Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

சிவாஜி - திரைப்படம்

20070616155727sivaji_film_rajni.jpg

சிவாஜி திரைப்பட சுவரொட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியான சிவாஜி திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் மட்டுமே 17 திரையரங்குகளில், நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என நாள் ஒன்றுக்கு 68 காட்சிகள். மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இதே நிலை தான்.

ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப்பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மஞ்சுளா, முன்னணி இயக்குநர் லிங்குசாமி போன்றோர் திரைப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறினர்.

குறிப்பிடத்தகுந்த எழுத்தாளருமான சமூகவியலாளருமான சாருநிவேதிதா ரஜினியின் சில பிரத்தியேக அம்சங்கள், பாவனைகள் தான் அவரது செல்வாக்கிற்கு காரணங்கள் என்கிறார்.

அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், அவர் இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்கிறார்.

சினிமா வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் ரஜினியினால் எவருக்கும் எப்போதும் நஷ்டமேற்படுவதேயில்லை, எம்ஜிஆருக்கு பிறகு அப்படி ஓரு நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருப்பவர் அவர்தான் என்கிறார்.

- BBC

Link to comment
Share on other sites

உண்மை..திருட்டு சிவாஜிதான் பார்ப்பதாக இருக்கிறேன்..

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு இந்த கட்டுரையைக் காட்ட அவன் சொன்னான்..

எடுத்தவன் நடிச்சவன் வித்தவன் எல்லாம் வேறு நாட்டுக்காரன்..

வெளிநாடெல்லாம் வாங்கி போடுறவன் நம்ம நாட்டுக்காரன்..

பெரிய வாசலைத் திறந்து போட்டுட்டு துவாரத்தால காத்து வருதெண்டா எப்படின்னு..

இதையே எடுத்தவங்ககிட்ட கேட்டா..

உங்க கட்டுரை வாறதுக்கு முதலே.. 6மாசம் முதலே எல்லாம் வாங்கியாச்சு

நாங்க செய்றது தொழில்.. வழமையா செய்யிறப்போலதான் செய்யிறம்..

ஆளாளுக்கு புதுசபுதுசா ஒண்ணு சொன்னா என்ன பண்ணுறதுன்னு..

சிவப்பில இருக்கிறது ஊகம்..

உலகத்தில நடுநிலமை கஸ்டம்பா..

Link to comment
Share on other sites

சுவிசில் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் நிறைந்த காட்சிகளாக இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கட்டுரையில் ரஜனிகாந் என்ற தனிமனிதனால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய நடிகர்களின் திரைப்படங்களிலில்லாது ரஜனிகாந்தின் திரைப்படத்தில் மட்டும் அப்படி நீங்கள் எதனைக் கண்டீர்கள் என்று உங்களால் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா??

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இன்னும் புறக்கணிக்கவில்லை. மீசையில் ஒட்டிய மண்ணைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள். :lol::lol:

நான் பண்பாட்டுச் சீரழிவைப் பற்றிப் பேசவில்லை. ரஜினிகாந்தினால் தமிழர் நலத்துக்கு வர்க்க ரீதியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சீரழிவைப்பற்றி. காவிரிப் பிரச்சினையில் அவரின் நடவடிக்கை எப்படியிருந்ததென்று எல்லாருக்கும் தெரிந்ததே. நெய்வெலியில் திரை நட்சத்திரங்கள் எல்லாம் ஒன்றுகூடி கர்நாடகாவுக்கு மின் வழங்கலை எதிர்த்துப் போராட்டம் நடத்த இவர் அதை எதிர்த்து சென்னையில் தனிக்கூடாரம் போட்டு உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலிக்கு அவர் போகாத காரணம், அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்வதை எதிர்க்கப் பிடிக்காமல். ஆனால் காவிரிக்குக் குறுக்கே பத்து அணைகள் கட்டி கர்நாடகம் தடுக்கும். அதைப்பற்றி அவருக்குப் பிரச்சினை இல்லை. தேசிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்கிறாராம். நதிகளை எப்ப இணைத்து முடிப்பது? அதுவரை தமிழக விவசாயிகள் என்ன செய்வது?

இது ஒரு உதாரணம். வீரப்பன் பிரச்சினையில் ராஜ்குமார் விடுபட்டபோது, வீரப்பனை எதிர்த்து முழங்கினார். கர்நாடக அதிரடிப்படையால் தமிழக மலைவாசிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதும், பலர் மாண்டதும் இவருக்குத் தெரியாதாம். என்ன ஒரு வேடதாரி!

