Jump to content

முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன்

 

நிவேதா உதயராஜன்

 

பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின. 

பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் நிலைக்குப் பெண் வந்த பின்னரும், விண்வெளிதாண்டித் தம் அறிவைக் கடந்தபின்னும் கூட பெண்களுக்கான அடக்குமுறைகளும் குடும்பத்தில் பெண்ணை இரண்டாம் நிலையில் வைத்துப் பார்க்கும் ஆண்களின் மனநிலையும் இன்றுவரை தொடர்கிறது.  

அதற்கான காரணம் ஆண்களாலேயே கட்டமைக்கப்பட்ட எம் சமூக பண்பாட்டு விழுமியங்கள் தான் என்றாலும் மேற்குலகிலும் கூட இன்னும் பல பெண்கள் முற்றுமுழுதாக சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றனர். 

அடக்குமுறைகளின் அளவீட்டில் மாற்றங்கள் இருந்தாலும் கூட அவற்றை மீறுவதிலும் அவற்றுக்கு எதிரான செயல்களைச் செய்வதிலும் மனித மனம் பாரிய ஆசை கொள்கின்றது. அப்படியான ஒரு வெளியீடு தான் இன்றைய காலகட்டத்தில் பல தமிழ்ப் பெண்களின் ஒழுக்க மீறல்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டு எம் சமூகத்தை அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றபடி இருக்கிறது.

அதற்கான முக்கிய காரணங்கள் கணவனின் அதீத உழைப்பு, மனைவி பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமை, பெண்களின் சுய சம்பாத்தியம் என்பவற்றைவிட அதி வேகமாக வளர்ச்சிகண்ட தொழில்நுட்பமும் இலத்திரனியல் சாதனங்களும் இதற்குத் துணை போகின்றது. எந்த இடத்திலும் எந்நேரத்திலும் கணனி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்த முடிந்துள்ளமை மனித இனத்துக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்புத்தான் எனினும் பலரின் வாழ்வை இந்தத் தொலைபேசியே சீரழித்துக்கொண்டும் இருக்கிறது. 

முகநூல் ஆரம்பிக்கப்பட்டுக் கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் முகநூலூடாக பல புதிய நல்ல நட்புக்களையும் பல தெரியாத விடயங்களையும் நாம் அறிந்து கொள்வது மிக எளிதாகிவிட்டாலும் கூட சமூகத்துக்கு ஏற்புடையதற்ற சமூகச் சீர்கேடுகள் நிறைந்த இடமாகவும் முகநூல் காணப்படுவது மனவருதம் தரும் விடயம்.

சமீப காலமாக அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு கருவியாக முகநூல் என்னும் இராட்சதன் தன் கோரக் கைகளை விரித்தபடி உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டு இருக்கிறான். முகநூல் என்னும் மாயக் கண்ணாடி தன் சதிவலைக்குள் சிறுகச் சிறுக அனைவரையும் சிக்கவைத்துக்கொண்டு இருக்கின்றது. இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒருபாலமாக முகநூல் தொழிற்பட்டாலும், அத்தனைக்கத்தனை பெண்கள், ஆண்கள் எனச் சிறியோர் முதல் முதியோர் வரை மோசமான, ஒழுக்கக்கேடான விடயங்களைச் செய்வதற்கும் இந்த முகநூல் எல்லையற்ற பாதையைத் திறந்துவிட்டுள்ளது எனலாம். 

என்னதான் பெண்கள் கல்வியறிவைக் கொண்டிருந்தாலும் கூட பல பெண்கள் விழிப்புடன் இருப்பதுமில்லைச் செயற்படுவதுமில்லை. அதுவும் தற்காலத்தில் புதிய இலத்திரனியல் சாதனங்களான ஸ்கைப்பில் ஆரம்பித்து ட்விட்டர், வைபர், வற்சப், மெசெஞ்சர் என இலவசமாக எத்தனை மணி நேரமும் உரையாடக்கூடியதாகவும் நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடும் வசதியையும் ஏற்படுத்தி, பலரின் வாழ்வு தடம்புரண்டு அவர்கள் குடும்பம் சிதையும் நிலைக்கே இட்டுச்செல்கின்றது. புலம் பெயர்ந்து வாழும் எம் பெண்களில் பலர் இந்த மாய வலைக்குள் சிக்கி தம் சுயம் தொலைத்து தம்மையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் இங்கு பிறந்து வளர்ந்த இளைய புலம்பெயர்ந்த தலைமுறையினர் முகநூல் கணக்குகள்  வைத்திருப்பினும்  எம்மைப்போல் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் எங்களைப் போல் அறிவு குறைந்தவர்களாக இருக்காது துணிவும் சிந்தனைத் திறனும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதனால் அவர்கள் பாதுகாப்பை தாமே உறுதிசெய்யக்கூடிய நிலையில் இருக்கின்றனர். மிகச் சொற்பமானவர்களே  பாதிப்புக்குள்ளாகின்றனர். புலம்பெயர்ந்து வந்த தமிழ் சமூகத்தின் குணங்களில் பல அவர்களிடம் இல்லை. ஆனாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நல்லவர்கள் என்றும் கூற முடியாது. பெற்றோர்களின் குணங்களோடும் சிலர் இருக்கின்றனர்தான்.

