Jump to content

கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பில் கூட்டமைப்பு கவனம் செலுத்தவில்லை - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு  காண  தமிழ் தேசிய கூட்டமைப்பு  கடந்த அரசாங்கத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மொத்த வியாபாரிகள் - வியாழேந்திரன் சாடல் |  Virakesari.lk

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு , கிழக்கு மாகாண மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கையின் அடிப்படையில்  மாகாணங்கள் சுயமாக  பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

 எதிர்த்தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதான பலம் மிக்க எதிர்கட்சியாக காணப்பட்டது.

எனினும் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவு  வழங்கவும் , அரசாங்கத்துக்கும், பிரதமருக்கு எதிராக  கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாத்திரமே மக்களாணையை பயன்படுத்தியது. 

 கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டமைப்பு அக்கறை கொள்ளவில்லை. கிழக்கு அபிவிருத்திக்காக உரிய திட்டம் 2021 ஆம் ஆண்டு  முதல் செயற்படுத்தப்படும். ஜனாதிபதியால் கிழக்கு மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்துக்கு பல செயற்திட்டங்களை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார். 

 
Link to comment
Share on other sites

அது சரியோ , பிழையோ நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிரைவேற்றுங்கள். பின்னர் மக்கள் தீர்மானிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  அடுத்த தேர்தல் வரை அவர்களை விமர்சித்துக்கொண்டும், தான் கட்சி தாவியதற்கு காரணம் சொல்லிக்கொண்டும்  காலத்தை கழிப்பார் போலுள்ளதே.

12 hours ago, பிழம்பு said:

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

நின்று பேசுகிற இடம் அப்படி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.