Jump to content

ஜெகத் கஸ்பார் ராஜ் அடிகளார்


Recommended Posts

இணைப்புக்கு மிகவும் நன்றி நுணாவிலான். அறிந்து கொள்ள விரும்பிய பல சம்பவங்களை இந்த நேர்காணல் மூலம் அறிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நேர்காணல்.

முதல் படியாக சாதாரணமாகப் பேசுங்கள் சம்பாசியுங்கள் என்பது பிடித்திருந்தது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த நேர்காணலை செய்தவருக்கு ஒரு சபாஷ். மிக் நேர்தியாக, மிக அசெளகரியமான கேள்விகளை கூட, நெறியோடு கேட்டார். துளியும் பக்கம் சாராமல். 

இணைத்த நுணாவிற்கும் நன்றி.

ஜெகத் கஸ்பரில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த பேட்டியில் அரை இறுதியில் அவர் சொன்ன விடயம் அத்தனையும் பொருள்.

முதல் பாதியில் - ஜனவரியில் ஒரு 100 நாள் யுத்த நிறுத்தத்தையாவது கொண்டுவர வாய்பிருந்தும் புலிகள் அதை ஏற்காமல் விட, அப்போது அதிமுக அணியில் இருந்த அரசியல்வாதிகள் பிரபா மீது பிரயோகித்ய அழுத்தமே காரணம் என்கிறார்.

வைகோ வை சொல்கிறார் போலும். அப்படி என்றால் வைகோவின் அரசியல் கோமாளித்தனதுக்கு தமிழ் இனம் கொடுத்த பெருவிலையாக அது இருக்கும்.

ஆனால் யுத்த முடிவில் நிகழ்ந்தவை பற்றி நெறியாளரும் கேட்கவில்லை. கஸ்பரும் சொல்லவில்லை என்பது ஒரு பெரிய சந்தேகம்தான்.

சீமானின் பின்னால் போகும் மடமை பற்றி சொன்னதில் முரண்பட ஏதும் இல்லை.

அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து மே18 ஐயும், நெவம்பர் 27 ஐயும் உலகளாவி செய்ய வேண்டும் என்பது நல்ல ஐடியாதான். ஆனால் ஆளையாள் பழிக்கும் இனத்தில் -லண்டனிலேயே ரெண்டு மாவீரர்நாள் - இது சாத்தியமா?

தற்போதைய புவிசார் அரசியல் பற்றியும் தெளிவான பார்வை. Why should New Delhi care? என்பது அர்த்தம் பொதிந்த கேள்வி.

இங்கே பல கருத்தாளர்கள், இந்தியாவை, அதன் வெளியுறவு நகர்வை, மிக மட்டமாக எடை போடு நக்கல் அடிக்கும் போது -நானும் நினைத்துக் கொள்வேன் - these guys don’t have any idea about the ways in which Indian diplomacy works என்று. கஸ்பர் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர். மிக சரியாக புது டில்லியின் wait and see அணுகுமுறையை கணித்துள்ளார்.

இவரை போலவே நானும் பைடன் வெல்வதை விரும்பினாலும், டிரம்ப் வென்றால் நமக்கு அதனால் collateral benefit கிடைக்குமோ என்றும் யோசித்துள்ளேன்.

கடைசியாக - இவர் உண்மையிலேயே புது டில்லியின் ஏஜெண்ட் என்றால் - இப்போ இந்த காணொளி, விளக்கம் எல்லாம் கொடுப்பது அவர்கள் மீள இதில் தீர்க்கமாக இறங்க தலைப்படுகிறர்கள் என்பதை காட்டுவதாயும் அமையலாம். 

On 3/12/2020 at 21:14, nunavilan said:

 

ஜெகத் கஸ்பார் ராஜ் அடிகளார்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

முதலில் இந்த நேர்காணலை செய்தவருக்கு ஒரு சபாஷ். மிக் நேர்தியாக, மிக அசெளகரியமான கேள்விகளை கூட, நெறியோடு கேட்டார். துளியும் பக்கம் சாராமல். 

இணைத்த நுணாவிற்கும் நன்றி.

ஜெகத் கஸ்பரில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த பேட்டியில் அரை இறுதியில் அவர் சொன்ன விடயம் அத்தனையும் பொருள்.

முதல் பாதியில் - ஜனவரியில் ஒரு 100 நாள் யுத்த நிறுத்தத்தையாவது கொண்டுவர வாய்பிருந்தும் புலிகள் அதை ஏற்காமல் விட, அப்போது அதிமுக அணியில் இருந்த அரசியல்வாதிகள் பிரபா மீது பிரயோகித்ய அழுத்தமே காரணம் என்கிறார்.

வைகோ வை சொல்கிறார் போலும். அப்படி என்றால் வைகோவின் அரசியல் கோமாளித்தனதுக்கு தமிழ் இனம் கொடுத்த பெருவிலையாக அது இருக்கும்.

ஆனால் யுத்த முடிவில் நிகழ்ந்தவை பற்றி நெறியாளரும் கேட்கவில்லை. கஸ்பரும் சொல்லவில்லை என்பது ஒரு பெரிய சந்தேகம்தான்.

சீமானின் பின்னால் போகும் மடமை பற்றி சொன்னதில் முரண்பட ஏதும் இல்லை.

அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து மே18 ஐயும், நெவம்பர் 27 ஐயும் உலகளாவி செய்ய வேண்டும் என்பது நல்ல ஐடியாதான். ஆனால் ஆளையாள் பழிக்கும் இனத்தில் -லண்டனிலேயே ரெண்டு மாவீரர்நாள் - இது சாத்தியமா?

தற்போதைய புவிசார் அரசியல் பற்றியும் தெளிவான பார்வை. Why should New Delhi care? என்பது அர்த்தம் பொதிந்த கேள்வி.

இங்கே பல கருத்தாளர்கள், இந்தியாவை, அதன் வெளியுறவு நகர்வை, மிக மட்டமாக எடை போடு நக்கல் அடிக்கும் போது -நானும் நினைத்துக் கொள்வேன் - these guys don’t have any idea about the ways in which Indian diplomacy works என்று. கஸ்பர் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர். மிக சரியாக புது டில்லியின் wait and see அணுகுமுறையை கணித்துள்ளார்.

இவரை போலவே நானும் பைடன் வெல்வதை விரும்பினாலும், டிரம்ப் வென்றால் நமக்கு அதனால் collateral benefit கிடைக்குமோ என்றும் யோசித்துள்ளேன்.

கடைசியாக - இவர் உண்மையிலேயே புது டில்லியின் ஏஜெண்ட் என்றால் - இப்போ இந்த காணொளி, விளக்கம் எல்லாம் கொடுப்பது அவர்கள் மீள இதில் தீர்க்கமாக இறங்க தலைப்படுகிறர்கள் என்பதை காட்டுவதாயும் அமையலாம். 

 

innocent until proven guilty

என்ற வகையில் இவருடைய கடந்த கால சில நடவடிக்கைள் மேல்
எனக்கு சந்தேகம் இருந்தாலும் ...... இவரின் கடந்தகால உழைப்பின் நிமித்தம் 
இவர்மீதும் வைக்கோ மீதும் ஒரு மரியாதை எல்லா தமிழரைபோல எனக்கும் உண்டு.

இவர் இரண்டு முரணான கருத்தை இங்கு முன் வைக்கிறார் 
ஒன்று எல்லா தரப்பும் பேசவேண்டும் என்கிறார் .... புத்திமதி கூறுவது எளிது 
ஆனால் அதை தானே செய்யவும் மறுக்கிறார்.

ஈழத்தமிழர்களின் விடிவு பாதுகாப்பு என்பதை இந்திய மத்திய அரசுக்கு 
அழுத்தம்கொடுக்கும் ஒரு பலமான தமிழக அரசால் செய்யமுடியும் 
அதுக்கான சாத்தியம் நிறையவே உண்டு.

போலி திராவிடத்தை ஆர்ஸ்ஸ் சுக்கு எதிராக இருபத்துக்காக தக்கவைக்க வேண்டும் என்கிறார் 
மத ரீதியான அழுத்தம்தான் இப்போ முதல் எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் 
இதுக்கு அடிப்படையே தமிழன் தன்னை தமிழன் என்று எண்ணாமல் சாதி மதங்களால் 
மேலோங்கி நிற்பதுதான் அடிப்படை காரணம். அதுக்கு ஏன் மீண்டும் ஒரு போலியால் போர்த்து 
மூடவேண்டும்? தமிழன் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தினாலே போதுமே?
தமிழ்த்தேசியம் வேண்டுமானால் பின்னொரு காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் 

இங்குதான் தமிழரின் விடிவுகளை இவர் இரண்டாம் பட்ஷமாகதான் பார்க்கிறார் 
அல்லது ஒரு குழப்பவாதம் தமிழரிடம் தொடர வேண்டும் என்று எண்ணுகிறாரோ என்று 
ஒரு சந்தேகம் வருகிறது.