முன்னர் முகநூலில் செய்திகள் எழுதும் பகுதி மட்டுமே இருந்தது. அது கணனியையோ அல்லது மடிக்கணனியையோ இயக்கினாலே எழுத முடிந்தது. பெருப்பாலானோர் வீட்டின் பொது இடத்தில் கணனியை வைத்திருந்தனால் மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது தொலைபேசியின் பயன்பாடு பெருகியபின் எந்த இடத்திலும் எந்நேரமும் தொலைபேசியை இயக்க முடிந்த நிலை தோன்றிவிட்டது. சமூக பயம் அற்றுப்போய் பலரிடம் துணிவுடன் கள்ளத்தனம் குடிகொண்டு எதையும் செய்யலாம் என்னும் நிலை தோன்றிவிட்டது. அதற்கான முக்கிய ஊக்கியாக messenger எனப்படும் தொடர்பூடகம் செயற்படுகிறது. இதில் ஒருவருடனோ அன்றிக் குழுவாகவோ எழுதலாம், உரையாடலாம். பக்கத்தில் தம் துணையை அல்லது பிள்ளைகளை வைத்துக்கொண்டே அவர்களுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு செய்தியைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

பல புதிய நல்ல நட்புக்கள் முகநூலினூடு அறிமுகமாவதும் பல தேவையற்றவர்களின் ஊடுருவலும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதன் காரணமாக தேவையற்ற மன அழுத்தங்களும் இடர்களும் அதன் தொடர்ச்சியாய் பல சீர்கேடுகளும் ஏற்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. எம் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மதிப்புக்குரிய பெரியவர்கள் கூட இப்படியான தவறுகளைச் செய்வதைக் காணும்போது அதிர்ச்சிதான் ஏற்படுகின்றது. சமூகத்துக்குத் தெரியாது எத்தனை சீரழிவான விடயங்களைச் செய்ய முடியுமோ அத்தனையையும் அஞ்சாது முகநூலிநூடே நடந்தேறுகின்றன. 

வயதுப் பாகுபாடற்று இளம் பெண்களுடன் வயதுபோன ஆண்களும், தன் தாயின் வயதொத்த பெண்களை காம இச்சையுடன் அணுகும் இளவயது ஆண்களின் இச்சைகளும், அகப்படுபவரிடம் தீர்க்கப்பட்டும் அகப்படாதவரிடம் அவரைக் கொச்சைப்படுத்தியோ அன்றி பயமுறுத்தியோ தம் காரியங்களையும் அற்ப சந்தோசங்களையும் அனுபவிப்பதற்காக பெண்களைப் பகடைக் காய்களாக ஆக்கியபடி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியபடி புதிய புதிய இரைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். 

மானம் போய்விடும் என்று அஞ்சி தமக்கு நடக்கும் அச்சுறுத்தல்களை வெளியே கூறாது தற்கொலைவரை கூடச் சென்றவர்கள் உண்டு. பல பெண்கள் மனபிறள்வுக்கு ஆளாகியிருப்பதுடன் அவர்களில் ஆளுமை அழிக்கப்பட்டு நிரந்தர நோயாளிகளாகி மீண்டு வர முடியா நரகத்தில் நாளும்பொழுதும் புதைந்தவண்ணம் உள்ளனர். 

இருபாலாருக்கும் நட்பு என்பதைத் தாண்டி பாலியல் ரீதியான தொடர்புகளுக்கும் உந்தப்பட்டு வெளியே நல்லவர்களாய் ஒரு முகமும் உள்ளே ஒருமுகமுமாக நடமாடுகின்றனர். இந்தியா இலங்கை மற்றும் அரபு நாடுகளில் வாழும் சில ஆண்களின் நோக்கமே முகநூலில் அகப்படும் பெண்களிடம் பணம் கறப்பதாகவும் இருக்கிறது. ஐரோப்பாவில் வாழ்பவர்களும் கூடக் குறைந்தவர்கள் அல்ல. நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள் என்று தொடங்கி காதல் வலை வீசி அகப்படுபவரை பல தீய வழிகளுக்கு இட்டுச் சென்று தவறு செய்வதற்குத் தூண்டுவதும் தொடர்கிறது. அதற்காக ஆண்களை மட்டும் குறை கூற முடியாது. பல பெண்கள் இரட்டை வாழ்வு வாழ்ந்துகொண்டு குடும்பத்தையும் தம்மையும் ஏமாற்றியபடியும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

பெரும்பாலான ஆண்கள் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் அக்கறை கொண்டவர்களாகவும் காதல் கொண்டவர்களாகவும் தான் துயரத்துடன் இருப்பதாகவும் நடித்து தன் மனைவியைப் பற்றிக் குறை கூறியோ அன்றி இருக்கும் மனைவியை இல்லாதவர்களாக்கி எப்படியோ பெண்களைத் தம்வசப்படுத்துகின்றனர். இன்னுமொரு கூட்டம் ஆணும் பெண்ணும் தெரிந்தே வழிதவறிப் போவது. ஆணின் வக்கிரமான வர்ணனையில் தம் மனதைப் பறிகொடுத்துச் சீரழிந்து போகின்றனர் இன்னும் சிலர். 

