Jump to content

ஊமைக் கனவுகள் - தோழி


Recommended Posts

ஊமைக் கனவுகள்

தோழி

அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவள் வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது.

 

அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?" அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது.

 

"ஏன் பவானி என்ன விசயம்?  ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?"

 மௌனமாய்ப் போனவளின் விழிகளில் இருந்து மெல்லியதாய் ஈரமும் முகமெல்லாம் சற்றே நாணமுமாய் அவள் முகம் அவனுக்கு விடயம் என்னவென்று உணர்த்தினாலும் அவன் பொறுமையாய்க்  காத்திருந்தான். அவனுக்கும் எல்லாம் அரசல் புரசலாய்க் காதில் விழுந்தது தான்.

 

"செல்வத்தைப் போய்ப் பார்க்க முடியுமோ? எனக்காக...ஒரேயொரு முறை பார்த்து கதைக்க முடியுமோ?" அவள் கால்கள் நிலத்தில் கோடுகளும் கோலங்களுமாய் அங்கும் இங்கும் அலைந்தன.

எனக்கொண்டும் பிரச்சினையில்லை பவானி. ஏதோ நான் போற வழியில பார்த்துக் கதைக்கிறதுக்கு எனக்கொரு செலவும் இல்லை ஆனால் இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாத பதிலையே எனக்கு சொல்லப் போறான்?"

 

அவனுடைய ஆதங்கம் பவானிக்கும் தெரியாமலில்லை.  எத்தனை தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், அக்கம் பக்கத்துக்கு வீட்டாரின் தொலைபேசியூடாக அனுப்பிய செய்திகள் என்று எல்லாமே பொசுக்கென கரியானதின்  சரியான காரணம் கூட அவளுக்கு செல்வமோ அல்லது அவனை நன்கு தெரிந்தவர்களோ  அல்லது அவளுக்குத் தெரிந்தவர்களோ கூட சொல்லவில்லை என்பது தான் அவளுக்கு வலித்தது. 

 

அவளுக்கு ஊரில் சொந்தமெண்டிருந்த ஒரேயொரு அம்மம்மாக் கிழவியும் மூண்டு வருசத்துக்கு முதல் போய்ச்சேர்ந்த பின் அவள் வெளிநாட்டில் இருந்தாலும்  அனாதையாகவே உணர்ந்து கொண்டாள்.  அவனும் அவளைத் தன் தங்கைகளில் ஒருத்தியாகவே கருதி அவளை அரவணைத்தாலும் அவளுக்குள் இருந்த தனிமையையும் விரக்தியையும் முழுமையாகப் போக்காட்ட முடியாமல் தோற்றுப் போய்விட்டான்.    ஊரில் தமது வீட்டில் காலம் காலமாக தொட்டாட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டுகொண்டு செய்த தெய்வானை ஆச்சிக்கு பேத்தி என மிஞ்சியது இவள் ஒருத்தி தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.  கிழவி தான் போக முதல் ஒருத்தனிடம் அவளை ஒப்படைக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்டது வீணாய்ப் போனது.  இருந்தாலும் கிழவி இறுதி வரையில் மனம் சளைக்கவில்லை. 

 

"ஐயா எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை எண்டு உங்களுக்கும் தெரியும். நான் இல்லாது போனால் இந்தப் பவானிப் பெட்டையை நீங்கள் தான் கரை சேர்க்க வேணும்!”

கையெடுத்துக் கும்பிட்ட கிழவியை இவனது தகப்பன் என்ன சொல்வது என ஒரு வினாடி கூட யோசிக்காமல் பதில் கொடுத்தார்.

 

"அது நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நாங்கள் பார்த்துக் கீத்து ஏதோ கரை சேர்ப்பம் தானே!  ஏதோ பிறத்தியாரைக் கேட்குமாப் போல எல்லோ கேக்கிறாய் ஆச்சி?"

 

சொன்னது மட்டுமல்ல, அவளுக்கு ஒரு சரியான நேரத்தில் ஒரு நல்ல பொடியனை தேடி எடுக்க அவர் முயற்சியும்  செய்தார்.  ஆனால் அந்த வேளையில்த் தான்  நாட்டில் போர்க்கால சூழல் இறுகிப் போனது. தனக்கு ஊரில் இருந்த செல்வாக்கையும் பண பலத்தையும் தன் தங்கமான குணத்தையும் சரியான முறையில்ப் பாவித்து பவானியையும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் சேர்த்தே வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார் மகராசன்.

