Jump to content

`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

`சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயம்; சி.பி.சி.ஐ.டி விசாரணை!’ - என்ன நடந்தது?

தங்கம்

தங்கம் ( Representational Image )

சென்னையில் சி.பி.ஐ கஸ்டடியிலிருந்து 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

`இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினால், சி.பி.ஐ-யின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும்’ என்ற சி.பி.ஐ-யின் வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, `இது சி.பி.ஐ-க்கு அக்னிப் பரீட்சை போன்றது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சி.பி.ஐ நிரூபித்தால் பிரச்னையில்லை. ஒருவேளை குற்றமிழைத்திருந்தால், அதற்கான பின்விளைவுகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
 
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ அல்லது தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தக் கோரிய சி.பி.ஐ-யின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்துப் பேசிய நீதிபதி, `நீதிமன்றம் இது போன்ற இடையூறுகளை அனுமதிக்காது. அனைத்து போலீஸாரும் நம்பத் தகுந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

 

என்ன நடந்தது?

இந்தியக் கனிமங்கள் மற்றும் உலோக வர்த்தகக் கழக (MMTC) அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த சுரானா நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணைபோவதாகப் புகார் எழுந்தது. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றை இறக்குமதி செய்யும் தொழிலில் சுரானா நிறுவனம் ஈடுபட்டுவந்தது.

சி.பி.ஐ
 
சி.பி.ஐ

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு சென்னையிலுள்ள சுரானா நிறுவனத்தில் சி.பி.ஐ நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கக்கட்டிகள், நகைகள் உட்பட 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவை எடை பரிசோதிக்கப்பட்டு சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் சி.பி.ஐ முத்திரையுடன் மூடி சீல் வைக்கப்பட்டன. அந்த லாக்கர்களின் சாவிகள் சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்தச் சாவிகள் எப்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன என்ற தகவல்களை சி.பி.ஐ தெரிவிக்கவில்லை.

 

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த விவகாரத்தில் இரண்டாவது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, குறிப்பிட்ட தங்கம் முதல் வழக்கோடு தொடர்புடையதில்லை; வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்கோடு தொடர்புடையது என்று கூறியது. சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம், அது தொடர்பான ஆவணங்களை இரண்டாவது வழக்குக்கு மாற்றியது. அந்தத் தங்கம் ஏற்கெனவே லாக்கர்களில் இருப்பதால், நீதிமன்றம் அது குறித்து நேரடியாக ஆய்வு நடத்தவில்லை. ஆவணங்களில் மட்டுமே இந்த மாற்றம் நடந்தது.

தங்கம்
 
தங்கம் representational image

இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ, `குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லை’ என்று தெரிவித்தது. இதை அப்போது ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடம் (DGFT) ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுரானா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குத் தடை விதித்தது.

அதேநேரம், சுரானா நிறுவனம் தங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,160 கோடி அளவுக்குக் கடன் தொகையைக் கட்டாமல் இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி, அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த எஸ்.பி.ஐ வங்கி, நிலுவைத் தொகை கட்ட வேண்டியிருப்பதால், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியது.

உயர் நீதிமன்றம் நேற்று (11-12-2020) பிறப்பித்த உத்தரவில், `நிலுவைத் தொகை தொடர்பாக சுரானா மற்றும் எஸ்.பி.ஐ வங்கி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கும் நிலையில், பறிமுதல் தங்கத்தை ஒப்படைக்கக் கோரி எஸ்.பி.ஐ தரப்பில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது’ என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சுரானா நிறுவனத்தின் கோரிக்கைக்கு சி.பி.ஐ., வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தைக் கட்டுப்பாட்டில்வைத்திருக்கும் மத்திய வர்த்தக அமைச்சரகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியாகக் கடந்த 2019 டிசம்பரில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், எஸ்.பி.ஐ வங்கியின் முறையீட்டின் பேரில், இதில் தலையிட்டது. சி.பி.ஐ வசமிருக்கும் பறிமுதல் தங்கத்தை, சுரானா நிறுவனம் கடன் நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஆறு வங்கிகளிடம் பிரித்துக் கொடுக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்
 
சென்னை உயர் நீதிமன்றம்

இந்தச்சூழலில், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் லாக்கர்களைத் திறந்து சி.பி.ஐ சோதனையிட்டது. தங்கக்கட்டிகள், நகைகளை எடை பரிசோதனை செய்தபோது 103.864 கிலோ அளவுக்குத் தங்கம் மாயமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சி.பி.ஐ பொறுப்பாக முடியாது என்று வாதிட்ட சிறப்பு வழக்கறிஞர், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவை மொத்தமாக எடையிடப்பட்டதாகவும், தற்போது தனித்தனியாக எடை பரிசோதிக்கப்பட்டதாகவும் வாதத்தை முன்வைத்தார். ஆனால், இந்த வாதத்தை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி இந்த விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி-யில் எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவர், வழக்கு விசாரணையை ஆறு மாதத்துக்குள் முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

 

https://www.vikatan.com/government-and-politics/controversy/madras-hc-orders-to-probe-cbcid-over-103-kgs-of-gold-missing-from-cbi-custody

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.