Jump to content

புயல்களும்,உழவனும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 புயல்களும், உழவனும்..!
******************large.625_500_560_350_160_300_053_800_900_160_90.jpg.863432995204d21f47ba99c45f925a38.jpg
உழுதவன் விதைக்கும் காலம்
உணர்விலே மகிழ்ச்சி பொங்கும்
அழுதவன் வறுமையெல்லாம்
அடங்குமே என நினைத்தான்.

வரம்பு நீர் உயற்ச்சி கண்டு
வளர்கின்ற நெற்பயிரின் 
அருகிலே..
அதிகாலை தொட்டு
ஆதவன் மறையும் மட்டும்
உடலது உயிராயெண்ணி
ஒன்றியே வாழ்ந்தான் வயலில்.

கடலலை அடித்தாற் போல
காற்றிலே பயிர்கள் ஆட
உளமது நிறைந்துழவன் 
உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான்.

நிறைமாத கெற்பனி போல்
நெற்பயிர் குடலை தள்ள
வறுமையும் கடனும் நீங்கி-நல்
வாழ்கையை கனவில் கண்டான்.

மனைவிக்கு சாறியோடு
மகளுக்கு வரனும்தேடி
மகனுக்கு  கல்வியூட்ட
மனதினில் எண்னி வாழ்ந்தான்.

அடை மழை கட்டி வானம்-புரவி
அடித்தது புயலாய் நாட்டில்
பெரு வெள்ளம் உட்புகுந்து
பிரளையம் ஆச்சே வீட்டில்.

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

எனியென்ன செய்வான் உழவன்
ஏங்கியே உயிரை மாய்க்க..
எடுக்கின்ற முயர்சிதன்னை-“அரசே”
இடையிலே நிறுத்த வேண்டும்.

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

அன்புடன் -பசுவூர்க்கோபி-
06.12.2020.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

 

மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்.  மழையில்லாமலும் கெடுக்கும். விவசாயி என்ன செய்வான் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பசுவூர்க்கோபி said:

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

விவசாயி பற்றிய கவிதை அருமை தோழர் ..👌பகிர்விற்கு நன்றி.. இப்போது பெய்த மழைக்கு பயிர் காப்பீடு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிலாமதி said:

வயலெல்லாம் குளமாய் போச்சு
வருமானம் அழிந்தே போச்சே
கனவெல்லாம் கலைந்து போச்சு
கண்ணீரும் மழை நீராச்சே.

 

மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்.  மழையில்லாமலும் கெடுக்கும். விவசாயி என்ன செய்வான் ? 

நெஞ்சார்ந்த நன்றிகள்

23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விவசாயி பற்றிய கவிதை அருமை தோழர் ..👌பகிர்விற்கு நன்றி.. இப்போது பெய்த மழைக்கு பயிர் காப்பீடு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..😢

என்றும் உக்கம் தரும் தோழருக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பசுவூர்க்கோபி said:

அவன்பட்ட கடனை நீக்கு-பென்சன்
அவனுக்கும் கொடுத்துப் பாரு
உலகுக்கே உணவழிக்கும்-அந்த
உழவனின் வாழ்வை உயர்த்து.

விவசாயிக்கு பென்ஷன் கொடுப்பது மிகவும் நல்ல விடயம். இது எங்காவது கடைப்பிடிக்கப்படுகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

விவசாயிக்கு பென்ஷன் கொடுப்பது மிகவும் நல்ல விடயம். இது எங்காவது கடைப்பிடிக்கப்படுகின்றதா?

நன்றிகள் கிருபன் அண்னா.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்பரே 

நாங்கள் வயல் செய்து பல ஆண்டுகள் ஆகிறது நாங்கள் ( ஏழைகள் ) வயல் செய்ய இறங்கினால் கழுத்தளவு வெள்ளம் வரும் இல்லையா காஞ்சி போற அளவுக்கு வெயில் வரும் இதுதான் விவசாயிகள் நிலமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் நண்பரே 

நாங்கள் வயல் செய்து பல ஆண்டுகள் ஆகிறது நாங்கள் ( ஏழைகள் ) வயல் செய்ய இறங்கினால் கழுத்தளவு வெள்ளம் வரும் இல்லையா காஞ்சி போற அளவுக்கு வெயில் வரும் இதுதான் விவசாயிகள் நிலமை .

கவிதை பார்த்து எழுதியதிற்கு உளமார்ந்த நன்றிகள் நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளின் நிலையை, நல்ல விதமாக கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். 🙏

ஈழம் மலர்ந்திருந்தால், விவசாயிகளுக்கு பென்சன் கிடைத்திருக்கும்.

விவசாயிகளுக்குதான் இனிவரும் காலங்கள் நல்ல மவுசு.

மழை அதிகம் பெய்தாலும், அது வழிந்தோட சேமித்து வைக்க நல்ல கட்டமைப்பு இருக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

விவசாயிகளின் நிலையை, நல்ல விதமாக கவிதையில் கொண்டுவந்துள்ளீர்கள். 🙏

ஈழம் மலர்ந்திருந்தால், விவசாயிகளுக்கு பென்சன் கிடைத்திருக்கும்.

விவசாயிகளுக்குதான் இனிவரும் காலங்கள் நல்ல மவுசு.

மழை அதிகம் பெய்தாலும், அது வழிந்தோட சேமித்து வைக்க நல்ல கட்டமைப்பு இருக்கனும்

 

உண்மைதான் ஐரோப்பிய நாடுகள்போல் ஈழத்திலும் வந்திருக்கும் என்னசெயவது.

எனக்கு ஊக்கம்தரும் உடையார் அவர்களுக்கு  உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.