Jump to content

விசித்திர மனநோய் -முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome)


Recommended Posts

விசித்திர மனநோய் -முஞ்சோசன் சின்ரோம் (Munchausan Syndrome)

தோழி,  UK

இந்த வினோதமான நோயைப் பற்றிப் பேசுவதற்கு எனது  பாடசாலை அனுபவம் ஒன்றை தொடர்புபடுத்துவது இந்நோயின் ஒரு பகுதியை இலகுவாக புரிந்து கொள்ள உதவும்.

"எனக்கும் என் குழந்தைக்கு ஒரே வருத்தம், ஒரு மாதிரியாய் நெஞ்செல்லாம் அடைச்சுப் போய் நானும் அவளும் வீட்டில படுத்த படுக்கை தான்." அந்தத் தாய் சொன்னதை மிகுந்த ஆதங்கத்தோடு நானும் கேட்டுக்கொண்டேன்.  நன்றாகப் படிக்கக் கூடிய குழந்தைக்கு இப்படியான நோய் வந்து சேர்ந்ததே என எனக்கும் கவலையும் யோசனையும் தான்.

குழந்தை பாடசாலையில் நன்றாக ஓடி விளையாடி, திடகாத்திரமாகவும் கற்பதை மிகுந்த சிரத்தையுடன் அவதானிப்பதையும் பார்த்த போது ஏதோ எங்கேயோ இடிப்பது போலிருந்தது.  போதாக்குறைக்கு குழந்தையும் தனக்கெதுவும் உடல்  வலி, மனக்கவலைகள் இருப்பது போலவும்  காட்டிக் கொள்ளவில்லை.  ஆனால் தன்னுடைய தோழி ஒருத்திக்கு தனது தாய் பற்றிச் சொன்னது எதேச்சையாக என் காதிலும் கேட்டு நான் மேலும் ஜாக்கிரதையானேன்.

அம்மா எனக்கு அடிக்கடி மருந்து தாறா, ஆனால் எனக்கு மருந்து குடிக்க விருப்பமில்லை.  ஆறு வயதேதான் என்றாலும் குழந்தை ஒரு வித கவனத்துடன் என்னைக் கண்டதும் தன் கதையை நிறுத்திக் கொண்டது.

ஆனால் அடுத்தடுத்த மாதங்களிலும் அடிக்கடி பாடசாலைக்குக் குழந்தை வராமல் இருப்பதும் அதற்கு தாய் ஒவ்வொரு நோய் நொடியென்று அளந்து விடுவதும் எனக்கேதோ ஒரு சந்தேகத்தைத் தர இதற்கென பதவியிலுள்ள அதிகாரியொருவருக்கு ஒருவருக்குத் தகவல் அனுப்பி விட்டு, அடுத்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

அடுத்த தடவையும் ஒரு நோய் சொல்லப்பட்ட போது, அது நிச்சயமாக உண்மைக்குப் புறம்பாக இருக்கும் என்பது அவருடைய கதையைச் சுற்றி வந்த சம்பவங்கள் பறை சாற்றின. அதாவது குழந்தைக்கு வந்த நோயின் தீவிரத்தில் குழந்தையை மருத்துவ உலங்கு வானூர்தி மூலமாக ( Air lifted by the paramedics)  வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக சம்பவத்தை அந்தத் தாய் விபரித்தார்.  இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றி சொல்லி இதனால் தான் குழந்தை பாடசாலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

தாய் போனபின், சில சாதாரணமான கேள்விகளுக்கு குழந்தை பதில் அளித்தது. குழந்தைகளிடம் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நேரடியாகக் கேள்வி கேட்கக் கூடாதென்பது (must not ask any leading questions)  எமக்களிக்கப்பட்ட பயிற்சிகளில் ஒன்று.

