Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை" என்று கூறி நான்தான் உங்களை குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

மேற்குறித்த கூற்று 100% உண்மை. கொஞ்சம் சுவை சேர்ப்பதற்காக சில சம்பவங்களை மாற்றி அமைத்தேன் அவ்வளவே!

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

<<

நம்மை எல்லாம் எப்படி நொந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கிலப்படத்தைப்பார்ப்போமா

Link to comment
Share on other sites

யோவ் இன்னைக்கு நான் டிவிடி பாத்திட்டன்பா..Supero Super..

உண்மையோ சுண்டு உங்களிட்ட இருக்கோ..................... ;)

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்........... சபாஷ் ஜமுனா, மிகத் துணிச்சலாக உண்மையை உறைக்கும் படி உரத்துச்சொன்னதுக்கு ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்!இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம்!. இப்போதும் அல்ல எப்போதுமே தென்னிந்திய நடிகர்களுக்கு அரசியல் சாயம் பூசுவதை நான் விரும்புவதில்லை!. உங்கள் கருத்து! வெகு சிறப்பு! :)

நன்றி அக்கா எழுத்து பிழையை கவனத்தில் கொள்கிறேன்!!!!!!!!!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

சந்தர்ப்ப செவிடர்களாக இருந்தால் சாதிக்கலாம்: ரஜினி பேச்சு

சென்னை, ஜூன் 26: வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் நாம் செவிடர்களாக இருந்தால்தான் சாதிக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை சாந்தி திரையரங்கில் சந்திரமுகி தொடர்ந்து 804 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இது ஒரு வித்தியாசமான விழா. இதுபோன்ற விழா இனி என் வாழ்வில் நடைபெறாது. ஏனென்றால் "ஹரிதாஸ்' படம் புரிந்த சாதனையை கிட்டத்தட்ட 52 வருடங்களுக்குப் பிறகே "சந்திரமுகி' அடைந்துள்ளது. இதுபோன்ற விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்பது பெருமைக்குரிய விஷயம்.

"ஹரிதாஸ்' தியாகாரஜ பாகவதர் நடித்த படம் என்றே பலருக்குத் தெரியும். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார்? இயக்குநர் யார்? என்பது பற்றியெல்லாம் பலருக்குத் தெரியாது. ஆனால் "சந்திரமுகி'யைப் பொருத்தவரை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு, பி.வாசுவின் இயக்கம், அதில் ரஜினி நடித்தார் என்றே பேசப்படும்.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் பி.வாசுதான். நான் வெறும் நடிகன் மட்டுமே. இயக்குநர்கள்தான் படைப்பாளர்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் இதில் காமெடி, சென்டிமெண்ட், காதல், குரோதம், சிருங்காரம் என பல அம்சங்கள் இருந்ததுதான்.

"சந்திரமுகி' ரிலீஸýக்கு முன்பு படத்தைப் பற்றி பல செய்திகள் வந்தன. ஏற்கெனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் வெளிவந்ததைப் பார்த்துவிட்டு "படம் நாலு வாரம்தான் போகும், படத்தில் என்ன இருக்கிறது?' என பலர் பல மாதிரியாகப் பேசினார்கள்.

இந்தச் சமயத்தில் நான் ஒரு கதையை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு பெரிய மலை இருந்தது. அதில் மூன்று தவளைகள் ஏற முயற்சித்தன. அப்போது கீழே இருந்த மற்ற தவளைகள் எல்லாம் அங்கே பாம்பு இருக்கிறது; ஆபத்தான உயிரினங்கள் இருக்கின்றன. கூர்மையான கற்கள் இருக்கின்றன; நீங்கள் ஏறுவது சிரமம் எனக் கூறின.

ஆனாலும் தவளைகள் மலை மீது ஏறின. மேலே போய்க்கொண்டிருந்தபோது ஒரு 100 அடியில் ஒரு தவளை கீழே விழுந்து இறந்துவிட்டது; இன்னும் சிறிது உயரம் போன பிறகு மற்றொரு தவளை விழுந்துவிட்டது. ஆனால் இன்னொரு தவளையோ மலை உச்சிக்குச் சென்றுவிட்டது. அந்தத் தவளை மட்டும் எப்படி உயரே சென்றது என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் தெரிய வந்தது அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்று! நானும் அதுபோலத்தான். தேவையில்லாத விஷயங்களைக் கேட்கும்போது செவிடன் ஆகிவிடுவேன்.