முகநூலில் மற்றவர்களால் பதிவிடப்படும் நிகழ்வுகள், அவர்கள் அணியும் ஆடை அணிகள், செல்லும் சுற்றுலா, வாழ்வியல் வசதிகள், வாகனங்கள் என்பவற்றை எல்லாம் பார்த்து ஒருசாரார் தமக்கும் அப்படியான வாழ்வு கிட்டவில்லையே என்னும் ஆதங்கத்தில், நாளும் பொழுதும் மன உளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிக்கப்படும் அபாயமும் அதிகளவு முகநூல் பயன்பாட்டினால் ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண்களுக்குச் சரிநிகராய்ப் பெண்களும் முகநூலைக் கையாண்டாலும் ஆண்களுக்கு ஏற்படாத பல சிக்கல்கள் பெண்களுக்கு ஏற்படுகின்றன. அதற்கான முதற் காரணம் அறிமுகம் இல்லாதவர்களை ஆராயாமல் நட்புவட்டத்தில் இணைப்பது. பெண்கள் தம் படங்களைப் போட்டே முகநூலில் அறிமுகமாகின்றனர். படங்களைப் பார்த்து, அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்து, அவர்கள் மற்றவர்களுக்கு எழுதும் பதில்கள் பார்த்து   அவர்கள்மேல் மதிப்பு ஏற்பட்டு நட்பு அழைப்பை ஏற்படுத்தும் கண்ணியமான ஆண்கள் ஒருவகையினர். 

எந்தப் பெண் என்றாலும் தம் நட்பில் பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பெண்களை நட்பாக்குவோர் இன்னொரு வகையினர். மூன்றாம் வகையினர் அவர்களை நட்பாக்கினால் அவர்களுடன் கதைத்து கடலை போடலாம் என்னும் எண்ணத்தைக் கொண்டவர்கள். நான்காம் வகையினர் தமக்கு லைக் செய்வதற்காக பெண்கள் பதிவுகளில் வந்து அதீதமாகப் பெண்ணைப் புகழ்ந்து எழுதுவதும் அவர்களை நட்பில் இணைத்துக்கொள்வதுமாக இருக்கின்றனர். 

இன்னொரு திமிர் பிடித்த ஆண்கள் கூட்டம் ஒன்றும் உண்டு. அவர்கள் தம்மை அதிமேதாவிகளாக எண்ணிக்கொண்டு அரசியல் பதிவு தொடக்கம் அறிவுசார் விடயங்களை எழுதும் கூட்டம். இவர்கள் பெண்களைப்பற்றி பெரிதாகக் கவலையோ ஆர்வமோ கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண் அவர்களை எதிர்த்து அல்லது அவரின் தவறை எடுத்துக் கூறினால் அவரை நட்பிலிருந்து நீக்குவது அல்லது நிரந்தரமாகத் தடை செய்து விடுவது. படித்த கூட்டம் படிக்காத கூட்டம் இரண்டிலும் இப்படியானவர்களைக் காணலாம். 

இவர்கள் போடும் பதிவுகள் இவர்களைக் கண்ணியமாக மற்றவர்க்கு அடையாளம் காட்டும். ஆனால் பெண்கள் வெளியே பொதுவெளியில் அவர்களைப் பற்றிக் கூற மாட்டார்கள் என்னும் துணிவில் அவர்களை வர்ணிப்பதும் மறைமுகமாக அவர்கள்மேல் தமக்கு இருக்கும் ஆசையைக் கூறுவதுமாக. ஆனால் இவர்களால் ஆபத்து இருப்பதில்லை. இன்னும் ஒரு காவாலிக் கூட்டம் அடையாளங்களுடனும் அடையாளம் இன்றியும் இருப்பர். முகநூலுக்கு வருவதே பெண்களைக் குறிவைத்தபடிதான்.

புலம்பெயர்ந்த ஆண்களில் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் பின்னருமாக இயக்கத்தில் இருந்தோம், போராடினோம் என்று கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தவர்களும் பல தில்லுமுல்லுகளை செய்கின்றனர். எம் நாட்டுக்காகப் போராடியவர்கள் மேல் மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி பல தீய செயல்களை செய்தபடி இருக்கின்றனர். இது அங்கு தம் உயிரைக் கொடுத்த மாவீரர்கள் ,போராளிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நீங்கள் செய்யும் துரோகம். உங்களை வைத்தே மற்றவர்களைக் கணிக்கும் நிலையை தயவுசெய்து ஏற்படுத்தாதீர்கள்

ஒரு ஆண் வழிதவறிப் போகும் போது ஏற்படும் பாதிப்பிலும் பெண்கள் வழிமாறும்போது ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை. அவை அவர்கள் கணவன்மாருடன் மட்டும் நின்று விடாது பிள்ளைகளின் வாழ்வையும் நிலைகுலைய வைக்கின்றன. இதனால் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவை கூடப் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுப் போகிறது. 