இந்தியாவின் "வெயிட் அண்ட் சீ" என்ன?
இந்திய வெளிவிவகார கொள்கை என்பது ஒரு நீண்ட எதிர்கால நோக்கு அற்றது 
பிரதமர் முதல் கலக்ட்டர் வரை ஊழலால் உறைந்துகிடக்கும் ஒரு நாட்டில் அதை எதிர்பாக்கவும் 
முடியாது. இந்தியாவிடம் தெளிவு இருந்து இருப்பின் இன்று தெற்கு ஆசியாவில் ஒரு ஆளுமை மிக்க 
நாடக இருக்க கூடிய அனைத்து வளமும் பூகோள அமைவும் இந்தியாவுக்கு சாதகமாகவே கடந்த 50 வருடமாக இருந்தும்  தன்னை சுற்றி ஒரு நேச நாட்டை கூட உருவாக்க முடியாத ஏமாளி நாடாகவே இருக்கிறது.

இன்னமும் 15-20 வருடத்தில் சீனா உலக வல்லரசாகப்போகிறது 
இதை அவர்கள் கடந்த 25-30 வருடங்களாக மிக நேத்தியாகவும் தெளிவாகவும் 
செய்துவருகிறார்கள் எனும்போது தனது சொந்த நாட்டுக்குள் இருக்கும் காசுமீரை கூட 
இன்று இந்தியா முள்ளுக்கம்பியால் வேலிபோட்டு மூடிவைத்திருக்கும் மூட வேலையையே செய்துவருகிறது 70ஆம் ஆண்டில் இருந்து இந்தியா பாதுகாப்புக்கும் போருக்கும் காஸ்மீர் மக்களை கொல்வதுக்கும் செலவழித்த காசில் வெறும் 2 வீதத்தை காஸ்மீரின் மேம்பாட்டுக்கு செலவழித்து காஸ்மீர் முஸ்லிம்களுடன் ஒரு நல்லுறவை பேணி இருப்பின் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்த காஸ்மீரிகளே வந்து இந்தியாவுடன் சேர்ந்து இருப்பார்கள். எல்லை பாதுகாப்பை அவர்களே திறம்பட இன்று செய்துகொண்டும் இருந்து இருப்பார்கள். 

தனது சொந்த இராணுவத்தை அனுப்பி உருவாக்கிய நாடு பங்களாதேஷ் 
இந்தியாவின் கொல்லைக்குள் 160 மில்லியன்களுக்கு க்கு மேலான மக்கள் தொகையை கொண்ட 
ஒரு சந்தை வாய்ப்பு இருக்கும்போது யராவது ஒரு மூடன் அதை கைநழுவி போக விடுவானா? 
இன்று சீனா 0 வரி இறக்குமதி ஒப்பந்தந்தத்தை பங்களாதேசுடன் வெற்றிகரமாக கைச்சாத்திட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சீனா இந்திய எல்லையில் முறுகல் நிலை இருந்தது என்பதுதான் இந்தியாவின் 
தோல்வியை அளவிட தேவையானது.

Bangladeshi PM Sheikh Hasina Meets Chinese President Xi Jinping in Beijing  | India.com

இலங்கை துறைமுக விவகாரம் இங்கு வந்தபோது நான் தெளிவாகவே எழுதினேன் 
இனி சிங்களவனே விரும்பினாலும் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று. அந்த திரியின் கீழ் 
இப்போதும் நாம் எழுதிய கருத்துக்கள் இருக்கிறது. சீனா எந்த முன் எச்சரிக்கையும் இல்லமால் 
பில்லியன் டாலர்களை கொண்டுவந்து கொழும்பு கடலில் கொட்டும் வேலையை செய்யும் ஏமாளி அல்ல. 
சீனாவின் ஒவ்வாரு நகர்வும் 15-20 வருடம் முந்திய திட்டமும் உளவு நட்பு எதிர்கால சிக்கல் போன்றவற்றை அக்குவேறு ஆணிவேறாக சிந்தித்து செயல்படுத்துபவை. உள்ளூர் ஆடசி மாற்றம் அரசியல் மாற்றம் என்பது தேர்தலின்போது மாறுவது  என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்போது  பில்லியன் டொலரை முதலீடு செய்பவனுக்கு  தெரியாமல் இருக்கும் என்ற பாணியிலேயே தமிழ் ஆய்வாளர்கள் எழுதிக்கொண்டு இருப்பார்கள். 

நீங்கள் சீனாவை உன்னிப்பாக கவனித்து வருபவராக இருந்தால் இது எவ்வாறு சாத்தியம் என்பது 
எளிதாக புரியும் அல்லது வைட் அண்ட் சீ பிஸிக்கல் ரீதியான இந்தியாவுக்குள் ஆனா ஊடுருவலை  
சீனா யாழ்ப்பாணத்தில் இருந்து தாழ்நாடு ஊடாகவே செய்யப்போகிறது அதுக்கான நகர்வை சீனா 
பக்குவமாக செய்துவருகிறது.

அமெரிக்க டாலரை உலக ட்ரேட் பணமாக வைத்தே அமேரிக்கா ஆடிவருகிறது என்பதை 
நன்கு அறிந்த சீனா  கடாபி போல நேருக்கு நேர் மோதி அதற்கு பிரதியாக இனொன்றை (பவுன்) கொண்டுவருவதை விடுத்து மெது மெதுவாக மொபைல் பாக்கிங்கை மேம்படுத்தி வந்தது 
இதில் அமேரிக்கா உட்பட நாம் எல்லோருமே சீனாவை மிக குறைத்தே ஏடை போட்டுவந்தோம் 
அதுக்கு அடிப்படை காரணம் அமெரிக்கா கனடா லண்டன் எல்லா இடமும் சந்திக்கு சந்தி வங்கிகள் இருக்கும் நாம் கடன் அடடைகள் மூலமும் வங்கிகள் ஊடாகவும் பண பரிமாற்றத்தை செய்துவந்தால் 
வளர்ச்சி என்பதை இங்கிருப்பதுபோலவே கற்பனை செய்தோம். அதனால் சீனா வளர வேண்டும் என்றால் 
இவாறு ஒரு வங்கி முறை வேண்டும் .... சீனா இங்கு ஒரு வங்கியை கொண்டுவந்தாலும் நம்மில் எத்தனை பேர்  இவை எல்லாம் இருக்கும்போது அதை பயன்படுத்த போகிறோம்? என்றுதான் நானே எண்ணி இருந்தேன் ஆதலினால் 2014இல் சீனா மொபைல் வங்கி ஊடாக $623 பில்லியன்கள்  பண பரிமாற்றம்  நடந்ததாக சொன்னபோது நான் நம்பவில்லை.  

2018இல் சீனா மொபைல் வங்கியின் பண பரிமாற்றம் $41.3 டிரில்லியன்கள் என்றபோதுதான் 
விழிபிதுங்கி நின்றோம். சீனாவின் மொத்த ஜிடிபி யே 2018இல் $13.61 டிரில்லியன்கள். சீனா இப்படி ஒரு 
ஆப்பு  அடித்த பின்புதான் மேலைநாட்டு முதலீட்டாளர் வங்கிகள் இனி பிஸிக்கல் ரீதியான வங்கிகள் 
தேவை இல்லை என்று உணர தொடங்கின ஆனாலும் லண்டன் எப்படியோ தெரியவில்லை அமெரிக்கர்கள் மிலேனிமும் ஜெனெரசன் மட்டுமே மொபைல் வங்கியை பயன்படுத்துகிறார்கள் .... முழு அமெரிக்கர்களும் பயனாளராக  இன்னமும் 10 வருடம் ஆகும் அப்போது சீனா உலகம் பூராக பரவி இருக்கும்.