முதல்வர் கருணாநிதி இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணமும் அதுதான். அவரைப் பற்றி எத்தனை பேர் எத்தனை விதமாகப் பேசியிருப்பார்கள்? அவற்றையெல்லாம் கேட்டு அதற்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தால் அவ்வளவுதான்.

நம்மைப் பற்றிப் பிறர் பேசும்போது எதை எடுக்க வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவை பற்றி கவலைப்படக்கூடாது. வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் செவிடர்களாக இருந்தால்தான் சாதிக்க முடியும்; இல்லாவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும்.

இவற்றையெல்லாம் நானாகச் சொல்லவில்லை; சிவாஜிகணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார், கலைஞர் என பல பெரியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான் என்றார் ரஜினிகாந்த்.

நடிகர் கமல்ஹாசன்: ரஜினிகாந்த் -என்னுடைய உடன்பிறவா சகோதரர், நண்பர், போட்டியாளர், ரசிகர், தக்க சமயங்களில் அறிவுறுத்துபவர். எங்களுடைய நட்பு கே.பாலசந்தர் என்ற விருட்சத்தின் நிழலில் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் நானும் அவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தோம். அதனால்தான் அவருக்கென ஒரு தயாரிப்பு வட்டமும், எனக்கென ஒரு தயாரிப்பு வட்டமும் உருவானது. ரஜினி அவர் வழியிலும், நான் என் வழியிலும் செல்ல இது உதவியது. திரையுலகுக்கும் இது நன்மை பயத்தது.

இந்த விழாவில் பங்கேற்பது பெருமை என்று சொல்வதை விட இது என் கடமை என்றுதான் சொல்வேன். இதுபோன்ற விழா இனி அமையாது என இங்கு கூறப்பட்டது. ஆனால் என் நண்பர் ரஜினியைப் பொருத்தவரை இதுபோன்ற சாதனை விழாக்கள் இன்னும் தொடரும்.

எங்களுடைய நட்புக்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டியது சிவாஜிகணேசன்-கருணாநிதி ஆகியோரது நட்புதான். என்னை குழந்தையாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்; இளைஞனாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். பெரிய மனிதனாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் இன்றும் என்னைக் குழந்தையாகவே பார்ப்பவர்களில் ஒருவர்தான் என் நண்பர் ரஜினிகாந்த்' என்றார் கமல்ஹாசன்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...ZLm&Topic=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னட வெறியன் ரஜனிகாந்தின் சிவாஜி படத்தை இணையத்தளங்கள் ஊடாகவும், திருட்டு வீசிடிக்கள் மூலமாகவும் கண்டுகளியுங்கள்!

ரஜினி மராத்தி... நாட் கன்னடா...

Link to comment
Share on other sites

ஜாhh டி.வி.டி இருக்கு....

சுண்டு கீழே டயலக் மாற்றியாச்சோ குடி இல்லாத நேரம் யாரப்பா வந்தது சொல்லவே இல்லை???

B)

Link to comment
Share on other sites

என்ன நக்கலா எழுத்து பிழையா போச்சு அது சரி யார் வந்தது என்று சொல்லவே இல்லை..........சிவாஜி புறகணிப்பு எப்படி

:):rolleyes:

Link to comment
Share on other sites

அப்படி போடுங்கோ அரிவாள......................நாம யாரும் சொல்லி எப்ப தானே கேட்டு இருகிறோம்!!!!!!

:):rolleyes:

Link to comment
Share on other sites

ஆமா புறகணிச்சா போல சிட்னியில ஒடமா தானே போக போது... பேசமா 10 ஒட 11 ஆ இருந்து பாத்திட்டு வாறதுக்கு...

