Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

சிவாஜி - திரைப்படம்

20070616155727sivaji_film_rajni.jpg

சிவாஜி திரைப்பட சுவரொட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியான சிவாஜி திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் மட்டுமே 17 திரையரங்குகளில், நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என நாள் ஒன்றுக்கு 68 காட்சிகள். மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இதே நிலை தான்.

ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப்பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மஞ்சுளா, முன்னணி இயக்குநர் லிங்குசாமி போன்றோர் திரைப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறினர்.

குறிப்பிடத்தகுந்த எழுத்தாளருமான சமூகவியலாளருமான சாருநிவேதிதா ரஜினியின் சில பிரத்தியேக அம்சங்கள், பாவனைகள் தான் அவரது செல்வாக்கிற்கு காரணங்கள் என்கிறார்.

அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், அவர் இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்கிறார்.

சினிமா வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் ரஜினியினால் எவருக்கும் எப்போதும் நஷ்டமேற்படுவதேயில்லை, எம்ஜிஆருக்கு பிறகு அப்படி ஓரு நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருப்பவர் அவர்தான் என்கிறார்.

- BBC

Link to comment
Share on other sites

உண்மை..திருட்டு சிவாஜிதான் பார்ப்பதாக இருக்கிறேன்..

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு இந்த கட்டுரையைக் காட்ட அவன் சொன்னான்..

எடுத்தவன் நடிச்சவன் வித்தவன் எல்லாம் வேறு நாட்டுக்காரன்..

வெளிநாடெல்லாம் வாங்கி போடுறவன் நம்ம நாட்டுக்காரன்..

பெரிய வாசலைத் திறந்து போட்டுட்டு துவாரத்தால காத்து வருதெண்டா எப்படின்னு..

இதையே எடுத்தவங்ககிட்ட கேட்டா..

உங்க கட்டுரை வாறதுக்கு முதலே.. 6மாசம் முதலே எல்லாம் வாங்கியாச்சு

நாங்க செய்றது தொழில்.. வழமையா செய்யிறப்போலதான் செய்யிறம்..

ஆளாளுக்கு புதுசபுதுசா ஒண்ணு சொன்னா என்ன பண்ணுறதுன்னு..

சிவப்பில இருக்கிறது ஊகம்..

உலகத்தில நடுநிலமை கஸ்டம்பா..

Link to comment
Share on other sites

சுவிசில் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் நிறைந்த காட்சிகளாக இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கட்டுரையில் ரஜனிகாந் என்ற தனிமனிதனால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய நடிகர்களின் திரைப்படங்களிலில்லாது ரஜனிகாந்தின் திரைப்படத்தில் மட்டும் அப்படி நீங்கள் எதனைக் கண்டீர்கள் என்று உங்களால் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா??

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இன்னும் புறக்கணிக்கவில்லை. மீசையில் ஒட்டிய மண்ணைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள். :lol::lol:

நான் பண்பாட்டுச் சீரழிவைப் பற்றிப் பேசவில்லை. ரஜினிகாந்தினால் தமிழர் நலத்துக்கு வர்க்க ரீதியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சீரழிவைப்பற்றி. காவிரிப் பிரச்சினையில் அவரின் நடவடிக்கை எப்படியிருந்ததென்று எல்லாருக்கும் தெரிந்ததே. நெய்வெலியில் திரை நட்சத்திரங்கள் எல்லாம் ஒன்றுகூடி கர்நாடகாவுக்கு மின் வழங்கலை எதிர்த்துப் போராட்டம் நடத்த இவர் அதை எதிர்த்து சென்னையில் தனிக்கூடாரம் போட்டு உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலிக்கு அவர் போகாத காரணம், அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்வதை எதிர்க்கப் பிடிக்காமல். ஆனால் காவிரிக்குக் குறுக்கே பத்து அணைகள் கட்டி கர்நாடகம் தடுக்கும். அதைப்பற்றி அவருக்குப் பிரச்சினை இல்லை. தேசிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்கிறாராம். நதிகளை எப்ப இணைத்து முடிப்பது? அதுவரை தமிழக விவசாயிகள் என்ன செய்வது?

இது ஒரு உதாரணம். வீரப்பன் பிரச்சினையில் ராஜ்குமார் விடுபட்டபோது, வீரப்பனை எதிர்த்து முழங்கினார். கர்நாடக அதிரடிப்படையால் தமிழக மலைவாசிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதும், பலர் மாண்டதும் இவருக்குத் தெரியாதாம். என்ன ஒரு வேடதாரி!

