Jump to content

டிசம்பர் மாதம் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • இவா ஒண்டிவெரோஸ்
  • பிபிசி உலக சேவை
11 டிசம்பர் 2020
The milky way at Durdle Door, Dorset, UK

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரும்பாலானவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பிடித்திருக்காது.

ஆனால் நட்சத்திரங்களைப் பார்க்கும் விஷயத்திலாவது, இந்த ஆண்டு ஆர்வம் தருவதாக இருக்கும். இந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தே டெலஸ்கோப் அல்லது விலை அதிகமான சாதனங்களின் உதவியில்லாமல் நேரடியாக விண்வெளியில் பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் நிகழ இருக்கின்றன.

இரண்டு கோள்கள் ஒன்றாக சேர்வது, எரிகற்கள் பொழிவது, முழு சூரிய கிரகணம் - இவற்றைக் காண வானம் தெளிவாக இருந்தால் போதும், தேவை இருந்தால் கண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். எப்போது, எந்தப் பக்கம் பார்க்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் தேவை. இந்த மாதம், வான்வெளி உங்களுக்கு அளிக்கப் போகும் காட்சிகளின் தேதிவாரியான பட்டியல் இதோ:

டிசம்பர் 13 - 14: எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்ற விண்கற்களை கடந்த சில மாதங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ``எரிகற்கள் மழையாகப் பொழியும் காட்சியைக் காண'' உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

``வால் நட்சத்திரங்கள் விட்டுச் செல்லும் தூசிமண்டலத்தின் வழியாக பூமி செல்லும் போது எரிகற்கள் பொழியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது'' என்று பிரிட்டன் ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் மையத்தில் உள்ள வானிலை நிபுணர் பாட்ரிசியா ஸ்கெல்ட்டன் தெரிவித்தார்.

``ஆனால் ஜெமின்டிஸ் எரிநட்சத்திர பொழிவு வித்தியாசமானது - 3200 பேட்டன் என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மண்டலமாக இது இருக்கிறது'' என்கிறார் பாட்ரிசியா.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் நமது பூமி இந்த கைவிடப்பட்ட குப்பைகளின் வழியே பயணிக்கும்போது, இரவு நேரத்தில் ஒளிமயமான காட்சிகளைக் காண்கிறோம்: டிசம்பர் 1 முதல் 14 தேதி வரை அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 150 எரிநட்சத்திரங்கள் வீழும்.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``எரிநட்சத்திரங்கள் ஒரு விநாடிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்'' என்று பாட்ரிசியா தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது மஞ்சள் நிறத்தைக் காண தயாராக இருங்கள். சில நேரம் இது பச்சை அல்லது நீல நிறமாகவும் இருக்கும். இரவு நேர வானில் பெரிய வெளிச்சக் கீற்று கடந்து போகும். ``எரிநட்சத்திரங்கள் பறந்த நிலையில் எரிந்து விழும்போது எல்லா திசைகளிலும் இந்தக் காட்சி தோன்றும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கும்மிருட்டாக இருந்தால், இந்த அழகிய காட்சியை அருமையாகக் காண முடியும் ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்ப்புறங்களில் இந்தக் காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.

இன்னும் கொஞ்சம் நல்ல செய்தியும் இருக்கிறது. கடந்த ஆண்டைப் போல அல்லாமல் (பவுர்ணமியுடன் சேர்ந்து வந்தது), இப்போது அமாவாசையில் வருவதால் காட்சி நன்றாகத் தெரியும்.

டிசம்பர் 14: சிலி, ஆர்ஜென்டினாவில் முழு சூரிய கிரகணம்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிலி மற்றும் அர்ஜென்டினாவில், டிசம்பர் 14-ம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும்.

இருந்தாலும் இன்டர்நெட் மூலமாக லைவ் ஸ்டீரிமிங் செய்வதால் எல்லோரும் பார்க்கலாம்!

பெருந்தொற்று பாதிப்புக்கு முன்பாக இருந்திருந்தால், இந்த மாபெரும் நிகழ்வைக் காண தெற்கு சிலியில் படகோனியா மற்றும் ஆர்ஜென்டினாவில் மக்கள் திரண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டில் எல்லோரும் ஆன்லைனில்தான் பார்க்க வேண்டும்.

நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் இடத்தில் நீங்கள் இருந்தால், ஒருபோதும் நேரடியாகப் பார்க்காதீர்கள் - பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்.

முக்கியமான அந்த 24 நிமிடங்களில், நிலவு சூரியனைக் கடந்து செல்லும். அப்போது ``2 நிமிடங்கள் 9.6 விநாடிகள் மட்டும்'' முழுமையாக சூரியனை மறைக்கும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானிலை ஆய்வாளர் டானியா டி சேல்ஸ் மார்க்கஸ் தெரிவித்தார்.

``சூரியனைவிட நிலவு 400 மடங்கு சிறியது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால், அது பெரியதாக இருப்பதைப் போல நமக்குத் தோன்றும். எனவே சூரியனின் வட்டத்தை அது முழுமையாக நமது பார்வையில் இருந்து மறைத்துவிடும்'' என்று டானியா விளக்கியுள்ளார்.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூரியனுக்கு முன்னால் நிலவின் பயணப் பாதை கும்மிருட்டு திரை போல ஒன்றை உருவாக்கும். இதை தெற்கு அமெரிக்காவின் தெற்கு முனையில் பகலிலேயே காண முடியும்.

படகோனியாவில் வாழும் மாபுச்சே என்ற உள்ளூர் பகுதி மக்கள் இந்த வானியல் மாற்றங்களை மிக நெருக்கமாகக் கவனிக்க முடியும்.

``சூரியன் `ஆண் சக்தியை' குறிப்பிடுகிறது. நிலவு `பெண் சக்தியைக்' குறிப்பிடுகிறது. அவை இரண்டும் கடக்கும் போது ஏற்படும் சூழ்நிலை நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்'' என்று அந்த மக்களின் கலாச்சார கல்வியாளர் மார்செலோ ஹியூகுவென்மன் தெரிவித்தார்.

பாரம்பரியமாக, மாபுச்சே மக்கள் சூரிய கிரகணங்களை அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள். ``சூரியனின் மரணம்'' என்ற வகையில் அவர்கள் அதைக் கருதுகிறார்கள் என்கிறார் மார்செலோ.

``உலகெங்கும் சுமார் 5,000 ஆண்டுகளாக சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன'' என்று டானியா தெரிவித்தார்.

``சூரியன் விழுங்கப்படுவது போல தோன்றும் சில நிமிடங்கள் இரவு போல ஆகிவிடுவதால், சூரிய கிரகணத்தை கெட்ட விஷயமாக வரலாற்றின் பெரும்பகுதி காலத்தில் கருதப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

``ஒரே ஆண்டில் ஐந்து முறை சூரிய கிரகணங்கள் நிகழக் கூடும். ஆனால் முழு சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு ஒரு முறைதான் நிகழும். சூரியனின் ஒளியை முழுவதுமாக மறைப்பதற்கான சரியான பாதையில் நிலவு வரும் போதுதான் அது நிகழும்'' என்று டானியா கூறினார்.

எனவே முன்கூட்டியே நீங்கள் திட்டமிடுவதாக இருந்தால், அடுத்த முழு சூரிய கிரகணங்களை காண்பதற்கான இடமும், காலமும்: அன்டார்டிகா (டிசம்பர் 2021), இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா (ஏப்ரல் 2023), அமெரிக்கா மற்றும் கனடா (ஏப்ரல் 2024), தெற்கு ஐரோப்பா மற்றும் கிரீன்லாந்து (ஆகஸ்ட் 2026) மற்றும் வட ஆப்பிரிகாவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்குப் பகுதி (ஆகஸ்ட் 2027).

டிசம்பர் 21: வியாழன், சனி கோள்கள் சேர்க்கை, உலகம் முழுதும் தெரியும்

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் அழகாக, வெளிச்சமாகத் தெரிவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்'' என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் வானியலாளர் எட் புளூமர் தெரிவித்தார்.

இரு கோள்களும் ஒன்றாக சேருவது போல, இரண்டும் ஒன்றாக ஒளிர்வது போல இந்த சேர்க்கை இருக்கும்.

இதை நாம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு பார்க்கலாம். ``வானில் வியாழன் மற்றும் சனி கோள்கள் மிக நெருக்கமாக, ஏறத்தாழ தொட்டுக் கொள்வதைப் போல தெரியும்'' என்று எட் புளூமர் கூறினார்.