என்னையும் உங்களையும் உதாரணத்துக்கு எடுத்துப்பாருங்கள் .. யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு $100 அனுப்ப எமது கைத்தொலைபேசியில் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மறு  செகண்ட் 
நண்பனின் கைத்தொலைபேசியில் $100 இருக்கும் என்றால்  யார்தான் இப்போதைய மூன்றாம் நபருக்கு 
கூலி கொடுக்க போகிறான்? நீங்கள் எண்ணுவீர்கள் இதுக்குள் இந்தியா சிக்குமா என்று? நீங்கள் எண்ணி பாருங்கள் உங்கள் தாயார் அல்லது உங்களை நம்பி ஒரு உறவு யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது இப்போ அவர்களுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபையாக மாறி வருடா வருடம் அதன் பெறுமதியை இழப்பதை விரும்புவீர்களா? அல்லது அந்த தொகையை லண்டன் பவுன்சில் வைத்திருக்க விரும்புவீர்களா? இந்தியாவில்  வளர்ந்துவரும்  பணக்காரர்கள் இந்திய ரூபாயில் வங்கியில் சேமித்து வைக்க விரும்புவார்களா? ஒன்லைன்   பிட் கொயின் போன்ற பெறுமதி ஏறும் நாணயத்தை விரும்புவார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக ஒரு ஆயுத போர் நடந்தபோது கூட, மலையகத் தமிழருக்கு ஏனைய தமிழர்களை விட தனித்துவமான சில பிரச்சினைகள் இருந்தன, அதற்காக அவர்கள் சிங்கள அரசுடன் தொடர்பிலோ கூட்டணியிலோ இருக்கலாம் என்பதை போராட்டத் தலைமை ஏற்றுக் கொண்டிருந்தது.

இங்கே சொல்லப் பட்டிருப்பது "இப்போது தமிழக தமிழர்களுக்கு எது பட்டியலில் முதலாவதாக இருக்கும் தேவை" என்பது பற்றிய பட்டவர்த்தனமான கருத்து! கசப்பாக இருந்தாலும் கூட தமிழ் தேசியம் என்பது அந்த பட்டியலில் இப்போது முதலாவதாக இல்லை.

இதை தேர்தலில் மக்கள் வாக்களித்த பின்னர் அறிந்து அதிர்ந்து திட்டித் தீர்ப்பதை விட, இப்பவே ஜெகத் கஸ்பாரிடம் இருந்து அறிந்து கொள்வது நல்லது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

innocent until proven guilty

என்ற வகையில் இவருடைய கடந்த கால சில நடவடிக்கைள் மேல்
எனக்கு சந்தேகம் இருந்தாலும் ...... இவரின் கடந்தகால உழைப்பின் நிமித்தம் 
இவர்மீதும் வைக்கோ மீதும் ஒரு மரியாதை எல்லா தமிழரைபோல எனக்கும் உண்டு.

இவர் இரண்டு முரணான கருத்தை இங்கு முன் வைக்கிறார் 
ஒன்று எல்லா தரப்பும் பேசவேண்டும் என்கிறார் .... புத்திமதி கூறுவது எளிது 
ஆனால் அதை தானே செய்யவும் மறுக்கிறார்.

ஈழத்தமிழர்களின் விடிவு பாதுகாப்பு என்பதை இந்திய மத்திய அரசுக்கு 
அழுத்தம்கொடுக்கும் ஒரு பலமான தமிழக அரசால் செய்யமுடியும் 
அதுக்கான சாத்தியம் நிறையவே உண்டு.

போலி திராவிடத்தை ஆர்ஸ்ஸ் சுக்கு எதிராக இருபத்துக்காக தக்கவைக்க வேண்டும் என்கிறார் 
மத ரீதியான அழுத்தம்தான் இப்போ முதல் எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் 
இதுக்கு அடிப்படையே தமிழன் தன்னை தமிழன் என்று எண்ணாமல் சாதி மதங்களால் 
மேலோங்கி நிற்பதுதான் அடிப்படை காரணம். அதுக்கு ஏன் மீண்டும் ஒரு போலியால் போர்த்து 
மூடவேண்டும்? தமிழன் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தினாலே போதுமே?
தமிழ்த்தேசியம் வேண்டுமானால் பின்னொரு காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் 

இங்குதான் தமிழரின் விடிவுகளை இவர் இரண்டாம் பட்ஷமாகதான் பார்க்கிறார் 
அல்லது ஒரு குழப்பவாதம் தமிழரிடம் தொடர வேண்டும் என்று எண்ணுகிறாரோ என்று 
ஒரு சந்தேகம் வருகிறது.

இந்தியாவின் "வெயிட் அண்ட் சீ" என்ன?
இந்திய வெளிவிவகார கொள்கை என்பது ஒரு நீண்ட எதிர்கால நோக்கு அற்றது 
பிரதமர் முதல் கலக்ட்டர் வரை ஊழலால் உறைந்துகிடக்கும் ஒரு நாட்டில் அதை எதிர்பாக்கவும் 
முடியாது. இந்தியாவிடம் தெளிவு இருந்து இருப்பின் இன்று தெற்கு ஆசியாவில் ஒரு ஆளுமை மிக்க 
நாடக இருக்க கூடிய அனைத்து வளமும் பூகோள அமைவும் இந்தியாவுக்கு சாதகமாகவே கடந்த 50 வருடமாக இருந்தும்  தன்னை சுற்றி ஒரு நேச நாட்டை கூட உருவாக்க முடியாத ஏமாளி நாடாகவே இருக்கிறது.

இன்னமும் 15-20 வருடத்தில் சீனா உலக வல்லரசாகப்போகிறது 
இதை அவர்கள் கடந்த 25-30 வருடங்களாக மிக நேத்தியாகவும் தெளிவாகவும் 
செய்துவருகிறார்கள் எனும்போது தனது சொந்த நாட்டுக்குள் இருக்கும் காசுமீரை கூட 
இன்று இந்தியா முள்ளுக்கம்பியால் வேலிபோட்டு மூடிவைத்திருக்கும் மூட வேலையையே செய்துவருகிறது 70ஆம் ஆண்டில் இருந்து இந்தியா பாதுகாப்புக்கும் போருக்கும் காஸ்மீர் மக்களை கொல்வதுக்கும் செலவழித்த காசில் வெறும் 2 வீதத்தை காஸ்மீரின் மேம்பாட்டுக்கு செலவழித்து காஸ்மீர் முஸ்லிம்களுடன் ஒரு நல்லுறவை பேணி இருப்பின் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்த காஸ்மீரிகளே வந்து இந்தியாவுடன் சேர்ந்து இருப்பார்கள். எல்லை பாதுகாப்பை அவர்களே திறம்பட இன்று செய்துகொண்டும் இருந்து இருப்பார்கள். 

தனது சொந்த இராணுவத்தை அனுப்பி உருவாக்கிய நாடு பங்களாதேஷ் 
இந்தியாவின் கொல்லைக்குள் 160 மில்லியன்களுக்கு க்கு மேலான மக்கள் தொகையை கொண்ட 
ஒரு சந்தை வாய்ப்பு இருக்கும்போது யராவது ஒரு மூடன் அதை கைநழுவி போக விடுவானா? 
இன்று சீனா 0 வரி இறக்குமதி ஒப்பந்தந்தத்தை பங்களாதேசுடன் வெற்றிகரமாக கைச்சாத்திட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சீனா இந்திய எல்லையில் முறுகல் நிலை இருந்தது என்பதுதான் இந்தியாவின் 
தோல்வியை அளவிட தேவையானது.

Bangladeshi PM Sheikh Hasina Meets Chinese President Xi Jinping in Beijing  | India.com

இலங்கை துறைமுக விவகாரம் இங்கு வந்தபோது நான் தெளிவாகவே எழுதினேன் 
இனி சிங்களவனே விரும்பினாலும் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று. அந்த திரியின் கீழ் 
இப்போதும் நாம் எழுதிய கருத்துக்கள் இருக்கிறது. சீனா எந்த முன் எச்சரிக்கையும் இல்லமால் 
பில்லியன் டாலர்களை கொண்டுவந்து கொழும்பு கடலில் கொட்டும் வேலையை செய்யும் ஏமாளி அல்ல. 
சீனாவின் ஒவ்வாரு நகர்வும் 15-20 வருடம் முந்திய திட்டமும் உளவு நட்பு எதிர்கால சிக்கல் போன்றவற்றை அக்குவேறு ஆணிவேறாக சிந்தித்து செயல்படுத்துபவை. உள்ளூர் ஆடசி மாற்றம் அரசியல் மாற்றம் என்பது தேர்தலின்போது மாறுவது  என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்போது  பில்லியன் டொலரை முதலீடு செய்பவனுக்கு  தெரியாமல் இருக்கும் என்ற பாணியிலேயே தமிழ் ஆய்வாளர்கள் எழுதிக்கொண்டு இருப்பார்கள். 

நீங்கள் சீனாவை உன்னிப்பாக கவனித்து வருபவராக இருந்தால் இது எவ்வாறு சாத்தியம் என்பது 
எளிதாக புரியும் அல்லது வைட் அண்ட் சீ பிஸிக்கல் ரீதியான இந்தியாவுக்குள் ஆனா ஊடுருவலை  
சீனா யாழ்ப்பாணத்தில் இருந்து தாழ்நாடு ஊடாகவே செய்யப்போகிறது அதுக்கான நகர்வை சீனா 
பக்குவமாக செய்துவருகிறது.

