Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

சிவாஜி - திரைப்படம்

20070616155727sivaji_film_rajni.jpg

சிவாஜி திரைப்பட சுவரொட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியான சிவாஜி திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் மட்டுமே 17 திரையரங்குகளில், நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என நாள் ஒன்றுக்கு 68 காட்சிகள். மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இதே நிலை தான்.

ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப்பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மஞ்சுளா, முன்னணி இயக்குநர் லிங்குசாமி போன்றோர் திரைப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறினர்.

குறிப்பிடத்தகுந்த எழுத்தாளருமான சமூகவியலாளருமான சாருநிவேதிதா ரஜினியின் சில பிரத்தியேக அம்சங்கள், பாவனைகள் தான் அவரது செல்வாக்கிற்கு காரணங்கள் என்கிறார்.

அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், அவர் இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்கிறார்.

சினிமா வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் ரஜினியினால் எவருக்கும் எப்போதும் நஷ்டமேற்படுவதேயில்லை, எம்ஜிஆருக்கு பிறகு அப்படி ஓரு நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருப்பவர் அவர்தான் என்கிறார்.

- BBC

Link to comment
Share on other sites

உண்மை..திருட்டு சிவாஜிதான் பார்ப்பதாக இருக்கிறேன்..

என்னுடைய நண்பன் ஒருவனுக்கு இந்த கட்டுரையைக் காட்ட அவன் சொன்னான்..

எடுத்தவன் நடிச்சவன் வித்தவன் எல்லாம் வேறு நாட்டுக்காரன்..

வெளிநாடெல்லாம் வாங்கி போடுறவன் நம்ம நாட்டுக்காரன்..

பெரிய வாசலைத் திறந்து போட்டுட்டு துவாரத்தால காத்து வருதெண்டா எப்படின்னு..

இதையே எடுத்தவங்ககிட்ட கேட்டா..

உங்க கட்டுரை வாறதுக்கு முதலே.. 6மாசம் முதலே எல்லாம் வாங்கியாச்சு

நாங்க செய்றது தொழில்.. வழமையா செய்யிறப்போலதான் செய்யிறம்..

ஆளாளுக்கு புதுசபுதுசா ஒண்ணு சொன்னா என்ன பண்ணுறதுன்னு..

சிவப்பில இருக்கிறது ஊகம்..

உலகத்தில நடுநிலமை கஸ்டம்பா..

Link to comment
Share on other sites

சுவிசில் அனைத்து இடங்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் நிறைந்த காட்சிகளாக இருப்பதாக சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

கட்டுரையில் ரஜனிகாந் என்ற தனிமனிதனால் ஏற்படும் பண்பாட்டுச் சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய நடிகர்களின் திரைப்படங்களிலில்லாது ரஜனிகாந்தின் திரைப்படத்தில் மட்டும் அப்படி நீங்கள் எதனைக் கண்டீர்கள் என்று உங்களால் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா??

நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இன்னும் புறக்கணிக்கவில்லை. மீசையில் ஒட்டிய மண்ணைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள். :lol::lol:

நான் பண்பாட்டுச் சீரழிவைப் பற்றிப் பேசவில்லை. ரஜினிகாந்தினால் தமிழர் நலத்துக்கு வர்க்க ரீதியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சீரழிவைப்பற்றி. காவிரிப் பிரச்சினையில் அவரின் நடவடிக்கை எப்படியிருந்ததென்று எல்லாருக்கும் தெரிந்ததே. நெய்வெலியில் திரை நட்சத்திரங்கள் எல்லாம் ஒன்றுகூடி கர்நாடகாவுக்கு மின் வழங்கலை எதிர்த்துப் போராட்டம் நடத்த இவர் அதை எதிர்த்து சென்னையில் தனிக்கூடாரம் போட்டு உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலிக்கு அவர் போகாத காரணம், அங்கிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்வதை எதிர்க்கப் பிடிக்காமல். ஆனால் காவிரிக்குக் குறுக்கே பத்து அணைகள் கட்டி கர்நாடகம் தடுக்கும். அதைப்பற்றி அவருக்குப் பிரச்சினை இல்லை. தேசிய நதிகளை ஒன்றிணைக்க வேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்கிறாராம். நதிகளை எப்ப இணைத்து முடிப்பது? அதுவரை தமிழக விவசாயிகள் என்ன செய்வது?

