Jump to content

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்


nige

Recommended Posts

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

Link to comment
Share on other sites

11 minutes ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

நிட்சயமாக.. எண்பது வயதில் இருப்பவர்களை உங்களிற்கு என்ன பலகாரம் பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் வாய்ப்பனாகத்தான் இருக்க முடியும்..நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பன்  =  வாழைப்பழ  bun   (மா  சீனி  வாழைப்பழம்)😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nige said:

ஈழத்து பலகாரங்கள் வித்தியாசமாக உள்ளது. பகிர்விற்கு நன்றி ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் திராட்சை வத்தல் எல்லாம் மேலதிகமாய் சேர்த்திருக்கின்ரீர்கள்.....சுவையும் சூப்பராய்தான் இருக்கும்.....நன்றி சகோதரி.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nige said:

நிட்சயமாக.. எண்பது வயதில் இருப்பவர்களை உங்களிற்கு என்ன பலகாரம் பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் வாய்ப்பனாகத்தான் இருக்க முடியும்..நன்றி

பல்லு கில்லு ஒண்டும் இல்லாட்டில் வாய்ப்பன் தானே தஞ்சம்...?
நமக்கு மிக்சர் பக்கோடா எல்லாம் ஒகே.....
இப்பதானே 65...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

Link to comment
Share on other sites

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஈழத்து பலகாரங்கள் வித்தியாசமாக உள்ளது. பகிர்விற்கு நன்றி ..👍

சில பலகாரங்களில் வித்தியாசம் உண்டுதான்..நன்றி தமிழ்தேசியன்

Link to comment
Share on other sites

வாய்ப்பன் எப்பவும் எனக்கு பிடித்த பலகாரம். நினைவு தெரிந்த நாளிலிருந்து சாப்பிட்டு வருகின்றேன். ஊரில் இருக்கும் போது  வளவில் விளைந்த நல்லா பழுத்த கதலியில் வாய்ப்பன் செய்து அம்மா தந்ததில் இருந்து இன்றுவரைக்கும் என்னை தொடருகின்றது.

நான் கடவுள் நம்பிக்கை இருந்த காலப்பகுதியில் ஊருக்கு போகும் போது தவறாமல் போகும் கோவில் நயினாதீவு. நயினாதீவில் நாகம்மன் கோயிலுக்கு அருகில் கிடுகுகளால் ஆன சின்ன கடை இருந்தது (இப்பவும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை). இக் கோயிலுக்கு போகும் போது காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் போய் கோவிலில் கிடைக்கும் தீர்த்தத்தினைத் தான் முதன் முதலில் குடிப்பது. அதன் பின் இந்த சின்னக் கடைக்கு போய் அங்கு விற்கும் வாய்ப்பனை வாங்கி உண்பது உண்டு. வேறு எங்கும் கிடைக்காத ஒரு சுவை இந்த கடையில் கிடைக்கும்.

வாய்ப்பன் என்றதும் எப்பவும் நினைவில் வருவது நயினாதீவு வாய்ப்பன் தான். 

நினைவுகளை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த nige இற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பல்லு கில்லு ஒண்டும் இல்லாட்டில் வாய்ப்பன் தானே தஞ்சம்...?
நமக்கு மிக்சர் பக்கோடா எல்லாம் ஒகே.....
இப்பதானே 65...

ஒரு இலக்கம் தலைகீழாய் வந்திருக்கு. ஒருக்கா திருத்திவிடுங்கோ.. 

 

😎

5 hours ago, theeya said:

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

குழம்பு ருசியாயிருந்தால் சரிதான் என்கிறீர்.. ம்ம்ம்ம்ம். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஒரு இலக்கம் தலைகீழாய் வந்திருக்கு. ஒருக்கா திருத்திவிடுங்கோ.. 

😎

இல்லை...  அது முடியாது.
நான் உண்மை பேசி உத்தமனாக வாழ்பவன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

யாழ்பாணத்திலும் போளை உண்டு. 

கிழக்கில் போலன்றி யாழில் வாழை தோட்டங்கள் அதிகம். அதனால் விற்பனையாகாமல் மிஞ்சும் நன்கு பழுத்த பழங்களை உணவாகும் ஒரு உத்திதான் இதுவாம்.

Ball போல இருப்பதால் போளை.

வாழப்பழ bun -வாழைபண் - வாய்ப்பன்.

உண்மை பொய் தெரியா -கேள்வி ஞானம். 

