Jump to content

பாறு கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
பாறு கழுகுகள்

பட மூலாதாரம்,DR TOLSTOY

உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

இறந்த உடல்களில் இருக்கும் நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உணவாக உட்கொண்டு நோய் பரவலை தடுக்கும் ஆற்றல்மிக்க பாறு கழுகுகளின் இறப்பு உடனடியாக மனிதர்களை பாதிக்காவிட்டாலும், எதிர்காலத்தில் மனிதர்களை கொல்லும் நோய் கிருமி மற்றும் நுண்ணுயிர்கள் பரவுவதற்கு காரணமாக அமையலாம் என எச்சரிக்கின்றனர் பறவையின ஆராய்ச்சியாளர்கள்.

பாறு கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் எழுதியுள்ள சூழலியல் செயற்பாட்டாளர் பாரதிதாசன் விரிவான பல தகவல்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

"வானில் ஒரு இடத்தில் மட்டும் பாறு கழுகுகள் வட்டமடிப்பதை வைத்தே, அங்கு ஏதோ விலங்கு செத்துக்கிடக்கிறது என வனத்தை ஒட்டி வசிக்கும் ஊர் மக்களும், வனத்துறையினரும் தெரிந்து கொள்வார்கள். ஆனால், இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதால் இறந்த விலங்குகள் குறித்த தகவல் கிடைப்பதே தற்போது சவாலாக மாறியுள்ளது. இறந்த உடலை உட்கொண்டு அதில் உள்ள நோய் கிருமிகளை அழிப்பதால், பாறு கழுகுகளை 'ஆகாய டாக்டர்' என்றே அழைக்கலாம்."

"உருவில் மிகப்பெரிய பறவைகளுள் ஒன்றான பாறு கழுகுகளில் 23 வகைகள் உள்ளன. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் பாறுகள் மோப்பத்திறன் இல்லாதவை. இந்தியாவில் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. இவற்றில் வெண்முதுகுப்பாறு, கருங்கழுத்துப்பாறு, மஞ்சள்முகப்பாறு, செந்தலைப்பாறு எனும் நான்கு வகை பாறு கழுகுகள் பெரும்பாலும் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்துமே அழியும் தருவாயில் இருக்கின்றன. இவை தவிர ஊதாமுகப் பாறு வகையும் தமிழகத்தில் அரிதாக காணப்பட்டதாக பதிவுகள் உள்ளது. இவை அனைத்துமே கூட்டமாக வாழக்கூடிய தன்மை கொண்டவை."

"தனது கூரிய அலகால், செந்தலைப் பாறு சடலத்தை கிழித்து அதற்குத் தேவையானவற்றை உண்டுவிட்டு மற்றவை எளிதில் அனுகத் தேவையான வழியை ஏற்படுத்தித் தரும். அதன்பின் வெண்முதுகுப் பாறு வரும். அது சடலத்தின் உடல் துவாரங்கள் வழியாக அலகை உள்ளே நுழைத்து சதையை பிய்த்து உண்ணும். கடைசியாக மஞ்சள் முகப் பாறு வந்து மிச்சம் மீதமிருக்கும் கழிவையும் எச்சத்தில் இருக்கும் புழுக்களையும் உண்ணும். பெரும்பாலும், இந்த வரிசையில் தான் பாறுகள் உணவை பங்கிட்டுக்கொள்ளும். இரை உண்டபின் முதல் வேலையாக அருகில் உள்ள ஓடையில் நன்கு குளித்து இறகுகளில் ஒட்டியிருக்கும் இரத்தக்கறைகளைக் கழுவி இறகுகளைத் தூய்மைப் படுத்திக்கொள்ளும். இவ்வாறு பாறு கழுகுகளின் இரை உண்ணும் பாங்கு தனித்துவம் வாய்ந்தது" என்கிறார் பாரதிதாசன்.

பாறு கழுகுகள்

பட மூலாதாரம்,BHARATHIDASAN

இவர் கடந்த இருபது ஆண்டுகளாக 'அருளகம்' என்ற அமைப்பை உருவாக்கி பாறு கழுகுகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

அழுகிய நிலையில், நோய் தொற்று உடைய சடலங்களை உண்டாலும் அவற்றை செரிக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த அமிலங்கள் பாறு கழுகுகளின் வயிற்றில் இருப்பதாக கூறுகிறார் இவர்.

"நாள்பட்ட அழுகிய இறைச்சியை உண்டாலும் தொற்று நோய்வாய்ப்பட்டு இறந்த கால்நடைகளை உண்டாலும் பாறுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. குறிப்பாக அடைப்பான் (Anthrax), கழிச்சல் (Cholera), காணை நோய் (Foot and Mouth Disease), வெறிநோய் (Rabies), கோமாரி நோய் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் இதன் வயிற்றில் சுரக்கும் அமிலம் செயலிழக்கச் செய்து விடுகிறது. இவற்றிடமிருந்து எந்த நோயும் பிற உயிரினங்களுக்கும் பரவுவதில்லை. இதனால் மனிதர்களை தாக்கும் கொள்ளை நோய்கள் பரவுவது தடுக்கப்படுகின்றது.

