Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க. வேணுமாண்டா இங்க கருத்து எழுதும் ஒரு 25 பேர் சிவாஜி பார்க்க போகாமல் புறக்கணித்திருக்கலாம். மற்றும்படி எல்லாம் தலைகீழ்,

எங்கட ஜ.பி.சி வானொலி கூட படுகச்சிதமாக விளம்பரம் நடக்குது.

எப்படி எண்டா லண்டனில் ஒரே நாளில் 30,000 பேர் சென்று பார்த்த திரைப்படம் நீங்களும் தவற விடாதீர்கள் என்று வெளுத்து. வாங்குகினம்

ஒரு ஊர்வலம் எண்டா 30 பேரை காணக்கிடைக்காத லண்டனில் 30000 பேர் பார்த்தது சாதனை தான்

தமிழரே வாழ்க.

இருட்டுக்க இருந்து எழுதியும் ஒரு சொல்லுகூட பிழை விடாமல் எழுதி இருக்கிறாங்கள் :lol::D:D

இது ஆரம்பம் மட்டுமே எடுத்தோம் கவிழ்தோம் என்று செய்யமுடியாது. மாற்று வழியை கொடுத்துதான் வழிக்கு கொண்டு வரலாம். :rolleyes::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க.............

அருமையான கருத்து...... அதைத்தான் நானும் சொல்கிறேன் தோழா........ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

நீங்கள் திரைப்படத்தை புறக்கணித்தால் ரஜனி இனிமேல் தான் நடிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். :rolleyes::rolleyes:

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

Link to comment
Share on other sites

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

உம்மை போல் தான் நானும் எனது மாமன் மச்சான் எல்லாம் போய் பாத்துட்டு வந்திட்டாங்கள். நான் போகவில்லை. அது போல் நானும் தேவையற்ற சிரிலங்கன் பொருட்களை வாங்குவதில்லை.

ஒவ்வொருவரும் தன்னுக்குள் தானே சபதம் எடுப்போம்

Link to comment
Share on other sites

இருட்டுக்க இருந்து எழுதியும் ஒரு சொல்லுகூட பிழை விடாமல் எழுதி இருக்கிறாங்கள் :lol::D:D

இது ஆரம்பம் மட்டுமே எடுத்தோம் கவிழ்தோம் என்று செய்யமுடியாது. மாற்று வழியை கொடுத்துதான் வழிக்கு கொண்டு வரலாம். :rolleyes::rolleyes::lol:

நான் இருட்டு எண்டு சொன்னது இந்த இணைய வலையில் மட்டும் எங்கள் கருத்துக்கள் உலாவருகின்றன. ஆனால் வெளியே மக்களோடு பழகும் ஊடகங்கள் மக்களின் மன மாற்றத்திற்கான ஒரு சிறு பொறியை கூட தட்ட முன்வரவில்லை என்றுதான் கவலை படுகிறேன்.

Link to comment
Share on other sites

ஐயா டங்குவார்

மேலே உங்களுக்கு நான் எழுதிய பதிலில் எல்லாவற்றையும் இணைத்துத் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் கவனிக்கவில்லையா?? நீங்கள் எழுதியது போல் ஒண்டடி மண்டடியாகவா இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சேர்ந்து வந்திருந்தால் உங்கள் கருத்தை நீக்கிய பின் பதிவிட்டிருக்கலாமே?? அவசரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அது உங்களுக்கு நன்கு பொருந்துகின்றது.

எனிமேலாவது பதிலளிப்பதற்கு முன்னர் மேலேயுள்ளவற்றை நன்றாக அவதானித்து பின் பதிலெழுதப் பாருங்கள். :rolleyes::rolleyes:

இப்போது புரிந்ததா யார் நலம் பெற வேண்டுமென்று?? :lol::lol:

நீங்கள் செய்த தவறை என்னைத் திருத்தச் சொல்கிறீர்கள். நீங்கள் எப்படி இணைத்தீர்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அது உங்கள் பிரச்சினை. என்னால் கோட் செய்து பதிலளிக்கத்தான் முடியும். இதில் ஏதாவது உங்களுக்குப் பிரச்சினையென்றால் மோகன் அண்ணாவிடம் குறைபட்டுக்கொள்ளுங்கள்.