மற்ற நடிகர்களும் எல்லோரும் திறமில்லை. ஆனால் இவர் கர்நாடகாவிலிருந்து வந்து செய்யும் அளும்பு தாங்கலை.! :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணா இந்த கேள்வியை தான் நானும் கேட்கிறேன் இந்த நடவடிகையை 8 மாசதிற்கு முன் நடத்தி இருந்தா சாத்திபட்டிருக்கலாம் ஆர்பாட்டம் செய்ய திடிரேன படம் வாற நேரம் பார்த்து இந்த நடவடிகையை செய்ய சொன்னால் எப்படி சாத்தியபடும் அவர்கள் ஏற்கனவே விலைக்கு வாங்கி இருபார்களே???நீங்கள் சொல்வது போல சுயவியாபார இலாப நோக்கில் என்று பார்த்தால் இலாபம் அவர்களுக்கு யாரால் ஏற்படுகிறது எங்களாள் தானே அதனால் தானே இலாப நோக்கில் செயற்படுகிறார்கள்,நீங்கள் ஒருவர் இங்கிருந்து சொல்வதன் மூலம் இங்கிருப்பவர்கள் போகாமல் இருக்க போகிறார்களா?கண்டிப்பாக போக போறார்கள் போயிற்றுவந்து என்ன அருமையான படம் என்று விமர்சனும் தருவார்கள்,ஆகவே இதனால் பாதிக்க படபோவது நம்மவர்களின் தொழில் துறைகளே ஆகவே ஒன்றை செய்யும் போது காலம் நேரம் அறிந்து செயற்பட வேண்டும் அதை விடுத்து புறகணி என்று இருந்தா போல சொல்வது வேடிக்கை.

அத்துடன் தூ... இதுக்கும் என்ன சம்மந்தம் தூ... நாட்டுகுள் கொண்டுவரவே முடியாது ஆனால் இது அப்படி இல்லை ஆகவே தூளுக்கும் இதுக்கும் முடித்து போடாதயுங்கோ

ஜமுனா,

வசம்புக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளேன். நான் பேசுவது கலாச்சார சீரழிவைப்பற்றி அல்ல. ரஜினிகாந்த் என்ற தமிழ் விரோதியைப்பற்றி. தமிழ்விரோதியின் படத்தை யாராவது தெரிந்தோ தெரியாமலோ வாங்கினாலும் அவர் பாதிப்படைய வேண்டியவரே. தமிழ்விரோதியின் படத்தைப் பார்ப்பதனால் எங்கள் மக்களுக்கு சந்தோசம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மற்றும்படி, தூள் விசயம் ஒரு உதாரணமே. அதிலிருந்து நான் சொல்ல வந்த கருத்தை மட்டும் எடுங்கள். இங்கே கொண்டுவரமுடியுமா, யாராவது செய்கிறார்களா என்பதெல்லாம் தேவையில்லாதவைகள்.

Link to comment
Share on other sites

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

சுவிசில் மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய அமெரிக்கா கனடா போன்று வெளியிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இங்கு களத்தில் புறக்கணிப்பேன் என எழுதிவிட்டு ஓடோடிச் சென்று திரைப்படம் பார்த்த கள நண்பர்களையும் எனக்குத் தெரியும். திரைப்படத்தை வேலையால் பார்க்க முடியாத உறவுகள் யாராவது உம்மை திருப்திப்படுத்த உம்மிடம் திரைப்படத்தை தான் பார்க்கவில்லையென புலம்பியிருக்கலாம். :lol: அது சரி ஒட்டிய மண்ணை தட்டிவிட்டீரா?? :lol:

Link to comment
Share on other sites

சுயமாக சிந்திக்க விடுங்கள்

முதலில் மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள். தாங்கள் நினைத்தது நடக்கா விட்டால் இப்படித் தன் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பதும். ஆட்டுமந்தைக் கூட்டமாக தலையாட்டி நின்றால் ஆகா ஓகோ எனப் புகழ்வதும். இது தான் தமிழனை தலை குனிய வைக்கின்றது.

எனவே மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாக்காமல் மனிதனாக சுயமாக சிந்திக்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

கறுப்பி.. இணைப்புக்கு நன்றி.

