Jump to content

ஒபாமா தரப்போகிறாரா தமிழீழம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வு, எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு அழித்துவிட்டு, இன்னும் எம்மை வைத்து அரசியல் விளையாடுகின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வூதியர்களின் நீதி ? – நிலாந்தன்

 
  • நிலாந்தன்

nilaanthan.jpgமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுகளைத் தொகுத்து ஒரு நூலை எழுதியிருக்கிறார். அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நூலில் அவர் இலங்கைத் தீவில் இடம்பெற்றது ethnic slaughter அதாவது இன சங்காரம் என்று கூறியிருக்கிறார். ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவர் இனப்படுகொலை என்று அதை அழைத்திருப்பதாக்க கருதுவது தெரிகிறது. ஆனால் அது இனப்படுகொலை என்ற அரசியல் அடர்த்தி மிக்க ஒரு வார்த்தயை விட செறிவு குறைந்த வார்த்தைதான். சங்காரம் என்பது தொகையாக உயிர்களை அழிப்பது. அதன் வேர்ச்சொல் பழைய நோர்வீஜிய மொழியிலிருந்து வருகிறது. அதன் பொருள் இறைச்சிக்கடை அல்லது யுத்த களத்தில் தொகையாகப் பொது மக்களைக் கொல்வது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆனால் அரசியல் அகராதியில் இனப்படுகொலை என்ற வார்த்தை அதை விட அடர்த்தியான அர்த்தங்களைக் கொண்டது. எனவே இது விடயத்தில் இனப்படுகொலை என்ற முதல் நிலை சொல்லைப் பயன்படுத்தாமல் அதைவிட அரசியல் அடர்த்தி குறைந்த ஒரு சொல்லை ஒபாமா பயன்படுத்தியிருக்கிறார் இந்த சொற் தெரிவிற்குள்ளும் ஒரு செய்தி இருக்கிறது. இது முதலாவது.

obama-book-1024x576.jpg

ஒபாமா

இரண்டாவது ஒபாமா உலகப்  பேரரசு ஒன்றின்  நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு தலைவராக இருந்தவர். அவருடைய காலத்தில்தான் 2009 மே வந்தது. அவருடைய காலத்தில்தான் போரில் ஈடுபட்ட மக்களை காப்பாற்றுவதற்கு ஒரு மேற்கு நாடு முயற்சித்தது என்று பொதுவாகக் கருதப்பட்டது. அவருடைய காலத்தில்தான் வணங்காமண் கப்பல் வரும் என்று அல்லது ஐ.நா வரும் என்று நம்பி போர்க்களத்தில் சிக்குண்டிருந்த ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்போடு கடலைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் எதுவும் வரவில்லை.

நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு பெரும் தலைவராக இருந்த காலகட்டத்தில் அந்த அநீதியைத் தடுக்காத ஒபாமா, ஏன் இப்பொழுது அதை சுட்டிக்காட்ட வேண்டும் ? அதிலும் குறிப்பாக பழியைப் பெருமளவுக்கு ஐநாவை நோக்கித் திருப்ப காரணம் என்ன? காரணம் மிகவும் எளிமையானது. அநீதி நடக்கும் பொழுது தான் அதிகாரத்தில் இருந்தது அவருக்கு குற்ற உணர்ச்சியைத் தருகிறது. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதைத் தடுக்க முடியவில்லை என்பது அவரைப் பொறுத்தவரை குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. எனவே குற்ற உணர்ச்சி காரணமாகத்தான் அவர் இப்பொழுது அதாவது ஓய்வு பெற்ற பின்னாவது அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

அவர் அவ்வாறு தெரிவித்திருப்பது அதன் முதல் நிலை அர்த்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது. ஆனால் அது ஒரு முன்னாள் அதிபரின் அபிப்பிராயம்தான். அதை ஒரு அரசியல் தீர்மானம் ஆக மாற்ற வேண்டும். அங்கேதான் ஈழத்தமிழர்கள் அரசியல் செய்ய வேண்டும்.

ஒபாமா மட்டுமல்ல இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த அமரர் ஜே.என்.டிக்சிற்றும் அவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவருடைய “அசைன்மென்ட் கொழும்பு” என்ற நூலில் அவர் ஓரிடத்தில் “மிய குல்பா”  எனப்படும் ஒரு லத்தீன் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அது கிறீஸ்தவர்கள் பாவ மன்னிப்பில் கூறுவது.

dixit.jpg

டிக்சிட்

டிக்சிட் கொழும்பில் இந்திய தூதுவராக இருந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இந்திய அமைதிகாக்கும் படைக்கும் இடையிலான மோதல் காலகட்டத்தில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு விவகாரத்தை தெளிவுபடுத்தும் பொறுப்பில் அவர் இருந்தார். ஆனால் ஓய்வு பெற்ற பின்னர் தான்  அவர் ‘மியா குல்பா’ என்று சொன்னார்.