இங்கே யாரும் நான் ஆத்திரப்படவில்லை, தங்களைப்போல். பைத்தியக்காரன், விட்டில் பூச்சி என்றெல்லாம் வசைபாடியது நீங்களே. யாருக்குப் புத்தி மட்டு, யாருக்கு வைத்தியம் தேவை என்பதெல்லாம் இனிமேலும் யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை.

சிவாஜி பார்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. உங்களது மாற்றுக்கருத்து. அதை மதிக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் பதில்பெறும் பக்குவம் தங்களுக்கில்லை என்பதால், இத்துடன் முடிக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு, ரஜனிகாந்த், எஸ்.வி.சேகர் போன்றவர்களை புலம் பெயர்ந்த நாடுகளில் வரும் போது அன்நிகழ்ச்சிகளுக்கு செல்வதைப் புறக்கணித்தவர்கள் எம்மவர்கள். நான் சிவாஜி படத்தைப் புறக்கணிப்பேன். இயக்குனர் சீமான், தங்கப்பச்சான் போன்றவர்களின் படங்கள் நன்றாக இல்லாவிடினும் திரைஅரங்கில் சென்று பார்ப்பேன். ஆதரவு தருவேன்.

துடுப்பாட்டப் போட்டி சிட்னியில் நடைபெறும் போது இலங்கை அணி விளையாடும் போது சென்று பார்க்கமாட்டேன். அப்படி பார்க்க விரும்பினால் அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் சென்று அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன். முன்பு இலங்கை அணிக்கு துடுப்பாட்டப்போட்டியில் ஆதரவாக இருந்தனான் என்பதை நினைத்து வெக்கப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

உன்னை திருத்திக்கொள் உலகம் தானாக திருந்தும் என்று சொல்வார்கள்

உங்களைப்போலவே ஒவ்வொருவரும் நிச்சயம் மாறும்காலம் வரும்

இங்கே எதிர் கருத்து எழுதியவர்களும் உண்;மையை உணர்ந்து திருந்துவார்கள் என நம்புவோம்

Link to comment
Share on other sites

இங்கு சயந்தனும், ரவி எனும் வலைபதிவாளரும் உரையாடியது, சிவாஜி புறக்கணிப்பு பற்றிய உரையாடல். சயந்தன் இங்கும் உறுப்பினர். அவர் வேலை பழுவால் இங்கு இணைக்கமால் இருக்கலாம்.

ஒலிப்பதிவையும், கருத்தையும் அங்கே போய் வாசியுங்க.

http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_18.html

Link to comment
Share on other sites

சிவாஜி திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

Link to comment
Share on other sites

"தமிழ் நாட்டுக்கு தண்ணிக்குதான் பஞ்சம் பாலுக்கு பஞ்சமில்லை. இழிச்சவாய்கள் இருக்கும் வரை நான் தான் சுப்பர் ஸ்டார்" சிவாஜி படத்தின் ரஜனியின் பஞ் டயலக்

rajini-fans_f1.jpg

rajini_fan_poja.jpg

Link to comment
Share on other sites

சிவாஜி : இதெல்லாம் ரொம்ப ஓவர் !!

சிவாஜி திரைப்படத்தை , பார்க்கலாம், வியக்கலாம், ரசிக்கலாம். தப்பில்லை ! ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க !

சிவாஜி படம் நன்றாக ஓட வேண்டுமென்று பெண்கள் ஒன்று திரண்டிருப்பதைப் பாருங்கள் ! இத்தனை பெண்களை ஒற்றுமையாய் வேறெங்கேனும் சந்திக்க முடியுமா ? சந்தேகமே !

r1.jpg

கோயிலுக்குள் படப்பெட்டியை யானையில் வைத்துக் கொண்டு போயி வழிபாடாம் !

படப்பெட்டி போலாமாம் ! மனுஷன் போகக் கூடாதாம் !!

r3.jpg

மேலே போஸ்டரில் இளைய மகாத்மா !

கீழே பகிரங்கப் ப(லி)டுகொலை !

நல்ல பொருத்தம்

-----

மக்களுக்கு அறிவு வரணும்னு சிவாஜி நினைக்கிறார்.