இங்கு ரஜினி படாத்தைப் புறக்கணிப்பதை கிண்டல் செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் என்ன நடந்தது / நடக்கிறது என்று தெரியாமல் பினாத்திக்கொண்டிருப்பவர்கள

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன் சிலர் ரஜனியை கனடாவுக்கு அழைத்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இரண்டுநாட்களுக்கு இரு வௌ;வேறு பகுதிகளில் மிகப்பெரிய மண்டபங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். வருவது ரஜனி மண்டபம் நிறையும் எனஎதிர்பார்த்தார்கள். அந்தநேரத்திலும் ரஜனிக்கு எதிர்ப்பிருந்தது.ரஜனியின் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டாமென பிரச்சாரம் பலமாக நடந்ததுபிரச்சாரத்துக்கு 90 வீதம் வெற்ரியும் கிடைத்தது

சுமார் 1500 பேர்வரைதான் முதல்நாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தகாரணத்தால் மறுநாள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்கள். ரஜனியும் சத்தமில்லாமல் ஓடிவிட்டார்

ஆனால் திரைப்பட விடயத்தில் எவ்வளவு தூரம் புறக்கணிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

படத்தை பார்க்கப்போனதே குற்றம். அதுல வேஸ்ட் என்ற புலம்பல் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

கன்னடர்களின் காலை நக்குவதும், அதற்குப் பின்னால் பிடித்துக் கொண்டு திரிவதும் தமிழனுக்குப் புதிதில்லையே. புதுசாக நடப்பது போலச் சொல்கின்றீர்கள். திராவிடச் சிங்கமும் முன்பு நல்லவன் போல நடித்துத் தமிழனை பிரிவினைக்குள்ளாக்கி சாதி வாதத்தில் அடிபட வைத்தது. இவரும் நல்லவன் போல நடித்து தமிழனின் பணத்தில் ஏப்பம் விடுறார்.

பார்த்தால் எல்லாமே ஒன்று தான்.

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் இருந்து வருகின்ற நல்லவைகளை தமிழர்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் இனவாதிகள் அல்ல.

இனவாதம் பேசினால் கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

வெங்காயத் தமிழனுக்கு கல் மீது பாலபிசேகம் செய்யாதே என்று கற்பித்த திராவிட சிங்கத்தின் முன்னோர்களும் கன்னடத்தில் இருந்துதான் வந்தார்கள்.

கட்டவுட்டுக்கு பாலபேசகம் செய்ய வைப்பவரும் கர்நாடகத்தில் இருந்துதான் வந்திருக்கிறார். விந்தiயான முரண்பாடு

ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்.

கன்னடர் என்பதற்காக யாரும் ரஜனியை எதிர்க்கவில்லை. அப்படி செய்வது நாசிசவாதம். அவரை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளில் தெளிவாகவே காட்டப்பட்டுள்ளது.

தயவு செய்து யாரும் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

முறியடிப்போம், காத்திரு!

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..

என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..

எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..

இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!

கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!

மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!

மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்

சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்

எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?

எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...

கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்

கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்

மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!

மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..

காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -

காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -

நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -

நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..

நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...

கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..

குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..

திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -

சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -

திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -

செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!

விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!

அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -

ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..

பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...

பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!

வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!

வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!

ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -

எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -

மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!

முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!

- தொ. சூசைமிக்கேல்

tsmina2000@yahoo.com

Link to comment
Share on other sites

''ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்""

யாரை யாருடன் எதனை எதனுடன் ஒப்பிடுவது

சினிமாவும் வி-டுதலையும் ஒன்றாம்

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒப்பீடு விளங்கவில்லை என்று தெரிகிறது.

தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் பெரியாரோடு தேசியத் தலைவரையும்

துரோகி ரஜனியோடு துரோகி கருணாவையும் ஒப்பிட்டேன்.

ஆனால் தயவு செய்து இப் பகுதியில் ரஜனிகாந்த், "சிவாஜி" திரைப்படம் போன்ற விவாதங்களை மட்டும் நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் பற்றி இங்கு பேசி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம். அதற்கு என்று வேறு பகுதி இருக்கிறது. இங்கே சொல்லப்பட்டு ஒரு கருத்துக்காகவே நான் இந்த ஒப்பீட்டை செய்ய வேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

டம்மிமாரே, சவுண்டுகள் விடுகிறதுக்கு முன்னுக்கு ஒருக்கால் "ததேஊ" களைக் கேட்டு விட்டு விடுங்கள்.

"ஐபிசி"யின் பக்கமே தலை வைத்துப் படுக்க முடியவில்லை! வரிக்கு வரி "வாஜி.... வாஜி....சிவாஜி" .... "

உதை என்னண்டு எடுக்கப் போறியள்?????

முன்பு "ரிரிஎன்"இலை கொழும்பில் முதலிடுங்கள்!! வீடு வாங்கவில்லையா? வீடு வாங்கவில்லையா??? ....... கேட்டுக்கேட்டு பலர் காசுகளை கொழும்பில் கொட்டினார்கள்!!!!!!