பவானி மாத்திரம் தன் மனதை  ஊரிலேயே செல்வத்திடம் விட்டு விட்டு வந்திருந்தாள்.  அவனுடன் நேரடியாகக் கதைக்கும் சந்தர்ப்பம்  அவளுக்கு கிடைக்காது விட்டாலும் அவனுடைய பார்வையும் புன்முறுவலும் அவளுக்கு அவன் விருப்பத்தையும் தெரிய வைத்தது மாத்திரமில்லை அவளுடைய தொலைபேசி எண்ணையும் அவன் வாங்கியிருந்தான்.  அவள் ஊரிலிருந்து புறப்பட முன்னர் அவனைத் தவிர வேறொருவனைத் தன்னால் மனதால் கூட நினைக்க முடியாது என்பதை இவளும் அவனுக்கு  அறுதியிட்டுக் கூறிஇருந்தாள்.

செல்வத்துக்கும் அவளுக்கும் சிறு பிராயத்து வாழ்வு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாய்த் தான் இருந்தது. அவளுக்குப் பெற்றோர் இல்லாதது போலவே அவனுக்கும் சிறுவயதிலேயே அவன் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்து அவளது ஊரிலிருந்த வைதேகி அக்கா குடும்பம் அவனைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியிருந்தது. ஊரில் இதெப்படி சாத்தியமானது என எல்லோரும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். அதற்கும் காரணம் இருந்தது.  வைதேகி அக்கா குடும்பம் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது செல்வத்தின் குடும்பம் வெளியே நின்று தான் கும்பிட்டுப் போனது.  ஆனால் இண்டைக்கு வைதேகி அக்கா பத்தே வயதான செல்வத்தை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியிருந்தாள்.  அவன் குடிகாரக் கணவனும் சண்டியனுமான ரத்தினத்திடம் ஊர்ச்சனங்கள் ஏன் வாயைக் கொடுத்து அடி வாங்குவான் என ஒதுங்கிப் போய் விட்டார்கள். 

வைதேகி அக்காவுக்கும் ரத்தினத்தாருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டையும் அடிதடியும் ஏற்படத் தொடங்கியது. அவர்களுக்கு குழந்தைகளும் இல்லாததால் செல்வம் ஒருத்தனே அவர்களுக்கு என்றானான்.  ரத்தினத்தாரின் குடியும் குறைந்த பாடில்லாமல்,  அவரை ஊரில் உள்ள எல்லாத் திண்ணைகளிலும் சனங்கள் தூக்கிக் கிடத்தி விடத் தொடங்கியிருந்தார்கள்.

பவானியும் ஊரை விட்டு வந்து ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. செல்வத்துக்கும் அவளுக்கும் இருபத்தியேழு வயதாகி விட்டது. அவனது தொலைபேசி அழைப்புகள் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின.  கேட்கும் போதெல்லாம் அவனுக்கு ஏதோ ஒரு காரணம் புதிது புதிதாய்க் கிடைக்கத் தொடங்கியிருந்தது போல் அவளுக்கு மனதில் ஒரு துயரம் படியத் தொடங்கியது.

*****************************************************************************

எந்தவித ஆரவாரமுமின்றி, தன்னோடு எடுத்து வந்திருந்த ஒரேயொரு உடுப்புப் பெட்டியை நண்பன் வீட்டில் வைத்து விட்டு, தான் ஓடியாடி விளையாடி வளர்ந்த ஊரைக் கால்நடையாகக் கடக்க எண்ணியவனை அவன் ஊரும் மண்ணும் அமைதியாகவே வரவேற்றன.

ஊர் நிறையவே மாறியிருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்த தெருவோரத்துப் பச்சை மரங்களில் அநேகமானவை காணாமல்ப்  போயிருந்தன.  அன்றொரு பொழுதில் ஊருக்கு அழகு தந்த தென்னை மரங்கள் செழிப்பை இழந்து சோடை பற்றி,  நீண்டு உயர்ந்து தமது ஆயுள் முடியப் போகும் நாட்களை எண்ணி மாய்ந்து கொண்டிருந்தன. அவன் ஊரில் கட்டாக்காலியாக மேய்ந்து திரிந்த காலப்பகுதியில், வீடுகளுக்கிடையே கட்டடங்கள் ஏதுமன்றி வளர்ந்திருந்த புல், பற்றைகள். கிளிசரியா, கிளுவை மரங்களும், மலை வேம்பு நிழல்களும், முருங்கை மரங்களுமாக இருந்த காணிகளும், அவற்றில் ஏகாந்தமாய் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, மாடுகளும் காணாமல்ப் போயிருந்தன.