அவரைப்போலவே மற்றொருவர் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங். 2014ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட நூலில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவின் அவலம் என்ற அத்தியாயத்தை அவர் பின்வருமாறு முடிக்கிறார். ‘‘மிகத் தொடக்கத்திலிருந்தே இலங்கை இனப்பிரச்சினை மிகத் தவறாகக் கையாளப்பட்டதுடன் அது முழு அளவிலான ஒரு தோல்வியாகவும் முடிவடைந்தது…” நட்வர்சிங் பழியை ராஜீவ் காந்தி மீது போடுகிறார். இக்கருத்துக்கள் ஈழத் தமிழர்களின் அபிலாசைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை நிரூபிக்க உதவும். நட்வர்சிங்கின் நூல் வெளிவந்த காலகட்டத்தில் அதைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். “ஓய்வூதியர்கள் பெற்ற ஞானம்” என்று.

natwar.png

நட்வர் சிங்

இப்பொழுது ஒபாமா கூறுகிறார் நடந்தது இன சங்காரம் என்று. மேற்கண்ட மூவரும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள். ஆனால் அவர்களுடைய பதவிக் காலங்களில் இனப்பிரச்சினையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. நடப்பது அநீதி என்று தெரிந்திருந்தும் ஏன் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை? அல்லது அதற்கெதிராக அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு தாம் சார்ந்த அரசுக் கட்டமைப்பின் மீது செல்வாக்குச் செலுத்த முடியவில்லை?

விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள் இது விடயத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுவார்கள். ஈழத் தமிழர்களின் போராட்டம் நீதியானது என்றாலும் போராடிய விதம் அதன் நீதியை குறைத்து விட்டது என்றும் இதனால் ஈழத்தமிழர் விவகாரத்தை கையாள்வதில் வெளித் தரப்புக்களுக்கு வரையறைகள்  இருந்தன என்றும். ஆயின், கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கம் அரங்கில் இல்லை. எனினும் இனப்பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை?

எனவே இங்கு பிரச்சினை என்னவென்றால் தமிழ் மக்களின் போராட்டம் நீதியானதா இல்லையா என்பதல்ல. உலகப் பேரரசுகளும் பக்கத்து பேரரசும் அப்போராட்டத்தை குறித்து நீதி நியாயங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவில்லை என்பதுதான்.

ஏனெனில் அரசியல் தீர்மானங்கள் நீதி நியாயங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. அதிகபட்சம் நலன்சார் நோக்கு நிலைகளில் இருந்தே எடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு பொருளாதாரம் ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அந்த முடிவுகள் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. எனவே ஒரு மக்கள் கூட்டம் தொடர்பான வெளியரசுகளின் முடிவுகள் நீதி நியாயத்தின்  அடிப்படையிலானவையாக  இருக்க வேண்டும் என்றில்லை. மாறாக அவை பெருமளவுக்கு நலன்சார் உறவுகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. இதை ஈழத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பூமியின் அச்சு நீதியின் மையத்தில் சுற்றவில்லை. ஈழத் தமிழர்களின் தலையிலும் சுற்றவில்லை. அரசியலில் நீதி நியாயங்களை விடவும் நலன்களே முக்கியம். உன்னதமான இலட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே பாரதூரமான இடைவெளிகள் இருக்கும்.

ஒரு மக்கள் கூட்டம் நீதிக்காக போராடுகிறது என்பதோ அல்லது நீதியாகப் போராடுகிறது என்பதோ அந்தப் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக அந்தப் போராட்டம் பிராந்திய நலன்களுக்கு பொருத்தமானதா என்பதே அதன் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு போராட்டத்தில் ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவு தியாகத்தைச் செய்கிறது என்பதும் எவ்வளவு வீரமாக போராடுகிறது என்பதும் அப்போராட்டத்தின் இறுதி வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக அந்தப் போராட்டத்துக்கும் வெளித் தரப்புகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய நலன்சார் உறவுகளே இறுதி வெற்றியை தீர்மானிக்கின்றன.

