Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

சிவாஜி - திரைப்படம்

20070616155727sivaji_film_rajni.jpg

சிவாஜி திரைப்பட சுவரொட்டி

தமிழகத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று வெளியான சிவாஜி திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் மட்டுமே 17 திரையரங்குகளில், நாள் ஒன்றுக்கு நான்கு காட்சிகள் என நாள் ஒன்றுக்கு 68 காட்சிகள். மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் இதே நிலை தான்.

ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப்பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மஞ்சுளா, முன்னணி இயக்குநர் லிங்குசாமி போன்றோர் திரைப்படம் மிகச்சிறப்பாக இருப்பதாகக் கூறினர்.

குறிப்பிடத்தகுந்த எழுத்தாளருமான சமூகவியலாளருமான சாருநிவேதிதா ரஜினியின் சில பிரத்தியேக அம்சங்கள், பாவனைகள் தான் அவரது செல்வாக்கிற்கு காரணங்கள் என்கிறார்.

அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், அவர் இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்கிறார்.

சினிமா வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் ரஜினியினால் எவருக்கும் எப்போதும் நஷ்டமேற்படுவதேயில்லை, எம்ஜிஆருக்கு பிறகு அப்படி ஓரு நட்சத்திர அந்தஸ்தை எட்டியிருப்பவர் அவர்தான் என்கிறார்.

- BBC

ரொம்ப முக்கியம். ரஜனியை வைத்து செவ்வாயில் படம் எடுக்க NASA கால்சீட் கேட்டுருக்கிறதாம். போய் உருப்படும் வழியை பாருங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

நீங்களாகவே தொப்பி உங்களுக்கு அளவாக இருந்து மாட்டினால் நான் என்ன செய்வது?? :lol::)

நீங்கள் என்னைக் குறித்து இக்கருத்தை வெளியிட்டிருந்தால் ... என்று நான் எழுதியதை வாசிக்க முடியவில்லை போலும். நான் எழுதியது என்ன? நீங்கள் சொல்வதென்ன? :blink:

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ரஜினி ஒரு நடிகன். அவருக்கு தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஏனைய பல மாநிலங்களிலும் இரசிகர்களுண்டு. ஏன் இன்று யப்பானியர்களே அவரைப் பார்த்து வியக்கவில்லையா?? அதனால் யப்பானியர்கள் முட்டாள்கள் என்று சொல்லப் போகின்றீர்களர்?? இங்கு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த நம் குழைந்தைகள்கூட ரஜினி என்றவுடன் குதூகலிக்கின்றார்களே. அது ஏன்?? அவர்களையும் பைத்தியங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா??

மற்ற மாநிலத்தவனுக்கோ ஜப்பானியனுக்கோ தமிழன் இருந்தா என்ன செத்தா என்ன? ஆனால் நாங்களும் அப்படி இருக்கலாமோ?? :o

இந்த நிலையை ரஜினி ஏதோ திடீரென எட்டிவிடவில்லை. தனது கடின உழைப்பினால்த்தான் பெற்றுள்ளார். அந்த உழைப்பை இரசிப்பதில் எதுவிதத்திலும் தப்பில்லை.

உழைப்பை மதியுங்கள்.. யார் வேண்டாமென்றது..

இந்நிலையில் அவரால் எந்த மாநிலத்தவரையும் எதிர்த்துக் கருத்துக்கள் சொல்லிவிட முடியாது. அவரின் படங்கள் பல கோடியில் விலை போவதும் இதனால்த்தான். அவரை நம்பி கோடிக்கணக்கில் முதல் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் அவரால் நடந்து கொள்ளவும் முடியாது. இதனைத் தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொண்டுள்ளபோது. நமக்கேன் முதலைக் கண்ணீர். :):huh:

இதென்ன வாதம்.. வியாபாரத்துக்காக எதையும் செய்யலாம் என்கிறீர்கள். :blink:

ஆக, தமிழ்நாட்டு மக்கள் ரஜினியின் சர்வதேசப் புகழை முன்னிட்டு அவரின் தமிழ்விரோதப் போக்கை விட்டுவைத்திருக்கிறார்கள். ஆகா... விளங்கிவிட்டது..!