இந்தநிலை மாறவேண்டும் எனில் பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவெளியில் அப்படிப்பட்ட ஆண்களைப் பற்றித் துணிந்து கூற முன்வரவேண்டும். இந்தக் காலத்தில் உண்மையான அன்பு என்பது எவரிடமும் இல்லை. பெண்களே உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். முகநூலில் காணும் ஆண்கள் எல்லோரையும் அவர்களின்  “உனக்காக நான் இருக்கிறேன்” என்னும் மயக்கும் வார்த்தைகளையும் நம்பவே நம்பாதீர்கள். உங்கள் கணவனைப் பிள்ளைகளை முதலில் நேசித்து அவர்களிடம் உங்கள் அன்பை, அக்கறையைக் காட்டுங்கள். அவர்கள் மட்டுமே உங்களை உண்மையாக நேசிக்கக் கூடியவர்கள். உங்கள் குடும்பத்தில் ஏதும் பிரச்சனை என்றாலும் இன்னொரு ஆணிடம் உங்கள் குடும்ப விடயங்களை சொல்லவே சொல்லாதீர்கள். அதுவே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். 

நல்ல நட்பாகத் தேடித் பெறுங்கள். உங்கள் உடலை அழகை எவன் புகழ்கின்றானோ அவன் நிட்சயமாய் நல்லவனாக இருக்கமாட்டான் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். உங்களுடன் பழகிவிட்டு அதை ஆயுதமாக்கி யார் பணம் கடனாகக் கேட்டாலும் அன்றுடனேயே அவன் உறவை முறித்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவன் நிட்சயமாக நேர்மையானவனாக இருக்கவே மாட்டான். கடன் அன்பை முறிக்கும் என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. எல்லாற்றையும் தம் அறிவுக்கண் கொண்டு அலசியதில் அப்பட்டறிவுடயே எல்லாவற்றையும் கூறியுள்ளனர். 

பெண்களே உங்களுக்கு எதிராக ஒரு ஆண் எது செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கூடிய பல சட்டங்கள் எம் நாட்டில் இல்லாவிட்டாலும் புலம்பெயர் நாடுகளில் தாராளமாக உண்டு. நம்பிக்கையுடையதாக, மற்றவர்க்குத் தெரியவிடாது இரகசியம் பேணக்கூடிய வகையில் பெண்களுக்கு உதவ நிறைய நிறுவனங்களும் சட்டத்துறையும் உண்டு. உங்கள் போலிக் கவுரவத்தை விட்டு உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள  முடியும். உங்களுக்கு ஆலோசனைகள் தேவையாக இருந்தால் “வாங்கோ கதைக்கலாம்” என்னும் முகநூல்க் குழுமத்தினூடாகப் பெற்றுக்கொள்ளமுடியும். உங்களைப் பற்றிய செய்திகள் வேறு எவருக்கும் தெரியாதவாறு இரகசியம் காக்கப்படும். அறிவாகத் துணிவாக செயல்பட்டு, ஆண்கள் என்னும் புதைகுழியில் மாண்டுவிடாது உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அன்புகொள்வதும் நட்புக்கொள்வதும் தவறான செயல் அல்ல. ஆனாலும் நம்பிக்கையானவர்களை நல்லவர்களை கண்டுணர்ந்து அவர்களுடன் நட்புக்கொண்டால் வாழ்வு எந்தவித சூறாவளிகளையும் சுழல்களையும் தாண்டி நின்மதியாகவும் மகிழ்வாகவும் செல்லும்.   

இப்படியாக இன்றைய சமூகம் நிலைகுலைந்து போவதற்கு யாருமே எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தாலும் ஆண்களோ பெண்களோ தமது குடும்பத்தின் மேல் அக்கறை கொண்டு பிள்ளைகள் வாழ்வை நன்றாக அமைக்க, ஒன்றும் தெரியாதவராய் இராது உங்கள் குடும்பத்தவர் என்ன செய்கின்றனர் என்று சந்தேகம் கொள்ளாது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதபடி கண்காணியுங்கள். சிறிய வயதினர் கணனி வலைத்தளத்துடன் கூடிய (Internet Access) உள்ள தொலைபேசியைப் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர். பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்காது குடும்பத்துடன் விடுமுறை சென்று, மனம் விட்டுப் பேசி, குறை நிறைகளைக் கேட்டறிந்து, உண்மை அன்பு செலுத்தினால் மட்டும் சமூகத்தைக் காக்கவோ திருத்தவோ முடியாவிட்டாலும் கூட எம் எம் குடும்பத்தையாவது நாம் சிதைவுறாது காக்க முடியும். 

முகநூலை முற்றாகக் கைவிடும்படி நான் கூறவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அளவாக முகநூலில் செலவிட்டு மனக்கட்டுப்பாட்டுடன் எமக்குத் தேவையான நல்லவற்றை மட்டும் முகநூலிநூடு பெற்றுக்கொண்டு, தேவையற்றவர்களை முதலிலேயே தடுத்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டோமானால் மகிழ்வோடு நாமும் எம் குடும்பமும் நின்மதியாய் வாழமுடியும்.