மற்ற நடிகர்களும் எல்லோரும் திறமில்லை. ஆனால் இவர் கர்நாடகாவிலிருந்து வந்து செய்யும் அளும்பு தாங்கலை.! :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணா இந்த கேள்வியை தான் நானும் கேட்கிறேன் இந்த நடவடிகையை 8 மாசதிற்கு முன் நடத்தி இருந்தா சாத்திபட்டிருக்கலாம் ஆர்பாட்டம் செய்ய திடிரேன படம் வாற நேரம் பார்த்து இந்த நடவடிகையை செய்ய சொன்னால் எப்படி சாத்தியபடும் அவர்கள் ஏற்கனவே விலைக்கு வாங்கி இருபார்களே???நீங்கள் சொல்வது போல சுயவியாபார இலாப நோக்கில் என்று பார்த்தால் இலாபம் அவர்களுக்கு யாரால் ஏற்படுகிறது எங்களாள் தானே அதனால் தானே இலாப நோக்கில் செயற்படுகிறார்கள்,நீங்கள் ஒருவர் இங்கிருந்து சொல்வதன் மூலம் இங்கிருப்பவர்கள் போகாமல் இருக்க போகிறார்களா?கண்டிப்பாக போக போறார்கள் போயிற்றுவந்து என்ன அருமையான படம் என்று விமர்சனும் தருவார்கள்,ஆகவே இதனால் பாதிக்க படபோவது நம்மவர்களின் தொழில் துறைகளே ஆகவே ஒன்றை செய்யும் போது காலம் நேரம் அறிந்து செயற்பட வேண்டும் அதை விடுத்து புறகணி என்று இருந்தா போல சொல்வது வேடிக்கை.

அத்துடன் தூ... இதுக்கும் என்ன சம்மந்தம் தூ... நாட்டுகுள் கொண்டுவரவே முடியாது ஆனால் இது அப்படி இல்லை ஆகவே தூளுக்கும் இதுக்கும் முடித்து போடாதயுங்கோ

ஜமுனா,

வசம்புக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளேன். நான் பேசுவது கலாச்சார சீரழிவைப்பற்றி அல்ல. ரஜினிகாந்த் என்ற தமிழ் விரோதியைப்பற்றி. தமிழ்விரோதியின் படத்தை யாராவது தெரிந்தோ தெரியாமலோ வாங்கினாலும் அவர் பாதிப்படைய வேண்டியவரே. தமிழ்விரோதியின் படத்தைப் பார்ப்பதனால் எங்கள் மக்களுக்கு சந்தோசம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மற்றும்படி, தூள் விசயம் ஒரு உதாரணமே. அதிலிருந்து நான் சொல்ல வந்த கருத்தை மட்டும் எடுங்கள். இங்கே கொண்டுவரமுடியுமா, யாராவது செய்கிறார்களா என்பதெல்லாம் தேவையில்லாதவைகள்.

Link to comment
Share on other sites

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

சுவிசில் மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய அமெரிக்கா கனடா போன்று வெளியிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இங்கு களத்தில் புறக்கணிப்பேன் என எழுதிவிட்டு ஓடோடிச் சென்று திரைப்படம் பார்த்த கள நண்பர்களையும் எனக்குத் தெரியும். திரைப்படத்தை வேலையால் பார்க்க முடியாத உறவுகள் யாராவது உம்மை திருப்திப்படுத்த உம்மிடம் திரைப்படத்தை தான் பார்க்கவில்லையென புலம்பியிருக்கலாம். :lol: அது சரி ஒட்டிய மண்ணை தட்டிவிட்டீரா?? :lol:

Link to comment
Share on other sites

சுயமாக சிந்திக்க விடுங்கள்

முதலில் மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள். தாங்கள் நினைத்தது நடக்கா விட்டால் இப்படித் தன் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பதும். ஆட்டுமந்தைக் கூட்டமாக தலையாட்டி நின்றால் ஆகா ஓகோ எனப் புகழ்வதும். இது தான் தமிழனை தலை குனிய வைக்கின்றது.

எனவே மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாக்காமல் மனிதனாக சுயமாக சிந்திக்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

கறுப்பி.. இணைப்புக்கு நன்றி.