இது ஒரு உதாரணம். வீரப்பன் பிரச்சினையில் ராஜ்குமார் விடுபட்டபோது, வீரப்பனை எதிர்த்து முழங்கினார். கர்நாடக அதிரடிப்படையால் தமிழக மலைவாசிப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதும், பலர் மாண்டதும் இவருக்குத் தெரியாதாம். என்ன ஒரு வேடதாரி!

மற்ற நடிகர்களும் எல்லோரும் திறமில்லை. ஆனால் இவர் கர்நாடகாவிலிருந்து வந்து செய்யும் அளும்பு தாங்கலை.! :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணா இந்த கேள்வியை தான் நானும் கேட்கிறேன் இந்த நடவடிகையை 8 மாசதிற்கு முன் நடத்தி இருந்தா சாத்திபட்டிருக்கலாம் ஆர்பாட்டம் செய்ய திடிரேன படம் வாற நேரம் பார்த்து இந்த நடவடிகையை செய்ய சொன்னால் எப்படி சாத்தியபடும் அவர்கள் ஏற்கனவே விலைக்கு வாங்கி இருபார்களே???நீங்கள் சொல்வது போல சுயவியாபார இலாப நோக்கில் என்று பார்த்தால் இலாபம் அவர்களுக்கு யாரால் ஏற்படுகிறது எங்களாள் தானே அதனால் தானே இலாப நோக்கில் செயற்படுகிறார்கள்,நீங்கள் ஒருவர் இங்கிருந்து சொல்வதன் மூலம் இங்கிருப்பவர்கள் போகாமல் இருக்க போகிறார்களா?கண்டிப்பாக போக போறார்கள் போயிற்றுவந்து என்ன அருமையான படம் என்று விமர்சனும் தருவார்கள்,ஆகவே இதனால் பாதிக்க படபோவது நம்மவர்களின் தொழில் துறைகளே ஆகவே ஒன்றை செய்யும் போது காலம் நேரம் அறிந்து செயற்பட வேண்டும் அதை விடுத்து புறகணி என்று இருந்தா போல சொல்வது வேடிக்கை.

அத்துடன் தூ... இதுக்கும் என்ன சம்மந்தம் தூ... நாட்டுகுள் கொண்டுவரவே முடியாது ஆனால் இது அப்படி இல்லை ஆகவே தூளுக்கும் இதுக்கும் முடித்து போடாதயுங்கோ

ஜமுனா,

வசம்புக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளேன். நான் பேசுவது கலாச்சார சீரழிவைப்பற்றி அல்ல. ரஜினிகாந்த் என்ற தமிழ் விரோதியைப்பற்றி. தமிழ்விரோதியின் படத்தை யாராவது தெரிந்தோ தெரியாமலோ வாங்கினாலும் அவர் பாதிப்படைய வேண்டியவரே. தமிழ்விரோதியின் படத்தைப் பார்ப்பதனால் எங்கள் மக்களுக்கு சந்தோசம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மற்றும்படி, தூள் விசயம் ஒரு உதாரணமே. அதிலிருந்து நான் சொல்ல வந்த கருத்தை மட்டும் எடுங்கள். இங்கே கொண்டுவரமுடியுமா, யாராவது செய்கிறார்களா என்பதெல்லாம் தேவையில்லாதவைகள்.

Link to comment
Share on other sites

இந்தி விவாதம் சிவாஜி பார்க்க இருக்காதவர்களையும் பார்க்கத் தூண்டி உள்ளது என்பது அர்த்தமற்ற வாதம்.

