Jump to content

யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO

Hug

Hug

நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'.

நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம்.

தொடுதல்
 
தொடுதல்

தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்களின் ஸ்பரிசம் இல்லாத காரணத்தால் ஏற்படும் ஸ்கின் ஹங்கர்(Skin hunger-`சருமத் தேடல்' அல்லது `தொடுதலுக்கான ஏக்கம்') பிரச்னையாலும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பிடித்தவர்களைத் தொட்டும் அணைத்தும் பேசத் தொடங்கிவிட்டோம். இந்தப் பழக்கம் கொரோனாவால் ஏற்படும் அடுத்த சுற்று பாதிப்புக்குத் திறவுகோலாக இருந்துவிடக்கூடும். அதனால் நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'.

 

கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதால், 'சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்' என்ற விதிமுறை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது WHO. ஏனெனில் இனி வருவது விழாக்காலம். அடுத்து வரும் தினங்களில் கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

WHO
 
WHO

இவை உலகம் முழுவதுக்குமான பொதுவான பண்டிகைகள். அதனால் பல்வேறு இடங்களில் நண்பர்களும் உறவினர்களும் ஒன்றுகூட நேரிடும். அப்போது ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதாலும் கட்டிப்பிடிப்பதாலும் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இரண்டாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை மனதில் கொண்டு பிறரைக் கட்டிப்பிடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

 

 

கூட்டமாகச் சேர்ந்து உணவு உண்ண வேண்டாம். அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரே இடத்தில கூடுவதைத் தவிர்த்திடுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்கின்றனர் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.

corona
 
corona AP Photo / Channi Anand

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'சமூக இடைவெளியை' கடைப்பிடிக்கும் மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லட்சணத்தில் இருக்கிறது நிலைமை. முக்கால்வாசி பேர் மாஸ்க் அணியாமலே சாலைகளில் நடமாடிக்கொண்டிருக்கின்றோம். ரியாலிட்டி ஷோக்களில் வரும் நடிகர்கள் கட்டிப்பிடித்துப் பேசுவதைப் பார்த்துவிட்டுக் கட்டிப்பிடி வைத்தியத்தை மீண்டும் கையிலெடுக்கத் தொடங்கிவிட்டோம். இந்நிலையில் பண்டிகைகள், திருமண விழாக்களை முன்னிட்டு மக்கள் ஒன்றாகக் கூடும்போது கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவக்கூடும். அதனால் நிலைமையை உணர்ந்து WHO விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை மனதில் கொள்வோம்! சமூக இடைவெளியை கடைப்பிடித்திடுவோம்!

 

https://www.vikatan.com/health/healthy/dont-hug-the-health-advisory-issued-by-world-health-organization

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி நடு வீட்டுக்குள்ளையும் மாஸ்க் கட்டச்சொல்லி சட்டம் கொண்டுவருவாங்கள் போல கிடக்கு.......

இயற்கையை அவமதித்து அழிப்பதால் கடவுள் விதிக்கும் தண்டனை கொரோனா....

Link to comment
Share on other sites

இவ்வாறான நோய்கள் மனித குலத்தை தாக்குவது இது முதற்தடவையல்ல. 14 நூற்றாண்டில், அதாவது 1347 ல் ஆரம்பித்த பிளேக்  நோயால் ஏறக்குறைய 200 மில்லியன் மக்கள் இறந்தார்கள்.

18 ம் நூற்றாண்டில் யாழ்பாணத்தை வாந்தி பேதி  நோய் தாக்கியபோது பலர் மாண்டனர். அப்போதெல்லாம்,  மக்கள் நவீன சாதனங்களை பயன்படுத்தவில்லை. 

கி.மு 500 ம் ஆண்டில்,  அதாவது ரோமர்களின் ஆட்சிகாலத்திலேயே இவ்வாறான நோய்களால் மக்கள் இறந்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

மனிதன் இயற்கையை அழித்தான்  அதனால் கடவுள் என்பவன்  கொரோனாவை  உருவாக்கினான்  என்பது போன்ற **** புலுடாக்களை அறிவுள்ள மனிதர்கள் நம்ப மாட்டார்கள். ஆகவே இப்படியான தமது கற்பனையில்  இவ்வாறான புலுடாக்களை விடுபவர்கள் உலக வரலாற்றை திரும்பி பார்ககவேண்டும். இவ்வாறான மூடக்கதைகளை கூறுவதன் மூலம் அறிவுடை சந்ததியை உருவாக்க முடியாது. 

15 ம் நூற்றாண்டின் பின்னர்தான் அறிவியல் மறுமலர்சசி உருவாக தொடங்கியது. அதன் வளர்ச்சி சிறிது சிறிதாக வேகமெடுத்து தற்போதைய காலத்துக்கு  ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தான் இன்றைய நவீன சாதனங்களை மனிதன் பயன்படுத்த தொடங்கினான். அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முனபே தொற்று நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டதை உலக வரலாறு பதிவு செய்துள்ளது. சரியாக ஆராய்ந்தால் பூமியில் உயிரினங்கள் பரிணாம வளர்சியில் உருவாகும் வேளையிலேயே நுண்ணுயிர்களும் உருவாகத் தொடங்கி விட்டது. மனித இனம்  உருவாகிய போதே நோய்களின் தாக்கமும் தொடங்கி விட்டது. உண்மை இப்படி இருக்க அறிவியல் வளரச்சி  உருவாக்கிய சமூக வலைத்தளங்களில் இவ்வாறான மூடத்தனங்களை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. 

On 10/12/2020 at 07:17, குமாரசாமி said:

இயற்கையை அவமதித்து அழிப்பதால் கடவுள் விதிக்கும் தண்டனை கொரோனா....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.