Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்படும் மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது "கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் "கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த "சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் "இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் "கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் "சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப் பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

"நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் ரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

"கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும் என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது "பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் "அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம் என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அழிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதே வேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான்.

தமிழ் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சனைகளின் போதும் நிதிசேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், இறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் "அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிகரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக் கூடும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.

- தாயகத்தில் இருந்து அரங்கன்

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

எங்களால் எப்படி முடியும்? என்்னைப் பொறுத்தளவில் புகலிடத்ததில் ஈழத் தமிழர்கீர்களில் பெரும்பாலானோர் இன்னும் சுரணை அற்றவர்களாகவே உள்ளார்கள். ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணி என்று கூச்சலிடுபவர்களே மெலிபன் பிஸ்கெற்றுகளுடன் போவதைத்தான் பார்க்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில 2 பேரை ச சுட்டுப்போட்டாங்களாம் என்றுவிட்டு சினிமாக்குள் மூழ்கும் தமிழழர்கள்தான் சாதராரணமான வாழ்க்கையில் எதிர்ப்படுபவர்கள். எனினும், இவ்வாறான கோரிக்கைகளால் ஒரு சிலராவது நிசங்களை உணர்ந்து தன்னிலை விளங்கினால் சந்தோசமே!!

Link to comment
Share on other sites

ரஜனிகாந்தை ஒரு நடிகனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்தக் கட்டுரையை படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

ரஜனியை ஒரு நடிகராக மட்டும்தான் பார்க்க முடியும். ஏனென்னால் அவர் ஒரு சிறந்த "நடிகர்".

Link to comment
Share on other sites

முதலில் அரங்கன் என்ற முகமூடியை பாவித்து சிலர் தமது ஆசையைப் புகுத்தியுள்ளனர். ஆக்கம் எங்கு பெறப்பட்டது?? கட்டுரையில் தமது கற்பனைக்கேற்றவாறு பல விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் இந்தியத் தமிழர்கள். மேற்ச்சொல்லப்பட்ட காரணங்களால் எமக்கு எந்தப் பாதிப்புமில்லை. இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை. உண்மையில் ரஜனிகாந்தின் சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமாயின் அதனை வெளியிட்டு பணம் பண்ணப் பார்ப்பகளிடமே அந்தத் திரைப்படத்தை புறக்கணிக்கச் சொல்லலாமே. புறக்கணிப்பு வெற்றிகரமாக இருக்கும். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் தேவை தானா?? இந்த புறக்கணிப்பின் இலட்சணம் இக்களத்தில் இணைக்கப்படும் சிவாஜி திரைப்படம் பற்றிய செய்திகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே புரியும். உண்மையில் உளப்பூர்வமாக எதனை மேற்கொண்டாலும் அது வெற்றிகரமாகவே நடக்கும். ஆனால் இங்கு இரட்டை வேடம் போடுபவர்களே அதிகம். அதனாலேயே அனைத்தும் தோல்வியடைகின்றன. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளின் திரைப்பட வியாபாரிகளிடம் சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர்களை படத்தை வாங்க வேண்டாம் என்று சொன்னால், யாராவது ஒட்டுக் குழு உறுப்பினர் படத்தை வெளியிட்டு லாபம் பார்ப்பார். அத்துடன் ஒட்டுக் குழுவுக்கு நிதியும் அனுப்பி வைப்பார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவதே முக்கியம். மக்கள் திரைப்படங்களை புறக்கணிக்கத் தொடங்கினால், திரைப்படங்களை வாங்குபவர்கள் தாமாகவே அதை நிறுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