சிறிலங்காவின் சாமானுகளை புறக்கணியுங்கள்!!! ..... "ததேஊ" பக்கம் திரும்பினால், சிறிலங்காவின் சாமான் வாங்கவில்லையோ?? என்ற புராணம்!!!!

இவற்றை என்னவென்று சொல்வது????? ""****"?

**** சொல் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :D:D

நீங்களாகவே தொப்பி உங்களுக்கு அளவாக இருந்து மாட்டினால் நான் என்ன செய்வது?? :lol::lol:

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ரஜினி ஒரு நடிகன். அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஏனைய பல மாநிலங்களிலும் இரசிகர்களுண்டு. ஏன் இன்று யப்பானியர்களே அவரைப் பார்த்து வியக்கவில்லையா?? அதனால் யப்பானியர்கள் முட்டாள்கள் என்று சொல்லப் போகின்றீர்களர்?? இங்கு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த நம் குழைந்தைகள்கூட ரஜினி என்றவுடன் குதூகலிக்கின்றார்களே. அது ஏன்?? அவர்களையும் பைத்தியங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இந்த நிலையை ரஜினி ஏதோ திடீரென எட்டிவிடவில்லை. தனது கடின உழைப்பினால்த்தான் பெற்றுள்ளார். அந்த உழைப்பை இரசிப்பதில் எதுவிதத்திலும் தப்பில்லை. இந்நிலையில் அவரால் எந்த மாநிலத்தவரையும் எதிர்த்துக் கருத்துக்கள் சொல்லிவிட முடியாது. அவரின் படங்கள் பல கோடியில் விலை போவதும் இதனால்த்தான். அவரை நம்பி கோடிக்கணக்கில் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ளவும் முடியாது. இதனைத் தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொண்டுள்ளபோது. நமக்கேன் முதலைக் கண்ணீர். :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த திரைப்படத்தை புறக்கணிப்பு செய்வதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று புலம்பெயர் தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்கள் குறிப்பாக வானொலி தொலைக்காட்சிகள் நிருபிக்கின்றன.

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவை உலுக்கும் `சிவாஜி' வெறி

[17 - June - 2007]

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் `சிவாஜி' படம் உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டதையடுத்து தினமும் சுவாரஸ்ஸியமான சம்பவங்களும், விந்தையும், வியப்புமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

ரஜினியின் பிரமாண்டமான கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பியர் அபிஷேகம், ஆடு வெட்டி திருஷ்டி கழித்தல், பால்குட பவனி, அலகு குத்தி காவடி,தூக்குக்காவடி விசேட பூஜைகள், மொட்டையடித்தல் என ரசிகர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறனர்.

டில்லி சென்று டிக்கட் வாங்கும் தமிழக ரசிகர்கள்

இதேவேளை தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கட்டுகள் பெறமுடியாமல் இருப்பதால் பல ரசிகர்கள் டில்லிக்கு சென்று சிவாஜி படத்துக்கான டிக்கட்டுகளை வாங்கியுள்ளனர்.

தமிழக திரையரங்குகளில் டிக்கட்டின் விலை 35 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் சிவாஜி பட டிக்கட்டுகள் 600 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகின்றன. பெங்களூரில் 75 ரூபா டிக்கட் 1000 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இந்த விலையில் கூட டிக்கட்டை பெற முடியவில்லை என ரஜினி ரசிகர்கள் அலைந்து திரிகின்றனர்.

மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா , பெங்களூர் என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் திரையரங்குகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் கூட்டம் அலை மோதுகின்றது.

அமெரிக்காவிலுள்ள திரையரங்கொன்று சிவாஜி படத்தை 60 கோடி ரூபாவுக்கு வாங்கி திரையிட்டுள்ளது.

இங்கு சிவாஜி படத்துக்கான டிக்கெட் ஒன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

இலங்கையிலும் பல திரையரங்குகளில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் ஒன்று 300 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இலங்கை தலைநகரில் காணப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கூட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் திரையங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.

மலேசியாவில் சிவாஜி படம் திரையிடப்பட்ட திரையரங்கொன்றில் காட்சி ஆரம்பிக்கும் நேரம் தாமதமானதால் அங்கு வைக்கப்பட்டிருந்த படங்கள், கட் அவுட்டுகள் ரசிகர்களினால் அடித்து நொருக்கப்பட்டன.

ஆந்திராவில் 350 திரையரங்குகளில்....