Link to comment
Share on other sites

பின்னே நாம புறகணிச்சா படம் ஓடிடுமா சிட்னியில ஆனா நாம தானெ புறகணிக்கவில்லையே அது சரி 10 ஓட 11 என்று விளங்கவில்லை அது தான் குடை மட்டரோ

:P ;)

Link to comment
Share on other sites

உண்மையில் சிவாஜிக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் ஓசி விளம்பரம் செய்தவர்கள் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக கட்டுரை எழுதுபவர்களும், எங்களை போல் களம், வலைப்பூக்களில் எழுதுபவர்களுமே.

அதைவிட சிவாஜி படத்தை பெருமையாக ஓட வைத்த பெருமை யாழ்கள உறுப்பினர்களையே சாரும் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் சைக்கில் கப்பில் ராங்க் ஓட்டும் வசம்புதான் அந்த குழுவுக்கு லீடர் எண்டால் அதைவிட மிகையாகாது. :D :P

மக்கள் சந்தோசம் தான் அரசன் சந்தோசம் எண்டு பழமொழிகள் இருக்கு, சிவாஜி படம் ஓடும் தீயேட்டர்களிற்க்குபோய் பாருங்க சிறுசுகள் தொடக்கம் பெரிசுகள் வரை சிரிச்சு மகிழ்கிறார்கள், (இளைஞர் கூட்டம் ஸ்ரேயாவை பார்த்து ஜொள்ளு விடுது அது வேற விசயம்). :angry:

Link to comment
Share on other sites

நம்மை எல்லாம் எப்படி நொந்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கிலப்படத்தை பார்ப்போமாம்! தென்னிந்திய அதுவும் ரஜினி படத்தைப் புறக்கணிப்போமாம்!

வேண்டாம் நொந்து கொள்ள வேண்டாம். அதான் ஆகப்போவது எதுவுமில்லை!

ஆனால் கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க!

பிரபு, அஜீத், கார்த்திக், விஜய், சிரஞ்சிவி, சிவக்குமார் என்று ஏராளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஜனியோடு மட்டும் என்ன கோபம்! ஓரு முகாமைத்துவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவை யாரிடம் கொடுப்பார்கள்? அலுவலக உதவியாளர், கணக்காளர், வரவேற்பாளர் என்று பலர் இருக்க ஏன் முகாமையாளரிடம் கொடுக்கின்றனர்? அவர்தான் முதன்மையானவர். அந்தவகையில் எங்களிடம் தன் பொருளை விற்க வருபவரிடம் எங்கள் மனக்குறையை சொல்கிறோம்.

சரி சொல்லி என்ன ஆகப்போகிறது? இவரா எங்கள் உணர்வுகளை புரிந்து எங்களுக்காக தென்னிந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த சினிமா என்ற ஊடகத்தினூடாக குரல் கொடுக்கப் போகிறார்? எதற்காக ஜனநாயக போர்வைக்குள் இருக்கும் சர்வாதிகார சர்வதேச சமுகத்திடம் தமிழ் மக்கள் "வெல்க தமிழ்" என்ற நிகழ்வின் மூலம் வேண்டுகோள் விட்டனரோ அதே நம்பிக்கையில்தான் இந்தச் செயற்பாடும் உள்ளது. அது வெற்றி பெற்றதா, ஈழத்தமிழர்களின் ஆதங்கங்கள் உரிய இடத்தை சென்று சேர்ந்ததா என்பதை காலம் தீர்மாணிக்கும். இப்போதே அது வெற்றியா தோல்வியா என்று கணிப்பிட முடியாது.

காதல், கட்டைப்பஞ்சாயத்து, பழிவாங்கல், கடவுள்கதை என்ற வட்டத்தையே சுற்றிச் சுற்றி வரும் வெற்றிப்படங்களின் பிதாமகன்களே,

1) உங்கள் அண்டை வீட்டில் நடக்கும் கொடூரத்தையும், அதை எதிர்த்து உங்கள் இரத்த உறவுகள் நடத்தும் விடுதலை வேள்விகளையும் நீங்கள் கொண்டாடும் ஜனநாயக வரம்புக்குள் நின்று எடுத்துக் கூறுங்கள்.