இது முதலைக் கண்ணீரல்ல. தமிழ்நாட்டில்உள்ளவர்களும் தமிழர் என்பதால் வரும் உணர்வு. உங்கள் கதையைப் பார்த்தால், வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரின் ஈழப்பாசமும் முதலைக் கண்ணீராக இருக்குமோ?! :blink:

முதலில் எனது எதிர்ப்பு ரஜினி என்கிற நடிகனைக் குறித்தல்ல. ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கையே நான் எதிர்க்கிறேன். :lol: விளங்கிக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

ஐயா டங்குவார் (நல்ல பெயர்)

அரங்கன் என்ற முகமூடியை சிலர் தமது விருப்பத்திற்காக இங்கே பாவித்துள்ளார்கள். இன்று தாயகத்திலுள்ள நிலைமையில் அங்கிருக்கும் ஒருவருக்கு ரஜினியின் திரைப்படம் பற்றிச் சிந்திக்க நேரம் வருமா?? அடுத்தவனை முட்டாளாக்கி அதில் சுகமனுபவிக்க நினைக்கின்றார்கள். அதில் உம்போன்றோர் விட்டில்பூச்சிகள் போல் இலகுவில் விழுந்துவிடுகின்றீர்கள். ரஜினி என்கிற தனிமனிதனின் தமிழ் விரோதப்போக்கென்று உம்மால் குறிப்பிடப்படுகின்றவை கட்டுரையில் இடம்பெற்றவை தானென்றால் உம்மை நினைக்க சிரிப்பாகத்தான் வருகின்றன. 1992 இல் வெளியிட்டதாகச் சொல்லப்படும (எந்தவித ஆதாரமுமில்லாது) விடயங்கள் தொடர்பாக சிலருக்கு 2007 இல் தான் ரோசம் பொத்துக் கொண்டு வருகின்றது. அதில் சொல்லப்பட்ட விடயங்கள் உண்மையானவையாக இருந்திருந்தால் தமிழ்நாட்டு தமிழர்கள் சும்மா இருந்திருப்பார்கள் என்று நம்புகின்றீரா?? அல்லது அவர்கள் சூடு சொரணையில்லாதவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?? இலங்கையிலிருக்கும் மலையகத் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்ற உமது வாதத்தை கேட்டுச் சிரித்து எனது வயிறு புண்ணாகிப் போனது தான் மிச்சம். ..ம்.... ம்.... தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை. :lol::huh::):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இப்படத்தைப் பார்க்கினமோ இல்லையோ, ஆனால் இப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். முன்பு நான் புறக்கணித்த திரைப்படம் - மும்பாய் எக்ஸ்பிரஸ். மருத்துவர் தமிழ் குடிதாங்கி, திரு.திருமாவளவன் அவர்கள் தமிழ்ப் பெயர் சூடாத தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தார்கள். இதனால் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ்ப் பெயர்களில் அல்லாத பெயர்கள் உள்ள படங்களின் பெயர்களை தமிழ்ப் பெயருக்கு மாற்றினார்கள். ஆனால் கமலகாசன் நடித்து தயாரித்த மும்பாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவில்லை. இதனால் இப்படத்தினை புறக்கணிக்குமாறு தமிழ் மீது பற்றுள்ள அமைப்புக்கள் அறிவித்தன. சிட்னியில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. நண்பர்கள் எனக்கு இப்படம் பார்க்க கட்டணம் எடுப்பதாகக் கூறி இருந்தாலும், நான் இப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்காது புறக்கணித்தேன். இப்பொழுதும் எனக்குத் தெரிந்தவர்கள் சிவாஜி படம் நல்ல படம் . திரைஅரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். அப்படம் என்ன நல்லபடமாக இருந்தாலும் நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். இப்படம் சிட்னியில் நன்றாக ஒடினாலும் எனக்கு அக்கறை இல்லை. மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் போய்ப் பார்க்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்த திரைபடத்தை பார்க்க மாட்டேன்

Link to comment
Share on other sites

கன்னட ரஜனி என்ற அழுத்தமும் அவரின் கன்னட சார்பான நடவடிக்கைகளும் கட்டுரையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளத

Link to comment
Share on other sites

நானும் இந்த திரைபடத்தை பார்க்க மாட்டேன்

சா நீங்க பார்கவில்லை என்று ரஜனி அழபோறார்

:lol::) :P :angry:

Link to comment
Share on other sites

யார் இப்படத்தைப் பார்க்கினமோ இல்லையோ, ஆனால் இப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். முன்பு நான் புறக்கணித்த திரைப்படம் - மும்பாய் எக்ஸ்பிரஸ். மருத்துவர் தமிழ் குடிதாங்கி, திரு.திருமாவளவன் அவர்கள் தமிழ்ப் பெயர் சூடாத தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தார்கள். இதனால் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ்ப் பெயர்களில் அல்லாத பெயர்கள் உள்ள படங்களின் பெயர்களை தமிழ்ப் பெயருக்கு மாற்றினார்கள். ஆனால் கமலகாசன் நடித்து தயாரித்த மும்பாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவில்லை. இதனால் இப்படத்தினை புறக்கணிக்குமாறு தமிழ் மீது பற்றுள்ள அமைப்புக்கள் அறிவித்தன. சிட்னியில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. நண்பர்கள் எனக்கு இப்படம் பார்க்க கட்டணம் எடுப்பதாகக் கூறி இருந்தாலும், நான் இப்படத்தை திரை அரங்கில் சென்று பார்க்காது புறக்கணித்தேன். இப்பொழுதும் எனக்குத் தெரிந்தவர்கள் சிவாஜி படம் நல்ல படம் . திரைஅரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம் என்று சொன்னார்கள். அப்படம் என்ன நல்லபடமாக இருந்தாலும் நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன். இப்படம் சிட்னியில் நன்றாக ஒடினாலும் எனக்கு அக்கறை இல்லை. மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் போய்ப் பார்க்க மாட்டேன்.

கந்தப்பு

நீங்கள் திரைப்படத்தை புறக்கணித்தால் ரஜனி இனிமேல் தான் நடிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். :lol::)

Link to comment
Share on other sites

வெகுவிரைவில் இணையத்தில் தரவிறக்கம் செய்து www.putfile.com , http://www.dailymotion.com, http://www.veoh.com க்கு தரவேற்றம் செய்யுங்கள்!

http://www.tamiltorrents.net/forums/showthread.php?t=26109

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பது, புறக்கணிக்காமல் விடுவது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் நண்பர் ஒருவர் சொன்னது போன்று, எதை எடுத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு சீண்டி முடிச்சு அதை அசிங்கப்படுத்தாதீர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ரஜனியை நம்பியா போராடிக் கொண்டிருக்கின்றது?

இப்படியான விடயங்களுக்கு விடுதலைப் போரடாட்டத்தை இழுத்து அசிங்கம் செய்பவர்கள் கருத்துக்களை முதலில் புறக்கணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

நாங்கள் புறக்கணித்தால் ரஜனி அந்த முடிவுக்குத்தான் வர வேண்டி வரும்!

அட...அட... நிறைய பகலில் நித்திரை செய்கின்றீர்கள் போலுள்ளது. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...அட... நிறைய பகலில் நித்திரை செய்கின்றீர்கள் போலுள்ளது. :rolleyes::rolleyes:

ஓ!

அந்தப் பகல் கனவினைப் பார்த்தா பக்கம் பக்கமாக எதிர் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

ஓ!

அந்தப் பகல் கனவினைப் பார்த்தா பக்கம் பக்கமாக எதிர் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

சிலரின் சுயவிளம்பரங்களுக்காக இங்கு இன்னும் சிலர் விட்டில்பூச்சிகளாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தெளிவு பெற வேண்டாமா?? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

அவர் அதை மட்டுமே செய்யும் போது அது சரி ஆனால் அரசியல் கருத்துக்களை அவர் கூறுவதுஏன்? அவரின் படங்களை பார்த்துவிட்டு தமிழர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லையே அவர்பின் அணிதிரள ஆளாய் பரக்கிறார்களே அதை தடுக்க தடுக்க வேறு என்ன தான் வழி! மறுப்பு கருத்துக்களை வெளியிடும் முன் மாற்று கருத்துக்களை முன் வைக்கலாமே! இவர்களால் இந்த ரஜினி, செயலலிதா என்று தமிழக தமிழர்கள் சிக்கியிருக்கும் வரை உங்களுக்கு தார்மீக பங்களிப்பை கூட செய்யவியலாது. இது போன்ற சிறு சிறு சமாதனங்கள்தான் பெரிய பின் விளைவுகளை ஏற்ப்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனையில் அனைவரும் ஒன்றினைந்த போதும் அவர் மட்டும் தனி ஆவர்தனம் வாசித்து ஒரு கோடி கொடுப்பதாக ஒப்பாரி வைத்துவிட்டு தமிழர்களின் உணர்வில் சிறு சலனத்தை ஏற்படுத்தி தமிழர்களின் ஒற்றுமைக்கும் உலைவத்து தன் கன்னட பற்றை நிறுபித்து விட்டார்! அவரைஎப்படி சமாளிப்பது என்று சங்கடத்தில் நாங்கள் இருக்கும் போது நீங்கள் வேறு அவரை தலைமேல் வைக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