அமெரிக்க டாலரை உலக ட்ரேட் பணமாக வைத்தே அமேரிக்கா ஆடிவருகிறது என்பதை 
நன்கு அறிந்த சீனா  கடாபி போல நேருக்கு நேர் மோதி அதற்கு பிரதியாக இனொன்றை (பவுன்) கொண்டுவருவதை விடுத்து மெது மெதுவாக மொபைல் பாக்கிங்கை மேம்படுத்தி வந்தது 
இதில் அமேரிக்கா உட்பட நாம் எல்லோருமே சீனாவை மிக குறைத்தே ஏடை போட்டுவந்தோம் 
அதுக்கு அடிப்படை காரணம் அமெரிக்கா கனடா லண்டன் எல்லா இடமும் சந்திக்கு சந்தி வங்கிகள் இருக்கும் நாம் கடன் அடடைகள் மூலமும் வங்கிகள் ஊடாகவும் பண பரிமாற்றத்தை செய்துவந்தால் 
வளர்ச்சி என்பதை இங்கிருப்பதுபோலவே கற்பனை செய்தோம். அதனால் சீனா வளர வேண்டும் என்றால் 
இவாறு ஒரு வங்கி முறை வேண்டும் .... சீனா இங்கு ஒரு வங்கியை கொண்டுவந்தாலும் நம்மில் எத்தனை பேர்  இவை எல்லாம் இருக்கும்போது அதை பயன்படுத்த போகிறோம்? என்றுதான் நானே எண்ணி இருந்தேன் ஆதலினால் 2014இல் சீனா மொபைல் வங்கி ஊடாக $623 பில்லியன்கள்  பண பரிமாற்றம்  நடந்ததாக சொன்னபோது நான் நம்பவில்லை.  

2018இல் சீனா மொபைல் வங்கியின் பண பரிமாற்றம் $41.3 டிரில்லியன்கள் என்றபோதுதான் 
விழிபிதுங்கி நின்றோம். சீனாவின் மொத்த ஜிடிபி யே 2018இல் $13.61 டிரில்லியன்கள். சீனா இப்படி ஒரு 
ஆப்பு  அடித்த பின்புதான் மேலைநாட்டு முதலீட்டாளர் வங்கிகள் இனி பிஸிக்கல் ரீதியான வங்கிகள் 
தேவை இல்லை என்று உணர தொடங்கின ஆனாலும் லண்டன் எப்படியோ தெரியவில்லை அமெரிக்கர்கள் மிலேனிமும் ஜெனெரசன் மட்டுமே மொபைல் வங்கியை பயன்படுத்துகிறார்கள் .... முழு அமெரிக்கர்களும் பயனாளராக  இன்னமும் 10 வருடம் ஆகும் அப்போது சீனா உலகம் பூராக பரவி இருக்கும்.

என்னையும் உங்களையும் உதாரணத்துக்கு எடுத்துப்பாருங்கள் .. யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு $100 அனுப்ப எமது கைத்தொலைபேசியில் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மறு  செகண்ட் 
நண்பனின் கைத்தொலைபேசியில் $100 இருக்கும் என்றால்  யார்தான் இப்போதைய மூன்றாம் நபருக்கு 
கூலி கொடுக்க போகிறான்? நீங்கள் எண்ணுவீர்கள் இதுக்குள் இந்தியா சிக்குமா என்று? நீங்கள் எண்ணி பாருங்கள் உங்கள் தாயார் அல்லது உங்களை நம்பி ஒரு உறவு யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது இப்போ அவர்களுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபையாக மாறி வருடா வருடம் அதன் பெறுமதியை இழப்பதை விரும்புவீர்களா? அல்லது அந்த தொகையை லண்டன் பவுன்சில் வைத்திருக்க விரும்புவீர்களா? இந்தியாவில்  வளர்ந்துவரும்  பணக்காரர்கள் இந்திய ரூபாயில் வங்கியில் சேமித்து வைக்க விரும்புவார்களா? ஒன்லைன்   பிட் கொயின் போன்ற பெறுமதி ஏறும் நாணயத்தை விரும்புவார்களா? 

மருதர்,

பதிலுக்கு நன்றி. உண்மையில் நீங்கள் பல சிந்திக்க வேண்டிய விடயங்களை சொல்லியுள்ளீர்கள்.

இந்த வார இறுதிக்குள் என் கருத்தை பகிர்கிறேன் (வேலையில் பளு திடீரென்று கூடி விட்டது  ☹️). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகத் கஸ்பாரை துரோகின்னு திட்டுனாங்க.. இப்ப... 

ஜெகத் கஸ்பார் ஒரு நல்ல தமிழீழ விருப்புடைய ஊடகவியலாளர் அதற்கு மேல்.. அவர் யாருமில்லை. தேசிய தலைவரின் விசுவாசம் இவர் மீது வர.. தமிழீழ விடுதலைப்போராட்ட யதார்த்தத்தை ஓரளவுக்கேனும்.. தமிழ் பேசும் சர்வதேசப் பரப்பில் ஒலிக்கச் செய்தது தானே தவிர.. வேறு இருக்கச் சாத்தியமில்லை.

2009 தைத் திங்களில்.. ஹிந்தியா ஒரு தூதுவிட்டதாகச் சொல்வதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில்.. அந்தத் தூதை கருணாநிதி மூலமோ அல்லது கனிமொழி மூலமோ செய்திருக்கவே சாத்தியம் அதிகம்.. காரணம் அதுவே திமுகவுக்கு அரசியல் ஆதாயம்.. அதிகமாகும்.

எதுஎப்படியோ... எங்கட உலையை நாங்க தான் எங்கட அடுப்பில வைக்கனும். அடுத்தவன் அடுப்பு தருவான்.. பானை தருவான்.. அரிசி தருவான்.. தீப்பெட்டி தருவான் என்று இருந்தால்.. நிச்சயம் உலை வேகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

innocent until proven guilty

என்ற வகையில் இவருடைய கடந்த கால சில நடவடிக்கைள் மேல்
எனக்கு சந்தேகம் இருந்தாலும் ...... இவரின் கடந்தகால உழைப்பின் நிமித்தம் 
இவர்மீதும் வைக்கோ மீதும் ஒரு மரியாதை எல்லா தமிழரைபோல எனக்கும் உண்டு.

இவர் இரண்டு முரணான கருத்தை இங்கு முன் வைக்கிறார் 
ஒன்று எல்லா தரப்பும் பேசவேண்டும் என்கிறார் .... புத்திமதி கூறுவது எளிது 
ஆனால் அதை தானே செய்யவும் மறுக்கிறார்.

ஈழத்தமிழர்களின் விடிவு பாதுகாப்பு என்பதை இந்திய மத்திய அரசுக்கு 
அழுத்தம்கொடுக்கும் ஒரு பலமான தமிழக அரசால் செய்யமுடியும் 
அதுக்கான சாத்தியம் நிறையவே உண்டு.

போலி திராவிடத்தை ஆர்ஸ்ஸ் சுக்கு எதிராக இருபத்துக்காக தக்கவைக்க வேண்டும் என்கிறார் 
மத ரீதியான அழுத்தம்தான் இப்போ முதல் எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் 
இதுக்கு அடிப்படையே தமிழன் தன்னை தமிழன் என்று எண்ணாமல் சாதி மதங்களால் 
மேலோங்கி நிற்பதுதான் அடிப்படை காரணம். அதுக்கு ஏன் மீண்டும் ஒரு போலியால் போர்த்து 
மூடவேண்டும்? தமிழன் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தினாலே போதுமே?
தமிழ்த்தேசியம் வேண்டுமானால் பின்னொரு காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் 

இங்குதான் தமிழரின் விடிவுகளை இவர் இரண்டாம் பட்ஷமாகதான் பார்க்கிறார் 
அல்லது ஒரு குழப்பவாதம் தமிழரிடம் தொடர வேண்டும் என்று எண்ணுகிறாரோ என்று 
ஒரு சந்தேகம் வருகிறது.

இந்தியாவின் "வெயிட் அண்ட் சீ" என்ன?
இந்திய வெளிவிவகார கொள்கை என்பது ஒரு நீண்ட எதிர்கால நோக்கு அற்றது 
பிரதமர் முதல் கலக்ட்டர் வரை ஊழலால் உறைந்துகிடக்கும் ஒரு நாட்டில் அதை எதிர்பாக்கவும் 
முடியாது. இந்தியாவிடம் தெளிவு இருந்து இருப்பின் இன்று தெற்கு ஆசியாவில் ஒரு ஆளுமை மிக்க 
நாடக இருக்க கூடிய அனைத்து வளமும் பூகோள அமைவும் இந்தியாவுக்கு சாதகமாகவே கடந்த 50 வருடமாக இருந்தும்  தன்னை சுற்றி ஒரு நேச நாட்டை கூட உருவாக்க முடியாத ஏமாளி நாடாகவே இருக்கிறது.