அதாவது மேற்கண்டவற்றைத் தொகுத்தால் ஒரு விடயம் கூர்மையாக வெளிப்படுகிறது. அது என்னவெனில் ஈழத் தமிழர்களின் போராட்டம் நீதியானதா? அல்லது அதற்காக அவர்கள் நீதியாகப் போராடினார்களா ? என்பவையெல்லாம் அப்போராட்டத்தில் இறுதி முடிவைத் தீர்மானிக்கவில்லை. மாறாக  முழுக்க முழுக்க நலன்சார் உறவுகளே இதுவிடயத்தில் முடிவுகளை எடுக்கின்றன.

obama.jpg

ஒபாமா

எனவே ஓய்வு பெற்றவர்களின் நீதி ஈழத் தமிழர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கலாம். ஆனால் ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்கள் சார்ந்திருந்த அரசுக் கட்டமைப்பின் உத்தியோக பூர்வ கொள்கை முடிவுகளாக அரசியல் தீர்மானங்களாக மாற்றப்பட வேண்டும். புதிய அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஒபாவாவின் வாரிசு. ஒபாமாவாவின் செல்வாக்கு அவரிலுண்டு. எனவே ஒபாமாவுக்கூடாக ஈழத் தமிழர்கள் தொடர்பான அமெரிக்காவின் உத்தியோக பூர்வ நிலைபாடுகளில் எப்படிச் செல்வாக்குச் செலுத்துவது என்று ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும். “ஒபாமாவுகான தமிழர் அமைப்பு” “ஜோ பைடனுகான தமிழர் அமைப்பு” போன்றவை ராஜீயச் செல்வாக்கு மிக்க அமைப்புகளா? ஒபாமாவுகான தமிழர் அமைப்பு எனப்படுவது ஒரு தனிநபரின் முற்சியே என்று தெரிய வருகிறது.அது ஒரு அமைப்பேயல்ல என்றும் கூறப்படுகிறது.பைடனுகான அமைப்பு என்று எதுவும் ஒரு கட்டமைப்பாக இல்லை என்றாலும் வேறு சில அமைப்புக்கள் புதிய அமெரிக்க அரசாங்கத்தின் வெற்றிக்காக பெருமளவுக்கு உழைத்திருகின்றன. இந்த அமைப்புக்கள் ராஜீயச் செல்வாக்கு மிக்க அமைப்புகளா என்பது இனித் தெரியவரும்.

ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு சமூகம் அமெரிக்கக் கண்டத்தில் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதற்கு ஒரு ஆகப்பிந்திய உதாரணத்தை இங்கு சுட்டிக் காட்டலாம். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனேடியப் பிரதமர் ஏன் கருத்துத் தெரிவித்தார்? விவசாயத்தின் மீதுள்ள காதலினாலா? இல்லை. இந்தியாவில் வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளில் அநேகர் சீக்கியர்கள். கனடாவில் பலமான ஒரு சீக்கியச் சமூகம் உண்டு. கனடாவில் மொத்தமாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சீக்கியர்கள் உண்டு. இது மொத்தக் கனேடிய சனத்தொகையில் கிட்டத்தட்ட 1.4 விகிதம் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள கனேடிய நாடாளுமன்றத்தில் பதினெட்டு சீக்கியர்கள் உண்டு அவர்களில் பாதுகாப்பு அமைச்சரும் உட்பட நால்வர் அமைச்சர்கள். எனவே கனேடியப் பிரதமர் தனது சீக்கிய வாக்காளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். இதுவும் நலன்சார் அரசியல்தான்.

அதேசமயம் கனடாவில் வசிக்கும் ஈழதமிழர்களின் எண்ணிகையும் மூன்று லட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே எப்படித் தம்மை ஒரு ராஜீயச் செல்வாக்குள்ள சமூகமாகப் பலப்படுத்துவது என்று அங்குள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு ராஜீயச் செல்வாக்குடைய சமூகமாகப் பலமடையும் போது அது தாயக அரசியலில் தாக்கம் செலுத்தும்.

ஒரு அபிப்பிராயம் அல்லது நியாயம் அரசியல் தீர்மானமாக மாற்றப்படுவது என்றால் அதற்கு லொபி செய்ய வேண்டும். எப்படிப்பட்ட லொபி என்றால் அந்த சிறிய மக்கள் கூட்டத்தின் நலன்களும் வெளியரசுகளின் நலன்களும் எந்த ஒரு பொதுப் புள்ளியில் சந்திக்கின்றனவோ அப்பொதுப் புள்ளிகளை வைத்துப் பேரத்தை பேச வேண்டும். அப்படிப் பேரம் பேசினால்தான்  சிறிய தேசிய இனங்களுக்கு மீட்சி கிடைக்கும். இந்த இடத்தில் ஒரு பொருத்தமான ஆபிரிக்க பழமொழியை கூற வேண்டும். “நீ நீதியின் பக்கம் நிற்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று முடிவெடுத்து விடாதே ஏனென்றால் சிங்கத்தை நீ சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாமல் விடாது.”

https://thinakkural.lk/article/97613

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.