இங்கு விழிப்புணர்வு பற்றிப் பேசுபவர்கள் தானே வியாபாரத்தையும் செய்கின்றார்கள். தரிசனம் தொலைக்காட்சி பற்றி; சினிமாவை ஒதுக்கி எமது கலை கலாச்சாரத்தை பேணுவது அது இது என்று கொடி பிடித்தவர்கள் தானே அதே சினிமாவை புகுத்தியுள்ளார்கள். அதே தொலைக்காட்சியில் சிவாஜி பட விளம்பரம் வேறு பிச்சுக்கிட்டு போகுது. சிலவேளை சபேசன் இங்கு பணம் கிடைக்கிறது அதற்காக விளம்பரம் போடுகின்றார்கள் என்று வக்காலத்து வாங்கினாலும் வாங்குவார். எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசங்கள் மட்டும் தான். இங்கு தடுமாற்றம் மக்களுக்கில்லை விழிப்புணர்வு என்று வேடம் போடும் வேடதாரிகளுக்கே. :

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் என்பதுபோல சிவாஜீ படத்துக்கு நல்ல விளம்பரம் எல்லாம் போகுது.

மக்களாய் பாத்து திருந்தினால் தான் உண்டு.

Link to comment
Share on other sites

வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் என்பதுபோல சிவாஜீ படத்துக்கு நல்ல விளம்பரம் எல்லாம் போகுது.

மக்களாய் பாத்து திருந்தினால் தான் உண்டு.

அதுதானே.. திருடனாய்ப் பார்த்த திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... :lol:

Link to comment
Share on other sites

ஓம் ஓம் விளம்பரங்களை மக்கள் தானே போடச் சொன்னார்கள், படத்தையும் வெளியிடச் சொன்னதும் மக்கள் தானே, இல்லாவிட்டால் போராட்டம் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக மக்கள் தானே அறிவித்தார்கள். நொண்டிக்குதிரைக்கு சறிக்கினது சாட்டுப் போல் அவரவர் தாம் செய்யும் தவறுகளுக்கு மக்கள் தானே பலிக்கடாக்கள்.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு தனிமனிதனும்தான் மக்கள்..

உன்னைத்திருத்திக்கொள் கமூகம் தானே திருந்தும்..

நாலு பேர் முரண்பாடாக..பேசினால்..

தவறு செய்பவர்கள் அதை திருப்தியோடு செய்வார்கள்..

இது தவறெனக் கண்டால் பேசாலாம்..

இது சரிப்படாது என்பதால்தான் எதுவும் உருப்படாமல் போகிறது..

நமக்குள் நாமே விரோதி

Link to comment
Share on other sites

உண்மைதான் "உன்னைத் திருத்திக்கொள் சமூகம்; தானாகத் திருந்தும் என்பார்கள". தன்னையே திருத்தாமல் அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதில் என்னபயன் என்பதையே நானும் சொல்கின்றேன். சொல்லிற்கும் செயலிற்கும் சம்மந்தம் வேண்டாமா??

Link to comment
Share on other sites

ஓ.. வசம்பு உங்களுக்கு

பெரிய அளவில் உளவுப்படை இருப்பது தெரியாமல் வம்புக்கு வந்துவிட்டேன் போல இருக்கிறது.. :lol:

Link to comment
Share on other sites

ஓ.. வசம்பு உங்களுக்கு

பெரிய அளவில் உளவுப்படை இருப்பது தெரியாமல் வம்புக்கு வந்துவிட்டேன் போல இருக்கிறது.. :lol:

:P :icon_idea: :P :D

Link to comment
Share on other sites

இங்கு விழிப்புணர்வு பற்றிப் பேசுபவர்கள் தானே வியாபாரத்தையும் செய்கின்றார்கள். தரிசனம் தொலைக்காட்சி பற்றி; சினிமாவை ஒதுக்கி எமது கலை கலாச்சாரத்தை பேணுவது அது இது என்று கொடி பிடித்தவர்கள் தானே அதே சினிமாவை புகுத்தியுள்ளார்கள். அதே தொலைக்காட்சியில் சிவாஜி பட விளம்பரம் வேறு பிச்சுக்கிட்டு போகுது. சிலவேளை சபேசன் இங்கு பணம் கிடைக்கிறது அதற்காக விளம்பரம் போடுகின்றார்கள் என்று வக்காலத்து வாங்கினாலும் வாங்குவார். எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசங்கள் மட்டும் தான். இங்கு தடுமாற்றம் மக்களுக்கில்லை விழிப்புணர்வு என்று வேடம் போடும் வேடதாரிகளுக்கே. :