நிவேதா உதயராயன்– ஐக்கிய இராச்சியம்

நிவேதா உதயராயன்

 

https://naduweb.com/?p=15694

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

முகநூலை முற்றாகக் கைவிடும்படி நான் கூறவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அளவாக முகநூலில் செலவிட்டு மனக்கட்டுப்பாட்டுடன் எமக்குத் தேவையான நல்லவற்றை மட்டும் முகநூலிநூடு பெற்றுக்கொண்டு, தேவையற்றவர்களை முதலிலேயே தடுத்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டோமானால் மகிழ்வோடு நாமும் எம் குடும்பமும் நின்மதியாய் வாழமுடியும்.

நிவேதா உதயராயன்– ஐக்கிய இராச்சியம்

நிவேதா உதயராயன்

இப்பிடி மற்றவைக்கு நல்லது சொல்லுறவர் தான் முகநூலையே குடியிருந்த கோயிலாக்கி வைச்சிருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை ஆசிரியர் பெயர் ராயன் என்று முடிகிறது - தெலுங்கரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முகநூலை முற்றாக விட்டு விடும்படி ஆலோசனை கொடுக்க முடியாது? 

முகநூல் ஒரு மனிதனுக்கு அவசியமில்லாத ஒரு தும்புத் தடி என்பது என் கருத்து. ஏராளமான பொய்ச்செய்திகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆபத்தான விஞ்ஞான எதிர்ப்புக் கருத்துகளையும் பரப்பும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவசியமற்றவை!

Link to comment
Share on other sites

37 minutes ago, Justin said:

ஏன் முகநூலை முற்றாக விட்டு விடும்படி ஆலோசனை கொடுக்க முடியாது? 

முகநூல் ஒரு மனிதனுக்கு அவசியமில்லாத ஒரு தும்புத் தடி என்பது என் கருத்து. ஏராளமான பொய்ச்செய்திகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆபத்தான விஞ்ஞான எதிர்ப்புக் கருத்துகளையும் பரப்பும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவசியமற்றவை!

நான் அப்படி நினைக்கவில்லை.

நான் கடந்த 13 வருடங்களாக முகனூலை பயன்படுத்தி வருகின்றேன். முகனூலால் பாலர் பாடசாலையில் படித்த நண்பர்கள் தொட்டு என்னுடன் வேலை செய்து நண்பர்களானவர்களின் தொடர்பு வரைக்கும் இதனால் பேண முடிகின்றது. அத்துடன் C# forums, Azure forums என்பனவற்றில் இணைந்து இருப்பதால் உடனுக்குடன் பல நல்ல விடயங்களையும் பதிவுகளையும் பார்க்க முடிகின்றது.

போலியான தகவல்களை பரப்புகின்றதால் முகநூல் கூடாது எனில் எம் தமிழ் வானொலிகளில் இருந்து Fox, CNN போன்ற செய்தி நிறுவனங்களின் Channels வரைக்கும் கேட்கவோ பார்க்கவோ கூடாது. தமிழ் இந்திய தொலைக்காட்சிகளை, சினிமாவை தொடவும் கூடாது. இவை ஆன்மீகம், மருத்துவம், பாரம்பரியம் என்ற பெயரில் பல தவறான விடயங்களை மட்டுமல்லாமல் விஷமத்தனமான விடயங்களையும் பரப்புகின்றன.

முகனூல் மட்டுமன்றி எல்லா சமூக வலைத்தளங்களிலும் இப்படியான விடயங்கள் உள்ளன. நிவேதா குறிப்பிட்டுள்ளது போன்று எதையும் அளவாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனைகளும் இல்லை.

பல ஒடுக்கப்பட்ட இனங்களின் குரலாகவும் (அதற்கும் பல கட்டுப்பாடுகள் இருப்பினும்), வெளித் தெரியாத சமூகங்களைப் பற்றி அறியவும் சமூக வலைத்தளங்கள் உதவி செய்கின்றனவாக உள்ளன. முன்ன தகவல் என்பது பணம் படைத்த சமூகத்தின் சொத்தாக இருந்தது. இன்று அதை கடைக்கோடி எளிமையான மனிதனுக்கும் கடத்துகின்ற, தன் சார்பான கருத்தை சொல்கின்ற வாய்ப்பை வழங்கும் ஒன்றாக மாறி விட்டது.

சமூக வலைத்தளங்களில் வரும் போலிச் செய்திகளை அப்படியே நம்புகின்றவர்கள் மீது அனுதாபமும் கோபமும் கொள்ள வேண்டும். தலைக்குள் இருக்கும் மூளை என்ற சாமானை பயன்படுத்தாமல் எல்லாவற்றையும் அப்படியே நம்புகின்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது. சமூக வலைத்தளங்கள் எதுவும் இல்லாத காலங்களில் கூட மதங்கள் என்ற பெயரி பரப்பப்பட்ட அத்தனை முட்டாள்தனங்களையும் மக்கள் நம்பிக் கொண்டு இருந்தனர் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள். 

