Jump to content

கொரோனா தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்துகின்றனவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலைத்தேய நாடுகளான ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தடுப்பூசி தயாரித்திருப்பதாகவும், அதனை பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு பல நாட்டு அரசாங்கங்கள் மக்களுக்கான பயன்பாட்டிற்கு அனுமதித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கொரேனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/140662/coroooo.JPG

 

கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. 

 

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

 

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார துறை, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. மருந்துகளாலும் அல்லது உணவாலும் ஒவ்வாமை ஏற்படும் என உறுதியாக தெரிந்தால், அவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. 

 

அதே தருணத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பவர்களில் சிலருக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

 

இவை வழக்கமானதுதான் என்றும், இதனை ஏனைய மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்திருக்கிறது. அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பாதிப்பு இருப்பவர்கள், மருத்துவர்களை கலந்து ஆலோசித்த பின்னரே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

 

அதே தருணத்தில் ரஷ்ய நாட்டில் கண்டறியப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்பவர்கள், அந்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு, 40 நாட்கள் மது அருந்தக் கூடாது என்றும், இந்த அறிவுரையை மீறி, மது அருந்தினால், தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதனால் உண்டாக வேண்டிய நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

எனவே கொரோனா பரவலை தடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது தான்  என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

கொரோனா தடுப்பூசிகள் பக்க விளைவை ஏற்படுத்துகின்றனவா? | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.