எனினும் நன்றாகக் கதைக்கத் தெரிந்த, புத்திசாலியாகவும் இருக்கும் ஒரு குழந்தைக்கு தான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தெரியாமல் இருக்கும் என்பதை என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.  அடித்து மட்டுமல்ல அவர்கள் வீட்டுக்கருகில் உலங்கு வானூர்தி இறங்கி ஏறும் வசதியெதுவும் இல்லை என்பது எமக்குத் தெரிந்திருந்தது. அயல் வீடுகளில் இருக்கும் எமது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்கள் அப்படி எதுவும் அந்த குறிப்பிட்ட நாளில் நடைபெற வில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

ஏற்கனவே என்னால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளிலிருந்தும் சமூகநல அதிகாரியின் நேரடிக் கண்காணிப்பிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்தும் ,அவருடைய கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாக்கு மூலங்களிலிருந்தும் அந்தத் தாய்க்கு ஒரு வித மன நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

 

இந்த விசித்திர நோயால் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலில் அதை மனநோய் வைத்தியர்கள் 18ம் நூற்றாண்டில் கண்டுபிடித்த போது முஞ்சோசன் (Baron Von Munchausen) என்கிற  ஒரு ஜேர்மனியருக்கே இந்நோய் இருந்தது அறியப்பட்டதால் அவருடைய பெயரையே இந்நோய்க்கு வைத்து விட்டார்கள்.  இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டதாயினும் முக்கியமானவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு இல்லாத பொல்லாத வருத்தங்களை எல்லாம் இருப்பதாக நம்புவார்கள். அதுமட்டுமல்ல தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நம்ப வைப்பதற்காக படாதபாடு படுவார்கள்.

தம்மைத்தாமே காயப்படுத்துவது உட்பட தமது சிறுநீர் மாதிரியை மாசு படுத்துவது,  மருத்துவ சொற்களைப் பற்றி முன்கூட்டியே படித்து வைத்து வைத்தியர்களையும் குழப்புவார்கள். 

அடிக்கடி தமக்கு மருத்துவ சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள் தேவை என அடம் பிடித்துக் கொள்வார்கள்.  அத்துடன் வேறு வேறு மருத்துவர்களை அல்லது வெவ்வேறு வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மூலம் நோய் அறிகுறிகளை சரியான முறையில் பார்த்து நிவர்த்தி செய்ய வைத்தியர்களை அனுமதிக்க மாட்டார்கள்.

இந்நோய்க்கான சரியான காரணங்கள் அறியப்படா விட்டாலும் ஒரு சில காரணிகள் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.  இதன் வளர்ச்சியில் உயிரியல் மற்றும் உளவியல் காரணிகளின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது. குழந்தையாக இருந்தபோது துஷ்பிரயோகத்துக்கு ஆளாவது, மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டிருப்பது,  ஆளுமைக் கோளாறுகள் போன்றவை இவற்றுள் அடங்குகின்றன.

பொதுவாக இந்நோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிப்பதாய் இருப்பதும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.  சிகிச்சை முறைகளை எடுத்துக்கொண்டால் உளவியல் சிகிச்சைகள், முக்கியமாக பேச்சுச் சிகிச்சை ஒரு முக்கிய சிகிச்சையாகும். இதில் நோயாளியை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருப்பதற்குக் காரணம் நோயாளிகள் பெரும்பாலும் தமது உடல் நோய்க்கான குணம் குறிகளை மிகைப்படுத்தியும், ஒன்றுக்கொன்று முரணான அறிகுறிகளை அல்லது இல்லாத ஒரு நோயை  வைத்தியர்கள் நம்பும் படியாகக் கூறுவதும் தான். தமக்கு மனதில் உள்ள பாதிப்புகளை வெளியே காட்டாமல் அதே வேளையில் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் தம்மை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சிந்தனை உள்ளவர்களாக இருப்பதும் இவர்களுக்கு கைவந்த கலையாக இருப்பினும் இவர்கள் ஒருவகையில் அனுதாபத்துக்குரியவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமும் முடிவும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது பறவாயில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, யாயினி said:

ஆரம்பமும் முடிவும் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது பறவாயில்லை..

எனக்கு ஒன்றும் புரியவில்லை.
குழந்தை பற்றிய விசாரணை பின்னர் தாயின் பக்கம் திரும்பிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எனக்கு ஒன்றும் புரியவில்லை.
குழந்தை பற்றிய விசாரணை பின்னர் தாயின் பக்கம் திரும்பிவிட்டது.

ஆம் நானும் எதிர் பார்த்து வாசித்தது அப்படித் தான்.சில வேளைகளில் சில விடயங்கள் தொடர்ந்து எழுத பகிர முடியாது அய்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழி பகிர்வுக்கு, இதைதான் ஊரில் கிஸ்தீரிய என்று கூறுகின்றவர்களா? 