அவன் தொடர்ந்து நடந்த போது வீதியெங்கும் அடைத்த படி ஏராளமான புதிய வீடுகளும், சிறிய கடைகளுமாய் அவனுக்குத் தெரிந்திருந்த ஊர் நிறையவே மாற்றங்களை உள்வாங்கியிருந்தது. கலகலப்பாக தமக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த  உடையார், முதலியார், விதானையார் வீடுகள் கூட பழைய தோற்றங்கள், அடையாளங்களும்  ஏதுமின்றி நவீனத்துவமடைந்திருந்தன. தபாற்கந்தோருக்குப் பக்கத்திலிருந்த திண்ணை வீடு கூட கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.  சந்தைக்கு போகத் தொடங்கியிருந்தவர்களின் துவிச்சக்கர வண்டியிலும், மோட்டார் வண்டியிலும் மரக்கறிகளும் தேங்காய்களும் மீன்களுமாய் வீதி களை கட்டத் தொடங்கியிருந்தது.  எவரும் அவனை வித்தியாசமாய், புதிய ஒரு சீவனாகப் பார்க்காதது அவனுக்கு சிறிதே வியப்பாக இருந்தாலும், அதுவும் நல்லதுக்குத் தான் என எண்ணிக் கொண்டான். அதே நேரத்தில் ஊர் மக்கள் வசதியில் உயர்ந்திருந்தது மனதுக்கு ஒரு பக்கத்தில் மகிழ்வாக இருந்தாலும், மற்றைய பக்கத்தில் எதையோ இழந்த ஒரு வித ஏக்கம் அவன் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. 

 

எட எங்கட சின்னையா விதானையாரிண்ட மூத்தவனே? என்ன மோனை  சொல்லமால்க் கொள்ளாமல் வந்திறங்கியிருக்கிறாய்?" திடீரெனக் கேட்ட குரலில் சற்றே ஆச்சர்யத்துடன் நடப்பதை நிறுத்தினான்.

அவன் தான்  என உறுதிப்படுத்துவதற்காக வயோதிபத்தையும் பொருட்படுத்தாமல் தடியை ஊன்றிக் கொண்டே கண்களை இடுக்கிக் கூர்ந்து அவனைப் பார்த்தவரை அவனும் அடையாளம் கண்டு கொண்டான்.

 

"என்ன மணியண்ணை எப்பிடி இருக்கிறியள்? வீட்டில எல்லாரும் சுகம் தானே?" 

 

அவனது தந்தைக்குத் தான் அவர் மணியண்ணை, ஆனாலும் சிறு வயதிலிருந்தே அவரை அப்படியே கூப்பிட்டுப்  பழகி விட்டான். அவரும் அவனைத் திருத்த முடியாமல் விட்டுவிட்டார். 

 

"ஏதோ வாழ்க்கை போகுதடா மோனை, உனக்கும் அப்பா சொல்லாமல் கொள்ளாமல்ப் போய்ச் சேர்ந்திட்டார். உன்ர சகோதரங்களும் இங்க இப்ப இல்லை. உன்னை அடிக்கடி நினைச்சுக் கொள்ளிறது தான்.  அது சரி இப்ப யாரைப் பார்க்க இவ்வளவு அவசரமாய்ப் போறாய்?"  ஆதரவாய் விசாரித்தவரிடமிருந்த அதே பழைய அன்பு அவனை ஒரு நிமிடம் அசர வைத்தது.

 

இவள் தங்கச்சி பவானிக்கு ஒரு சம்பந்தம் சரி வருமாப் போல் இருக்குது மணியண்ணை. அது விசயமாய்த் தான் நான் எங்கட ஊர்ப்பக்கம் வந்தனான். என்னோட படிச்ச பொடியன் ஒருத்தன் கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறான், சரியாய்க் கஸ்ட்டப்படுறான் எண்டு கேள்வி.  அவனைப் பார்க்க வெளிக்கிட்ட இடத்தில தான் பவானியின்ர அலுவலையும் பார்த்துக் கொண்டு போவம் எண்டு நினைச்சனான்..."