2) எவ்வாறு தணிக்கை தடைகளை எல்லாம் தாண்டி ரசிகர்கள் கேட்கிறார்கள் என ஆபாசத்தை புகுத்துகின்றீர்களோ, அப்படியே இந்த ரசிகர்களுக்காகவும் வைரமுத்துவின் வைரவரிகள் கொண்டு வரிந்து விடுங்கள்! எங்கள் சாதனைகளையும், சாகசங்களையும் சங்கரைக் கொண்டு பிரமிக்க வையுங்கள். எங்கள் துயரங்களை ரகுமானின் ராகத்தில் இழைய விடுங்கள்.

3) நீங்கள் எத்தனை பேர் என கேட்காதீர்கள்? இன்று நாங்கள் பழக்கப்பட்டுப் போன பாழாய் போன சினிமா மோகத்தை விட்டு வெளிவர முடியாமல் விழி பிதுங்குகிறோம். ஆனால் நாங்கள் மானமுள்ளவர் பரம்பரை. உரிமைக்காக உயிரை துறக்கத்துணிந்தவர் பரம்பரை. இங்கொன்றும் அங்கொன்றுமாய் கேட்கும் குரல்கள் இனி வரும் காலங்களில் வானதிர உலகமெங்கும் கேட்கும்!

ஈழத்தமிழர் துன்பம் நித்திய துன்பம் தானே என்றிராது, எங்கள் துயர வாழ்வின் நீட்சியை குறைக்க உதவுங்கள்.

அன்றைய ஆங்கிலேயன் தமிழரிடம் ஆட்சியைக்கொடுக்காத காரணமே தமிழன் தங்களை மிஞ்சி விடுவான் என்றுதான் 'மோட்டுச் சிங்களவனிடம் கொடுத்து இன்று அவன் இரத்த வெறி ஆடுகின்றான்"!!

இந்தக் கூற்று எங்கள் இனத்தின் மீது நாங்கள கொண்ட பெருமையை காட்டுகிறது. ஆங்கிலேயர் சிங்களவரிடம் கொடுத்தார்களா, தமிழர்களிடம் கொடுத்தார்களா ஏன் கொடுத்தார்கள் என்று பல வியாக்கியானங்கள் உண்டு!

வல்லரசாக வல்லூறாக அனைத்து நாடுகளின் நிம்மதியைக்குலைக்கும் அமெரிக்க, லண்டன் ஆங்கிலப்படங்களை நாம் பார்த்தே ஆகவேண்டும்!!...! நாம் எல்லாம் எப்ப அண்ணா திருந்தப்போறோம்?

இந்தக் கூற்று எங்கள் சுயநலவாதத்தின் எடுத்துக்காட்டு!

அறிவுக்கும், தொழில் நுற்பத்திற்கும், ஆட்சிமுறைக்கும், அகதி வாழ்க்கைக்கும் ஆங்கிலமும் இங்கிலாந்தும் தேவைப்படுகின்றது. இந்த கணணிக் கல்விக்குக்கூட ஆங்கிலம் தேவைப்படுகின்றது. யுனிகோட் என்பதற்கு கூட தமிழ் மொழி பெயர்பைதான் நீங்கள் தரமுடியும், தமிழ் மொழி வழக்கை அல்ல! இதற்காகவெல்லாம் ஆங்கில மொழி உயர்வானது தலையில் வைத்துக் கொண்டாடுங்கள் என்று கூறவரவில்லை. தூற்றுவதற்கு என்ன உரிமை இருக்கிறது எமக்கு?

கருநாநிதிக்காக தமிழை நாங்கள் புறக்கணிக்க முடியுமா? இந்தியாவுக்காக இந்தியை நாங்கள் வெறுக்க வேண்டுமா?

ஆங்கிலம் மட்டுமல்ல பிரஞ்சு, ஜேர்மன் ஏன் சிங்களத்தில் கூட நல்ல தரமான படங்கள் வருகின்றன. நல்லவை எங்கிருந்து வந்தாலும் அதனை பாரட்ட, விரும்பி ஏற்க வேண்டும். உலக சினிமா தொழிற் துறையில் தென்னிந்திய சினிமா எத்துனை சிறியது? தென்னிந்திய சினிமாக்களில் எத்தனை தரமான சமுகநல நோக்கம் கொண்ட அறிவியல் சார்ந்த,யதார்த்தமான, சர்வதேச சினிமாக்களை பிரதி பண்ணாத சினிமாக்கள் வருகின்றன? தென்னிந்திய சினிமா வட்டத்தை தாண்டி நாங்கள் போகக் கூடாதா? பின்னர் உலகத்தரமான தமிழ் சினிமாக்களை படைக்கக் கூடாதா?