இன்னமும் 15-20 வருடத்தில் சீனா உலக வல்லரசாகப்போகிறது 
இதை அவர்கள் கடந்த 25-30 வருடங்களாக மிக நேத்தியாகவும் தெளிவாகவும் 
செய்துவருகிறார்கள் எனும்போது தனது சொந்த நாட்டுக்குள் இருக்கும் காசுமீரை கூட 
இன்று இந்தியா முள்ளுக்கம்பியால் வேலிபோட்டு மூடிவைத்திருக்கும் மூட வேலையையே செய்துவருகிறது 70ஆம் ஆண்டில் இருந்து இந்தியா பாதுகாப்புக்கும் போருக்கும் காஸ்மீர் மக்களை கொல்வதுக்கும் செலவழித்த காசில் வெறும் 2 வீதத்தை காஸ்மீரின் மேம்பாட்டுக்கு செலவழித்து காஸ்மீர் முஸ்லிம்களுடன் ஒரு நல்லுறவை பேணி இருப்பின் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்த காஸ்மீரிகளே வந்து இந்தியாவுடன் சேர்ந்து இருப்பார்கள். எல்லை பாதுகாப்பை அவர்களே திறம்பட இன்று செய்துகொண்டும் இருந்து இருப்பார்கள். 

தனது சொந்த இராணுவத்தை அனுப்பி உருவாக்கிய நாடு பங்களாதேஷ் 
இந்தியாவின் கொல்லைக்குள் 160 மில்லியன்களுக்கு க்கு மேலான மக்கள் தொகையை கொண்ட 
ஒரு சந்தை வாய்ப்பு இருக்கும்போது யராவது ஒரு மூடன் அதை கைநழுவி போக விடுவானா? 
இன்று சீனா 0 வரி இறக்குமதி ஒப்பந்தந்தத்தை பங்களாதேசுடன் வெற்றிகரமாக கைச்சாத்திட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சீனா இந்திய எல்லையில் முறுகல் நிலை இருந்தது என்பதுதான் இந்தியாவின் 
தோல்வியை அளவிட தேவையானது.

Bangladeshi PM Sheikh Hasina Meets Chinese President Xi Jinping in Beijing  | India.com

இலங்கை துறைமுக விவகாரம் இங்கு வந்தபோது நான் தெளிவாகவே எழுதினேன் 
இனி சிங்களவனே விரும்பினாலும் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று. அந்த திரியின் கீழ் 
இப்போதும் நாம் எழுதிய கருத்துக்கள் இருக்கிறது. சீனா எந்த முன் எச்சரிக்கையும் இல்லமால் 
பில்லியன் டாலர்களை கொண்டுவந்து கொழும்பு கடலில் கொட்டும் வேலையை செய்யும் ஏமாளி அல்ல. 
சீனாவின் ஒவ்வாரு நகர்வும் 15-20 வருடம் முந்திய திட்டமும் உளவு நட்பு எதிர்கால சிக்கல் போன்றவற்றை அக்குவேறு ஆணிவேறாக சிந்தித்து செயல்படுத்துபவை. உள்ளூர் ஆடசி மாற்றம் அரசியல் மாற்றம் என்பது தேர்தலின்போது மாறுவது  என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்போது  பில்லியன் டொலரை முதலீடு செய்பவனுக்கு  தெரியாமல் இருக்கும் என்ற பாணியிலேயே தமிழ் ஆய்வாளர்கள் எழுதிக்கொண்டு இருப்பார்கள். 

நீங்கள் சீனாவை உன்னிப்பாக கவனித்து வருபவராக இருந்தால் இது எவ்வாறு சாத்தியம் என்பது 
எளிதாக புரியும் அல்லது வைட் அண்ட் சீ பிஸிக்கல் ரீதியான இந்தியாவுக்குள் ஆனா ஊடுருவலை  
சீனா யாழ்ப்பாணத்தில் இருந்து தாழ்நாடு ஊடாகவே செய்யப்போகிறது அதுக்கான நகர்வை சீனா 
பக்குவமாக செய்துவருகிறது.

அமெரிக்க டாலரை உலக ட்ரேட் பணமாக வைத்தே அமேரிக்கா ஆடிவருகிறது என்பதை 
நன்கு அறிந்த சீனா  கடாபி போல நேருக்கு நேர் மோதி அதற்கு பிரதியாக இனொன்றை (பவுன்) கொண்டுவருவதை விடுத்து மெது மெதுவாக மொபைல் பாக்கிங்கை மேம்படுத்தி வந்தது 
இதில் அமேரிக்கா உட்பட நாம் எல்லோருமே சீனாவை மிக குறைத்தே ஏடை போட்டுவந்தோம் 
அதுக்கு அடிப்படை காரணம் அமெரிக்கா கனடா லண்டன் எல்லா இடமும் சந்திக்கு சந்தி வங்கிகள் இருக்கும் நாம் கடன் அடடைகள் மூலமும் வங்கிகள் ஊடாகவும் பண பரிமாற்றத்தை செய்துவந்தால் 
வளர்ச்சி என்பதை இங்கிருப்பதுபோலவே கற்பனை செய்தோம். அதனால் சீனா வளர வேண்டும் என்றால் 
இவாறு ஒரு வங்கி முறை வேண்டும் .... சீனா இங்கு ஒரு வங்கியை கொண்டுவந்தாலும் நம்மில் எத்தனை பேர்  இவை எல்லாம் இருக்கும்போது அதை பயன்படுத்த போகிறோம்? என்றுதான் நானே எண்ணி இருந்தேன் ஆதலினால் 2014இல் சீனா மொபைல் வங்கி ஊடாக $623 பில்லியன்கள்  பண பரிமாற்றம்  நடந்ததாக சொன்னபோது நான் நம்பவில்லை.  

2018இல் சீனா மொபைல் வங்கியின் பண பரிமாற்றம் $41.3 டிரில்லியன்கள் என்றபோதுதான் 
விழிபிதுங்கி நின்றோம். சீனாவின் மொத்த ஜிடிபி யே 2018இல் $13.61 டிரில்லியன்கள். சீனா இப்படி ஒரு 
ஆப்பு  அடித்த பின்புதான் மேலைநாட்டு முதலீட்டாளர் வங்கிகள் இனி பிஸிக்கல் ரீதியான வங்கிகள் 
தேவை இல்லை என்று உணர தொடங்கின ஆனாலும் லண்டன் எப்படியோ தெரியவில்லை அமெரிக்கர்கள் மிலேனிமும் ஜெனெரசன் மட்டுமே மொபைல் வங்கியை பயன்படுத்துகிறார்கள் .... முழு அமெரிக்கர்களும் பயனாளராக  இன்னமும் 10 வருடம் ஆகும் அப்போது சீனா உலகம் பூராக பரவி இருக்கும்.

என்னையும் உங்களையும் உதாரணத்துக்கு எடுத்துப்பாருங்கள் .. யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு $100 அனுப்ப எமது கைத்தொலைபேசியில் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மறு  செகண்ட் 
நண்பனின் கைத்தொலைபேசியில் $100 இருக்கும் என்றால்  யார்தான் இப்போதைய மூன்றாம் நபருக்கு 
கூலி கொடுக்க போகிறான்? நீங்கள் எண்ணுவீர்கள் இதுக்குள் இந்தியா சிக்குமா என்று? நீங்கள் எண்ணி பாருங்கள் உங்கள் தாயார் அல்லது உங்களை நம்பி ஒரு உறவு யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது இப்போ அவர்களுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபையாக மாறி வருடா வருடம் அதன் பெறுமதியை இழப்பதை விரும்புவீர்களா? அல்லது அந்த தொகையை லண்டன் பவுன்சில் வைத்திருக்க விரும்புவீர்களா? இந்தியாவில்  வளர்ந்துவரும்  பணக்காரர்கள் இந்திய ரூபாயில் வங்கியில் சேமித்து வைக்க விரும்புவார்களா? ஒன்லைன்   பிட் கொயின் போன்ற பெறுமதி ஏறும் நாணயத்தை விரும்புவார்களா? 

""போட்டுத் தாக்கு"" என்பது இதுதானா.. 😂😂

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2020 at 21:57, goshan_che said:

சீமானின் பின்னால் போகும் மடமை பற்றி சொன்னதில் முரண்பட ஏதும் இல்லை.

