Jump to content

இறுதி போரில் 5,000 – 6,000 தமிழர்கள் தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் – ஃபொன்சேகா தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போரில் 5,000 – 6,000  தமிழர்கள் தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் – ஃபொன்சேகா  தெரிவிப்பு

 
1-25-696x447.jpg
 69 Views

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில்,  சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் என்று சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில், சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.

நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.

மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி கட்ட யுத்தம் நடந்த காலத்தில் 35 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 23,000 பேரை   இராணுவம் கொன்றது” என்றார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், கிளைமோர் குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டதாக சபையில் சுட்டிக்காட்டிய சரத் ஃபொன்சேகா , விடுதலைப் புலிகளின் நிழல்கள் இன்றும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இலங்கையில் யுத்தம் இல்லாத போதிலும், இராணுவ கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என சரத் ஃபொன்சேகா,

“ஒரு நாட்டின் இராணுவ கட்டமைப்பு மிக வலுவாக இருக்குமேயானால், அது அந்நாட்டிற்கு கம்பீரமான ஒன்று.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இராணுவம் மறுசீரமைக்கப் படவில்லை. 1955ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யுத்த தாங்கிகளையே இராணுவம் இன்றும் பயன்படுத்தி வருகின்றது.

நான் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் 80 யுத்த தாங்கிகள் இருந்தது. யுத்தத்தினால் அவற்றில் 50 தாங்கிகள் சேதமடைந்துள்ளது. தற்போது 30 யுத்த தாங்கிகள் மாத்திரமே எஞ்சியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த ஜே.வி.பி கலவரத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி பேசுவது தவறானது. தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை பிளவுப்படுத்தி, தனிநாட்டை கோரியே யுத்தம் செய்தனர். ஜே.வி.பி நாட்டை பிளவுப்படுத்துவதற்கான போராட்டத்தை செய்யவில்லை,” என்றார்.

 

https://www.ilakku.org/இறுதி-போரில்-5000-6000-தமிழர்கள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது மகனும் கொல்லப்படவில்லை என்கிற வாதத்திலிருந்து 5,௦௦௦-6,௦௦௦ என்று ஏற்றுக்கொள்வதற்கே இத்தனை ஆண்டுகள் எடுத்துள்ளன. முழுத்தொகையையும் ஏற்றுக்கொள்ள  இன்னும் எத்தனை தசாப்தங்கள் எடுக்கும்? பொறுத்திருங்கள், இப்போ என்ன அவசரம்? ஆறுதலாக அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள், அதற்கான காலத்தை நோக்கி நகர்த்தப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

ஐந்தோ, ஐம்பதோ, ஐநூறோ, ஐயாயிரமோ, ஐம்பதியிரமோ எல்லாம் உயிர்கள்தான். இப்போது இவரால் பொது மக்கள் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹன்சார்டில் பதியப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று இவர்தான் அக்கால ராணுவத்தளபதியாக இருந்தவர். எனவே பொது மக்கள் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எண்ணிக்கையில்தான் பிரச்சினை இருக்கிறது. எனவே அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுக்கு பதிலாக வேண்டிய தேவை இதன்மூலம் உருவாக்கி உள்ளது. இருந்தாலும் உலக நாடுகளின் ஆதரவில்தான் எல்லாம் தங்கி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  லூசு  முதலே சொல்லிட்டுது எங்கடை பின்கதவு அரசியல் சுமத்திரன் தான் இனப்படுகொலையை  நடக்கவில்லை என்று  ஐநாவில் சொன்னது யார் நமது எதிரி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

ஒரு பொது மகனும் கொல்லப்படவில்லை என்கிற வாதத்திலிருந்து 5,௦௦௦-6,௦௦௦ என்று ஏற்றுக்கொள்வதற்கே இத்தனை ஆண்டுகள் எடுத்துள்ளன. முழுத்தொகையையும் ஏற்றுக்கொள்ள  இன்னும் எத்தனை தசாப்தங்கள் எடுக்கும்? பொறுத்திருங்கள், இப்போ என்ன அவசரம்? ஆறுதலாக அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள், அதற்கான காலத்தை நோக்கி நகர்த்தப்படுவார்கள்.

இதைச் சமாளிக்கத் தானே இருக்கவே இருக்கிறார் சுமந்திரன்.
ஆனாலும் இப்போ கொஞ்சம் கஸ்டம்.
சட்டம் தெரிந்த பலர் கூடவே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இதைச் சமாளிக்கத் தானே இருக்கவே இருக்கிறார் சுமந்திரன்.
ஆனாலும் இப்போ கொஞ்சம் கஸ்டம்.
சட்டம் தெரிந்த பலர் கூடவே இருக்கிறார்கள்.

பச்சை உங்களுக்கு தண்டனை கைதிகளுக்குக்கு பச்சை கொடுப்பதையும் குறைக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

பச்சை உங்களுக்கு தண்டனை கைதிகளுக்குக்கு பச்சை கொடுப்பதையும் குறைக்கிறார்கள் .

இனி என்ன செய்வது.
பெருமாளின் உண்டியலில் போட்டா போட்டது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்... 🤥

இராணுவத் தலைமையகதிதின் வாசலில் நடந்த குண்டு வெடிப்பும் தவறுதலாக நடந்திருக்குமோ... 🤔

 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா பிதட்டலுடன் உண்மையை ஏற்றுக் கொண்டார்-சபா குகதாஸ்

 
%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%95%E0
 53 Views

தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தின் மூலம் சரத் பொன்சேகா ஏற்றுக் கொண்டுள்ளார் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் இது குறித்து வெளியிட்ட செய்தியில்,

“ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இறுதிப் போரில் 45000 தமிழர்கள் கொல்லப்படவில்லை 5 தொடக்கம் 6 ஆயிரம் வரையான மக்களே கொல்லப்பட்டனர் எனவும் புரெவி சூறாவளி மாவீரர் தினத்தில் வீசியிருந்த நல்லாய் இருந்திருக்கும் என்றும்  நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றியிருந்தார்.

இவர் உரையாற்றினார் என்பதை விட பிதட்டினார் என்றே கூறலாம். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருந்த போது மாவீரர் தினம் வெகு சிறப்பாக தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றத்தை யாவரும் அறிவார்கள். அந்த நேரத்தில் மௌனமாக இருந்தவர் தற்போது தனது அரசியலுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காகவும் முன்னர் அரைக்கால் சட்டையுடன் இருந்த நினைவையும் மனதில் கொண்டு நன்றாக பிதட்டுகிறார்.

நல்லாட்சி அரசாங்கம் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவயைில் ஏற்றுக் கொண்டு கால நீடிப்பை பெற்ற போதும் இலங்கைப் நாடாளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்ட மூலம் நிறைவேற்றும் போதும் அதற்கு ஆதரவாக இருந்த பொன்சேகா, தற்போது தானே இறுதிப் போரை நடத்தியதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் என்றும் கதை விடுகிறார்.

ஆனால் சரத் பொன்சேகா தான் ஒரு போர்க் குற்றவாளி என்பதை தனது வாக்கு மூலத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது இறுதிப் போரை தானே நடாத்திதாகவும் தனது வியூகமே வெற்றிக்கு காரணம் எனவும் கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மைத் தொகையை மறைத்து ஆறாயிரம் என ஒப்புதல் செய்தமை உறுதி செய்கின்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/சரத்-பொன்சேகா-பிதட்டலுடன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.