Jump to content

கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் - ரஷிய நிபுணர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் - ரஷிய நிபுணர்

கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் - ரஷிய நிபுணர்

 

மாஸ்கோ, 

ரஷியா தான் தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் போடத் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுபவர்கள் நோய்த்தடுப்புக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டும் என்று ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர் அன்னா போபோவா தெரிவித்தார். மேலும் மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது என்றும், தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரை மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/09025330/No-Alcohol-for-2-Months-Russia-Tells-Coronavirus-Vaccine.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.