 

சீமான் அவர்பாட்டில் தமிழ்த்தேசியத்தைக் கையிலெடுத்து  அதற்காகத் தேசியத் தலைவரையும் தனது வழிகாட்டியாகக்காட்டி, அறிவாயுதம் கொண்டு போராடப் போவதாகச் சொல்கிறார்.   தமிழீழம்பெற உழைக்கப் போவதாகவும் கூறுகிறார்.  இதை வைத்துக்கொண்டு சீமானின் பின்னால் எதைத் தூக்கிக்கொண்டு போகப் போகிறீர்கள்? அல்லது யார்பின்னால் போய்ப் பெரிய புத்திசாலியாகப் போகிறீர்கள்.    திராவிடத்தை இவ்வளவு காலமும் தூக்கிப்பிடித்த கஸ்பா்ராஜ் அடிகளுக்கு தமிழத்தேசியத்தைக் கையிலெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.  அது எவ்வளவு காலமென்று தெரியவில்லை.  தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கப் போகிறாரா?  இலட்சியத்திற்கும் சந்தர்ப்ப வாதத்திற்குமிடையில் நிறைய வேறுபாடு உண்டு.   அடிகளாரின் தற்போதைய நிலைப்பாடு தான் சார்ந்திருக்கும் அணியை வலுப்படுத்துவதேயன்றி தமிழ்த்தேசியமென்னும் இலட்சியத்தை குறிக்கோளாகக் கொண்டதல்ல.  அதற்காகத் தமிழீழத் தேசியவாதிகளையும் பிழையாக வழிநடத்தி எதாவது பலனைக் காணலாமென அவர் எண்ணுகிறார்.   அவர் வரும்போது வரட்டும்,  தமிழீழத் தேசியவாதம் யார் பின்னாலும் போகத்தேவையில்லை.   அதற்கு தமிழ்நாட்டில் யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களை ஆதரித்தாற்போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2020 at 15:15, Maruthankerny said:

innocent until proven guilty

என்ற வகையில் இவருடைய கடந்த கால சில நடவடிக்கைள் மேல்
எனக்கு சந்தேகம் இருந்தாலும் ...... இவரின் கடந்தகால உழைப்பின் நிமித்தம் 
இவர்மீதும் வைக்கோ மீதும் ஒரு மரியாதை எல்லா தமிழரைபோல எனக்கும் உண்டு.

இவர் இரண்டு முரணான கருத்தை இங்கு முன் வைக்கிறார் 
ஒன்று எல்லா தரப்பும் பேசவேண்டும் என்கிறார் .... புத்திமதி கூறுவது எளிது 
ஆனால் அதை தானே செய்யவும் மறுக்கிறார்.

ஈழத்தமிழர்களின் விடிவு பாதுகாப்பு என்பதை இந்திய மத்திய அரசுக்கு 
அழுத்தம்கொடுக்கும் ஒரு பலமான தமிழக அரசால் செய்யமுடியும் 
அதுக்கான சாத்தியம் நிறையவே உண்டு.

போலி திராவிடத்தை ஆர்ஸ்ஸ் சுக்கு எதிராக இருபத்துக்காக தக்கவைக்க வேண்டும் என்கிறார் 
மத ரீதியான அழுத்தம்தான் இப்போ முதல் எதிரி என்று ஏற்றுக்கொள்கிறார் 
இதுக்கு அடிப்படையே தமிழன் தன்னை தமிழன் என்று எண்ணாமல் சாதி மதங்களால் 
மேலோங்கி நிற்பதுதான் அடிப்படை காரணம். அதுக்கு ஏன் மீண்டும் ஒரு போலியால் போர்த்து 
மூடவேண்டும்? தமிழன் தமிழன் என்று தன்னை அடையாளப்படுத்தினாலே போதுமே?
தமிழ்த்தேசியம் வேண்டுமானால் பின்னொரு காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்கிறார் 

இங்குதான் தமிழரின் விடிவுகளை இவர் இரண்டாம் பட்ஷமாகதான் பார்க்கிறார் 
அல்லது ஒரு குழப்பவாதம் தமிழரிடம் தொடர வேண்டும் என்று எண்ணுகிறாரோ என்று 
ஒரு சந்தேகம் வருகிறது.

இந்தியாவின் "வெயிட் அண்ட் சீ" என்ன?
இந்திய வெளிவிவகார கொள்கை என்பது ஒரு நீண்ட எதிர்கால நோக்கு அற்றது 
பிரதமர் முதல் கலக்ட்டர் வரை ஊழலால் உறைந்துகிடக்கும் ஒரு நாட்டில் அதை எதிர்பாக்கவும் 
முடியாது. இந்தியாவிடம் தெளிவு இருந்து இருப்பின் இன்று தெற்கு ஆசியாவில் ஒரு ஆளுமை மிக்க 
நாடக இருக்க கூடிய அனைத்து வளமும் பூகோள அமைவும் இந்தியாவுக்கு சாதகமாகவே கடந்த 50 வருடமாக இருந்தும்  தன்னை சுற்றி ஒரு நேச நாட்டை கூட உருவாக்க முடியாத ஏமாளி நாடாகவே இருக்கிறது.

இன்னமும் 15-20 வருடத்தில் சீனா உலக வல்லரசாகப்போகிறது 
இதை அவர்கள் கடந்த 25-30 வருடங்களாக மிக நேத்தியாகவும் தெளிவாகவும் 
செய்துவருகிறார்கள் எனும்போது தனது சொந்த நாட்டுக்குள் இருக்கும் காசுமீரை கூட 
இன்று இந்தியா முள்ளுக்கம்பியால் வேலிபோட்டு மூடிவைத்திருக்கும் மூட வேலையையே செய்துவருகிறது 70ஆம் ஆண்டில் இருந்து இந்தியா பாதுகாப்புக்கும் போருக்கும் காஸ்மீர் மக்களை கொல்வதுக்கும் செலவழித்த காசில் வெறும் 2 வீதத்தை காஸ்மீரின் மேம்பாட்டுக்கு செலவழித்து காஸ்மீர் முஸ்லிம்களுடன் ஒரு நல்லுறவை பேணி இருப்பின் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்த காஸ்மீரிகளே வந்து இந்தியாவுடன் சேர்ந்து இருப்பார்கள். எல்லை பாதுகாப்பை அவர்களே திறம்பட இன்று செய்துகொண்டும் இருந்து இருப்பார்கள். 

தனது சொந்த இராணுவத்தை அனுப்பி உருவாக்கிய நாடு பங்களாதேஷ் 
இந்தியாவின் கொல்லைக்குள் 160 மில்லியன்களுக்கு க்கு மேலான மக்கள் தொகையை கொண்ட 
ஒரு சந்தை வாய்ப்பு இருக்கும்போது யராவது ஒரு மூடன் அதை கைநழுவி போக விடுவானா? 
இன்று சீனா 0 வரி இறக்குமதி ஒப்பந்தந்தத்தை பங்களாதேசுடன் வெற்றிகரமாக கைச்சாத்திட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சீனா இந்திய எல்லையில் முறுகல் நிலை இருந்தது என்பதுதான் இந்தியாவின் 
தோல்வியை அளவிட தேவையானது.

Bangladeshi PM Sheikh Hasina Meets Chinese President Xi Jinping in Beijing  | India.com

இலங்கை துறைமுக விவகாரம் இங்கு வந்தபோது நான் தெளிவாகவே எழுதினேன் 
இனி சிங்களவனே விரும்பினாலும் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது என்று. அந்த திரியின் கீழ் 
இப்போதும் நாம் எழுதிய கருத்துக்கள் இருக்கிறது. சீனா எந்த முன் எச்சரிக்கையும் இல்லமால் 
பில்லியன் டாலர்களை கொண்டுவந்து கொழும்பு கடலில் கொட்டும் வேலையை செய்யும் ஏமாளி அல்ல. 
சீனாவின் ஒவ்வாரு நகர்வும் 15-20 வருடம் முந்திய திட்டமும் உளவு நட்பு எதிர்கால சிக்கல் போன்றவற்றை அக்குவேறு ஆணிவேறாக சிந்தித்து செயல்படுத்துபவை. உள்ளூர் ஆடசி மாற்றம் அரசியல் மாற்றம் என்பது தேர்தலின்போது மாறுவது  என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்போது  பில்லியன் டொலரை முதலீடு செய்பவனுக்கு  தெரியாமல் இருக்கும் என்ற பாணியிலேயே தமிழ் ஆய்வாளர்கள் எழுதிக்கொண்டு இருப்பார்கள். 

நீங்கள் சீனாவை உன்னிப்பாக கவனித்து வருபவராக இருந்தால் இது எவ்வாறு சாத்தியம் என்பது 
எளிதாக புரியும் அல்லது வைட் அண்ட் சீ பிஸிக்கல் ரீதியான இந்தியாவுக்குள் ஆனா ஊடுருவலை  
சீனா யாழ்ப்பாணத்தில் இருந்து தாழ்நாடு ஊடாகவே செய்யப்போகிறது அதுக்கான நகர்வை சீனா 
பக்குவமாக செய்துவருகிறது.