அவர் அதை மட்டுமே செய்யும் போது அது சரி ஆனால் அரசியல் கருத்துக்களை அவர் கூறுவதுஏன்? அவரின் படங்களை பார்த்துவிட்டு தமிழர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லையே அவர்பின் அணிதிரள ஆளாய் பரக்கிறார்களே அதை தடுக்க தடுக்க வேறு என்ன தான் வழி! மறுப்பு கருத்துக்களை வெளியிடும் முன் மாற்று கருத்துக்களை முன் வைக்கலாமே! இவர்களால் இந்த ரஜினி, செயலலிதா என்று தமிழக தமிழர்கள் சிக்கியிருக்கும் வரை உங்களுக்கு தார்மீக பங்களிப்பை கூட செய்யவியலாது. இது போன்ற சிறு சிறு சமாதனங்கள்தான் பெரிய பின் விளைவுகளை ஏற்ப்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் காவிரி பிரச்சனையில் அனைவரும் ஒன்றினைந்த போதும் அவர் மட்டும் தனி ஆவர்தனம் வாசித்து ஒரு கோடி கொடுப்பதாக ஒப்பாரி வைத்துவிட்டு தமிழர்களின் உணர்வில் சிறு சலனத்தை ஏற்படுத்தி தமிழர்களின் ஒற்றுமைக்கும் உலைவத்து தன் கன்னட பற்றை நிறுபித்து விட்டார்! அவரைஎப்படி சமாளிப்பது என்று சங்கடத்தில் நாங்கள் இருக்கும் போது நீங்கள் வேறு அவரை தலைமேல் வைக்கிறீர்கள்

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவராஜா

உங்களின் வருத்தம் நியாயமானது தான். சிவாஜி புறக்கணிப்பு என்பது ஒவ்வொரு மக்களின் அடிநாதத்தில் இருந்தும் வருகின்ற குரலாகவே நம்புகின்றேன்.

ஆனால் மறுபக்கம் இங்கே சிவாஜியை எதிர்ப்பவர்கள் குறித்த அமைப்புக் குறித்து தவறான கண்ணோட்டத்தைச் சமூகத்திற்கு வழங்கிடக் கூடாது என்பதே சொல்ல விரும்புவது.

எந்தக் கன்னடனும் தமிழின் தோளில் இருந்து சவாரி செய்வதை நான் என்றைக்குமே ஆதரிக்கவே மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

இந்தக் கருத்தும் ஏற்கக் கூடியதல்ல. சிவாராஜா இங்கு கதைப்பதற்கான உரிமையைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உண்டு. இது ஒரு பல்நாட்டு ஊடகம். தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் கூட ஒரு கன்னடனை ஒதுக்க வேண்டும் என்று உரையாடுவதில் எவ்வித தப்புமே இல்லை.

தமிழ்நாட்டில் மக்களுக்கிடையே கதைப்பதற்கு இங்கே தெளிவான கருத்துக்களைப் பெறுவதற்கான விவாதத்தைச் செய்வதில் என்ன தவறுண்டு. ஒருவர் எங்கு போய்க் கதைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு

Link to comment
Share on other sites

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

சிவராஜா ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் போராடுபவர்களில் ஒருவர். அவருக்கு உங்களது பதில் கருத்து வேதனையளிக்கிறது.

Link to comment
Share on other sites

சிவராஜா ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் போராடுபவர்களில் ஒருவர். அவருக்கு உங்களது பதில் கருத்து வேதனையளிக்கிறது.