 

அவன் இழுக்க மணியண்ணையின் முகமெல்லாம் பிரகாசமாகியது.

 

"அப்ப ஒரு நல்ல விஷயத்துக்குத் தான் வந்தனீ எண்டு சொல்லன்! அதுவும் எங்கட ஊரை மறக்காமல் எங்கட ஊரில தான் சம்பந்தம் எண்டால் எனக்குக் கற்கண்டு சாப்பிட்ட மாதிரி எல்லோ இருக்கு!

யார் அந்த ராசியான பொடி? அதுவும் பவானியின்ர குணத்துக்கும் வடிவுக்கும் யாரோ குடுத்து வைச்சிருக்கிறான்!" நடுங்கிய குரலில் சந்தோசம் தள்ளாடச் சொல்லிவிட்டு அவனை ஆர்வத்துடன் பார்த்தார்.

"எல்லாம் உங்களுக்கும் தெரிஞ்ச பொடி தான்... எங்கட வைதேகி அக்காவின்ர மகன் செல்வத்தைத் தான் கேப்பம் எண்டு போய்க் கொண்டிருக்கிறன்..." அவன் மெதுவாக விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

 

"என்ன மோனை சொல்லுறாய்?" அவர் குரலில் அப்பட்டமாகத் தெரிந்த கலக்கம் அவருடைய வயதினால் ஏற்பட்ட நடுக்கம் போல இல்லாது வித்தியாசமானதாய் இருந்ததை உணர்ந்தான்.

 

"வேறை ஒருத்தரும் அம்பிடாமல் போயும் போயும் இப்பிடியே அவள் பிள்ளையை விழுத்தப் போறாய்!"  மணியண்ணையின் குரலில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இல்லாமல் போய்க் குழி விழுந்த கண்களில் சற்றே கண்ணீர் தெரிய அவன் குழம்பித்தான் போனான்.

 

"ஏன் மணியண்ணை அவனுக்கு என்ன குறை? ரத்தினத்தார் மாதிரி ஏதும் குடி, சிகரெட் எண்டு தொடங்கீட்டானோ?" குடியும் சிகரெட்டும் ஊரில இப்பவும் ஒரு பெரிய விசயமாய்தான் இருக்கும் போல என எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

 அவர் எதுவும் சொல்லாமல் இடத்தை விட்டு நகர, அவனும் வேறு வழியில்லாமல் அவருக்கு விடை கொடுத்தான்.   சில வேளை அவருக்கு செல்வத்தைப் பிடிக்காமல் போனதுக்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாம் என அவன் எண்ணிக்கொண்டான்.

செல்வத்தின் தொலைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. பவானி சொன்னது போலவே விடி காலையிலேயே பல தடவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவனுக்குப் பயனில்லாமல்ப் போய்விட்டது.  வீடு தெரிந்திருந்த படியாலும் நேரத்தை வீணாக்க விரும்பாமலும் தான் அவன் இப்படித் திடீரெனப் புறப்பட்டு வரவேண்டியதாயிற்று. 

 

மருதங்கேணிப் பிள்ளையார் கோவில் கல்லு ஒழுங்கை மாத்திரம் எந்த மாற்றமுமின்றி அவனைச் செல்வத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது.  ஊரில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஏனைய வீடுகள் எல்லாம்  நவீனத்துவமடைந்திருக்க, வைதேகி அக்கா வீடு மட்டும் பாழடைந்த தோற்றத்தில் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் வரும் பேய் வீடுகளை ஞாபகம் ஊட்டியபடி ஒரு வித அமைதியில் ஆழ்ந்திருந்தது.  இவனைக் கண்டதும் முற்றத்தில் படுத்திருந்த நாய் ஒன்று தலையைத் தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் சுருண்டு தூங்கியது.   அவன் படலையைத் தட்டினான்.  ஒருவரும் வருமாப்போல் இல்லாததால் சிறிது நேரம் தயங்கி நின்று விட்டு உள்ளே போகலாமா விடலாமா என எண்ணிய வேளை, பவானியின் ஏக்கமான முகம் கண்ணில்த் தோன்றி மறைந்தது. சுற்று வட்டாரத்தில் மனித நடமாட்டமேயில்லாமல் இருந்ததில் யாரையும் அவர்களைப் பற்றிக் கேட்கவும் முடியவில்லை.