ஆகவே களஉறவுகளே நீங்கள் பார்த்து விட்டீர்களா பறவாயில்லை, குற்றஉணர்ச்சி வேண்டாம்! அதனை மூடி மறைக்கும் முயற்சியும் வேண்டாம். நாம் சாதித்தது என்ன என்று சிந்திப்போம். ஜனாதிபதித் தேர்தலை வடக்கு கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்ததால் அதிர்ந்து போன சர்வதேசத்தை சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். அடுத்த முறை ஒற்றுமையாக மனவடக்கத்துடனும் தெளிந்த சிந்தனையுடனும் நின்று புரியவைப்போம்.

வெல்லும் தமிழ்!

அன்புடன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டாம் நொந்து கொள்ள வேண்டாம். அதான் ஆகப்போவது எதுவுமில்லை!

ஆனால் கொஞ்சம் சிந்திக்கலாம் வாங்க!

பிரபு, அஜீத், கார்த்திக், விஜய், சிரஞ்சிவி, சிவக்குமார் என்று ஏராளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ரஜனியோடு மட்டும் என்ன கோபம்! ஓரு முகாமைத்துவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மனுவை யாரிடம் கொடுப்பார்கள்? அலுவலக உதவியாளர், கணக்காளர், வரவேற்பாளர் என்று பலர் இருக்க ஏன் முகாமையாளரிடம் கொடுக்கின்றனர்? அவர்தான் முதன்மையானவர். அந்தவகையில் எங்களிடம் தன் பொருளை விற்க வருபவரிடம் எங்கள் மனக்குறையை சொல்கிறோம்.

சரி சொல்லி என்ன ஆகப்போகிறது? இவரா எங்கள் உணர்வுகளை புரிந்து எங்களுக்காக தென்னிந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த சினிமா என்ற ஊடகத்தினூடாக குரல் கொடுக்கப் போகிறார்?

அதுதான் என் கேள்வியும் அப்படியே அந்தக்கேள்வியை நீங்கள் உங்களை நோக்கிக் கேட்டுக்கொள்ளுங்கள். ஈழத்தில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத ஒருவரை முதன்மையாளர் என்கின்ற நிலையில் தூக்கி வைக்காதீர்கள். ரஜினிக்கு ரசிகனாக இருப்பவன் அஜீத்துக்கும் ரசிகனாக இருக்கலாம். இதனால் ஆதரவை ரஜினி தர வேண்டும் என்பதில்லை எந்த நடிகரும் வெளிப்படையாகச்சொன்னால்...அப்

Link to comment
Share on other sites

நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.

இது போன்ற தரமான வேறு படங்கள் யாராவது பார்த்திருந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?

Link to comment
Share on other sites

அதைவிட சிவாஜி படத்தை பெருமையாக ஓட வைத்த பெருமை யாழ்கள உறுப்பினர்களையே சாரும் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும் சைக்கில் கப்பில் ராங்க் ஓட்டும் வசம்புதான் அந்த குழுவுக்கு லீடர் எண்டால் அதைவிட மிகையாகாது. :) :P
ஐயையோ டண்ணு என்னை அதிகமாய் புகழாதீங்க. எனக்குக் கூச்சமாயிருக்குது. சைக்கில் கப்பில் ராக்கட்டே ஓட்டும் உங்கள் முன்னால் நான் எம்மாத்திரமுங்க?? :D:D
நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன். திரையில் அல்ல திருட்டு விசிடியில். அருமையான படம்! அமைதியான கதை அமைப்பு. மனதை கொள்ளை கொள்ளும் பின்னனி இசை. படம் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை இருக்கையை விட்டு எழும்பவிடாமல் வைத்திருக்கும்.
:D:lol:என்ன ஆங்கிலப் படத்திற்கு திருட்டு வீசிடியா?? அட்ரா ........அட்ரா.......... :):)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.