வெறும் கண்களால் பார்க்கும்போது இரு கோள்களும் 0.1 டிகிரிக்கும் குறைவான அளவுக்கு நெருக்கமாக இருப்பது போல தெரியும். ஆனால் உண்மையில் அப்படி இருக்காது. வியாழனுக்கும் பூமிக்கும் இடையில் 800 மில்லியன் கி.மீ. தூரம் உள்ளது (சுற்றுப் பாதையில் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்து இது மாறும்). வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலும் இதே நிலைதான் இருக்கும். ஆனால், சில மாதங்களாக, இரு பெரும் கோள்களும் இரவு நேர வானில் நெருங்கி வருவது போல தோன்றியது, இப்போது இறுதியில் ``சந்தித்துக் கொள்வது'' போல தோன்றும்.

``இது மாதிரி சேர்க்கைகள் பார்ப்பதற்கு மகிழ்வாக இருக்கும். குறிப்பாக சேர்க்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நெருங்கும்போது எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதைப் பார்க்க நன்றாக இருக்கும்'' என்று புளூமர் கூறினார்.

உங்களிடம் பைனாகுலர் அல்லது சிறிய டெலஸ்கோப் இருந்தால், வியாழனின் நான்கு பெரிய நிலவுகளையும் நீங்கள் பார்க்க முடியும்.

இவை கலீலியோ நிலவுகள் எனப்படுகின்றன. 1610 ஆம் ஆண்டில் இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலீலெய் சில மாதங்களுக்கு முன்பு தாம் உருவாக்கிய புதிய டெலஸ்கோப் மூலம் இவற்ரைக் கண்டுபிடித்துக் கூறியதால் அவரது பெயரில் குறிப்பிடப் படுகின்றன.

எரிகற்கள் பொழிவு - உலகம் முழுக்க தெரியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வியாழன் - சனி கோள்களின் சேர்க்கை 19.6 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும். ``ஆனால் 17வது நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது நிகழும் சேர்க்கைதான் மிக நெருக்கமானதாக இருக்கும் என்பதால் இது சிறப்பானதாகக் கருதப்படுகிறது'' என்று புளூமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு வியாழனும், சனியும் மிக நெருக்கமாக 397 ஆண்டுகளுக்கு முன்பு (1623-ல்) வந்தன

இந்த நிகழ்வு பற்றி வானியலாளர்களும், நட்சத்திர ஆய்வாளர்களும் உற்சாகமாக இருப்பதில் வியப்பு எதுவும் இல்லை. ``வாழ்நாளில் ஒரு முறை மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இது இருக்கும்'' என்கிறார் புளூமர்.

``கோள்களின் நகர்வைக் கவனிப்பதன் மூலம், விண்வெளிக்கு நாம் செல்வதற்கு முந்தைய காலத்திலேயே சூரிய மண்டலத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

``இந்த கோள்களின் நகர்தல், அவை வெளிப்படுத்தும் ஒளி ஆகியவற்றைக் கவனித்தல், விண்வெளி ஆய்வுக்கு கட்டமைப்பு வசதிகளை நிறுவியது ஆகியவை புவியில் ஏராளமான முன்னேற்றங்களைக் காணவும், புதுமை படைப்புகளை உருவாக்கவும் உதவியுள்ளன'' என்றார் அவர்.

வானம் தெளிவாக இருந்தால், பார்ப்பது எளிதாக இருக்கும். ஆனால் சீக்கிரமாக அந்த நிகழ்வைப் பார்த்துவிட வேண்டும். அந்தக் கோள்களின் சேர்க்கை ஒரு மணி நேர இடைவெளிக்குள் நிகழ்ந்துவிடும். பிறகு கீழ்வானில் மறைந்துவிடும்.

முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கு முந்தைய சில இரவுகளில் வானைப் பார்த்து, அவை எங்கே இருக்கின்றன என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் நேரத்தை அழகாக செலவிடுதலாகவும் இருக்கும். இப்படி செய்வதால், சூரிய மறைவுக்கு அரை மணி நேரம் கழித்து தென்மேற்கு அடிவானில் இதைக் காணலாம். அது உங்கள் பகுதியில் எந்த இடத்தில் வரும் என்பதை முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னொரு போனஸ் கூட இருக்கிறது. டிசம்பர் 21 ஆம் தேதி சூரியனின் பயணப் பாதை திரும்பும் நாளாகவும் இருக்கிறது.