படலையத் திறந்து பார்த்ததில் படலைக்கும் அந்த நாற்சார் வீட்டுக்கும் இடையில் முன்பு சிறிதாக இருந்த மாமரங்கள் எல்லாம் வளர்ந்து வீட்டின் ஓட்டைத் தவிர வேறெதுவும் தெரியாதபடி வீட்டை முற்றாக மறைத்து விட்டிருந்தன.

 

அவன் மெதுவே நடந்து முன் முற்றத்திற்கு வந்த பின் தான் ஏதோ ஒரு ஆள் அரவத்தை அவதானித்தான். அந்தக் கயிற்றுக் கட்டிலில் எதுவோ அசைவு.  வைதேகி அக்காவுக்கு வயது ஒன்றும் பெரிதாகப் போகவில்லை என்பது அவளது உடல் வாகுவில்த் தெரிந்தது. 

 

அவனுக்கு வாயெல்லாம் உலர்ந்து மூச்சுக்காற்று வெப்பமாய் வெளியேறியது. இந்த வினாடி இப்படியே யாரும் தன்னைப் பார்க்க முன்னர் முற்றத்து மண்ணில் மூழ்கி விட்டால்  என்ன என்ற ஒரு வினோத எண்ணக்கலவை ஒன்று தோன்றி மறைந்தது.

 

அவன் கால்கள்,  அவனை மிக மெதுவாக அந்த முற்றத்தில் இருந்து வந்த வழியே, வெளியே அழைத்து வந்தன.  அவன் படலைக்கு வெளியே வந்த போது,  தென்னோலைகளை இழுத்துக்கொண்டு அவனைக் கடந்து சென்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி ஒரு நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துச் சென்றாள்.

*****************************************************************************

ஊருக்குப் போயிருந்த அண்ணனிடமிருந்து பவானிக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.

செல்வத்தை மறந்து விடு.  அவன் திருமணமாகி எங்கோ போய்விட்டான்!  அவனைத் தேடித் திரிந்து களைத்து விட்டேன்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தோழி said:

அவனுக்கு வாயெல்லாம் உலர்ந்து மூச்சுக்காற்று வெப்பமாய் வெளியேறியது

உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாத அப்பாவிகள் இன்னும் பலர் உள்ளனர். 

Link to comment
Share on other sites

பவானியின் நம்பிக்கை ஊமைக்கனவாகி போனது. காலம் அவளது கணக்கை இனிவரும் காலங்களில் சரியாக எழுதட்டும் தோழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2020 at 15:31, தோழி said:

"வேறை ஒருத்தரும் அம்பிடாமல் போயும் போயும் இப்பிடியே அவள் பிள்ளையை விழுத்தப் போறாய்!"  மணியண்ணையின் குரலில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இல்லாமல் போய்க் குழி விழுந்த கண்களில் சற்றே கண்ணீர் தெரிய அவன் குழம்பித்தான் போனான்.

நல்ல கதை. நளினமான சொல்லலங்காரங்கள், வாழ்த்துகள் 

Link to comment
Share on other sites

On 13/12/2020 at 02:48, நிலாமதி said:

அழகாய் எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள் 

நன்றி ! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இணையத்துக்கு வர முடியாதவாறு சில தடங்கல்கள்!

 

On 13/12/2020 at 02:48, நிலாமதி said:

அழகாய் எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள் 

 

On 26/12/2020 at 04:28, nige said:

நல்ல எழுத்து நடையும் கதையும் . வாழ்த்துக்கள ..

நன்றி ! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இணையத்துக்கு வர முடியாதவாறு சில தடங்கல்கள்!

On 22/12/2020 at 03:39, theeya said:

நல்ல கதை. நளினமான சொல்லலங்காரங்கள், வாழ்த்துகள் 

நன்றி ! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இணையத்துக்கு வர முடியாதவாறு சில தடங்கல்கள்!

On 20/12/2020 at 19:59, shanthy said:

பவானியின் நம்பிக்கை ஊமைக்கனவாகி போனது. காலம் அவளது கணக்கை இனிவரும் காலங்களில் சரியாக எழுதட்டும் தோழி.

நன்றி ! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இணையத்துக்கு வர முடியாதவாறு சில தடங்கல்கள்!

On 13/12/2020 at 09:31, கிருபன் said:

உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாத அப்பாவிகள் இன்னும் பலர் உள்ளனர். 

நன்றி ! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இணையத்துக்கு வர முடியாதவாறு சில தடங்கல்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.