Jump to content

தமிழோடு விளையாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

கைதியாகிறேன் என்றவள்....

கைதியாக்கி விட்டாளே...!😭

விடுங்கள், புலவர்களுக்கு எல்லாம் வாய் வீச்சுதான். கை வீச்சு எல்லாம் அவர்கள்தான்.....!  😂

Link to comment
Share on other sites

கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!

கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!

கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
 
Link to comment
Share on other sites

கோமுற்றவரே..... 
கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்.... 
கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்.... 
கோமணத்தோடு ஓடுவீர்..... !!!

கோமகனே.... 
கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்..... 
கோடரி காம்புகளும் இருக்கும்.... 
கோட்பாட்டை கூறி... 
கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!!

கோகயம் போல் இதயத்துடன்..... 
கோ மகள் போல் சாந்தத்துடன்..... 
கோடரம் போல் வேகத்துடன்..... 
கோணாய் போல் புத்தியுடன்..... 
கோ மகனே ஆட்சி செய்...... !!!
@
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

அன்புக்கு அடக்கமானவன் நீ 
ஆசையை அழிப்பவன் நீ 
இன்பதத்தை தருபவன் நீ 
ஈகையில் மகிழ்பவன் நீ 
உலகை ஆழ்பவன் நீ 
ஊண் கொடுப்பவன் நீ 
எழுத்து தந்தவன் நீ 
ஏர் தந்தவன் நீ 
ஐந்துபொறியும் நீ 
ஒற்றுமையை கூறுபவன் நீ 
ஓங்காரம் ஆனவன் நீ
ஔடதமானவன் நீ
என்னுள் இருக்கும் நீ 
உயிரே நீ..... !!!

&
ஆன்மீக கவிதை
கவிப்புயல்  இனியவன்
கவியருவி இனியவன்

Link to comment
Share on other sites

அகராதி தமிழ் சொற்கள் கவிதை 
"ச " வரிகள் 
....... 

சதியை மதியால் வெல்... 
சங்கடங்களை திறனாய்வு செய்...
சகுனம் பார்த்து வீணாகாதே.... 
சாத்தியம் தவறாமல் வாழ்... 
சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!!

சத்துருவை நீயே உருவாக்காதே... 
சந்தர்ப்பங்களை தவறவிடாதே... 
சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே... 
சமூக நோக்குடனும் வாழ்.... 
சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!!

சம்பிரதாய சடங்கில் மூழ்காதே.... 
சரணடைந்து மானம் இழக்காதே.... 
சரீரம் கெடும் பொருள் தொடாதே.... 
சவால்களை எதிர்கொள்...
சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!!

@
கவிநாட்டியரசர், 
கவிப்புயல் இனியவன் 
(யாழ்ப்பாணம்)

Link to comment
Share on other sites

  • 4 months later...

ஆன்மீகக் கவிதை 
🌿🌿🌿
அ ன்புக்கு அடக்கமானவன் நீ 
ஆ சையை அழிப்பவன் நீ 
இ ன்பதத்தை தருபவன் நீ 
ஈ கையில் மகிழ்பவன் நீ 
உ லகை ஆழ்பவன் நீ 
ஊ ண் கொடுப்பவன் நீ 
எ ழுத்து தந்தவன் நீ 
ஏ ர் தந்தவன் நீ 
ஐ ந்துபொறியும் நீ 
ஒ ற்றுமையை கூறுபவன் நீ 
ஓ ங்காரம் ஆனவன் நீ
ஔ டதமானவன் நீ
என்னுள் இருக்கும் நீ 
உயிரே நீ..... !!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல்  இனியவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.