"சிவாஜி" திரைப்படம் பற்றி அனைத்து ஊடகங்களுமே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

விளம்பரம் அற்ற, எதிர்பார்ப்பு அற்ற படங்களுக்குத்தான் இது போன்ற விவாதங்கள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

அல்லது நாம் சிவாஜி படத்தில் வருகின்ற ஒரு காட்சி பற்றி இங்கே விவாதித்தால், அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு மேலும் பலர் போவார்கள்.

ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இங்கே நடக்கின்ற விவாதம் எக் காரணம் கொண்டும் "சிவாஜி" படத்திற்கு சாதகமான ஒன்றாக அமையப் போவதில்லை.

இந்த விவாதத்தினால் உந்தப்பட்டு சிவாஜி படம் பார்த்த ஒருவரையும் யாராலும் காட்ட முடியாது.

ஆனால் விவாதத்தின் காரணமாக சிவாஜி படம் பார்ப்பதை தவிர்த்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தொகையில் மிகவும் குறைவுதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது ஆரம்பம்.

போகப் போக இதன் தாக்கம் தெரியும்.

சுவிசில் மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய அமெரிக்கா கனடா போன்று வெளியிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இங்கு களத்தில் புறக்கணிப்பேன் என எழுதிவிட்டு ஓடோடிச் சென்று திரைப்படம் பார்த்த கள நண்பர்களையும் எனக்குத் தெரியும். திரைப்படத்தை வேலையால் பார்க்க முடியாத உறவுகள் யாராவது உம்மை திருப்திப்படுத்த உம்மிடம் திரைப்படத்தை தான் பார்க்கவில்லையென புலம்பியிருக்கலாம். :lol: அது சரி ஒட்டிய மண்ணை தட்டிவிட்டீரா?? :lol:

Link to comment
Share on other sites

சுயமாக சிந்திக்க விடுங்கள்

முதலில் மக்களை சுயமாக சிந்திக்க விடுங்கள். தாங்கள் நினைத்தது நடக்கா விட்டால் இப்படித் தன் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பதும். ஆட்டுமந்தைக் கூட்டமாக தலையாட்டி நின்றால் ஆகா ஓகோ எனப் புகழ்வதும். இது தான் தமிழனை தலை குனிய வைக்கின்றது.

எனவே மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாக்காமல் மனிதனாக சுயமாக சிந்திக்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

கறுப்பி.. இணைப்புக்கு நன்றி.

இங்கு ரஜினி படாத்தைப் புறக்கணிப்பதை கிண்டல் செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் என்ன நடந்தது / நடக்கிறது என்று தெரியாமல் பினாத்திக்கொண்டிருப்பவர்கள

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன் சிலர் ரஜனியை கனடாவுக்கு அழைத்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இரண்டுநாட்களுக்கு இரு வௌ;வேறு பகுதிகளில் மிகப்பெரிய மண்டபங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். வருவது ரஜனி மண்டபம் நிறையும் எனஎதிர்பார்த்தார்கள். அந்தநேரத்திலும் ரஜனிக்கு எதிர்ப்பிருந்தது.ரஜனியின் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டாமென பிரச்சாரம் பலமாக நடந்ததுபிரச்சாரத்துக்கு 90 வீதம் வெற்ரியும் கிடைத்தது

சுமார் 1500 பேர்வரைதான் முதல்நாள் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தகாரணத்தால் மறுநாள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்கள். ரஜனியும் சத்தமில்லாமல் ஓடிவிட்டார்

ஆனால் திரைப்பட விடயத்தில் எவ்வளவு தூரம் புறக்கணிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

Link to comment
Share on other sites

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

''ரொறோன்ரோவில் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருப்பதாக வானொலி விளம்பரம் கேட்டேன்

வழமையாக தமிழ் படங்கள் 10 டாலர்கள் ஆனால் சிவாஜி படத்துக்கு 20 டாலர்களாம்

நண்பர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டுவந்து புலம்பிக்கொண்டிருக்கிறார் படம் குப்பையிலும் குப்பை 20 டாலர்களை அநியாயமாக்கவிட்டதாக ""