அமெரிக்க டாலரை உலக ட்ரேட் பணமாக வைத்தே அமேரிக்கா ஆடிவருகிறது என்பதை 
நன்கு அறிந்த சீனா  கடாபி போல நேருக்கு நேர் மோதி அதற்கு பிரதியாக இனொன்றை (பவுன்) கொண்டுவருவதை விடுத்து மெது மெதுவாக மொபைல் பாக்கிங்கை மேம்படுத்தி வந்தது 
இதில் அமேரிக்கா உட்பட நாம் எல்லோருமே சீனாவை மிக குறைத்தே ஏடை போட்டுவந்தோம் 
அதுக்கு அடிப்படை காரணம் அமெரிக்கா கனடா லண்டன் எல்லா இடமும் சந்திக்கு சந்தி வங்கிகள் இருக்கும் நாம் கடன் அடடைகள் மூலமும் வங்கிகள் ஊடாகவும் பண பரிமாற்றத்தை செய்துவந்தால் 
வளர்ச்சி என்பதை இங்கிருப்பதுபோலவே கற்பனை செய்தோம். அதனால் சீனா வளர வேண்டும் என்றால் 
இவாறு ஒரு வங்கி முறை வேண்டும் .... சீனா இங்கு ஒரு வங்கியை கொண்டுவந்தாலும் நம்மில் எத்தனை பேர்  இவை எல்லாம் இருக்கும்போது அதை பயன்படுத்த போகிறோம்? என்றுதான் நானே எண்ணி இருந்தேன் ஆதலினால் 2014இல் சீனா மொபைல் வங்கி ஊடாக $623 பில்லியன்கள்  பண பரிமாற்றம்  நடந்ததாக சொன்னபோது நான் நம்பவில்லை.  

2018இல் சீனா மொபைல் வங்கியின் பண பரிமாற்றம் $41.3 டிரில்லியன்கள் என்றபோதுதான் 
விழிபிதுங்கி நின்றோம். சீனாவின் மொத்த ஜிடிபி யே 2018இல் $13.61 டிரில்லியன்கள். சீனா இப்படி ஒரு 
ஆப்பு  அடித்த பின்புதான் மேலைநாட்டு முதலீட்டாளர் வங்கிகள் இனி பிஸிக்கல் ரீதியான வங்கிகள் 
தேவை இல்லை என்று உணர தொடங்கின ஆனாலும் லண்டன் எப்படியோ தெரியவில்லை அமெரிக்கர்கள் மிலேனிமும் ஜெனெரசன் மட்டுமே மொபைல் வங்கியை பயன்படுத்துகிறார்கள் .... முழு அமெரிக்கர்களும் பயனாளராக  இன்னமும் 10 வருடம் ஆகும் அப்போது சீனா உலகம் பூராக பரவி இருக்கும்.

என்னையும் உங்களையும் உதாரணத்துக்கு எடுத்துப்பாருங்கள் .. யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு $100 அனுப்ப எமது கைத்தொலைபேசியில் ஒரு அழுத்து அழுத்தினால் போதும் மறு  செகண்ட் 
நண்பனின் கைத்தொலைபேசியில் $100 இருக்கும் என்றால்  யார்தான் இப்போதைய மூன்றாம் நபருக்கு 
கூலி கொடுக்க போகிறான்? நீங்கள் எண்ணுவீர்கள் இதுக்குள் இந்தியா சிக்குமா என்று? நீங்கள் எண்ணி பாருங்கள் உங்கள் தாயார் அல்லது உங்களை நம்பி ஒரு உறவு யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது இப்போ அவர்களுக்கு அனுப்பும் பணம் இலங்கை ரூபையாக மாறி வருடா வருடம் அதன் பெறுமதியை இழப்பதை விரும்புவீர்களா? அல்லது அந்த தொகையை லண்டன் பவுன்சில் வைத்திருக்க விரும்புவீர்களா? இந்தியாவில்  வளர்ந்துவரும்  பணக்காரர்கள் இந்திய ரூபாயில் வங்கியில் சேமித்து வைக்க விரும்புவார்களா? ஒன்லைன்   பிட் கொயின் போன்ற பெறுமதி ஏறும் நாணயத்தை விரும்புவார்களா? 

மருது,

ஒரு நாட்டின் ராஜதந்திர நகர்வு என்பது அதன் பலத்தில் மட்டும் அல்ல, பலவீனத்திலும் தங்கியுள்ளது.

உண்மையிலேயே சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடுவதே தவறு. பொருளாதார, இராணுவ பலத்தில் இந்தியா கிட்டவும் நிற்க முடியாது.

60களிலேயே ஒரு மாநிலத்தை விட அதிக நிலப்பரப்பை இழந்தவர்கள். அதன் பின் இந்தியாவின் ராணுவ பலம் 10 களில் கூடியது என்றால் சீனாவின் பலம் 100களில் கூடியது.

ஆகவே நாளைக்கே இலங்கையின் அழைப்புடன் சீனா இலங்கையில் வந்து படை பரிவாரங்களுடன் இறங்கினால், இந்தியாவால் அதை தடுத்து நிறுத்தும் வல்லமை இல்லை.

இலங்கை அரசின் அனுமதியுடன் வந்தால் (சிரியாவில் ரஸ்யா இறங்கியது போல) ஐநாவிலும் எடுபடாது.

ஆகவே இதில் அமெரிகாவின் முகவராக தான் செயல்பட்டு அதன் மூலம் சீனாவிடம் இலங்கை போகாமல் தடுப்பது இந்தியாவின் ஒரு நோக்கம்.

அதே நேரத்தில் இலங்கை முழுதும் அமெரிகாவிடம் போவதும் விருப்பமில்லை.

ஆகவே இலங்கைக்கும் சீனாவுக்கும் அமெரிக்காவையும், அமெரிக்காவுக்கு சீனாவையும் காட்டி கொண்டு, இலங்கையில் status-quo வை தக்க வைத்தபடி, பொறுத்திருந்து பார்ப்பதே (wait and see) இந்தியாவின் இலங்கை கொள்கை.

இலங்கை எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இந்திய உளவாளிகள் மூலம் சீனாவின் இருப்பு கூடுவது எம்மை விட அவர்களுக்கு தெரியும். 

நீங்கள் Stock market trading இல் இருப்பவர் - stop loss point பற்றி தெரியும்தானே. நிலமை கட்டுக்கு மீறி போகும் நேரம் வரும் போது, இந்தியா முழுதாக அமெரிகாவிடம் சரணடைந்து, இலங்கையை தக்க வைக்கும்.

ஆனால் அந்த stop loss point வரும் வரை இந்தியா அமெரிக்காவை உள்ளே விடாது.

அமேரிக்காவுக்கும் ஒரு stop loss point இருக்கும். அதை மீறி, இந்தியாவையும் மீறி இலங்கை சீனாவிடம் போகாதவரை ஓரளவு நட்பு நாடு என்ற வகையில் அமேரிக்காவும் இந்தியா மூலமே இலங்கையை டீல் பண்ணும். 

இந்த இரு stop loss points ஐயும் இலங்கை அடையாதபடி பார்த்து கொண்டு, இலங்கையை தம்மிடம் வைத்துக்கொள்வதே இந்தியாவின் நோக்கு.

உங்கள் பார்வைக்கு இந்த போயிண்ட்டை இலங்கை அடைந்து விட்டதாக தோன்றலாம். ஆனால் இந்தியாவின் பார்வையில் இன்றுவரை இலங்கையில் இருக்கும் சீன பிரசன்னம் tolerable levels of riskதான். 

ஏனென்றால் stop loss point ஐ அடைந்ததாக கருதி இந்தியா ஸ்டொக்கை விற்றால் அதன் பின் இலங்கை ஒன்றில் அமெரிகாவின் சொத்து அல்லது, சீனாவின் சொத்து.

அதுவரை ஜெகத் சொன்னது போல சில சலுகைகளை பெற்று கொண்டு, wait and see. இதுவே இந்தியாவின் இலங்கை கொள்கை.

 இதை புரிந்து கொண்டு, இதற்குள்ளால்தான் தமிழர்களின் உரிமை சம்பந்தமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாமல் வேறு வழியில் முயற்சித்தால் - அது wait and see க்கு முரணாக போகும் போது அதை இந்தியா குழப்பியடித்தே தீரும்.