22 hours ago, Kapithan said:

எனக்குள்ள கேள்வி...

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

(விரும்பிச் சாப்பிடுவேன் என்பது வேறு விடயம். நன்றி ஞ்சி😆)

வரும் ஆனால் 300 வருடங்களில் வந்த உணவு என்றே நினக்கிறேன்.

சொல்ல முடியாது நாளைக்கே புறநானூறில் “வாய்பன் நிர்கர்த வழவழ வாயன்” என்று ஒரு வரி வருகிறது என்று யாரும் சொல்ல கூடும்.

Link to comment
Share on other sites

20 hours ago, suvy said:

நீங்கள் திராட்சை வத்தல் எல்லாம் மேலதிகமாய் சேர்த்திருக்கின்ரீர்கள்.....சுவையும் சூப்பராய்தான் இருக்கும்.....நன்றி சகோதரி.....!   👍

நன்றி Suvy

13 hours ago, நிழலி said:

வாய்ப்பன் எப்பவும் எனக்கு பிடித்த பலகாரம். நினைவு தெரிந்த நாளிலிருந்து சாப்பிட்டு வருகின்றேன். ஊரில் இருக்கும் போது  வளவில் விளைந்த நல்லா பழுத்த கதலியில் வாய்ப்பன் செய்து அம்மா தந்ததில் இருந்து இன்றுவரைக்கும் என்னை தொடருகின்றது.

நான் கடவுள் நம்பிக்கை இருந்த காலப்பகுதியில் ஊருக்கு போகும் போது தவறாமல் போகும் கோவில் நயினாதீவு. நயினாதீவில் நாகம்மன் கோயிலுக்கு அருகில் கிடுகுகளால் ஆன சின்ன கடை இருந்தது (இப்பவும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை). இக் கோயிலுக்கு போகும் போது காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் போய் கோவிலில் கிடைக்கும் தீர்த்தத்தினைத் தான் முதன் முதலில் குடிப்பது. அதன் பின் இந்த சின்னக் கடைக்கு போய் அங்கு விற்கும் வாய்ப்பனை வாங்கி உண்பது உண்டு. வேறு எங்கும் கிடைக்காத ஒரு சுவை இந்த கடையில் கிடைக்கும்.

வாய்ப்பன் என்றதும் எப்பவும் நினைவில் வருவது நயினாதீவு வாய்ப்பன் தான். 

நினைவுகளை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் தந்த nige இற்கு நன்றி.

ஒரு குட்டிக் கதை வாசித்த உணர்வு..நன்றி நிழலி . என்ர வாய்ப்பனை விட உங்கள் கதை super 

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் இது இல்லை  ஆனால் வோளை என்று சொல்வார்கள் அது வெறு மா வோளையாக இருக்கும் சீனி சேர்த்து இருப்பார்கள் யாழ்ப்பாணத்து இனிப்பு பணியாரங்களும் பெயரும் வித்தியாசம்தான் 

இதே போல வழைப்பழம் இட்டு தட்டையாக செய்வதை வாரப்பம் என்பார்கள் இங்கு  ஒரு வேளை வாய்ப்பன் தான் வாரப்பமானதாக மாறி இருக்குமோ தெரியல நாளைக்கு அம்மம்மா கிழவியை கேட்டு தெரிஞ்சிக்கணும் 

பிரதேசத்திற்கு பிரதேசம் பெயர்கள் வேறுபடலாம். எதுக்கும் அம்மம்மாவை கேட்டுப் பாருங்கோ..கருத்து பகிர்வுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2020 at 01:36, Kapithan said:

வாய்ப்பன் உண்மையிலேயே எங்கள் பாரம்பரிய உணவு வகைக்குள் வருமா.. 🤔

Kapithan, கோதுமை மா எங்கள் நாட்டுக்கு வந்ததற்குப் பின்னாலேதானே வாய்ப்பன் செய்ய  வாய்ப்பிருந்திருக்கும்.

முன்னர், நெல்லியடிக்குப் படம் பார்ககப் போகும் போது படம் ஆரம்பிக்குமுன்னர் வாய்ப்பன், கடலைப் பருப்பு வடை ஆகியவற்றுடன் ஒரு பிளேன் ரீயும் குடிப்பது எனது வழமை. வாழைப்பழம், கோதுமை மா, சீனி என்பவைதான் வாய்ப்பனில் உள்ளடக்கமாக அன்று இருந்தன.உலார்ந்த திராட்சை போன்றவை இடைச் செருகல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, theeya said:

ஆராயக்கூடாது, அனுபவிக்க வேணும் என்னைப் போல.😄

திருப்பி கதைக்காதவர்.🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

பெயர்கள் வேறுபடலாம். எதுக்கும் அம்மம்மாவை கேட்டுப் பாருங்கோ..கருத்து பகிர்வுக்கு நன்றி..