சூரிய கிரகணம் முதல் சனி - வியாழன் சேர்க்கை வரை: டிசம்பர் மாதம் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனியும் வியாழனும் முட்டிக்கொள்ளுமா?

saturn-and-jupiter  
 

வானத்தைப் பார்த்தபடியே ஒருவர் தனது ஆயுளைக் கழித்துவிடலாம். அவ்வளவு அதிசயங்களை அது நமக்கு அள்ளித்தருகிறது. அதன் இன்னொரு அதிசயமாக, வருகின்ற டிசம்பர் 21 மாலை சனிக் கோளும் வியாழன் கோளும் ஒன்றையொன்று கட்டி அணைத்தபடி நெருங்கி இருப்பது போன்ற அரிய வானக் காட்சி தென்படவிருக்கிறது. சூரியன் மறைந்து அந்தி சாயும் வேளையில் தென்மேற்குத் திசையில் சனிக் கோளுக்குக் கைகொடுத்து நட்புடன் சந்திப்பதுபோல வியாழன் கோள் நெருங்கி இரண்டும் ஒரே ஒளிப் புள்ளியாக ஒளிரும். ஜூலை 16, 1623-க்குப் பிறகு, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் கடந்த பின்னர் சனியும் வியாழனும் இவ்வளவு நெருக்கமாக நிலைகொண்டு அற்புத வானக் காட்சியை நமக்குத் தரவுள்ளன.

உண்மையிலேயே இரண்டு கோள்களும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்ளாது. வியாழன் புவிக்குச் சற்று அருகே உள்ள கோள். அதைவிட சனி தொலைவிலுள்ள கோள். டிசம்பர் 21 அன்று இந்த இரண்டு கோள்களுக்கு இடையே சுமார் 60 கோடி கிமீ தொலைவு இருக்கும். ஆயினும் பூமியிலிருந்து காணும்போது இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நிற்பது போலக் காட்சி தரும்.

 
 
 

சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம்வரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்செயலாகப் பூமியும் வேறு இரண்டு கோள்களும் சற்றேறக்குறைய நேர்க்கோட்டில் அமையும். அந்த நிலையில், பூமியிலிருந்து காணும்போது அந்த இரண்டு கோள்களும் வானத்தில் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு நெருங்கி நிற்பதுபோலக் காட்சிதரும். இதைத்தான் 'கோள் சந்திப்பு நிகழ்வு' (conjunction) என்கிறார்கள். நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நெருக்க நிகழ்வு நடைபெறுவதைத்தான் நாம் 'கிரகணம்' என்கிறோம்.

பாரம்பரிய இந்திய வானவியலில் இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் நிகழ்வை 'யுத்தம்' என்றும், நிலவு வேறு கோள்களை நெருங்கிச் செல்வதை 'ஸமாகம்' என்றும், கோள்களைச் சூரியன் மறைப்பதை 'அஸ்தமயம்' என்றும் கூறுவார்கள்.

வானில் சூரியன் ஊர்ந்து செல்வதுபோலக் காட்சி தரும் பாதையைச் சூரிய வீதி என்பார்கள். இந்தச் சம தளத்திலிருந்து வெறும் ஐந்து டிகிரி சாய்வாகப் பூமியைச் சுற்றும் நிலவும் இதே சூரிய வீதியில் பயணிப்பதுபோலத் தென்படும். மேலும், சூரியனைச் சுற்றிக் கோள்கள் வலம் வரும் நீள்வட்டப் பாதைகளும் ஒருசில டிகிரி வித்தியாசத்தில் ஒரே தளத்தில் அமைந்துள்ளன. எனவே, பூமியிலிருந்து காணும்போது வானில் நிலவும் எல்லாக் கோள்களும் சூரிய வீதியில் பவனி வருவதுபோலக் காட்சி தரும். அவ்வாறு பயணம் செய்யும்போது அவ்வப்போது இரண்டு கோள்கள் ஒன்றையொன்று நெருங்கிச் சந்திப்பு நிகழும். சனி சூரியனைச் சுற்றிவர 29.4 ஆண்டுகளும் வியாழன் 11.86 ஆண்டுகளும் எடுக்கும். எனவே, 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனியும் வியாழனும் வான் கோளத்தில் சூரிய வீதியில் நெருங்கி ஒன்றையொன்று சந்திப்பது போலக் காட்சி ஏற்படும். கடந்த முறை மே 28, 2000-ல் இப்படி நிகழ்ந்தது. ஆனால், அப்போது இரண்டு கோள்களும் சூரியனுக்கு அருகே இருந்ததால் கண்ணுக்குத் தென்படவில்லை. 19.85 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சந்திப்பில் சிறிதளவு இடைவெளி இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தற்போதைய சந்திப்பில் வெறும் கண்ணுக்கு இடைவெளி புலப்படாது என்பதுதான் இதன் சிறப்பு.