சீமான் - கருவிற்கும் சேர்த்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2020 at 09:36, karu said:

சீமான் அவர்பாட்டில் தமிழ்த்தேசியத்தைக் கையிலெடுத்து  அதற்காகத் தேசியத் தலைவரையும் தனது வழிகாட்டியாகக்காட்டி, அறிவாயுதம் கொண்டு போராடப் போவதாகச் சொல்கிறார்.   தமிழீழம்பெற உழைக்கப் போவதாகவும் கூறுகிறார்.  இதை வைத்துக்கொண்டு சீமானின் பின்னால் எதைத் தூக்கிக்கொண்டு போகப் போகிறீர்கள்? அல்லது யார்பின்னால் போய்ப் பெரிய புத்திசாலியாகப் போகிறீர்கள்.    திராவிடத்தை இவ்வளவு காலமும் தூக்கிப்பிடித்த கஸ்பா்ராஜ் அடிகளுக்கு தமிழத்தேசியத்தைக் கையிலெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.  அது எவ்வளவு காலமென்று தெரியவில்லை.  தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கப் போகிறாரா?  இலட்சியத்திற்கும் சந்தர்ப்ப வாதத்திற்குமிடையில் நிறைய வேறுபாடு உண்டு.   அடிகளாரின் தற்போதைய நிலைப்பாடு தான் சார்ந்திருக்கும் அணியை வலுப்படுத்துவதேயன்றி தமிழ்த்தேசியமென்னும் இலட்சியத்தை குறிக்கோளாகக் கொண்டதல்ல.  அதற்காகத் தமிழீழத் தேசியவாதிகளையும் பிழையாக வழிநடத்தி எதாவது பலனைக் காணலாமென அவர் எண்ணுகிறார்.   அவர் வரும்போது வரட்டும்,  தமிழீழத் தேசியவாதம் யார் பின்னாலும் போகத்தேவையில்லை.   அதற்கு தமிழ்நாட்டில் யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவர்களை ஆதரித்தாற்போதும்.

காஸ்மீர உரிமை குரலை பரூக், ஒமர் அப்துல்லாவை வைத்து, அண்ணாவை வைத்து திராவிடநாடு கோரிக்கையை, பிரபா தவிர் ஈழப் போராளிகுழுக்களை வைத்து தனி நாட்டு கோரிக்கையை இவ்வாறாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடாக வரும் என எதிர்பார்க்கும் ஒவ்வொரு கொள்ளையினையும், அதன் தலைமையில் தமது முகவர் ஒருவரை அமர்த்தி “காயடிப்பது” இந்தியாவின் மிக நுட்பமான தந்திரம்.

எழுதி வைத்துகொள்ளுங்கள் சீமானுக்கு கொடுக்க பட்டிருக்கும் பொறுப்பு

1. Short term - பஜாகவை தமிழ்நாட்டில் வேறூன்ற வைக்கும் முகமாக, திராவிட நீக்கம் செய்வது

2. Mid term - மாறி மாறி திராவிட கட்சிகள் இன்றி, இந்து v தமிழ் தேசியம் என்பதே தமிழ் நாட்டில் அரசியல் என்றாக்குவது

3. Long term - அப்படியே தமிழ் தேசியம் ஆட்சி கட்டில் ஏறினாலும் அதில் கருநாநிதியை போன்ற இந்தியவுக்கு ( சுயலாபம் கருதி) உழைக்ககூடிய ஒருவரை (சீமான்) அமர்த்துவது.

60 களின் கருநாநிதியியும் இப்போதைய சீமானும் ஒன்றுதான்.

கஸ்பர் சொல்லுவது - தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் நிலை பெற்ற ஒரு கொள்கை அல்ல. இப்போ அதன் தலைமையில் இருப்பவர் மீது பாஜாக சாராதவர்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது.

ஆகவே ஒரு உண்மையான தமிழ் தேசிய தலைமையை கண்டுகொள்ளும் வரை, இருக்கின்ற ஒற்றை கவசமாகிய திராவிடத்தையும் விட்டால் சங்கிகள் உள்ளே புகுந்து விடுவார்கள் (இந்த தேர்தலில் வரத்தான் போகிறார்கள்).

ஆகவே தமிழ்நாட்டில் ஆதரவுதரும் அனைவரையும் ஏற்பது, யார் பக்கமும் சாய்வதில்லை என்ற நிலைப்பாட்டை ஈழத்தமிழர் எடுக்க வேண்டும். 

இது கஸ்பரின் நிலைப்பாடு - இதில் லாஜிக் இருப்பதாயும் படுகிறது.

பிரபாகரனின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

காஸ்மீர உரிமை குரலை பரூக், ஒமர் அப்துல்லாவை வைத்து, அண்ணாவை வைத்து திராவிடநாடு கோரிக்கையை, பிரபா தவிர் ஈழப் போராளிகுழுக்களை வைத்து தனி நாட்டு கோரிக்கையை இவ்வாறாக இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடாக வரும் என எதிர்பார்க்கும் ஒவ்வொரு கொள்ளையினையும், அதன் தலைமையில் தமது முகவர் ஒருவரை அமர்த்தி “காயடிப்பது” இந்தியாவின் மிக நுட்பமான தந்திரம்.

எழுதி வைத்துகொள்ளுங்கள் சீமானுக்கு கொடுக்க பட்டிருக்கும் பொறுப்பு

1. Short term - பஜாகவை தமிழ்நாட்டில் வேறூன்ற வைக்கும் முகமாக, திராவிட நீக்கம் செய்வது

2. Mid term - மாறி மாறி திராவிட கட்சிகள் இன்றி, இந்து v தமிழ் தேசியம் என்பதே தமிழ் நாட்டில் அரசியல் என்றாக்குவது

3. Long term - அப்படியே தமிழ் தேசியம் ஆட்சி கட்டில் ஏறினாலும் அதில் கருநாநிதியை போன்ற இந்தியவுக்கு ( சுயலாபம் கருதி) உழைக்ககூடிய ஒருவரை (சீமான்) அமர்த்துவது.

60 களின் கருநாநிதியியும் இப்போதைய சீமானும் ஒன்றுதான்.

கஸ்பர் சொல்லுவது - தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் நிலை பெற்ற ஒரு கொள்கை அல்ல. இப்போ அதன் தலைமையில் இருப்பவர் மீது பாஜாக சாராதவர்களுக்கு பலத்த சந்தேகம் உள்ளது.

ஆகவே ஒரு உண்மையான தமிழ் தேசிய தலைமையை கண்டுகொள்ளும் வரை, இருக்கின்ற ஒற்றை கவசமாகிய திராவிடத்தையும் விட்டால் சங்கிகள் உள்ளே புகுந்து விடுவார்கள் (இந்த தேர்தலில் வரத்தான் போகிறார்கள்).

ஆகவே தமிழ்நாட்டில் ஆதரவுதரும் அனைவரையும் ஏற்பது, யார் பக்கமும் சாய்வதில்லை என்ற நிலைப்பாட்டை ஈழத்தமிழர் எடுக்க வேண்டும். 

இது கஸ்பரின் நிலைப்பாடு - இதில் லாஜிக் இருப்பதாயும் படுகிறது.

பிரபாகரனின் நிலைப்பாடும் இதுவாகவே இருந்தது.

நல்ல கருத்துகள். ஆனால், பெரும்பாதிப்பு  சில ஈழத்தமிழர்களின் சீமான் கூட்டினால்  ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாகவே நினைக்கிறேன். ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள அமைப்புகள், கட்சிகளை சீமான் முகாமுடன் சேர்ந்து மிகக் கேவலமாகத் திட்டி அவர்களை எதிரியாக்கி விட்டாயிற்று. 

இல்லாத இனத்தூய்மையைத் தூக்கிப் பிடித்தும், விஞ்ஞான அடிப்படையே அற்ற நாயக்கர் தெலுங்கர் சிங்களவர் என்ற கருத்தைப் பரப்பியும் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை ஈழவருக்கு எதிராக்கியும் விட்டார்கள்.   

ஒரு தடவை 2009 மே மாதத்தை மீட்டிப் பாருங்கள்: புலிகள் அமைப்பு மீது  காழ்ப்புணர்வு கொண்ட  மூன்று மலையாள அதிகாரிகள் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டிருந்தே புலிகளையும் தமிழர்களையும் அழிய விட்டார்கள். 

இனியொரு "அரசியல் ரீதியான முள்ளி வாய்க்கால்" ஈழவருக்கு வந்தால், இப்போது சீமான் குழுவால் வறுக்கப் படும் தெலுங்கு, கன்னட கொள்கை வகுப்பாளர்களும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள்? 

இதையெல்லாம் யோசிக்காமல் தான் ஒரு சத்தமாகக் கனைக்கும் மண்குதிரையில் ஏறும்படி  ஈழவர்களுக்கு உடுக்கடிக்கிறார்கள் இங்கே சிலர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.