முகனூலும் சரி, சமூக வலைத்தளங்களும் சரி தேவையில்லாத ஆணிகள் அல்ல.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்பிடி மற்றவைக்கு நல்லது சொல்லுறவர் தான் முகநூலையே குடியிருந்த கோயிலாக்கி வைச்சிருக்கிறார். 🤣

கண்ணதாசனின் வழியாக  இருக்கலாம்  அண்ணா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாசிரியர் தனது மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.....நல்லது நடக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொன்றையும் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றார்கள் அனுகுண்டு உட்பட ஆனால் சகலரின் கையில் பாவனைக்கு வரும்பொழுது சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கு......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

கதாசிரியர் தனது மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்..

கதாசிரியர் இல்லை சுவி ஐயா. அம்மணி கட்டுரை ஆசிரியர்!

யாழில் கார் அச்சிடென்ற், வருத்தம் துன்பம் போன்ற பதிவுகளை மட்டுமே ஒட்டுவார்! அறிவுஜீவித்தனமான 😜 கட்டுரைகளை வேறு இடங்களில் இருந்து என்னைப் போன்ற தேடல் 😎 உள்ளவர்கள் படித்து ஒட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கதாசிரியர் இல்லை சுவி ஐயா. அம்மணி கட்டுரை ஆசிரியர்!

யாழில் கார் அச்சிடென்ற், வருத்தம் துன்பம் போன்ற பதிவுகளை மட்டுமே ஒட்டுவார்! அறிவுஜீவித்தனமான 😜 கட்டுரைகளை வேறு இடங்களில் இருந்து என்னைப் போன்ற தேடல் 😎 உள்ளவர்கள் படித்து ஒட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்😃

நீங்கள் அவரது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமாய் இருக்கிறீர்கள்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கருத்தை எந்தக் கோணத்திருந்து எழுதினார் என்று புரியவிலலை.காரணம்..முற்று முழுதாக நிவேதாக்காவும் முக நுhல் பாவனையாளர் சமையல் கட்டிலிருந்து கோவா தண்டை படம் எடுத்து போட்டு பாலர் வகுப்பு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கிற மாதிரி இருக்கும்..அனேகமாக நிறைய விடையங்களை பகிர்ந்து கொள்வார்.அப்படியிருக்கையில் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்து கொள்கிறார்.சொல்வார்களே ஊருக்கு உபதேசம் உனக்கல்லவன்று அப்படித் தான் சில விடையங்களை பார்த்து செல்ல வேண்டி இருக்கிறது.சுமாரக எழுதுகிறோம் அல்லது எழுதுவோம் என்றதற்றாக எழுதக் கூடாது.😛😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

கதாசிரியர் இல்லை சுவி ஐயா. அம்மணி கட்டுரை ஆசிரியர்!

யாழில் கார் அச்சிடென்ற், வருத்தம் துன்பம் போன்ற பதிவுகளை மட்டுமே ஒட்டுவார்! அறிவுஜீவித்தனமான 😜 கட்டுரைகளை வேறு இடங்களில் இருந்து என்னைப் போன்ற தேடல் 😎 உள்ளவர்கள் படித்து ஒட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்😃

யாழில் கொண்டுவந்து ஒட்டினால் வரும் ஆபத்தை கதாசிரியை...

சீ உங்களோட...சுவி அண்ணாவோடா சேர்ந்து நானும் கதாசிரியர் என்கிறேன்...இது கதையல்ல கட்டுரை ஆகவே...

கட்டுரையாசிரியர் உணர்ந்ததாலோ என்னமோ....இங்கே கொண்டு வந்து ஒட்டவில்லை 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏராளமான பொய்ச்செய்திகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆபத்தான விஞ்ஞான எதிர்ப்புக் கருத்துகளையும் பரப்பும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள்

100 வீதம் உண்மை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இப்பிடி மற்றவைக்கு நல்லது சொல்லுறவர் தான் முகநூலையே குடியிருந்த கோயிலாக்கி வைச்சிருக்கிறார். 🤣

அவர் தீபாவளிக்கு தீபாவளி தான் பாய்வார்.
மற்ற நேரமெல்லாம் தூங்குவார்.

சுமே 
ஏன் இதை இங்கு இணைக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கதாசிரியர் இல்லை சுவி ஐயா. அம்மணி கட்டுரை ஆசிரியர்!

யாழில் கார் அச்சிடென்ற், வருத்தம் துன்பம் போன்ற பதிவுகளை மட்டுமே ஒட்டுவார்! அறிவுஜீவித்தனமான 😜 கட்டுரைகளை வேறு இடங்களில் இருந்து என்னைப் போன்ற தேடல் 😎 உள்ளவர்கள் படித்து ஒட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்😃

சும்மா முதல் ஓரிரு பந்திகளைப் படித்துவிட்டு சிவனே என்று போயிருப்பேன்.  அறிவுஜீவித்தனமான கட்டுரை என்று குறிப்பிட்டு இருந்ததால் மேலும் படிக்க நேர்ந்தது. வாசித்து விட்டு என்னையே நான் நொந்துகொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் நான் கண்ணால் காணாதவர்களைச் சேர்ப்பது வலு குறைவு. முக்கியமாக கண்ணால் காணாத பெண்கள் எவரையும் சேர்ப்பதில்லை!🤓