சரியாகச் சொன்னீர்கள்! உங்கள் கருத்தோடு நான் நூற்;றுக்கு நூறு வீதம் உடன்படுகிறேன்.கோடம்பாக்க கழிகடை சினிமாவை புறக்கணித்துவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களால் மக்கள் தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்த முடிகிறது.ஆனால் 19 ஆயிரத்துக்கு அதிகமான மகாவீரர்களின் தியாக வரலாற்றையும் ஒரு சிறிய கைத்துப்பாக்கியுடன் ஒரு பெரிய அரசாங்கத்தை எதிர்க்க முடியும் வெல்லமுடியும் என்று துணிச்சலுடனும் புறப்பட்ட தேசியத் தலைவரின் முன்மாதிரியையும் கொண்ட நம்மால் கோடம்பாக்க சீரழிவு சினிமாவை தாண்டி வெளியே வர முடியவில்லை.மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் தேசியத் தலைவரின் முன்மாதிரி எல்;லாம் பேச்சுக்குதான் சரி நடைமுறைக்கு சாத்தியமற்றவை.இவற்றை வைத்து மக்களை அணிதிரட்ட முடியாது ஊடகங்களை நடத்த முடியாது என்ற எண்னமே எங்களுடைய மனதிலே இருக்கிறது..இந்த நிலையில்; மக்களை நாங்கள் எப்படி குறைசொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

வசம்புவும், நவமும் கடைசியாகச் சொன்ன கருத்தோடு நானும் முற்றுமுழுதாக ஒத்துப் போகின்றேன்.

சிறிலங்காவின் விமானசேவைக்கான விளம்பரம், சிறிலங்காவின் பொருட்களுக்கான விளம்பரம் என்று அனைத்துமே எமது ஊடகங்களில் நன்றாகவே போய்கொண்டிருக்கிறது.

இது உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய இழிவான நிலை.´

சில மாதங்களிற்கு முன்பு தமிழர் பண்பாட்டிற்கு விரோதமான சில விளம்பரங்கள் ஒரு பெரும் ஊடகத்தில் வந்தது. இது குறித்து கேட்ட போது, அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

"நீங்கள் அவர்கள் தருகின்ற விளம்பரப் பணத்தை தந்தால், நாங்கள் அவைகளை போடாது விடுகின்றோம்".

இந்த விடயத்தில் மருத்துவர் ராமதாசு பாராட்டுக்கு உரியவர். அவர் "மக்கள் தொலைக்காட்சியை" தொடர்ந்து நடத்த வேண்டும்.

எமது ஊடகங்களிடம் சொல்லிப் பயனில்லை. அவர்கள் ஒவ்வொரு வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

மக்களிடம்தான் சொல்ல வேண்டும்.

அரங்கன் எழுதிய கட்டுரையும் பெரும்பாலும் மக்களை நோக்கித்தான் பேசுகிறது!

Link to comment
Share on other sites

ம்

சங்கர் படம் என்றாலே ஒரே அமர்க்களம்தான்

பாய்ஸ் படம் வந்த நேரம் அந்த படத்திற்காக ஏகப்பட்ட விளம்பரங்கள். ஆபாசமான படம்; என்று அதைப் பார்ப்பதற்கு எத்தனையேபேர் முண்டியடித்து பார்த்தார்கள். அதைப்போலத்தான் இந்த விளம்பரமும்.

என்னைப் பொறுத்தவரையில் சிவாஜி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. நாம் போகவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரன் போவான். அவனைத் தடுப்பதற்கு எமக்கு உரிமை இல்லை.

உண்மையில் செய்யவேண்டியவர்கள் திரைப்படத்தை வெளியிடும் இலங்கைத்தமிழர்கள். அதற்கான விளம்பரத்தை காண்பிக்கும் தரிசனம் தொலைக்காட்சியினர்தான். ஏன் மக்களை குறை சொல்ல வேண்டும்.

