Jump to content

ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா


Recommended Posts

Friday, December 6, 2013

ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா !

 
POTD-mandela_2617707b.jpg


நிறவெறிக்கெதிராய்
நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
காலம் ஆபிரிக்க இருளகல
கைபிடித்தேற்றிய பேரொளி.

இருள் கொன்று ஆபிரிக்கர்
ஒளிகொண்டெழ உதித்த
மூத்தவன் மண்டேலா.


இனவிடுதலையை
உயிராய் கொண்டதால் - நீ
இருபத்தேழு வருடங்கள்
இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
வெளியில் வந்த போது நீயே
உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.

போராடும் தேசங்களின்
வழிகாட்டியாய்
ஒளியூட்டிய இரும்பு.
இறந்து போனாயாம்
இன்றைய செய்திகள்
உன்னையே நினைவில்
உடுத்திக் கொள்கிறது.

தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
உன்னையும் சொல்லியே
உருவாக்கினான் தமிழனை
தமிழீழ விடுதலைப்போரை
வரலாறாக்கினான்.

உனக்கு நிகராய் உனக்கு நேராய்
வாழ்ந்த எங்கள் தலைவனை
உன்னில் காண்கிறோம்
உலகில் வாழ்கிறோம்.
என்றோ நாங்களும்
இவ்வுலகை வெல்லுவோம்.

உண்மையின் குறியீடே
உலகின் ஒப்பிலா வீரனே
இருள் அகற்றிய ஒளியே
 போய் வருக
போராடும் பூமியெங்கும்
போராடியவர்கள் யாவரின் சார்பாய்
உனக்கெங்கள் வீரவணக்கம்.

ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
உறங்கினாலும் ஓயாத வேகம்
கல்லறைக்குள்ளிருந்தும்
படைநடத்தும் அவன் வாழ்வு.
நீயும் காலமெல்லாம்
படை(கை) வெல்லும் வீரனாய்
இந்தப் பாருள்ளவரை
படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
போய் வருக மண்டேலா
உலகின் போர் விதியை வென்றவனே
போய் வருக.

06.12.2013
சாந்தி நேசக்கரம்

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கவிதைக்கும் நன்றி அக்கா.

மன்னிக்க தெரிந்த மாமனிதன் மண்டேலா.

அத்தனை வருட அடக்குமுறைக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளையினத்தவரை வேலையில் இருந்து,  வியாபாரத்தில், பண்ணகளில் இருந்து விரட்டி அடித்திருக்கலாம்... ஆனால் மடிபா செய்யவில்லை.

சாகும் வரை ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் மடிபா அதையும் செய்யவில்லை.

The long walk to freedom ... வெள்ளை சிறையில் இருந்து மட்டும் அல்ல, சாதாரண மானிடர்களின் உள்ளத்தில் இருக்கும் சிறையில் இருந்தும் மடிபாவை விடுவித்திருந்தது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். 

மண்டேலா ஒரு உதாரண புருஷர் தான். இருண்ட கண்டத்திலிருந்தும் ஒரு நேர்மையான தலைவர் உருவாக முடியும் என்று நிரூபித்தவர் மண்டேலா!

ஜனநாயக்தைப் பொறுத்தவரை குன்றில் விளக்காக (Beacon on the Hill) இருக்கும் அமெரிக்காவிலிருந்தும் ஒரு சர்வாதிகாரி உருவாக முடியும் என்று நிரூபித்தவர் ட்ரம்ப்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 6/12/2020 at 00:46, பெருமாள் said:

கன காலத்துக்கு பிறகு சாந்தியக்கா நல்வரவு .

அன்புக்கு நன்றி பெருமாள். 

On 6/12/2020 at 03:00, goshan_che said:

வருகைக்கும் கவிதைக்கும் நன்றி அக்கா.

மன்னிக்க தெரிந்த மாமனிதன் மண்டேலா.

அத்தனை வருட அடக்குமுறைக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளையினத்தவரை வேலையில் இருந்து,  வியாபாரத்தில், பண்ணகளில் இருந்து விரட்டி அடித்திருக்கலாம்... ஆனால் மடிபா செய்யவில்லை.

சாகும் வரை ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் மடிபா அதையும் செய்யவில்லை.

The long walk to freedom ... வெள்ளை சிறையில் இருந்து மட்டும் அல்ல, சாதாரண மானிடர்களின் உள்ளத்தில் இருக்கும் சிறையில் இருந்தும் மடிபாவை விடுவித்திருந்தது. 

 

 

போராடிய எல்லோயும் வலியவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் கைகளில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். அந்தப் பிடியில் இருந்து வெளிவரும் போது பலவற்றை இழந்து விடுகிறது வரலாறு. அதுதான் மடிபாவுக்கும் நடந்திருக்கும் goshan_che. 

On 6/12/2020 at 03:14, Justin said:

சாந்தி போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். 

மண்டேலா ஒரு உதாரண புருஷர் தான். இருண்ட கண்டத்திலிருந்தும் ஒரு நேர்மையான தலைவர் உருவாக முடியும் என்று நிரூபித்தவர் மண்டேலா!

ஜனநாயக்தைப் பொறுத்தவரை குன்றில் விளக்காக (Beacon on the Hill) இருக்கும் அமெரிக்காவிலிருந்தும் ஒரு சர்வாதிகாரி உருவாக முடியும் என்று நிரூபித்தவர் ட்ரம்ப்!

வலியது முந்தும் எளியது வீழ்ச்சி காணும் என்பதை அமெரிக்கா மீண்டும் நிரூபித்துள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.