நான்எழுதிய கருத்தை நீங்கள் முற்றாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். எமது போராட்டத்திற்கு அவர் குரல் கொடுப்பதையும் ரஜினியை எதிர்ப்பதையும் ஒன்றாகப் போட்டுக் குளப்பாதீர்கள். ரஜினி உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றாரென்றால் அதனை தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் மாற்றியமைக்க வேண்டும்: இங்கு நாங்கள் ரஜினியின் திரைப்படத்தை புறக்கணிப்பதால் அந்த மாற்றம் நிகழ்ந்து விடுமா?? அப்புறக்கணிப்பு தோல்வியைத் தழுவும் போது யாருக்கு அவமானம் ??

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

QUOTE(Vasampu @ Jun 18 2007, 06:22 PM)

இங்கு எவரும் ரஜினியை தலைமேல் வைக்கவில்லை. ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்குத் தவறு செய்கின்றார் என்று உங்களுக்குத் தோன்றினால்; தமிழ்நாட்டு மக்களை விழிப்படையச் செய்யுங்கள். அதற்காக அங்கு பாடுபடுங்கள். புலம்பெயர் தமிழரிடத்தில் பாடுபட்டு எவ்வித பிரையோசனமும் இல்லை. நோய் எவருக்குள்ளதோ அவருக்குத்தான் வைத்தியம் செய்ய வேண்டும். அடுத்தவருக்கு வைத்தியம் செய்வதால் என்ன பலன்?? :rolleyes::rolleyes:

இந்தக் கருத்தும் ஏற்கக் கூடியதல்ல. சிவாராஜா இங்கு கதைப்பதற்கான உரிமையைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உண்டு. இது ஒரு பல்நாட்டு ஊடகம். தமிழ்நாட்டவர்கள் மட்டுமல்ல, தமிழர்கள் கூட ஒரு கன்னடனை ஒதுக்க வேண்டும் என்று உரையாடுவதில் எவ்வித தப்புமே இல்லை.

தமிழ்நாட்டில் மக்களுக்கிடையே கதைப்பதற்கு இங்கே தெளிவான கருத்துக்களைப் பெறுவதற்கான விவாதத்தைச் செய்வதில் என்ன தவறுண்டு. ஒருவர் எங்கு போய்க் கதைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு

தூயவன்

நீங்களும் எனது கருத்தை தவறாகவே புரிந்துள்ளீர்கள். சிவராஜாவை இங்கு கருத்து வைக்க வேண்டாமென நான் எழுதவில்லை புலம்பெயர் தமிழரிடம் ரஜினி படத்தை புறக்கணிக்கச் சொல்வதில் எவ்வித பிரையோசனமுமில்லை என்பதையே எழுதினேன். லிசானுக்கு எழுதிய பதிலை பாருங்கள். நீங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

...

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

புரிய வைத்ததற்கு நன்றிகள்.

ஆனால் இன்னும் ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. நீங்கள் சிவாஜி-ரஜனியைப் புறக்கணிக்கிறீர்களா இல்லையா ?

ஏனென்றால் இத் திரியில் உங்களது ஏனைய கருத்துக்களின் பொருள் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

Link to comment
Share on other sites

புரிய வைத்ததற்கு நன்றிகள்.

ஆனால் இன்னும் ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. நீங்கள் சிவாஜி-ரஜனியைப் புறக்கணிக்கிறீர்களா இல்லையா ?

ஏனென்றால் இத் திரியில் உங்களது ஏனைய கருத்துக்களின் பொருள் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

இங்கு சிவாஜி திரைப்படத்தை புறக்கணிப்பது தவறு என்று சுட்டிக்காட்டியே எனது கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதனை வைத்தே நான் என்ன சொல்கின்றேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன சொல்லியும் உங்களால் புரிந்து கொள்ள முடியயாது.

அதுமட்டுமல்ல இன்னும் நான் சிவாஜி திரைப்படத்தைப் பார்கவில்லை. காரணம் புறக்கணிப்பல்ல நேரம் கிடைக்கவில்லை. இப்போதாவது புரிந்ததா??

Link to comment
Share on other sites

ஐயோ.

ரஜனியின் ரசிகர்கள் இங்கு இருப்பது தெரியாமல் பேசிவிட்டேன். மன்னிக்கவும்.

:D

ஒரு திரைப்படத்தை பார்பதற்கு அப்படநாயகனின் இரசிகராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. :rolleyes: அதுசரி இவையெல்லாம் எங்கே உங்களுக்குப் புரியப் போகின்றது. :rolleyes::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.