சென்னையில் 18 திரையரங்குகளில் சிவாஜி படம் திரையிடப்பட்ட இதேவேளை ஆந்திராவில் மட்டும் 350 திரையரங்குகளில் சிவாஜி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் சிவாஜி திரைப்படம் வெளியிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எந்தப் படத்திற்குமில்லாத வகையில் சிவாஜி படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் சினிமா பிரபலங்களின் கூட்டம் அலைமோதியது. ஹிந்தி நட்சத்திரங்கள் உட்பட தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். இவர்களில் பிரபல கதாநாயகி ஷ்ரீதேவி தனது குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கூட சில சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

சிவாஜி படத்தை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல அமைச்சர்கள் பார்த்து வாயாரப் புகழ்ந்து தள்ளினர். ரஜினியை எதிரியாகப் பார்க்கும் ஜெயலலிதா சிவாஜி படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று பாராட்டியமை அரசியல்

வட்டாரங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

இதேவேளை சிவாஜி படம் வெளியான தியேட்டர்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. சிவாஜி படம் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் ரஜினியின் பிரமாண்டமான கட் அவுட்களும், டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பிய ரசிகர்கள், படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்கள். ஆரவாரத்தாலும் திருவிழா கோலம் பூண்டு இருந்தன.

சிவாஜி படம் அதிக பட்சமாக சென்னை நகரில் 18 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. கமலா தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் பிரமாண்டமான பேனருக்கு ரசிகர்கள் குடத்தில் கொண்டு வரப்பட்ட பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதேபோல் ஏவி.எம்.ராஜேஸ்வரி, ஆல்பட், உதயம், சத்யம், அபிராமி, மகாராணி உள்ளிட்ட தியேட்டர்களிலும் ரஜினியின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ஆல்பட் தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை தலை `கெட் அப்' பில் வருவது போல் சில ரசிகர்கள் மொட்டை அடித்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆடு வெட்டினார்கள்

சேலத்தில் 8 தியேட்டர்களில் சிவாஜி படம் வெளியானது. ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த 30 அடி உயர ரஜினியின் கட் அவுட்டுக்கு, ரஜினிக்கு 58 வயது ஆவதை குறிக்கும் வகையில் ரசிகர்கள் 58 லீற்றர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். ஒரு தியேட்டர் முன்பு ரசிகர்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

ஈரோட்டில் சிவாஜி படப்பெட்டியை ரசிகர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்து தியேட்டர்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள், மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள்.

அலகு குத்தி வந்தனர்

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிலர் ஷ்ரீரங்கம் காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் மொட்டை போட்டு மேளதாளத்துடன் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களுக்கு ஊர்வலமாக வந்தனர். 2 ரசிகர்கள் அலகு குத்தி வந்தனர். படகுக் காவடியும் எடுத்து வந்தனர். ஒரு தியேட்டரில் பள்ளிக்கூட மாணவ - மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

தஞ்சையிலும் சிவாஜி படம் வெளியான தியேட்டரில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி என்று ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டது. சிவாஜி படம் அமோக வெற்றி பெற வேண்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

நெல்லையில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களிலும் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தியும் கற்பூர ஆரத்தி எடுத்தும் கொண்டாடினார்கள். ஒரு தியேட்டரில் உள்ள ரஜினியின் `பாபாகெட்டப்' சிலைக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் ரசிகர்கள் பூஜை நடத்தி சிவாஜி படப் பெட்டியை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். சாரட் வண்டியிலும் கொண்டு சென்றனர். ஊர்வலத்தின் போது ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பியபடி உற்சாகத்துடன் சென்றனர். பனிமய மாதா ஆலயத்திலும் பிரார்த்தனை நடைபெற்றது.

1008 பெண்கள் பால்குடம்

திருப்பூரில், சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி அமர்க்களமாக கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி 1008 பெண்கள் பெருமாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்தனர்.

கோவையில் ரசிகர்கள் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகமும் தீபாராதனையும் செய்தனர்.

விருத்தாசலத்தில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர் மன்றத்தினர் லட்டு மற்றும் தண்ணீர் பக்கட்டுகளை வழங்கினார்கள்.

சிவாஜி படம் வெளியானதையொட்டி அன்றையதினம் வாணியம்பாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி ரசிகர்கள் மோதிரம் வழங்கினார்கள்.

மதுரையிலும் பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு என்று ரஜினி ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள். சிவாஜி படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். இதேபோல், திண்டுக்கல், வேலூர், அரக்கோணம், தேனி உள்ளிட்ட மற்ற இடங்களில் சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

பார்த்துவிட்டு புறகணிபோம் மாமா

:lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.