மேலும் காட்டில் விலங்குகள் நீர்நிலைகளுக்கருகில் இறக்க நேர்ந்தால் அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து அங்கு தாகம் தணிக்க வரும் மான்கள், யானைகள் உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. அந்த ஆபத்திலிருந்து இவை மறைமுகமாக விலங்குகளையும் காக்கின்றன."

"1950களில் சென்னையில் காகங்களின் எண்ணிக்கையை விட பாறு கழுகுகள் அதிகமாக காணப்பட்டதாக, மூத்த பறவை ஆராய்ச்சியாளர் நீலகண்டன் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, பாறு கழுகள் எனும் பறவை இனமே அழியும் தருவாயில் உள்ளது. உணவுத்தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு செலுத்தப்படும் வலிநிவாரணி மருந்துகள் மற்றும் விஷம் வைத்து விலங்குகளை கொல்வது போன்ற காரணங்களால் தான் பாறுக்கள் இறக்க நேரிட்டதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இயற்கையின் உணவுச் சங்கிலியில் பாறு கழுகுகள் முக்கியமானவை. அவற்றின் இறப்பு, நோய் பரவலை உருவாக்கி எதிர்காலத்தில் மனிதர்களுக்கு பேராபத்தாக அமையும்" என எச்சரிக்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் பாரதிதாசன்.

பாறு கழுகுகள்

பட மூலாதாரம்,C.R. JAYAPRAKASH

உடல் அமைப்பு மட்டுமின்றி வசிப்பிடத்தை உருவாக்குவதிலும் பாறுகள் தனித்துவம் வாய்ந்தவை என்கிறார் மாயாறு பகுதியில் உள்ள பாறு கழுகுகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் பைஜூ.

"கருங்கழுத்துப்பாறுகள் பாறைகளில் உள்ள இடுக்குகளில் முட்டையிட்டு வசிக்கக் கூடியவை. வெண்முதுகுப்பாறுகள் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்க கூடிய நீர் நிலைகளின் அருகில் உள்ள உயரமான மரங்களில் வசிக்கும். குறிப்பாக, நீலகிரியின் மாயாறு வனப்பகுதியில் உள்ள நீர்மத்தி மரம் மற்றும் காட்டு மாமரம் ஆகியவற்றில் இவை காணப்பட்டுள்ளன. இந்த மரங்களின் உயரம் சுமார் நாற்பது முதல் அறுபது அடி வரை இருக்கும். நீரோட்டம் உள்ள பகுதியில் இருப்பதால் மரங்களின் இலைகள் பசுமையாகவே இருக்கும். அவற்றை பயன்படுத்தி மென்மையான கூட்டை உருவாக்கி பாறு கழுகுகள் அதில் முட்டையிட்டு பாதுகாக்கும். வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பாறுகள் முட்டையிடும். மேலும், இவை வசிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் மனிதர்கள் வராத இடமாகவே உள்ளன. அவை கூடு கட்டியிருக்கும் பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் இருந்தால் வேறு இடத்திற்கு வசிப்பிடத்தை மாற்றிவிடுகின்றன."

"உணவுக்காக பாறு கழுகுகள் 2௦௦ முதல் 250 கி.மீ தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டவை. இவை வானில் இருந்து நிலப்பகுதியை பார்வையிட்டு, சடலங்களை கண்டறிந்து உணவாக எடுத்துக் கொள்ளும். கடந்த 20 ஆண்டுகளாக சீமைக்கருவேலம் போன்ற அடர்ந்த தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நிலத்தில் உள்ள சடலங்களை பாறுகளால் மேலிருந்து கண்டறிய முடியவில்லை. இவ்வாறு நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களும் பாறு கழுகுகளை பாதிக்கின்றன"

"1990களில் மாயாறு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாறுகள் பதிவாகியுள்ளன. இன்று இப்பகுதிகளில் வெறும் 300 பாறுகள் மட்டுமே உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை பாறுகளின் எண்ணிக்கை 99 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த பேரழிவிற்கு முக்கிய காரணம், கால்நடைகளுக்கு விஷம் வைத்து கொல்லும் முறை.

பாறு கழுகுகள்

பட மூலாதாரம்,BYJU

விஷ பாதிப்புகள் உள்ள சடலத்தை உண்பதால் பாறுக்களும் இறக்கின்றன. இந்திய அளவிலும் பாறுக்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் கால்நடைகளுக்கு செலுத்தப்படும் டைக்குளோபினாக் மற்றும் இதர மருந்துகள் தான்" என்கிறார் ஆராய்ச்சியாளர் பைஜு.