அத்தோடு இறுக்கமான பாதுகாப்பு வளையங்கள் எல்லாம் இருப்பதாலும் அடிக்கடி போஸ்ட் செய்யாமல் இருப்பதாலும் பிரச்சினைகள் இல்லை. முக்கியமாக முகநூலில் அரசியல், இலக்கியம் என்று பினாத்துபவர்களுடன் உரையாடுவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

முகநூலில் நான் கண்ணால் காணாதவர்களைச் சேர்ப்பது வலு குறைவு. முக்கியமாக கண்ணால் காணாத பெண்கள் எவரையும் சேர்ப்பதில்லை!🤓

நம்பீட்டம் நம்பீட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்பீட்டம் நம்பீட்டம்.

பார்க்கதவர்களுக்கு அந்த அண்ணா ஒரு பச்சை கூட குத்த மாட்டார்.நான் நிறைய அவதானித்துள்ளேன்.இந்த பச்சையை வைச்சு தான் என்ன செய்வது.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இப்பிடி மற்றவைக்கு நல்லது சொல்லுறவர் தான் முகநூலையே குடியிருந்த கோயிலாக்கி வைச்சிருக்கிறார். 🤣

சிங்கம் காட்டுக்கு ராஜாவானாலும் வேட்டைக்கு போனால் குறி பார்த்துதான் பாயனும் அவசர அவசரமாய் எழுதப்பட்ட ஆக்கம் போல் இருக்கு அக்காவுக்கே தெரிந்து இருக்கு இதை யாழில் போட்டால் கடித்து குதறுவினம்  என்று அதனால்தான் கோவின் பக்கம் தள்ளி விட்டு இருக்கா .

(மேல் எழுதியதின்  பக்கவிளைவு அடுத்து வரும் 24 மணி நேரங்களில் புயலுடன் கூடிய மழையுடன் யாழை கடக்கும் என எதிர்பார்க்க படுது மக்கள்  அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, யாயினி said:

பார்க்கதவர்களுக்கு அந்த அண்ணா ஒரு பச்சை கூட குத்த மாட்டார்.நான் நிறைய அவதானித்துள்ளேன்.இந்த பச்சையை வைச்சு தான் என்ன செய்வது.😆

கசவாரங்கள். இஞ்சையே உப்பிடியெண்டால்.........அங்கை எப்பிடியிருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சிங்கம் காட்டுக்கு ராஜாவானாலும் வேட்டைக்கு போனால் குறி பார்த்துதான் பாயனும் அவசர அவசரமாய் எழுதப்பட்ட ஆக்கம் போல் இருக்கு அக்காவுக்கே தெரிந்து இருக்கு இதை யாழில் போட்டால் கடித்து குதறுவினம்  என்று அதனால்தான் கோவின் பக்கம் தள்ளி விட்டு இருக்கா .

(மேல் எழுதியதின்  பக்கவிளைவு அடுத்து வரும் 24 மணி நேரங்களில் புயலுடன் கூடிய மழையுடன் யாழை கடக்கும் என எதிர்பார்க்க படுது மக்கள்  அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்) 

ஆக மிஞ்சிப்போனால் முதல்லை இருந்து வாசிக்கவும் எண்டொரு பதில் வரும்.....இது இப்ப இஞ்சை நோர்மல் தானே....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நம்பீட்டம் நம்பீட்டம்.

தெரியாத பெண்களின் பெயரில் பலர் ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று கட்டுரையில் உள்ளதே.  இப்படியானவர்களிடம் மாட்டுப்படும் அளவிற்கு மண்டையில் களிமண் இல்லை😛

50 minutes ago, யாயினி said:

பார்க்கதவர்களுக்கு அந்த அண்ணா ஒரு பச்சை கூட குத்த மாட்டார்.நான் நிறைய அவதானித்துள்ளேன்.இந்த பச்சையை வைச்சு தான் என்ன செய்வது.😆

பச்சை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என்று குத்துவதில்லை. கருத்து நல்லா இருந்தால், கதை கவிதை எழுதினால் மட்டும்தான் குத்துவது. 😃

5 minutes ago, குமாரசாமி said:

கசவாரங்கள். இஞ்சையே உப்பிடியெண்டால்.........அங்கை எப்பிடியிருக்கும் 🤣

//அவர் கவிதைகளுக்கு தவறாமல்  லைக்குகள் வந்தவண்ணம் இருந்தன. அவனுக்கு அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் லைக் போட்ட பின்பே அப்பாவின் பதிவை வாசித்தான். நிறையப் பேர் அப்படிச் செய்தும் இருக்கலாம். அதில் அப்பாவை ரசித்தவர்கள் பெயர்களை அவன் பார்த்தான். பத்து இருபது லைக்குகள். நன்றிக்கடனாக அவர்களது பதிவுகளை அவன் போய்ப் பார்த்தபோது அங்கே ஏற்கனவே அப்பா வந்து போயிருந்தார். லைக் விழுந்திருந்தது அப்பாவிடம் இருந்து. //

