Jump to content

சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன


Recommended Posts

சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன

by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-1.jpg

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேவலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களுக்கு  அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக சமூக அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர்.

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-2.jpg

http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு – 2 ஆயிரம் வீடுகள் சேதம்

 
j5.800-696x348.png
 38 Views

புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட மழைவீழ்ச்சி யாழ். குடாநாட்டில் தொடரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிப்படைந்துள்ளமையோடு 2 ஆயிரத்து 443 வீடுகளும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மாவட்டச் செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு நேற்றைய தினம் இந்தப் புள்ளிவிவரம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்வாறு பாதித்த 54 ஆயிரத்து 163 பேரில் 1,072 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சேதமடைந்த 2 ஆயிரத்து 443 வீடுகளில் 55 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலிற்கு செல்ல முடியாத நிலமையே காணப்படுவதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே உள்ளது

 

https://www.ilakku.org/யாழ்-மாவட்டத்தில்-மட்டும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்காலை மூடி அமைத்த வீதியால் வீடுகளுக்குள் வெள்ளம்!

IMG-20201205-WA0034-960x540.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கந்தர்மடம், இலுப்பையடிச் சந்திப்பகுதியில் உள்ள வெள்ள நீர் வடியும் வாய்காலை மூடி வீதி அமைக்கப்பட்டதனால், இன்று (05) அதிகாலை தொடர்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

வீடுகளின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், எதுவித்தான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரவிப் புயலின் தாண்டவமும் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நல்லூர் ஆலயச் சூழலை வெள்ளம் சூழந்து விட்டது. சரியான வடிகாலமைப்பு இல்லாத காரணத்தினால் வெள்ளம் வழிந்தொடவும் வாய்ப்புக்கள் இருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் மழை புயலால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

புரவி புயலின் பின்னர்  ஏற்பட்ட கடும்மழை,பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலைதெற்கு இருபாலைகிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக குறித்த பகுதிகளில் வீடுகள் இடிந்து வீழ்ந்ததோடு புதியசெம்மணிவீதி,ஆனந்தபுரம்,ஞானவைவரவர் கோயிலடி,வசந்தபுரம்,மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது நேற்று(05) சனிக்கிழமை  காணப்பட்டது.

புதிய செம்மணிவீதி,கட்டப்பிராய் கலைமணிவீதி,சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள்,ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் சௌகரியங்களை  ஏதிர்கொண்டிருந்தனர்.

நேற்று(05) சனிக்கிழமை காலை  குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் நடேஸ்சபிள்ளை கஜேந்திரகுமார் இருபாலை தெற்கு விவசாய சம்மேளனத்தின் தலைவர் தவராசா தர்சன் மற்றம் ஜப்னா மின்னல் சமூகசேவையாளர் செய்தியாளர் தங்கராசா ஷாமிலன் ஆகியோர் மக்களின் நலன்களை பேணும்வகையிலும், பாதிப்பு நிலைமைகளை  கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் பிரதேச செயலர் ஊடகவும்  குறித்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடி மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் மழை புயலால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

எனது ஊரும் இருபாலை.
கிணறு கக்கூசு எல்லாம் வெள்ளம் மூடிநிற்கிறது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தங்கள் ஊர்களை பொறுப்பெடுப்பது நல்லது இந்தவேளையில் .ஏனேன்றால்  அரசு உதவிகள் தாமதமாகவே கிடைக்கும் தொடர் மழை  பெய்கிறது குளிரிலும் மழையிலும் கொரானாவிலும் அனாதையாக உள்ளார்கள் .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அங்கு வெள்ளம் இங்கு வெள்ளம் என்று படம் அனுப்பியவர்கள் இந்த பிள்ளையின் கண்களில் உள்ள பசி ஏக்கத்தை கவனிக்கவில்லையாக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.