இங்கு ரஜினி படாத்தைப் புறக்கணிப்பதை கிண்டல் செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் என்ன நடந்தது / நடக்கிறது என்று தெரியாமல் பினாத்திக்கொண்டிருப்பவர்கள

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன் சிலர் ரஜனியை கனடாவுக்கு அழைத்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இரண்டுநாட்களுக்கு இரு வௌ;வேறு பகுதிகளில் மிகப்பெரிய மண்டபங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். வருவது ரஜனி மண்டபம் நிறையும் எனஎதிர்பார்த்தார்கள். அந்தநேரத்திலும் ரஜனிக்கு எதிர்ப்பிருந்தது.ரஜனியின் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டாமென பிரச்சாரம் பலமாக நடந்ததுபிரச்சாரத்துக்கு 90 வீதம் வெற்ரியும் கிடைத்தது

சுமார் 1500 பேர்வரைதான் முதல்நாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தகாரணத்தால் மறுநாள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்கள். ரஜனியும் சத்தமில்லாமல் ஓடிவிட்டார்

ஆனால் திரைப்பட விடயத்தில் எவ்வளவு தூரம் புறக்கணிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

படத்தை பார்க்கப்போனதே குற்றம். அதுல வேஸ்ட் என்ற புலம்பல் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

கன்னடர்களின் காலை நக்குவதும், அதற்குப் பின்னால் பிடித்துக் கொண்டு திரிவதும் தமிழனுக்குப் புதிதில்லையே. புதுசாக நடப்பது போலச் சொல்கின்றீர்கள். திராவிடச் சிங்கமும் முன்பு நல்லவன் போல நடித்துத் தமிழனை பிரிவினைக்குள்ளாக்கி சாதி வாதத்தில் அடிபட வைத்தது. இவரும் நல்லவன் போல நடித்து தமிழனின் பணத்தில் ஏப்பம் விடுறார்.

பார்த்தால் எல்லாமே ஒன்று தான்.

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் இருந்து வருகின்ற நல்லவைகளை தமிழர்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் இனவாதிகள் அல்ல.

இனவாதம் பேசினால் கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

வெங்காயத் தமிழனுக்கு கல் மீது பாலபிசேகம் செய்யாதே என்று கற்பித்த திராவிட சிங்கத்தின் முன்னோர்களும் கன்னடத்தில் இருந்துதான் வந்தார்கள்.

கட்டவுட்டுக்கு பாலபேசகம் செய்ய வைப்பவரும் கர்நாடகத்தில் இருந்துதான் வந்திருக்கிறார். விந்தiயான முரண்பாடு

ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்.

கன்னடர் என்பதற்காக யாரும் ரஜனியை எதிர்க்கவில்லை. அப்படி செய்வது நாசிசவாதம். அவரை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளில் தெளிவாகவே காட்டப்பட்டுள்ளது.

தயவு செய்து யாரும் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

முறியடிப்போம், காத்திரு!

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..

என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..

எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..

இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!

கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!

மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!

மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்

சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்

எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?

எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...

கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்

கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்

மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!

மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..

காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -

காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -

நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -

நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..

நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...

கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..

குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..

திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -

சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -

திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -

செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!

விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!

அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -

ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..

பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...

பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!

வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!

வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!

ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -

எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -

மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!

முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!

- தொ. சூசைமிக்கேல்

tsmina2000@yahoo.com

Link to comment
Share on other sites

''ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்""

யாரை யாருடன் எதனை எதனுடன் ஒப்பிடுவது

சினிமாவும் வி-டுதலையும் ஒன்றாம்

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒப்பீடு விளங்கவில்லை என்று தெரிகிறது.

தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் பெரியாரோடு தேசியத் தலைவரையும்

துரோகி ரஜனியோடு துரோகி கருணாவையும் ஒப்பிட்டேன்.

ஆனால் தயவு செய்து இப் பகுதியில் ரஜனிகாந்த், "சிவாஜி" திரைப்படம் போன்ற விவாதங்களை மட்டும் நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் பற்றி இங்கு பேசி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம். அதற்கு என்று வேறு பகுதி இருக்கிறது. இங்கே சொல்லப்பட்டு ஒரு கருத்துக்காகவே நான் இந்த ஒப்பீட்டை செய்ய வேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

டம்மிமாரே, சவுண்டுகள் விடுகிறதுக்கு முன்னுக்கு ஒருக்கால் "ததேஊ" களைக் கேட்டு விட்டு விடுங்கள்.

"ஐபிசி"யின் பக்கமே தலை வைத்துப் படுக்க முடியவில்லை! வரிக்கு வரி "வாஜி.... வாஜி....சிவாஜி" .... "

உதை என்னண்டு எடுக்கப் போறியள்?????

முன்பு "ரிரிஎன்"இலை கொழும்பில் முதலிடுங்கள்!! வீடு வாங்கவில்லையா? வீடு வாங்கவில்லையா??? ....... கேட்டுக்கேட்டு பலர் காசுகளை கொழும்பில் கொட்டினார்கள்!!!!!!