லைக் போடுவதே முதுகு சொறிவது மாதிரியாகிவிட்டது..😂😂😂

கு. சா.  ஐயாவுக்கும் ஆத்ம திருப்தியாக இருக்குமே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

முகநூலில் நான் கண்ணால் காணாதவர்களைச் சேர்ப்பது வலு குறைவு. முக்கியமாக கண்ணால் காணாத பெண்கள் எவரையும் சேர்ப்பதில்லை!🤓

அத்தோடு இறுக்கமான பாதுகாப்பு வளையங்கள் எல்லாம் இருப்பதாலும் அடிக்கடி போஸ்ட் செய்யாமல் இருப்பதாலும் பிரச்சினைகள் இல்லை. முக்கியமாக முகநூலில் அரசியல், இலக்கியம் என்று பினாத்துபவர்களுடன் உரையாடுவதில்லை.

 

உங்கட முகநூலில் நான் இருப்பது உங்களுக்கு தெரியுமோtw_lol: :LOL:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2020 at 21:05, Justin said:

ஏன் முகநூலை முற்றாக விட்டு விடும்படி ஆலோசனை கொடுக்க முடியாது? 

முகநூல் ஒரு மனிதனுக்கு அவசியமில்லாத ஒரு தும்புத் தடி என்பது என் கருத்து. ஏராளமான பொய்ச்செய்திகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆபத்தான விஞ்ஞான எதிர்ப்புக் கருத்துகளையும் பரப்பும் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவசியமற்றவை!

அடிமையாகாமல் இருக்கும் வரைக்கும் பரவாயில்லை அடிமையாகினால் நமக்கு அறிவுரை சொல்ல வெளிக்கிடுவார்கள் நான் இணைந்து 11 வருடங்கள் ஆகிறது உறவுகள் இருப்பதால் எழுதுவதில்லை படங்களும் பகிடிகளும் அதிலும் வந்து சேட்டை விடுவது இந்த யாழ் கள நண்பர்கள் 

தெரியாதவர்களை நான் சேர்த்துக்கொள்வதில்லை இருந்தாலும் சிலரின் ஆக்கங்கள் கட்டுரைகள் பிடிக்கும் என்பதால்  அவர்களை நண்பில் இணைத்திருக்கிறேன் ஆனால் இன்னும் ஆயிரம் பேரையும் தாண்டவில்லை 

22 hours ago, suvy said:

நீங்கள் அவரது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமாய் இருக்கிறீர்கள்.....!   😂

என்ன பாத்திரம்?? சமையல் பாத்திரம் என்று சொல்லாத வரைக்கும் ஓகே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

என்ன பாத்திரம்?? சமையல் பாத்திரம் என்று சொல்லாத வரைக்கும் ஓகே 🤣

அவவே சமையலை விட்டாச்சுது என்று அறிக்கை விட்டிருக்கிறா....பிறகேன் அவவுக்கு சமையல் பாத்திரம்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடிமையாகாமல் இருக்கும் வரைக்கும் பரவாயில்லை அடிமையாகினால் நமக்கு அறிவுரை சொல்ல வெளிக்கிடுவார்கள் நான் இணைந்து 11 வருடங்கள் ஆகிறது உறவுகள் இருப்பதால் எழுதுவதில்லை படங்களும் பகிடிகளும் அதிலும் வந்து சேட்டை விடுவது இந்த யாழ் கள நண்பர்கள் 

தெரியாதவர்களை நான் சேர்த்துக்கொள்வதில்லை இருந்தாலும் சிலரின் ஆக்கங்கள் கட்டுரைகள் பிடிக்கும் என்பதால்  அவர்களை நண்பில் இணைத்திருக்கிறேன் ஆனால் இன்னும் ஆயிரம் பேரையும் தாண்டவில்லை 

என்ன பாத்திரம்?? சமையல் பாத்திரம் என்று சொல்லாத வரைக்கும் ஓகே 🤣

நிழலியும் நீங்களும் சொல்வது உண்மையாக இருக்கலாம்.  எனக்கு மார்க் சக்கர்பேர்கை பிடிக்காது. கல்லூரியில் இருக்கையில் அவர் முகநூலை ஆரம்பித்த போதும் சரி, இப்போது நடத்தும் முறையிலும் சரி, பயனர்களின் பலவீனத்தில் காசு பார்ப்பது மட்டுமே அவர் குறி! இதனால் ஏற்பட்ட தீமைகளை (கேம்பிரிட்ஜ் அனலிரிகா  பிரச்சினை போல) முகநூலுக்கு வெளியே இருப்போர் சுட்டிக் காட்டி வெளிப்படுத்திய பின்னர் தான் ஏதோ அதிரடியாக சமூக அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பது போல மார்க் நடிப்பார். இது கிட்டத்தட்ட கத்தோலிக்க திருச்சபை சிறுவர் துஷ்பிரயோகத்தை மீடியாக்கள் வெளிப்படுத்திய பின்னர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த ஒஸ்கார் நடிப்பிற்கு ஒப்பானது!  

யாழிணையம் தவிர்ந்த சமூக ஊடகங்களில் இணையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.