அடுத்து நவம்பர் 5, 2040-லும், ஏப்ரல் 10, 2060-லும் சனிக்கும் வியாழனுக்கும் இடையே கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும் என்றாலும் அப்போதெல்லாம் முறையே 1 014' மற்றும் 1009' டிகிரி கோண இடைவெளி இருக்கும். எனவே, இரண்டு கோள்களும் நெருங்கி இடித்துக்கொள்வது போன்ற அற்புதத் தோற்றம் ஏற்படாது. மறுபடியும் மார்ச் 15, 2080-ல்தான் இப்போதுபோல இரண்டுக்கும் இடையே கோண இடைவெளி வெறும் 0.1 டிகிரி என அமைந்து நெருங்கி மோதுவது போன்ற காட்சி தென்படும்.

சனியும் வியாழனும் மட்டுமல்ல மற்ற கோள்களுக்கு இடையேயும் கோள் சந்திப்பு நிகழ்வு ஏற்படும். வரும் ஜூலை 13, 2021 அன்று வெள்ளிக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே கோள் நெருக்க நிகழ்வு ஏற்படும். ஏப்ரல் 5, 2022 அன்று சனிக்கும் செவ்வாய்க்கும் இடையேயும், ஏப்ரல் 30, 2022 அன்று வெள்ளிக்கும் வியாழனுக்கும் இடையேயும், மே 29, 2022 அன்று செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயும் கோள் நெருக்க நிகழ்வு நிகழும். இன்னும் 5,521 ஆண்டுகள் கடந்த பின்னர் ஜூன் 17, 7541 அன்று வியாழன் கோள் சனிக் கோளுக்கு நேர் எதிரில் நிலைகொண்டு சற்று நேரத்துக்கு சனியை முழுமையாக மறைக்கும் அரிய நிகழ்வும் ஏற்படும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர் 21 மாலை சுமார் 6.30 மணிக்குச் சூரியன் மறைந்து போதிய இருட்டு பரவிய நிலையில் தென்மேற்கு திசையில் வியாழன் கோளும் சனிக் கோளும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போன்ற காட்சி தென்படும். இன்று முதலே சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு வானில் இரண்டு கோள்களும் தென்படும். அடுத்தடுத்த நாட்கள் கூர்ந்து கவனித்துவந்தால் இவற்றுக்கிடையே உள்ள தொலைவு குறைந்துவருவதைக் காணலாம். டிசம்பர் 21 அன்று இரண்டும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருப்பதுபோலத் தோற்றம் தரும். அன்று வெறும் கண்களால் காணும்போது இடித்துக்கொண்டு இருப்பது போன்று தோன்றும். இருநோக்கி (பைனாகுலர்) வழியே காணும்போது அவற்றுக்கு இடையே நூலிழை அளவுக்கு இடைவெளி உள்ளதைக் காணலாம். அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்கள் இரண்டுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதைக் காணலாம். வானம் என்பது நமக்குக் கட்டணமின்றித் திறந்துவிடப்பட்ட அருங்காட்சியகம். அந்த அருங்காட்சியகத்தில் தெரியும் இதுபோன்ற காட்சிகளைப் பொதுமக்கள், மாணவர்கள், சிறுவர்கள் யாரும் தவறவிட வேண்டாம்.

- த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/611554-saturn-and-jupiter-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு பெயர்ச்சியும்...
சனி பெயர்ச்சியும்..... 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.