Jump to content

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(காரைதீவு நிருபர்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

dfg-10-300x169.jpg

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு;

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளாவிய எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒருமித்த நீண்ட கால அபிலாஷை ஆகும். இப்பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்ந்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர்.

இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெறுவதற்கான பிரமாண்டமான மக்கள் எழுச்சி போராட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது. இதில் பங்கெடுத்தவன் என்கிற உரிமை, பெருமை ஆகியன எனக்கும் இருக்கின்றது. அப்போதைய அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருவதாக உறுதிமொழி வழங்கியது. கால அவகாசம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவார்கள் என்று பகிரங்க வாக்குறுதிகள் வழங்கினர். குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தமிழ் மக்களுக்கு இதற்கான உறுதிமொழியை நேரடியாகவே வழங்கினார். அவ்வாக்குறுதியை வழங்கி கல்முனை தமிழ் மக்கள் அத்தேர்தலில் 7000 வாக்குகளை ராஜபக்ஷக்களுக்கு வழங்கினர்.

கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக உள்ள கருணா அம்மான் என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தரப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கினார். அவருக்கு எமது மக்களின் 30,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் எமது மக்களுக்கு எவையுமே கிடைக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவரால் எதுவுமே நடக்கவில்லை.

ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கணக்காளர் நியமிக்கப்பட்டு கடமைக்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்கவே இல்லை. அந்நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம்.

இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் முட்டுக்கட்டைகள் போட்டு விட்டனர். கல்முனை பிரதேசத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணங்கி நடப்பதாக நாடகம் போடுகின்றனர். ஆயினும் அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் இப்பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆயினும் கருணா போன்றவர்களைப் போல் அல்லாமல் எப்போதும் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகின்றது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளார். சாணக்கியன் எம்.பி., கலையரசன் எம்.பி. ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். இது எமது மக்களின் உரிமை ஆகும். மாறாக இது எமது மக்கள் கேட்கின்ற சலுகை அல்ல. 29 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையே ஆகும். ஆனால் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரத் தவறினால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், அது கொரோனாவுக்குப் பின்னர் நடக்கும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்- காரைதீவு தவிசாளர் எச்சரிக்கை – Thinakkural

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடுவோம் எனக் கூறுங்கள். அதென்ன ""வெடிக்கும்""

😂😂

Link to comment
Share on other sites

மீண்டும் போராட்டமா? பாரளுமன்றில் எல்லை நிர்ணயக்குழு அமைப்பதாக ஒரு அமைச்சர் கூறினாரே? கருணா அம்மான் அங்குதானே இருக்கிறார். இது அரசியல் காரணங்களுக்கான போராட்டமா இல்லை உண்மையான போராட்டமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.