இது நான் சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற பகுதியில் எழுதியது

சில பத்திரிகை விமர்சனங்களையும் பார்த்தேன் சம்மந்தப்பட்டவர்கள் மனம் நோகக்கூடாது என்பது போல் எழுதியதாக தெரிகிறது

எதிர்பார்ப்பால் ஆரம்பத்தில் ஓடலாம் படம் குப்பை என்றால்நின்றுபிடிப்பது கஷ்ட்டம்தான்

கண்டிப்பாக தியேட்டரில் நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன்

படத்தை பார்க்கப்போனதே குற்றம். அதுல வேஸ்ட் என்ற புலம்பல் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னடக்காரனுக்கு இப்படி பால் அபிஷேகமா,?

கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்வதையே வண்மையாக எதிர்க்கிறேன்.

எத்தனை பாலகர்கள் பாலுக்கு வழியில்லாமல் இருக்கிறாங்களே.

விழிப்புணர்ச்சி வேண்டும்.

கன்னடர்களின் காலை நக்குவதும், அதற்குப் பின்னால் பிடித்துக் கொண்டு திரிவதும் தமிழனுக்குப் புதிதில்லையே. புதுசாக நடப்பது போலச் சொல்கின்றீர்கள். திராவிடச் சிங்கமும் முன்பு நல்லவன் போல நடித்துத் தமிழனை பிரிவினைக்குள்ளாக்கி சாதி வாதத்தில் அடிபட வைத்தது. இவரும் நல்லவன் போல நடித்து தமிழனின் பணத்தில் ஏப்பம் விடுறார்.

பார்த்தால் எல்லாமே ஒன்று தான்.

Link to comment
Share on other sites

கர்நாடகாவில் இருந்து வருகின்ற நல்லவைகளை தமிழர்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் இனவாதிகள் அல்ல.

இனவாதம் பேசினால் கர்நாடகாவில் இருந்து வருகின்ற காவிரியையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

வெங்காயத் தமிழனுக்கு கல் மீது பாலபிசேகம் செய்யாதே என்று கற்பித்த திராவிட சிங்கத்தின் முன்னோர்களும் கன்னடத்தில் இருந்துதான் வந்தார்கள்.

கட்டவுட்டுக்கு பாலபேசகம் செய்ய வைப்பவரும் கர்நாடகத்தில் இருந்துதான் வந்திருக்கிறார். விந்தiயான முரண்பாடு

ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்.

கன்னடர் என்பதற்காக யாரும் ரஜனியை எதிர்க்கவில்லை. அப்படி செய்வது நாசிசவாதம். அவரை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் இங்கு இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளில் தெளிவாகவே காட்டப்பட்டுள்ளது.

தயவு செய்து யாரும் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

முறியடிப்போம், காத்திரு!

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..

என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..

எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..

இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!

கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!

மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!

மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்

சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்

எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?

எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...

கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்

கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்

மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!

மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..

காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -

காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -

நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -

நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..

நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...

கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..

குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..

திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -

சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -

திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -

செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!

விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!

அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -

ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..

பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...

பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!

வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!

வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!

ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -

எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -

மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!

முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!

- தொ. சூசைமிக்கேல்

tsmina2000@yahoo.com

Link to comment
Share on other sites

''ஆனால் இது உலகம் முழுவதும் நடக்கின்ற ஒன்றுதான். ஈழத் தமிழர்களில் பிரபாகரனும் கருணாவும் தோன்றவில்லையா அப்படித்தான்""

யாரை யாருடன் எதனை எதனுடன் ஒப்பிடுவது

சினிமாவும் வி-டுதலையும் ஒன்றாம்

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒப்பீடு விளங்கவில்லை என்று தெரிகிறது.

தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் பெரியாரோடு தேசியத் தலைவரையும்

துரோகி ரஜனியோடு துரோகி கருணாவையும் ஒப்பிட்டேன்.

