் வெற்றி பெறவைத்து கூட்டணியாக ஆட்சியில் ஏற்றியது பாஜக.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் 19 இடங்களையும், 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 23 இடங்களையும் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த பாஜக, மண்டலுக்குப் பின்னான அரசியலில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவராக நிற்கும் லாலுவை வீழ்த்த குர்மி இனத்தின் நிதிஷ்குமாரை முன்னிறுத்தியது. 

665451-nitish-prasad-pti-1024x576.jpg
நிதிஷ் குமார் மற்றும் ரவிசங்கர் பிரசாத்

தொடர்ந்து பாஜக கூட்டணியிலேயே ஆட்சியில் இருந்த நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் ஆட்சியில் இருக்கும் மூன்று ஆட்சிக் காலங்களில், தனித்து பெரும்பான்மை பெற்றது 2010-ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் மட்டும்தான். அதுவும் பாஜக கூட்டணியில் பெற்ற வெற்றிதான். 

2015-ம் ஆண்டு நிதிஷ்குமாரின் கட்சியை விட, லாலுவின் கட்சி 9 இடங்கள் அதிகம் பெற்றிருந்த போதும், நிதிஷ்குமாரின் வாக்குகளைப் பெற்றுதான் ஆர்.ஜே.டி வெற்றி பெற்றதாகக் கூறினார்கள். இந்த தேர்தல் எது உண்மை என்று நிரூபித்திருக்கிறது.

லாலுவின் சமுக சீர்திருத்தங்களை, சமூக நீதிக் கொள்கைகளை எல்லாம் இருட்டடிப்பு செய்து அவரை ஊழல்வாதியாகக் கட்டமைத்த ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்-சின் கைப்பாவையாய் மாறிப் போன நிதிஷ்குமாரை புகழ்ந்து எழுதிக் கொண்டிருந்தன. 

ரயில்வே அமைச்சராக லாலுவின் சாதனை

லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ரயில்வே துறை எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 15 ஏப்ரல் 2006, Washington Times ஊடகம் உலகின் அதிக அளவு வேலைக்கு ஆட்களை நியமித்தவர் லாலு என்று அறிவித்தது. ஏறக்குறைய 15 லட்சம் பணியாட்களை நியமித்தார். அதிக அளவு பணியாட்களை நியமித்தும், ரயில் கட்டணத்தை உயர்த்தாமல் 15.5% அதிக லாபத்தைக் கொண்டுவந்தவர் லாலு. 

நிதிஷ்குமாரும், லாலுவும்

நிதிஷ் குமாரின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் 1996-ம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை அவர் பாஜக-வோடு தான் இருக்கிறார். 2010-ம் ஆண்டில் தனி பெரும்பான்மை கிடைத்திருந்து, 2013-ம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மட்டும் தான் இடையில் உறவை முறித்திருந்தார். அது தன்னை முன்னிறுத்தவில்லை என்கிற ஆதங்கமே தவிர, கொள்கை முரண் அல்ல. 

ஆனால் ஆர்.எஸ்.எஸ்-சை எதிர்ப்பதை தன் கொள்கையாகக் கொண்ட லாலுவோ, 2015-ம் ஆண்டின் தேர்தலில் தான் வெற்றி பெற்ற இடங்களை விட, நிதிஷ் குமார் கட்சி குறைவாகவே வென்றிருந்தாலும், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுத்தார். 

ஆனால் நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் மாஞ்சியை பிரித்து தனிக் கட்சியை உருவாக்கியது பாஜக. அப்படி தன்னை பலவீனப்படுத்திய பின்பும், தன் கொள்கை தலைமையான பாஜகவிடம் ஒரே ஆண்டில் சரணடைந்தார் நிதிஷ்குமார். 

சமதா கட்சியாக இருந்தாலும், ஐக்கிய ஜனதா தளமாக இருந்தாலும் நிதிஷ்குமார் ஆர்.எஸ்.எஸ் கைப்பாவையாகத் தான் இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயணன் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பை முன்வைத்த போது வெளியேறாமல் அங்கேயே தங்கிய ஆர் எஸ்.எஸ்காரர் என்று சொல்லும் படிதான் நிதிஷ்குமாரின் செயல்பாடுகள் இருந்தது.  

எனவே நிதிஷ்குமாரை வைத்து பாஜக அங்கு வளரவில்லை. பாஜகதான் தன் சித்தாந்த எதிரியான லாலுவை வீழ்த்துவதற்காக அவரை வளர்த்தது.

2020 தேர்தலில் இடர்பாடுகளை தகர்த்து தனிப்பெரும் சக்தியாக நிற்கும் ஆர்.ஜே.டி

1973-ம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழகத்திலும், ஜெ.பி இயக்கத்திலும் என ஆர்.எஸ்.எஸ் ஊடுருவிய அனைத்து இடங்களிலும் தத்துவார்த்த போர் நிகழ்த்திய லாலுவை அரசியல் அரங்கில் இருந்து நீக்க வேலை நடந்தது. ஊழல் குற்றச்சாட்டு, சிறை என்று லாலு மொத்தமாக முடக்கப்பட்ட பின்னரும், இன்று அவரது மகன் தேஜஸ்வி தலைமையில் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்த வரலாறுப் பின்புலத்தில் இருந்துதான், நிதிஷ் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, நாங்கள் பிஜேபியை எதிர்த்து நிற்கிறோம் என்றார் தேஜஸ்வி. அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆளும்கட்சி அதிகாரம், ஊடகம், தேர்தல் முறைகேடு என்று சாம தான பேத தண்ட வழிகளைக் கையாண்டு பாஜக வென்றிருக்கலாம். ஆனால் மண்டலுக்கும் கமண்டலத்திற்குமான இந்த போரில் கமண்டலம் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

https://madrasradicals.com/politics/one-has-to-know-lalus-history-to-understand-the-bihar-election/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.