-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
சீக்கியரில்... கை வைத்து விட்டார்கள். நிச்சயம்... இதற்கு, ஏதாவது வகையில் எதிர் வினை கிடைக்கும். -
பத்து வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் கச்டப்பட்டுவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நடுநிலை வாதிகள் பெண்ணியவாதிகள் தற்போது நடக்கும் ராணுவ அடக்குமுறைகளை பற்றி மூச்சு விடமாட்டினம் காரணம் அவர்களின் உண்மையான எதிர்ப்பு தமிழ் தேசியமும் புலிகளும் தான் .
-
By nunavilan · பதியப்பட்டது
59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-720x450.jpg இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! | Athavan News -
By nunavilan · பதியப்பட்டது
மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு தலா இரண்டுடோஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னிலை பணியாளர்கள் பொலிஸார் முப்படையினருக்கு முதற்கட்டமாக மருந்துவழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகசுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk -
By nunavilan · பதியப்பட்டது
பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0f5e13b069.jpg வா.கிருஸ்ணா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரெட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பங்குகொள்ளும் உயர்மட்டக் கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும், விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்து, கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக மாவட்டச் செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மாவட்டச் செயலகத்தில் கவச வாகனமும் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பியனுப்பப்பட்டனர். மேற்படிக் கூட்டம், என்ன விடயம் தொடர்பில் நடைபெற்றது, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_d5f30e166a.jpghttp://static2.tamilmirror.lk/assets/uploads/image_098a9562eb.jpg Tamilmirror Online || பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர்
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.