கிழக்கில் வாய்ப்பன் என்று கேள்விப்பட்டதில்லையாம் என சொன்னார்கள்

 

17 hours ago, goshan_che said:

யாழ்பாணத்திலும் போளை உண்டு. 

கிழக்கில் போலன்றி யாழில் வாழை தோட்டங்கள் அதிகம். அதனால் விற்பனையாகாமல் மிஞ்சும் நன்கு பழுத்த பழங்களை உணவாகும் ஒரு உத்திதான் இதுவாம்.

Ball போல இருப்பதால் போளை.

வாழப்பழ bun -வாழைபண் - வாய்ப்பன்.

உண்மை பொய் தெரியா -கேள்வி ஞானம். 

ம் ஆனா கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் வாய்ப்பன் என்று கேள்விப்பட்டதில்லையாம் என சொன்னார்கள்

 

ம் ஆனா கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் வாய்ப்பன் என்று கேள்விப்பட்டதில்லையாம் என சொன்னார்கள்

 

ம் ஆனா கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

நீங்கள் செய்வது போல் நாங்களும் பயற்றில் செய்வோம் ஆனால் அதன் பெயர் சூசியம்.

12 hours ago, குமாரசாமி said:

திருப்பி கதைக்காதவர்.🤐

நல்ல மனிதர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாலி said:

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

 

15 hours ago, nige said:

நீங்கள் செய்வது போல் நாங்களும் பயற்றில் செய்வோம் ஆனால் அதன் பெயர் சூசியம்.

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் பயற்றம் வோளை மிக நன்றாக இருக்கும் அதாவது பயறை நன்றாக அவித்து அதை நன்றாக மசித்து சீனி , தேங்காய்ப்பூ போடு பிரட்டி அதை உருண்டையாக எடுத்து மாவு கொஞ்சம் கரைத்து எடுத்து அதனுள் உருண்டையாக்கிய இந்த பயற்றம் வேளையை போட்டு மீண்டும்  எண்ணெயில் போட்டு எடுப்பது மிக நன்றாக இருக்கும் பயற்றம் வோளை 

பயிற்றம் பணியாரம் என்று எங்கட பக்கம் சொல்லுவாங்கள்.
விசேட தினங்களில் இந்த பலகாரமும் செய்வாங்க.

 

21 hours ago, வாலி said:

இதை நாங்கள் சூசியம் எண்டு சொல்றனாங்கள்.  

யாழ் இந்துவின் கண்டின் நடா அண்ணை தந்த வாய்ப்பன் டேஸ்டுக்கு இதுவரை எவரும் செய்து தரேல்ல. 😍

சூசியம் பெரிதாக இருப்பது மென்மையானது, பயிற்றம் பணியாரம் வெளிப்பகுதி கடுமையாக இருக்கும.

நடாண்ணையின் வாடிக்கையாளரா? நானும் ஓராண்டு அவரின் வாடிக்கையாளராக இருந்துள்ளேன்.

23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

உருண்டையாக நீளமாக இருந்தால் றோல்ஸ், அதே சப்பையா அரைவட்டமாக இருந்தால் மிதிவெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயற்றம் உருண்டை

இதன் செய் முறை வித்தியாசம்.
news_26-01-2016_15PP.jpg
 
 
 
 
 
சுசியம் 

1573647966-2273.jpgஇதற்குள் தான் பயறு அவித்து வைத்து இருப்பார்கள்

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த நொறுக்குத் தீனிகள்: வாய்ப்பன் (வாழைப்பழ பணியாரம்), பயத்தம் பணியாரம், சிப்பி, சூசியம், போண்டா😋

சுகர் பிரச்சினை இருப்பவர்கள் வீடியோவைப் பார்க்காமல் சாப்பிடவும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வாய்ப்பன் பிரச்சனையாலை நான் கனநாளாய் வாழைப்பழம் வாங்குறதையே விட்டுட்டன்.  வீட்டிலை வாழைப்பழம் மிஞ்சினால் நான் தான் பலிக்கடா....😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.