உண்மை தான்.. !!! இவரையும் அந்த காலேஜ்ல சேத்துடுங்க !

r4.jpg

வீட்ல அப்பன் சாப்பாட்டுக்கு சேத்து வெச்சிருந்த பணம் சிவாஜி வாயிலே ஜிலேபி !!

r5.jpg

-----

பாலூட்ட வழியற்ற தாய்மார்கள்

தேசத்தில்

பாலூற்றத் திரண்டிருக்கும்

நம்பிக்கை விடிவெள்ளிகள்.

r6.jpg

அலசல் வலைப்பதிவு

Link to comment
Share on other sites

:rolleyes: இப்படியும் ஆட்கள் இருக்கீனமா :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் எப்படியாவது தொலைஞ்சு போகட்டும்.. அப்பாவி ஆட்டுக்குட்டியைப் பலியிட இவங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கடவுள் மறுப்பை வலியுறுத்த கறுப்புடை தரித்திருக்கும் கூட்டம்.. இப்படியான சினிமாத் துதிபாடலை எதிர்த்து குரல் கொடுக்குமா... இல்லவே இல்லை..! அதுதான் தமிழ்நாடு..! :rolleyes:

Link to comment
Share on other sites

ஒரு நாள் கூத்தோடு அது முடிந்துவிட்டது. இப்போது சகஜமாகிவிட்டது தமிழ் நாட்டில், ஆன அதை விடாமல் துரத்திக்கொண்டு கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ரஜனியின் எஜமான் படம் வெளியான போது இரண்டு இளைஞர்கள் முதல் காட்சியாக படத்தை பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் ரெயில்லில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். நடிகை மோனால் இறந்த போது துக்கம் தாங்காமல் இரண்டு இளைஞர்கள் விசம் அருந்தி தற்கொலை செய்தனார். தவிர நிறையப் பேர் தற்கொலை செய்திருக்கின்றார்கள். கட்டவுட்களில் ஏறி முறிந்து விழுந்து செத்திருக்கின்றார்கள். நடிகர்களுக்கு கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் பல நடந்துள்ளன. இப்படியான நிகழ்வு ஏராளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பாலபிசேகம் காவடி பாற்குடம் எடுத்தல் கிட வெட்டுதல் என்று கடவுளை அவர்கள் திரை அரங்குகளில் கண்டுவிட்டனர். எங்கயோ அவர்கள் காணமறுக்கப்பட்டனர் என்பதில் இருந்து தெடங்கும் பிரச்சனையின் மூலத்தைப்பற்றி கதைக்க நிறைய தடைகள் இருக்கின்றது இங்கேயும்.

Link to comment
Share on other sites

காட்டுமிராண்டிகள். இதை தூண்டும் நடிகர்களை சில ஆண்டுகள் சிறையில் தூக்கிப் போட வேண்டும். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? நிச்சயமாக பெருச்சாளிகள் கட்டாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூலத்தைப் பற்றிக் கதைக்க உங்களுக்குத் தடை நண்பரே?

வழமை போல பார்ப்பானிப்பழி போட்டு முடித்து வைப்பீர்கள். அதைத் தானே வழமையாக இங்கே செய்வார்கள். ஆனால் பலித் தடைச் சட்டத்தைச் செயலலிதா அரசு கொண்டு வந்தபோது அதைத் தடுத்தவர்கள் திமுகவும், திகவும் தான்.

அப்போது அவர்கள் சொன்ன காரணமும் பார்ப்பானத் திட்டுத் தான். பார்ப்பான சிந்தனைகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆதிமக்களின் வழிபாட்டு முறையில் செயலலிதா தலையிடுகின்றார் என்று.

Link to comment
Share on other sites

பலி கொடுத்து வழிபடுவது தமிழர்களின் வழிபாட்டு முறை......

ஏழைத்தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது திருவிழாக்களிலோ ஒன்றுகூடி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு அந்த இறைச்சியை சொந்த பந்தங்களோடு உட்கொள்கின்றனர்.... இதில் என்ன தவறு ... ஏன் அதை எதிர்க்க வேண்டும்???

கல்வியறிவு வளர வளர இந்த பழக்கங்கள் தானே நின்றுவிடும் ..... சட்டம் போட்டு நிறுத்த தேவையில்லை...... முன்பு பலிகொடுக்கும் பழக்கம் இருந்த பல கோயில்களில் இன்று அந்த பழக்கங்கள் ஒழிந்து விட்டன....