ஆனால் தயவு செய்து இப் பகுதியில் ரஜனிகாந்த், "சிவாஜி" திரைப்படம் போன்ற விவாதங்களை மட்டும் நடத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் பற்றி இங்கு பேசி விவாதத்தை திசை திருப்ப வேண்டாம். அதற்கு என்று வேறு பகுதி இருக்கிறது. இங்கே சொல்லப்பட்டு ஒரு கருத்துக்காகவே நான் இந்த ஒப்பீட்டை செய்ய வேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

டம்மிமாரே, சவுண்டுகள் விடுகிறதுக்கு முன்னுக்கு ஒருக்கால் "ததேஊ" களைக் கேட்டு விட்டு விடுங்கள்.

"ஐபிசி"யின் பக்கமே தலை வைத்துப் படுக்க முடியவில்லை! வரிக்கு வரி "வாஜி.... வாஜி....சிவாஜி" .... "

உதை என்னண்டு எடுக்கப் போறியள்?????

முன்பு "ரிரிஎன்"இலை கொழும்பில் முதலிடுங்கள்!! வீடு வாங்கவில்லையா? வீடு வாங்கவில்லையா??? ....... கேட்டுக்கேட்டு பலர் காசுகளை கொழும்பில் கொட்டினார்கள்!!!!!!

சிறிலங்காவின் சாமானுகளை புறக்கணியுங்கள்!!! ..... "ததேஊ" பக்கம் திரும்பினால், சிறிலங்காவின் சாமான் வாங்கவில்லையோ?? என்ற புராணம்!!!!

இவற்றை என்னவென்று சொல்வது????? ""****"?

**** சொல் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லாம் பணம் செய்யும் வேலை சோழன். இங்குள்ள சிலருக்கு ரஜனி படம் வரும்போது மட்டும் தமிழ்நாட்டுத்தமிழர் மீதும் தமிழ் மீதும் பாசம் பொத்துக் கொண்டு வந்துவிடும். :lol::lol:

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ...

எனக்கு ரஜினியை எதிர்ப்பதால் எந்த லாபமோ நட்டமோ தனிப்பட்டவகையில் இல்லை. நான் இப்போதெல்லாம் கள்ளக் கொப்பியில் கூட எந்தத் திரைப்படத்தையும் பார்ப்பதில்லை.

எது எப்படியென்றாலும், யாழ் கள ரஜினி ரசிகர்கள் வாழ்க... :D:D

நீங்களாகவே தொப்பி உங்களுக்கு அளவாக இருந்து மாட்டினால் நான் என்ன செய்வது?? :lol::lol:

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ரஜினி ஒரு நடிகன். அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஏனைய பல மாநிலங்களிலும் இரசிகர்களுண்டு. ஏன் இன்று யப்பானியர்களே அவரைப் பார்த்து வியக்கவில்லையா?? அதனால் யப்பானியர்கள் முட்டாள்கள் என்று சொல்லப் போகின்றீர்களர்?? இங்கு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த நம் குழைந்தைகள்கூட ரஜினி என்றவுடன் குதூகலிக்கின்றார்களே. அது ஏன்?? அவர்களையும் பைத்தியங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இந்த நிலையை ரஜினி ஏதோ திடீரென எட்டிவிடவில்லை. தனது கடின உழைப்பினால்த்தான் பெற்றுள்ளார். அந்த உழைப்பை இரசிப்பதில் எதுவிதத்திலும் தப்பில்லை. இந்நிலையில் அவரால் எந்த மாநிலத்தவரையும் எதிர்த்துக் கருத்துக்கள் சொல்லிவிட முடியாது. அவரின் படங்கள் பல கோடியில் விலை போவதும் இதனால்த்தான். அவரை நம்பி கோடிக்கணக்கில் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ளவும் முடியாது. இதனைத் தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொண்டுள்ளபோது. நமக்கேன் முதலைக் கண்ணீர். :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த திரைப்படத்தை புறக்கணிப்பு செய்வதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று என்று புலம்பெயர் தமிழ்த்தேசிய சார்பு ஊடகங்கள் குறிப்பாக வானொலி தொலைக்காட்சிகள் நிருபிக்கின்றன.