உன்னால் முடிந்தால் செய் அல்லாவிட்டால் மூடிக்கொண்டு இரு...........

Link to comment
Share on other sites

உங்களால் முடிந்தால் செய்யுங்கள் இல்லை மூடிக்கொண்டு இருங்கள்

என்று மரியாதையாக எழுதியிருந்தால் மட்டுறுத்தினர்களும் சந்தோசப்படுவார்களே..

Link to comment
Share on other sites

sivajidvd1ht8.jpg

சிவாஜி" டிவிடி வெளிவந்துவிட்டது!!????

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பல கோடி பணத்தை கொள்ளையிட வருகின்ற "சிவாஜி" திரைப்படத்தின் டிவிடி வெளியாகி விட்டதாக பரபரப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இன்று அல்லது நாளை "சிவாஜி" திரைப்படத்தை இணையத்தில் பார்க்க முடியும் என்றும் தெரிகிறது.

"சிவாஜி" திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே, "சிவாஜி" படக்குழுவினரை மீறி அது பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் சிவாஜி திரைப்படத்தின் காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்தன. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட மொட்டைத் தலை ரஜனியின் படமும் வெளிவந்தது.

அதன் பிறகு அடுத்த அதிர்ச்சியாக சிவாஜி படத்தின் பாடல்கள் வெளிவந்தன. பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு முன்னமே சிவாஜி படத்தின் 3 பாடல்கள் பல இணையத் தளங்களில் வெளியாகின.

மிகவும் ரகசியமாவும் பாதுகாப்பவும் வைக்கப்பட்டும் இவைகள் அனைத்தும் வெளியாகின.

இதற்கு முன்பு ரஜனிகாந்த் நடித்திருந்த "சந்திரமுகி" திரைப்படமும் படம் திரையிடப்பட்ட அடுத்த நாளே 20இற்கும் மேற்பட்ட இணையத் தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி படத்தின் பாடல்களும், புகைப்படங்களும் முன்னமேயே வெளியானது போன்று தற்பொழுது சிவாஜி படத்தின் "டிவிடியும்" வெளியாகிவிட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இந்த "சிவாஜி" டிவிடியில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளதாகவும், திரையில் வருகின்ற சிவாஜியை விட மேலும் சில நிமிடங்கள் அதிகமாக வருவதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

ஐரோப்பாவில் "சிவாஜி" திரைப்படம் ஏறக்குறைய 20 யூரோ நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்படுகிறது. ஒரு குடும்பம் "சிவாஜி" படத்தை பார்ப்பதற்கு ஏறக்குறைய 100 யூரோக்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் "சிவாஜி" டிவிடி உடனடியாக இணையத் தளங்களில் வெளியாவதால் பெரும்பாலான தமிழ் மக்கள் டிவிடியில் "சிவாஜி" திரைப்படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

சிவாஜி;பற்றி தர்க்கம் விவாதம் செய்தே இதை அதிகம் விளம்பரம் செய்து விட்டோமா என்று கூட எண்ண தோன்றுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நடிகை நடிகர்களுக்காக தற்கொலை செய்பவர்களும் உண்டு. தமிழ்நாட்டு அரசியலின் பிரதான பங்கும் சினிமாவுக்கு உண்டு. சினிமா மேலான மக்களின் மோகம் ஒரு விதத்தில் வெறித்தனமான மோகம் மக்களின் பலவீனமாகவும் சினிமாவின் பலமாகவும் உள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

நிஜவாழ்வில் சாதாரண மனிதனின் கனவுகள் ஆசைகள் சினிமா தீர்த்து வைக்கிறதாக கூட சொல்ல இடமுண்டு. சாதாரண மனிதர்கள் டுயட் பாடுவதில்லை. காதல் இலகுவாக வருவதில்லை. சாதி மதங்களை தாண்டி காதலை சாதாரண மனிதனின் கீரோத்தனம் வென்று விடுவதில்லை. ஒழுக்கமான கதாநாயகியும் கதாநாயகனும் சினிமாவில் அடயாளப்படுத்தப் படுகின்றனர்.