உங்களுக்கு சமூக அக்கறையிருக்கு, தொடர்ந்து பகிருங்கள்👍,

புலனாய்வும் நன்றாக இருக்கு, உங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தோழி.

இந்த நோயை பற்றி நான் கேள்விபட்டுள்ளேன் ஆனால் உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது.

உடையார் எனக்கு தெரிந்த மட்டில் ஹிஸ்டீரியா என்பது மனப்பிரம்மைக்கான பொதுப்பெயர். வடிவாக தெரியாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு ஒன்றும் புரியவில்லை.
குழந்தை பற்றிய விசாரணை பின்னர் தாயின் பக்கம் திரும்பிவிட்டது.

நான் புரிந்த வரையில் தாயுக்குத்தான் “நோய் சொல்லும்” வருத்தம். தனக்கும் பிள்ளைக்கும் வருத்தம் எனச் சொல்லி இருக்கிறா.

தோழி இங்கே ஒரு ஆசிரியை என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

நன்றி தோழி பகிர்வுக்கு, இதைதான் ஊரில் கிஸ்தீரிய என்று கூறுகின்றவர்களா? 

உடையார்
கிஸ்ரிரியா என்பது உறவு சம்பந்தமான நோயாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உடையார்
கிஸ்ரிரியா என்பது உறவு சம்பந்தமான நோயாக இருக்கலாம்.

ஓ அப்படியா, பெயர் கேள்விடப்பட்ட மாதிரி இருந்திச்சு அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான ஒருவரிடம் மாட்டு பட்டு இருக்கிறேன் 
நண்பன் கொஞ்சம் கெட்டிகாரன் உடனேயே இது வெறும் நாடகம் என்று 
கண்டுபிடித்து என்னை எச்சரிக்கை செய்துகொண்டு இருந்தான் 
எனக்கோ பரிதாபத்தால் சந்தேகம் கொள்ள முடியவில்லை 
முன் பின் முரண் இருபதை  தெரிந்துகொண்டேன் ஆனாலும் தொடர்ந்தும் ஏமாந்து கொண்டே இருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது சொந்த பந்தங்களை விட்டு தனித்தனியே வாழ ஆரம்பித்தார்களோ அன்றிலிலிருந்து குடும்ப பிரச்சினைகளும் , தனி நபர் பிரச்சினைகளும் ஆரம்பமாகிவிட்டன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த அம்மணி ஒருவர்; ஜேசுநாதரை  நான் கண்ணால் பார்த்தேன். என்னோடு பக்கத்தில் இருந்து செபம் சொன்னார், கையை பிடித்துக்கொண்டு ஜெருசலேம் காட்டினார் என்று சொல்லுவார். அவர் சொல்லும் பொது பொய் சொல்வது போல தெரியாது... அவ்வளவு துல்லியம்.

அதே போல இன்னும் ஒருத்தர், தன்னை CIA, FBI ஏஜெண்டுகள் தொடர்ந்து வருவதாவாகும், தனது உடம்பில் ஒரு நுண்ணிய எலக்ட்டோனிக்ஸ் சிப்பை வைத்து மறைக்க முயற்சிப்பதாகவும், இங்கே இருக்கும் போலீஸ் மற்றும் பக்கத்துக்கு வீட்டுகாரனும்   இவர்ளுடன் சேர்ந்து  சூழ்ச்சி செய்கிறான் என்று ஒரே வரிகளை  சொல்லிகொண்டே இருப்பார். போலீஸ்  ஸ்டேஷனில் இவர் இந்த குற்றங்களை பதிய அலைந்துகொண்டும் இருக்கிறார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நோய் பற்றி நான் கேள்விப்படவேயில்லை. ஆனால் இந்த நோயும் அது சம்பந்தமான விளக்கங்களும் சிறப்பாக இருக்கு சகோதரி......!  

Link to comment
Share on other sites

22 hours ago, goshan_che said:

நான் புரிந்த வரையில் தாயுக்குத்தான் “நோய் சொல்லும்” வருத்தம். தனக்கும் பிள்ளைக்கும் வருத்தம் எனச் சொல்லி இருக்கிறா.

தோழி இங்கே ஒரு ஆசிரியை என நினைக்கிறேன். 

நன்றி! புரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொண்டமைக்கு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.