Jump to content

கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் – சரத் வீரசேகரவின் இனவாதப் பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“விடுதலை புலிப் பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறானது. புலிகளை அழித்தது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்”

இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (03) நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார்.

அத்துடன்,

ஹிட்டலர் மரணமடைந்த பின்னர் அவரது நாசி கட்சி அழிந்து போனது என்பதை சுட்டிக்காட்டியே அக்கருத்தை குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி எம்பி நளின் பண்டார, ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் ஒரு கட்சி. நீங்கள் கருணாவையும், பிள்ளையானையும் மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டு கூட்டமைப்பை தடை செய்ய சொல்கிறீர்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று கடுமையாக தெரிவித்தார்.

மேலும் ‘பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு சரத் வீரசேகர வெக்கமற்று கூட்டமைப்பை தடை செய்யுமாறு கூறுகிறார்’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் - சரத் வீரசேகரவின் இனவாதப் பேச்சு! | NewUthayan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தை பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே சிங்கள அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போச்சுது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை தோற்கடித்தவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்திருக்கவேண்டும் – சரத்வீரசேகர

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த பின்னர் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு
மகிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று அழிவாக மாறியுள்ளது.
ஜேர்மனியின் ஹிட்லர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவரது அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது.

sarath-weerasekara-00-300x182.png
உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை நாம் தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாததன் காரணமாக அவர்கள் இன்று இத்தைகய கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
நாம் செய்தது தவறாகும், நாம் செய்த தவறை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய கருத்தினை வெளியிடுவார்கள் என்றால் அவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக அவர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர் என தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/95052

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

சிறில்மத்யூவின் மறு பிறப்பு  சரத் வீரசேகர.

உண்மைதான். காலத்துக்கு காலம் இப்படியான இனவாதிகள் உதித்துக்கொண்டுதான் இருப்பார்கள். விமல், கம்மன்பில எல்லோரும் இவரது கால் தூசுக்கு வர்மடடார்கள். அப்படி இனவெறியால் உடம்பு நிறைந்து போய் இருக்குது. பாவம் மனுஷன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த பதவிக்கனத்தில் ரொம்ப துள்ளுறார். துள்ளுற துள்ளலில் கால் பிசகி  கவுண்டு விழவும் கூடும், எழுந்திருக்கவும் முடியாமற் போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து தெரிவது என்ன எம்மவர்கள் என்னதான் குனிந்து குட்டக்கொடுத்தாலும் சிங்களன்.. நல்லவை என்று சொல்லமாட்டான். 

சிங்களவர்களின் ஆழ்மனதில்.. தமிழர்களை அழிக்கனும் என்ற சிந்தனை தான் குறிப்பாக சிங்கள இனப்படுகொலை இராணுவத்தில் அது குவிந்து கிடக்கிறது. இவர்களை இப்படியே இந்த உலகில் விட்டு வைப்பது உலக மனித இனத்துக்கே ஆபத்தானது.

இவன் போலவே தான் சரத்தும் பேசுறான்.. கோத்தாவும் பேசுறான். இவங்கள் வாங்கின அடி அப்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் மிகத்தெளிவாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.