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்தியாவை உலுக்கும் `சிவாஜி' வெறி

[17 - June - 2007]

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் `சிவாஜி' படம் உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டதையடுத்து தினமும் சுவாரஸ்ஸியமான சம்பவங்களும், விந்தையும், வியப்புமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

ரஜினியின் பிரமாண்டமான கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பியர் அபிஷேகம், ஆடு வெட்டி திருஷ்டி கழித்தல், பால்குட பவனி, அலகு குத்தி காவடி,தூக்குக்காவடி விசேட பூஜைகள், மொட்டையடித்தல் என ரசிகர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறனர்.

டில்லி சென்று டிக்கட் வாங்கும் தமிழக ரசிகர்கள்

இதேவேளை தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் டிக்கட்டுகள் பெறமுடியாமல் இருப்பதால் பல ரசிகர்கள் டில்லிக்கு சென்று சிவாஜி படத்துக்கான டிக்கட்டுகளை வாங்கியுள்ளனர்.

தமிழக திரையரங்குகளில் டிக்கட்டின் விலை 35 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் சிவாஜி பட டிக்கட்டுகள் 600 ரூபாவுக்கு மேல் விற்கப்படுகின்றன. பெங்களூரில் 75 ரூபா டிக்கட் 1000 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இந்த விலையில் கூட டிக்கட்டை பெற முடியவில்லை என ரஜினி ரசிகர்கள் அலைந்து திரிகின்றனர்.

மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா , பெங்களூர் என திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் திரையரங்குகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் கூட்டம் அலை மோதுகின்றது.

அமெரிக்காவிலுள்ள திரையரங்கொன்று சிவாஜி படத்தை 60 கோடி ரூபாவுக்கு வாங்கி திரையிட்டுள்ளது.

இங்கு சிவாஜி படத்துக்கான டிக்கெட் ஒன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

இலங்கையிலும் பல திரையரங்குகளில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் ஒன்று 300 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இலங்கை தலைநகரில் காணப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் கூட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் திரையங்குகளை முற்றுகையிட்டுள்ளனர்.

மலேசியாவில் சிவாஜி படம் திரையிடப்பட்ட திரையரங்கொன்றில் காட்சி ஆரம்பிக்கும் நேரம் தாமதமானதால் அங்கு வைக்கப்பட்டிருந்த படங்கள், கட் அவுட்டுகள் ரசிகர்களினால் அடித்து நொருக்கப்பட்டன.

ஆந்திராவில் 350 திரையரங்குகளில்....

சென்னையில் 18 திரையரங்குகளில் சிவாஜி படம் திரையிடப்பட்ட இதேவேளை ஆந்திராவில் மட்டும் 350 திரையரங்குகளில் சிவாஜி வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் சிவாஜி திரைப்படம் வெளியிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எந்தப் படத்திற்குமில்லாத வகையில் சிவாஜி படத்தை பார்ப்பதற்காக திரையரங்குகளில் சினிமா பிரபலங்களின் கூட்டம் அலைமோதியது. ஹிந்தி நட்சத்திரங்கள் உட்பட தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். இவர்களில் பிரபல கதாநாயகி ஷ்ரீதேவி தனது குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து கூட சில சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.

சிவாஜி படத்தை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல அமைச்சர்கள் பார்த்து வாயாரப் புகழ்ந்து தள்ளினர். ரஜினியை எதிரியாகப் பார்க்கும் ஜெயலலிதா சிவாஜி படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று பாராட்டியமை அரசியல்

வட்டாரங்களில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

இதேவேளை சிவாஜி படம் வெளியான தியேட்டர்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. சிவாஜி படம் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் ரஜினியின் பிரமாண்டமான கட் அவுட்களும், டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பிய ரசிகர்கள், படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்கள். ஆரவாரத்தாலும் திருவிழா கோலம் பூண்டு இருந்தன.

