Jump to content

தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்

-புருஜோத்தமன் தங்கமயில்

மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.   

அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.  

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரோக்கியமான எண்ணங்களையும் அதை நோக்கிய செயற்பாடுகளையும் வரவேற்பதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வெளியை, அதிக சந்தர்ப்பங்களில் இல்லாமல் செய்வது, குறுகிய சுயநல நோக்குடைய அரசியல்வாதிகளும் அவர்களின் இணக்க சக்திகளும் ஆகும்.   

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை என்று தொடங்கி, மக்களின் ஆதரவைப் பெற்ற தரப்புகள், ஒற்றைப்படையான சிந்தனைப் போக்கால், களத்திலிருந்து காணாமல் போயிருக்கின்றன. அவ்வப்போது, ஊடக அறிக்கைகளின் வழியாக, சில நாள்களுக்குத் தம்மை உயிர்ப்பித்துக் கொள்கின்றன.   

அரசியல் கூட்டமைப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் குறிப்பிட்டளவு நம்பிக்கை இழப்பைச் சந்தித்து நிற்கின்றது. ஒரு கட்டத்தில், ஏக அங்கிகாரத்துக்கு அண்மித்த மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த தரப்பு, அதைப் பெருமளவு இழந்து, தோல்விகரமான கட்டமைப்பாக இன்று மாறி நிற்கின்றது.  

கடந்த பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கு பூராவும் தமிழ்த் தேசிய கட்சிகள், பாரிய பின்னடைவைச் சந்தித்தன. அந்தப் பின்னடைவு, ஒரு தனித்த கூட்டமைப்புக்கோ கட்சிக்கோ உரியதாக அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்குமாக உணரப்பட்டது.   

அப்படியான நிலையில், பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுவது என்பது, தவிர்க்க முடியாதது. அதை நோக்கிய கட்டமைப்பு உருவாக்கமாக, தமிழ்த் தேசிய கட்சிகள் பொது வேலைத் திட்டங்களுக்காக ஒருங்கிணைந்தன. சில கட்சிகளுக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், ஊடக வெளி அழுத்தங்களால், அதில் இணைந்து கொண்டன. மாவை சேனாதிராஜா, இந்த ஒருங்கிணைவுக்காகக் கடந்த கால அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்துத் தரப்புகளுடனும் பேசவும் செய்தார்; அப்படித்தான் அவர் காட்டிக் கொண்டார்.  

ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்பது, ஆரம்பம் முதலே குறுகிய நோக்கங்களைக் கொண்டவர்களின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருந்தது. அதை அண்மைய நாள்களில் இடம்பெறும் சம்பவங்கள், எந்தவித சந்தேகமும் இன்றி நிரூபித்து வருகின்றன.   

அதாவது, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்திருப்பவர்களும் இணைந்து நடத்துகின்ற நாடகம் என்பது, இப்போது வௌிப்பட்டு வருகின்றது. இதன் இயக்குநர்களாக, திரைக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவராகிய மாவை சேனாதிராஜா, எந்தவித சிந்தனையுமின்றி சுயநலவாதிகளின் ஏவலுக்கு ஆடத் தொடங்கி இருக்கின்றார். அந்தக் கட்டம், அரசியல் அறம் மறந்த நிலையில் அவர் இயங்குவதை, மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.  

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், வேட்பாளர் தேர்வின் போது, மாவை நடந்து கொண்ட விதமும் தேர்தல் காலத்தில் ஒரே கட்சிக்குள் இடம்பெற்ற குத்து வெட்டுகளைக் கண்டும் காணாமல் இருந்தமையும், அவரைத் தேர்தலில் தோற்கடித்திருந்தது. 

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து கூட, அவரை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. அப்படியான நிலையில், அரசியல் அரங்கில் மீண்டும் தன்னை நிலை நிறுத்துவதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற விடயத்தை, மாவை கையாள எத்தனிக்கிறார்.  

புதிய அரசமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை செவ்வாய்க்கிழமை (01) தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு அறிவித்தது. குறித்த குழுவில், அரசமைப்புக் குறித்த பரந்துபட்ட அறிவுள்ள யாரும் உள்ளடக்கப்படவில்லை. அத்தோடு, அந்தக் குழுவிலுள்ள அனைவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.   

ஏற்கெனவே, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிகளே கூடிப் பேசுகின்றன; யாழ்ப்பாணத்துக்கு வெளியிலுள்ள யாரையும் உள்வாங்குகிறார்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு.   

அப்படியான நிலையில், அரசமைப்பு யோசனைகளுக்கான குழுவில், துறைசார் நிபுணரோ, வடக்கு - கிழக்கை உள்ளடக்கிய பிரதிநிதித்துவமோ இல்லை என்பது, தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்பதைத் தவிர, வேறு எப்படிக் கொள்வது.  

தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகளுக்கு, தங்களின் மீதான ஊடகக் கவனம் மிக முக்கியமானது. தாங்கள் செய்யும் எல்லாமும், ஊடகங்களில் வெளிவர வேண்டும்; மக்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.   

இலங்கையில் தேர்தல்களில், துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்தால், அவர்கள் மீதான ஊடகக் கவனம் என்பது குறைந்துவிடும். வேண்டுமென்றால், சொந்தமாக ஊடக நிறுவனங்களை வைத்திருந்தால், புதிது புதிதாக ஏதாவது செய்து ஊடகங்களில் செய்திகளை வௌிவரச் செய்யலாம்.  

 தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ள பலரும், கடந்த பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோல்வியைச் சந்தித்தவர்கள். அவர்கள் ஊடகக் கவனம் பெறும் நோக்கிலேயே, இவ்வாறான ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ செயற்பாடுகளை செய்துவருகிறார்கள் என்கிற முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது.  

ஏற்கெனவே தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தேசிய ஆதரவுத் தரப்பினரை உள்ளடக்கிய கட்டமைப்பொன்றை, உருவாக்கப் போவதாக மாவை ஊடகங்களிடம் அறிவித்திருந்தார். அதில், நவநீதம்பிள்ளை, ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்களையும் உள்ளடக்குவது சார்ந்து பேசியிருந்தார். ஆனால், அப்போதும் அது, அடுத்த கட்டத்துக்கு வழி சொல்லாத ஊடக உரையாடலாகவே முடிந்தது. ஜஸ்மின் சூகா அவ்வாறான கட்டமைப்பொன்றில் இணையும் எண்ணமில்லை என்று அறிவித்தும் இருந்தார்.  

அரசியல் என்பதே, எதிரும் புதிருமான தரப்புகளின் ஊடாடல்தான். ஆனால், ஒரே கட்சிக்குள் அல்லது, ஒரே கூட்டமைப்புக்குள் காணப்படும் குளறுபடிகளை, இன்னொரு கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று சிந்திப்பது அபத்தமானது.  

 மாவையும், தன்னை முன்னிறுத்திக் கொண்டு, இப்போது தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைப்பு என்கிற பெயரில் நிகழ்த்தும் நாடகமும் அதுசார்ந்ததுதான். தூர நோக்கற்ற சிந்தனைகளால் உருவாகும் எதுவும், இவ்வாறான பிற்போக்குத்தனமான வடிவங்களாகவே முடியும்.  

ஏற்கெனவே பெரும் நம்பிக்கைகளோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களுக்கு பாரிய துரோகம் செய்து காணாமற்போனது. அதுவும் ஒரு சிலரின் தேர்தல் அரசியலுக்காக இயங்கி மறைந்தது. பேரவையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.   

ஆனால், ஏற்கெனவே ‘சூடு’கண்டுவிட்ட மக்கள், அதை அவ்வளவு இலகுவாக நம்பிவிட மாட்டார்கள். அதுவும், ஒருங்கிணைவு நாடகத்தின் காட்சிகள் வெளிப்படையாகவே, சுயநல போக்கைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில், மக்கள் அதன் மேல் அக்கறை கொள்ளமாட்டார்கள்.  

ராஜபக்‌ஷக்கள் கொண்டுவர நினைக்கும் அரசமைப்பு என்பது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கும். அதில், யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னராக, அரசமைப்புக்கான யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையானது, சும்மா ஒப்புக்கானது. சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் எதையும் அவர்கள் கண்டுகொள்ளவே போவதில்லை.  

அப்படியான நிலையில், துறைசார் நிபுணத்துவம் இல்லாதவர்களும் தனித்த யாழ்ப்பாண அரசியல்வாதிகளும் இணைந்து, அரசமைப்பு யோசனைகளை முன்வைப்பதால், பெரிய பிரச்சினையில்லை என்று கடந்துவிடலாம்தான். ஆனால், அதன் யோசனைகள் உள்வாங்கப்படாவிட்டாலும், கடந்த காலங்கள் தோறும் தமிழ்த் தரப்புகள் முன்வைத்துள்ள அரசமைப்பு யோசனைகள் கவனம் பெற்று வந்திருகின்றன.  

ஏனெனில், அவை பெரும்பாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை, அனைத்துப் பிரதேசங்களினதும் எண்ணப்பாடுகளை உள்வாங்கி, துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருகின்றன. அவை, வெற்று ஆவணமாக இருந்தாலும் அவற்றுக்கென்று ஒரு தார்மீகம் இருகின்றது. அந்தத் தார்மீகத்தை தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவுக் குழு, தகர்க்கும் வேலைகளைச் செய்திருக்கின்றது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசியத்தின்-பெயரில்-யாழில்-கூடும்-சில-சுயநலவாதிகள்/91-260380

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.