இயற்கைப் பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியமான International Union for Conservation of Nature (I.U.C.N) என்ற அமைப்பு வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செந்தலைப் பாறு, வெண்கால் பாறு ஆகிய 4 வகைப் பாறு கழுகுகள் உலகளவில் அற்றுப் போகும் நிலையில் உள்ள பட்டியலில் (Critically Endangered) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

மஞ்சள் முகப்பாறுக்களின் எண்ணிக்கை பிற நாடுகளில் கூடுதலாக இருப்பதால் அடுத்த படிநிலையிலுள்ள அரிய நிலையிலுள்ளவை (Endangered) என இவ்வகையை பட்டியலிட்டுள்ளது.

தமிழக அளவில் பட்டியல் தயாரித்தால் மஞ்சள் முகப்பாறுவும் அற்றுப் போகும் பட்டியலில் இடம்பெறும் எனவும், மொத்த தமிழகத்திலும் இவை ஒற்றை எண்ணிக்கையில் தான் இருப்பதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாறு கழுகுகள்

பட மூலாதாரம்,C.R. RAJASEKAR

பாறு கழுகுகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக அமைந்த டைக்குளோபினாக் மருந்து தடை செய்யப்பட்டுள்ளபோதும் மற்ற மருந்துகளின் தாக்கத்தால் பாறுகளின் இறப்பு தொடர்ந்து வருவதாக தெரிவிக்கிறார் சலீம் அலி நினைவு பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சூழல் நச்சுயியல் பிரிவில், மூத்த முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிவரும் முரளிதரன்.

"மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைக்குளோபினாக் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இது போன்ற ஆறு வகையான மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. டைக்குளோபினாக் மருந்து நோயுற்ற கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது. அவை உயிரிழந்த பின்னர் பாறுகள் அவற்றை உணவாக உட்கொள்கின்றன. இதனால், டைக்குளோபினாக் மருந்து பாறுகளின் சிறுநீரகத்தை பாதிப்புக்குள்ளாக்கி செயலிழக்க வைக்கிறது. இந்த காரணத்தால் 2006ம் ஆண்டு டைக்குளோபினாக் மருந்தை கால்நடைகளுக்கு செலுத்துவது தடை செய்யப்பட்டது." என்கிறார் இவர்.

பாறு கழுகுகளை பாதுகாக்க டைக்குளோபினாக் மருந்தைத் தடை செய்யப்பட வேண்டும் என்று பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, 2006 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசு தரப்பில் அனைத்து மாநில தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் டைக்குளோபினாக் மருந்து குறித்த முதல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில், பாறுகள் பெருமளவு இறக்கக் காரணம் டைக்குளோபினாக் மருந்து தான் என்றும் இதனால் சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் கால்நடைகள் பயன்பாட்டிற்கு இம்மருந்தை உற்பத்திசெய்ய வழங்கப்பட்ட அனுமதியை மூன்று மாதத்திற்குள் படிப்படியாக நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டு, 26 மாதங்களுக்குப்பின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்தியாவைத்தொடர்ந்து நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இரான், கம்போடியா ஆகிய நாடுகளிலும் டைக்குளோபினாக் மருந்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"டைக்குளோபினாக் தடைக்கு பின்னர் பாறுகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் என நம்பியிருந்தோம். ஆனால், நிமிசுலாய்ட்ஸ் போன்ற பிற மருந்துகளாலும் பாறுகள் உயிரிழப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் பாறுகளின் சிறுநீரகத்தை பாதித்து ஒரு வாரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது."

"மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தையை கொல்வதற்காக வைக்கப்படும் விஷம் தடவிய சடலங்களை நேரடியாக சாப்பிடுவதாலும், விஷ பாதிப்பால் உயிரிழந்த விலங்குகளை உட்கொள்வதாலும் பாறுகள் உயிரிழக்கின்றன" என்கிறார் முரளிதரன்.

பாறு கழுகுகளை பாதுகாத்து, அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் முதுமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகிறார் மசினகுடி கோட்டத்தின் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த்.

"முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் பாறுகள் காணப்படுகின்றன. அவற்றை பாதுகாக்கும் நோக்கில் திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளோம். இத்திட்டத்தில், பாறுகள் கூடுகட்டும் மர வகைகளை கண்டறிந்து அந்த வகை மரங்களை வளர்ப்பது, அவற்றின் கூடுகளையும், முட்டைகளையும் பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காயம்பட்ட பாறுகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதி மற்றும் அவற்றுக்கென பிரத்யேக இனப்பெருக்க மையத்தை உருவாக்குவதற்கான திட்டத்தையும் இணைத்துள்ளோம்" என்கிறார் ஸ்ரீகாந்த்.

உணவுத்தட்டுப்பாடு, விஷம் தடவப்பட்ட உணவு, மாறிவரும் நிலப்பரப்பு, நச்சு மருந்துகள் என பாறு கழுகுகளின் இறப்புக்கான காரணங்களை தடுத்து நிறுத்த, இயற்கையின் உணவுச் சங்கிலிக்குள் உட்பட்ட மனிதர்களுக்கும் பொறுப்பு உண்டு என தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

பாறு கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.