Jump to content

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(காரைதீவு நிருபர்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

dfg-10-300x169.jpg

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு;

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளாவிய எமது தமிழ் மக்கள் அனைவரதும் ஒருமித்த நீண்ட கால அபிலாஷை ஆகும். இப்பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்ந்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர்.

இப்பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெறுவதற்கான பிரமாண்டமான மக்கள் எழுச்சி போராட்டம் கடந்த வருடம் இடம்பெற்றது. இதில் பங்கெடுத்தவன் என்கிற உரிமை, பெருமை ஆகியன எனக்கும் இருக்கின்றது. அப்போதைய அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தருவதாக உறுதிமொழி வழங்கியது. கால அவகாசம் பெற்றுக் கொண்டது. ஆனால் அதன் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிச்சயமாக தரம் உயர்த்தி தருவார்கள் என்று பகிரங்க வாக்குறுதிகள் வழங்கினர். குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தமிழ் மக்களுக்கு இதற்கான உறுதிமொழியை நேரடியாகவே வழங்கினார். அவ்வாக்குறுதியை வழங்கி கல்முனை தமிழ் மக்கள் அத்தேர்தலில் 7000 வாக்குகளை ராஜபக்ஷக்களுக்கு வழங்கினர்.

கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் ஆதரவு சக்தியாக உள்ள கருணா அம்மான் என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தில் தரம் உயர்த்தி தரப்படும் என்பது உட்பட ஏராளமான வாக்குறுதிகளை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கினார். அவருக்கு எமது மக்களின் 30,000 வாக்குகள் கிடைத்தன. ஆனால் எமது மக்களுக்கு எவையுமே கிடைக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவரால் எதுவுமே நடக்கவில்லை.

ராஜபக்ஷ அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நப்பாசை இன்னமும் எமக்கு இருக்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கணக்காளர் நியமிக்கப்பட்டு கடமைக்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால் அம்மகிழ்ச்சி நீடிக்கவே இல்லை. அந்நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம்.

இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் முட்டுக்கட்டைகள் போட்டு விட்டனர். கல்முனை பிரதேசத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணங்கி நடப்பதாக நாடகம் போடுகின்றனர். ஆயினும் அரசாங்கம் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தரும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னமும் இப்பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆயினும் கருணா போன்றவர்களைப் போல் அல்லாமல் எப்போதும் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகின்றது. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளார். சாணக்கியன் எம்.பி., கலையரசன் எம்.பி. ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டும். இது எமது மக்களின் உரிமை ஆகும். மாறாக இது எமது மக்கள் கேட்கின்ற சலுகை அல்ல. 29 கிராம சேவையாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர வேண்டியது அரசாங்கத்தின் கடமையே ஆகும். ஆனால் அரசாங்கம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தரத் தவறினால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், அது கொரோனாவுக்குப் பின்னர் நடக்கும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தத் தவறினால் போராட்டம் வெடிக்கும்- காரைதீவு தவிசாளர் எச்சரிக்கை – Thinakkural

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடுவோம் எனக் கூறுங்கள். அதென்ன ""வெடிக்கும்""

😂😂

Link to comment
Share on other sites

மீண்டும் போராட்டமா? பாரளுமன்றில் எல்லை நிர்ணயக்குழு அமைப்பதாக ஒரு அமைச்சர் கூறினாரே? கருணா அம்மான் அங்குதானே இருக்கிறார். இது அரசியல் காரணங்களுக்கான போராட்டமா இல்லை உண்மையான போராட்டமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.