Jump to content

தேடும் கண்கள்


Recommended Posts

நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது...

ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது....

அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது...

அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது...

தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது...

தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது....

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றோடு அம்மாவை இழந்து எட்டு மாதங்கள்.எங்கள் வீட்டிலும் வீட்டு சுவரில் அம்மாவின் படம் பார்க்கும் போதெல்லாம் எல்லாம் மனதை ரணப்படுத்தி செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ்நிலா said:

நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது...

ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது....

அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது...

அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது...

தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது...

தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது....

-தமிழ்நிலா.

பாருங்கள், தொலைந்த அல்லது மறைந்த மனைவியை நினைத்து எப்படி ஒரு ஆண் உருகுகிறார்..! 🌹

இப்படிப்பட்ட கணவரை விட்டு பிரிய எப்படி மனம் வந்தது, கல்நெஞ்சக்காரி. 😔

 

Link to comment
Share on other sites

2 minutes ago, ராசவன்னியன் said:

பாருங்கள், தொலைந்த அல்லது மறைந்த மனைவியை நினைத்து எப்படி ஒரு ஆண் உருகுகிறார்..! 🌹

இப்படிப்பட்ட கணவரை விட்டு பிரிய எப்படி மனம் வந்தது, கல்நெஞ்சக்காரி. 😔

 

இல்லை...இது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்...ஏன் ஆண் தான் எனக் கருதுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ்நிலா said:

இல்லை...இது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம்...ஏன் ஆண் தான் எனக் கருதுகின்றீர்கள்?

யம்மா, அது என் பார்வையில் அப்படி தோன்றியது, அதை எழுதினேன்.
ஒவ்வொருத்தரின் பார்வையும் மாறுபடும்தானே..?

Link to comment
Share on other sites

20 minutes ago, ராசவன்னியன் said:

யம்மா, அது என் பார்வையில் அப்படி தோன்றியது, அதை எழுதினேன்.
ஒவ்வொருத்தரின் பார்வையும் மாறுபடும்தானே..?

அப்படியென்றால் சரி...

Link to comment
Share on other sites

14 hours ago, யாயினி said:

இன்றோடு அம்மாவை இழந்து எட்டு மாதங்கள்.எங்கள் வீட்டிலும் வீட்டு சுவரில் அம்மாவின் படம் பார்க்கும் போதெல்லாம் எல்லாம் மனதை ரணப்படுத்தி செல்லும்.

உண்மை தான் எம்மை விட்டுப் பிரிந்த அன்பானவர்களின்/அன்புக்குரியவர்களின் நிழற்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதை ரணப்படுத்திச் செல்லும்😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் தரும் ரணம் என்றுமே ஆறாதது......ஆனால் அதையும் கடந்துதான் ஆகவேண்டும்.....நல்ல கவிதை.....பாராட்டுக்கள்.....!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 10:47, தமிழ்நிலா said:

நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது...

ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது....

அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது...

அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது...

தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது...

தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது....

-தமிழ்நிலா.

தேடும் கண்களுக்கும் தெரியாது - உன்

தோள் சாயத் துடிக்கும் மனதிற்கும் தெரியாது

கூடச் சேர்ந்து நடக்க எண்ணும் கால்களுக்கும் தெரியாது - உன்

நாமம் உச்சரிக்கும் உதடுகளுக்கும் தெரியாது

தினமும் திண்டாடும் நினைவுக்கும் தெரியாது

இன்று என் வீட்டு சுவற்றில் சிரித்தபடி தொங்கும் -  நீ

எட்டாத தூரத்தில் இனி எப்போதும் இல்லையென்று.

 

கோவிக்கக் கூடாது கன நாளைக்குப் பிறகு உங்கள் வரிகளை பார்க்க ஆசையாக இருந்தது. சரி உங்களைக் கொஞ்சம் கொப்பி பண்ணி சுருக்கி எழுதிப் பார்த்தேன்.

நல்லதொரு ஆக்கம் தமிழ்நிலா வாழ்த்துகள்

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, வல்வை சகாறா said:

தேடும் கண்களுக்கும் தெரியாது - உன்

தோள் சாயத் துடிக்கும் மனதிற்கும் தெரியாது

கூடச் சேர்ந்து நடக்க எண்ணும் கால்களுக்கும் தெரியாது - உன்

நாமம் உச்சரிக்கும் உதடுகளுக்கும் தெரியாது

தினமும் திண்டாடும் நினைவுக்கும் தெரியாது

இன்று என் வீட்டு சுவற்றில் சிரித்தபடி தொங்கும் -  நீ

எட்டாத தூரத்தில் இனி எப்போதும் இல்லையென்று.

 

கோவிக்கக் கூடாது கன நாளைக்குப் பிறகு உங்கள் வரிகளை பார்க்க ஆசையாக இருந்தது. சரி உங்களைக் கொஞ்சம் கொப்பி பண்ணி சுருக்கி எழுதிப் பார்த்தேன்.

நல்லதொரு ஆக்கம் தமிழ்நிலா வாழ்த்துகள்

 

 

மிக்க நன்றிகள் சகாறா அக்கா...உச்களது சுருக்கிய ஆக்கமும் மிக அழகாக உள்ளது👍🏽🙏😊

On 12/5/2020 at 12:07, suvy said:

மரணம் தரும் ரணம் என்றுமே ஆறாதது......ஆனால் அதையும் கடந்துதான் ஆகவேண்டும்.....நல்ல கவிதை.....பாராட்டுக்கள்.....!   👍

மிக்க நன்றிகள்🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.