இவ்வாறு நிஜ வாழ்வில் கலாச்சார சாதிய இறுக்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அதன் நிமிர்த்தம் உருவாக்கப்பட்டுள்ள உளவியல் ரீதியான தாக்கத்திற்கு சினிமாவில் ஓரளவு ஆறுதல் கிடைப்பதாக ஓரு மாயத்தோற்றம் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சினிமா திரைக்கு வரும் சமயம் புறக்கணிப்பது பற்றி நாம் பேசலாம் ஆனால் இது பிரச்சனைக்கு தீர்வாகுமா? ஏன் மக்கள் நடிகரை தேவனாக நோக்குகின்றனர் அவ்வாறான நிர்பந்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்று ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்ய ஆக்க பூர்வமாக ஏதாவது செய்வது சிறப்பாக இருக்கும்

புறக்கணிப்பது என்ற கருத்துக்கு எதிர்வாதம் எனது நோக்கம் இல்லை ஆனால் புறக்கணிப்புகள் பிரச்சனைக்கு தீர்வாகும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரச்சனை நடிகரிடம் இருப்பதாக நான் நம்பவில்லை. தேவனாக ஆக்கியது மக்களே. மக்கள் ஏன் தேவனாக ஆக்கினார்கள் என்பதில் இருந்தே இந்த பிரச்சனையை அணுக வேண்டும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

முதல்ல அதைச்செய்யுங்கோப்பா படத்தை உடனே இணையத்தில வெளியிடுங்கோ கோடிபுண்ணியம்...

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் பல காலம் இருந்தன். பெடியனா இருக்கேக்குள்ள ரஜினி வெறி பிடித்து முதல்நாள் காட்சிக்கு முண்டியடித்து சட்டை தலை கிலையெல்லாம் கலைஞ்சு பெல்ட் கழண்டு சினிமா பாத்து சந்தோசப்பட்டன். பிறகு கொஞ்சம் வளந்தாப்பிறகு பாக்கேக்கைதான், இந்த ரஜினி ஆரெண்டு தெரிஞ்சிது. :unsure: தமிழ்நாட்டு சனத்திண்ட காசில வாழுறது ஒருபக்கம். கன்னடத்துக்கு வக்காலத்து இன்னொருபக்கம். அவரைச்சொல்லித் தப்பில்லை. ஏனெண்டால் போஸ்டர் ஒட்ட எங்கட ரசிகப்பெருமக்கள் இருந்தாங்களே. ஆராச்சும் கொஞ்சம் வில்லங்கமா கேள்விகேட்டால் தேசிய ஒருமைப்பாடு பஞ்சர் ஆகிப்போட்டுது எண்டு சொல்லி அமத்திப்போடுவாங்கள். :)

இங்க எங்கட ஆக்களும் என்ன சும்மாவே! தொங்குற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு தலைமயிர மினக்கேட்டு பின்னல் போட்டுக்கொண்டு (கறுப்பர் ஆகினமாம்...) எங்கட ஆதி மாதிரி சேட்டை விட்டுக்கொண்டு ரஜினி படம் பார்த்தால்தான் அவையளுக்குத் திருப்தி. அவையளிண்ட அப்பா அம்மாமாருக்கும் பெருமை. :unsure: இதில எங்க போய் படத்தைப் புறக்கணிக்கிறது?!! எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம். கள்ள சிடி எண்டால் ஓக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல அதைச்செய்யுங்கோப்பா படத்தை உடனே இணையத்தில வெளியிடுங்கோ கோடிபுண்ணியம்...

நிட்சயமாக வெளியிடப்படும். முடிந்தால் சிடியும் இலவசமாக சில இடங்களில் வழங்கப்படும்.

தயவு செய்து பணம் கொடுத்து இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம்.

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.