சிறிலங்காவின் சாமானுகளை புறக்கணியுங்கள்!!! ..... "ததேஊ" பக்கம் திரும்பினால், சிறிலங்காவின் சாமான் வாங்கவில்லையோ?? என்ற புராணம்!!!!

இவற்றை என்னவென்று சொல்வது????? ""****"?

**** சொல் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :D:D

நீங்களாகவே தொப்பி உங்களுக்கு அளவாக இருந்து மாட்டினால் நான் என்ன செய்வது?? :lol::lol:

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ரஜினி ஒரு நடிகன். அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஏனைய பல மாநிலங்களிலும் இரசிகர்களுண்டு. ஏன் இன்று யப்பானியர்களே அவரைப் பார்த்து வியக்கவில்லையா?? அதனால் யப்பானியர்கள் முட்டாள்கள் என்று சொல்லப் போகின்றீர்களர்?? இங்கு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த நம் குழைந்தைகள்கூட ரஜினி என்றவுடன் குதூகலிக்கின்றார்களே. அது ஏன்?? அவர்களையும் பைத்தியங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இந்த நிலையை ரஜினி ஏதோ திடீரென எட்டிவிடவில்லை. தனது கடின உழைப்பினால்த்தான் பெற்றுள்ளார். அந்த உழைப்பை இரசிப்பதில் எதுவிதத்திலும் தப்பில்லை. இந்நிலையில் அவரால் எந்த மாநிலத்தவரையும் எதிர்த்துக் கருத்துக்கள் சொல்லிவிட முடியாது. அவரின் படங்கள் பல கோடியில் விலை போவதும் இதனால்த்தான். அவரை நம்பி கோடிக்கணக்கில் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ளவும் முடியாது. இதனைத் தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொண்டுள்ளபோது. நமக்கேன் முதலைக் கண்ணீர். :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த திரைப்படத்தை புறக்கணிப்பு செய்வதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று புலம்பெயர் தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்கள் குறிப்பாக வானொலி தொலைக்காட்சிகள் நிருபிக்கின்றன.

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவை உலுக்கும் `சிவாஜி' வெறி

[17 - June - 2007]

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் `சிவாஜி' படம் உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டதையடுத்து தினமும் சுவாரஸ்ஸியமான சம்பவங்களும், விந்தையும், வியப்புமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

ரஜினியின் பிரமாண்டமான கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பியர் அபிஷேகம், ஆடு வெட்டி திருஷ்டி கழித்தல், பால்குட பவனி, அலகு குத்தி காவடி,தூக்குக்காவடி விசேட பூஜைகள், மொட்டையடித்தல் என ரசிகர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறனர்.

டில்லி சென்று டிக்கட் வாங்கும் தமிழக ரசிகர்கள்

இதேவேளை தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கட்டுகள் பெறமுடியாமல் இருப்பதால் பல ரசிகர்கள் டில்லிக்கு சென்று சிவாஜி படத்துக்கான டிக்கட்டுகளை வாங்கியுள்ளனர்.

தமிழக திரையரங்குகளில் டிக்கட்டின் விலை 35 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் சிவாஜி பட டிக்கட்டுகள் 600 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகின்றன. பெங்களூரில் 75 ரூபா டிக்கட் 1000 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இந்த விலையில் கூட டிக்கட்டை பெற முடியவில்லை என ரஜினி ரசிகர்கள் அலைந்து திரிகின்றனர்.

மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா , பெங்களூர் என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் திரையரங்குகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் கூட்டம் அலை மோதுகின்றது.

அமெரிக்காவிலுள்ள திரையரங்கொன்று சிவாஜி படத்தை 60 கோடி ரூபாவுக்கு வாங்கி திரையிட்டுள்ளது.

இங்கு சிவாஜி படத்துக்கான டிக்கெட் ஒன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

இலங்கையிலும் பல திரையரங்குகளில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் ஒன்று 300 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இலங்கை தலைநகரில் காணப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கூட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் திரையங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.

மலேசியாவில் சிவாஜி படம் திரையிடப்பட்ட திரையரங்கொன்றில் காட்சி ஆரம்பிக்கும் நேரம் தாமதமானதால் அங்கு வைக்கப்பட்டிருந்த படங்கள், கட் அவுட்டுகள் ரசிகர்களினால் அடித்து நொருக்கப்பட்டன.

ஆந்திராவில் 350 திரையரங்குகளில்....