சிவாஜி படம் அதிக பட்சமாக சென்னை நகரில் 18 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. கமலா தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் பிரமாண்டமான பேனருக்கு ரசிகர்கள் குடத்தில் கொண்டு வரப்பட்ட பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதேபோல் ஏவி.எம்.ராஜேஸ்வரி, ஆல்பட், உதயம், சத்யம், அபிராமி, மகாராணி உள்ளிட்ட தியேட்டர்களிலும் ரஜினியின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

ஆல்பட் தியேட்டர் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை தலை `கெட் அப்' பில் வருவது போல் சில ரசிகர்கள் மொட்டை அடித்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

ஆடு வெட்டினார்கள்

சேலத்தில் 8 தியேட்டர்களில் சிவாஜி படம் வெளியானது. ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த 30 அடி உயர ரஜினியின் கட் அவுட்டுக்கு, ரஜினிக்கு 58 வயது ஆவதை குறிக்கும் வகையில் ரசிகர்கள் 58 லீற்றர் பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். ஒரு தியேட்டர் முன்பு ரசிகர்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

ஈரோட்டில் சிவாஜி படப்பெட்டியை ரசிகர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்து தியேட்டர்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள், மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினார்கள்.

அலகு குத்தி வந்தனர்

திருச்சியில் ரஜினி ரசிகர்கள் சிலர் ஷ்ரீரங்கம் காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் மொட்டை போட்டு மேளதாளத்துடன் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களுக்கு ஊர்வலமாக வந்தனர். 2 ரசிகர்கள் அலகு குத்தி வந்தனர். படகுக் காவடியும் எடுத்து வந்தனர். ஒரு தியேட்டரில் பள்ளிக்கூட மாணவ - மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

தஞ்சையிலும் சிவாஜி படம் வெளியான தியேட்டரில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி என்று ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டது. சிவாஜி படம் அமோக வெற்றி பெற வேண்டி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

நெல்லையில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களிலும் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தியும் கற்பூர ஆரத்தி எடுத்தும் கொண்டாடினார்கள். ஒரு தியேட்டரில் உள்ள ரஜினியின் `பாபாகெட்டப்' சிலைக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் ரசிகர்கள் பூஜை நடத்தி சிவாஜி படப் பெட்டியை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். சாரட் வண்டியிலும் கொண்டு சென்றனர். ஊர்வலத்தின் போது ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பியபடி உற்சாகத்துடன் சென்றனர். பனிமய மாதா ஆலயத்திலும் பிரார்த்தனை நடைபெற்றது.

1008 பெண்கள் பால்குடம்

திருப்பூரில், சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி அமர்க்களமாக கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி 1008 பெண்கள் பெருமாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்தனர்.

கோவையில் ரசிகர்கள் ரஜினியின் பேனருக்கு பாலாபிஷேகமும் தீபாராதனையும் செய்தனர்.

விருத்தாசலத்தில் சிவாஜி படம் வெளியான தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர் மன்றத்தினர் லட்டு மற்றும் தண்ணீர் பக்கட்டுகளை வழங்கினார்கள்.

சிவாஜி படம் வெளியானதையொட்டி அன்றையதினம் வாணியம்பாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினி ரசிகர்கள் மோதிரம் வழங்கினார்கள்.

மதுரையிலும் பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு என்று ரஜினி ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள். சிவாஜி படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர். இதேபோல், திண்டுக்கல், வேலூர், அரக்கோணம், தேனி உள்ளிட்ட மற்ற இடங்களில் சிவாஜி படம் வெளியானதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

தினக்குரல்

Link to comment
Share on other sites

எதுக்கும் படத்தை இன்னைக்கு பாத்துட்டு வந்து சொல்லுறன்... :icon_idea:

பார்த்துவிட்டு புறகணிபோம் மாமா

:lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.