சென்னையில் 18 திரையரங்குகளில் சிவாஜி படம் திரையிடப்பட்ட இதேவேளை ஆந்திராவில் மட்டும் 350 திரையரங்குகளில் சிவாஜி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் சிவாஜி திரைப்படம் வெளியிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எந்தப் படத்திற்குமில்லாத வகையில் சிவாஜி படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் சினிமா பிரபலங்களின் கூட்டம் அலைமோதியது. ஹிந்தி நட்சத்திரங்கள் உட்பட தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். இவர்களில் பிரபல கதாநாயகி ஷ்ரீதேவி தனது குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கூட சில சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

சிவாஜி படத்தை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல அமைச்சர்கள் பார்த்து வாயாரப் புகழ்ந்து தள்ளினர். ரஜினியை எதிரியாகப் பார்க்கும் ஜெயலலிதா சிவாஜி படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று பாராட்டியமை அரசியல்

வட்டாரங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

இதேவேளை சிவாஜி படம் வெளியான தியேட்டர்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. சிவாஜி படம் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் ரஜினியின் பிரமாண்டமான கட் அவுட்களும், டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பிய ரசிகர்கள், படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்கள். ஆரவாரத்தாலும் திருவிழா கோலம் பூண்டு இருந்தன.

சிவாஜி படம் அதிக பட்சமாக சென்னை நகரில் 18 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. கமலா தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் பிரமாண்டமான பேனருக்கு ரசிகர்கள் குடத்தில் கொண்டு வரப்பட்ட பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதேபோல் ஏவி.எம்.ராஜேஸ்வரி, ஆல்பட், உதயம், சத்யம், அபிராமி, மகாராணி உள்ளிட்ட தியேட்டர்களிலும் ரஜினியின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ஆல்பட் தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை தலை `கெட் அப்' பில் வருவது போல் சில ரசிகர்கள் மொட்டை அடித்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆடு வெட்டினார்கள்

சேலத்தில் 8 தியேட்டர்களில் சிவாஜி படம் வெளியானது. ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த 30 அடி உயர ரஜினியின் கட் அவுட்டுக்கு, ரஜினிக்கு 58 வயது ஆவதை குறிக்கும் வகையில் ரசிகர்கள் 58 லீற்றர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். ஒரு தியேட்டர் முன்பு ரசிகர்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

ஈரோட்டில் சிவாஜி படப்பெட்டியை ரசிகர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்து தியேட்டர்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள், மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள்.

அலகு குத்தி வந்தனர்

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிலர் ஷ்ரீரங்கம் காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் மொட்டை போட்டு மேளதாளத்துடன் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களுக்கு ஊர்வலமாக வந்தனர். 2 ரசிகர்கள் அலகு குத்தி வந்தனர். படகுக் காவடியும் எடுத்து வந்தனர். ஒரு தியேட்டரில் பள்ளிக்கூட மாணவ - மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

தஞ்சையிலும் சிவாஜி படம் வெளியான தியேட்டரில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி என்று ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டது. சிவாஜி படம் அமோக வெற்றி பெற வேண்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

நெல்லையில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களிலும் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தியும் கற்பூர ஆரத்தி எடுத்தும் கொண்டாடினார்கள். ஒரு தியேட்டரில் உள்ள ரஜினியின் `பாபாகெட்டப்' சிலைக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் ரசிகர்கள் பூஜை நடத்தி சிவாஜி படப் பெட்டியை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். சாரட் வண்டியிலும் கொண்டு சென்றனர். ஊர்வலத்தின் போது ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பியபடி உற்சாகத்துடன் சென்றனர். பனிமய மாதா ஆலயத்திலும் பிரார்த்தனை நடைபெற்றது.

1008 பெண்கள் பால்குடம்

திருப்பூரில், சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி அமர்க்களமாக கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி 1008 பெண்கள் பெருமாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்தனர்.

கோவையில் ரசிகர்கள் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகமும் தீபாராதனையும் செய்தனர்.

விருத்தாசலத்தில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர் மன்றத்தினர் லட்டு மற்றும் தண்ணீர் பக்கட்டுகளை வழங்கினார்கள்.

சிவாஜி படம் வெளியானதையொட்டி அன்றையதினம் வாணியம்பாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி ரசிகர்கள் மோதிரம் வழங்கினார்கள்.

மதுரையிலும் பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு என்று ரஜினி ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள். சிவாஜி படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். இதேபோல், திண்டுக்கல், வேலூர், அரக்கோணம், தேனி உள்ளிட்ட மற்ற இடங்களில் சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

பார்த்துவிட்டு புறகணிபோம் மாமா

:lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.