Link to comment
Share on other sites

நீங்கள் பலியிடுவதை தடைசெய்வற்கு எதிராக குரல் கொடுத்ததாக அர்த்தம் கொள்கின்றீர்கள். அதை காட்டுமிராண்டித்தனமாக சொல்கின்றீர்கள். ஆனால் அவர்கள் இதனடிப்படையில் பசுவதைத்தடுப்புச்சட்டம் கொண்டுவர முயற்ச்சித்ததை அறிவீர்கள்.

அன்றாடம் பச்சமிளகாய் கடித்து பழங்கஞ்சி குடித்து 12 மணி நேரம் மிகக்கடுமையாக உழைக்கும்மில்லியன் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வாரத்துக்கு ஒரு தடவை உண்ணும் புரதம் என்பதே இந்த இறைச்சியில் தான் இருக்கின்றது. அதில் கைவைப்பதானது மிகவும் மோசமான செயல். பொருளாதாரத்தில் மேன்மையடைந்த மக்கள் போல் வேற்று உணவை உண்பதற்கு அவர்கள் வருமானம் ஏணிவைத்தாலும் எட்டாது.

வினாடிக்கு ஆயிரக்கணக்கான விலங்குகள் உலகளவில் உணவுக்காக கொல்லப்படுகின்றது. நாகரீக வளர்ச்சியானது பிரதானமாக உற்பத்தியில் நேரடித்தொடர்பில்லாமல் வாழும் முறையை சுட்டிக்காட்டி நகர்கின்றது. ஒரு உயிரனத்தை கொல்வதை பலரும் விரும்பவில்லை ஆனால் கொன்று இறைச்சியாக்கியபின்பு அல்லது உணவாக்கிய பின்பு அதை வாங்கி சமைக்கவோ உண்ணவோ பிரச்சனையில்லை. என்னும் கூடுதலாக மக்டொனால்களில் உண்ணுவதை நாகரீகமாகவும் கருது கின்றனர்.

கொல்லும் முறையில் காட்டுமிராண்டித்தனம் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதை சனங்களுக்கு முன்னால் கொல்வதை குற்றம் என்று சொல்லப்படுகின்றது. இது வேறு விசயம். ஆனால் புதிதாக மக்டொனால்களை அனுமதித்துக்கொண்டு மத வாயிலாக கொல்லவே கூடாதென்பது என்ன நிஜாயம்? மகராஷ்டாவில் மாட்டை உரித்த தலித்துக்களை உயர் இந்துக்கள் அவர்கள் தோலை உரித்து கொன்ற சர்ச்சை இன்னும் புகைந்து கொண்டிருக்கின்றது.

வரலாற்று ஆய்வுகளை பார்த்தால். ஒரு யாகம் செய்வதுக்கு பல நூறு எருதுகள் பலிகொடுக்கப்பட்டது. இது தடுக்கப்பட வேண்டும். இப்படி தொடர்ந்தால் உழவுத்தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்று குரல் கொடுத்தவர் புத்தபிரான்.

ஆரியர்களின் நகர்வானது மாட்டை ஆதார உணவாக கொண்டுதான் முற்காலத்தில் காணவாய் கால்வாய் வழியாக நகர்ந்தது தவிர ஒரு இடத்தில் நிரந்தரமாக வசித்து விவசாயம் செய்தவர்கள் இல்லை.

இவ்வாறு வரலாறு ஒரு புறமும் யதார்தத வாழ்வு ஒரு புறமும் இருக்க இந்துத்துவம் என்று கொண்டுவரும் சட்டங்களின் பாதிப்புகள் வறிய மக்களுக்கு அதிகமாக உள்ளது. கொல்லும் முறையை சொல்லிக்கொடுப்பது நாகரீகமாக இருக்கலாம் ஆனால் கொல்வதையே தடுப்பது மக்கள் வயிற்றில் அடிப்பதாகும். எனவே எதிரப்பு குரல்கள் எழுந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வழமையாகவே பலி கொடுப்பதில் பசுக்கள் இடம்பெறுவதில்லை. ஒன்று ஆடு, அல்லது கோழிகள் தான் முன்னிலை இடம் வகிக்கின்றன. அந்த அடிப்படையில் தான் நான் சொன்ன சட்ட மூலம் என்பது கொண்டு வரப்பட்ட போது, ஆடுகள், மற்றும் கோழிகள் பலியிடுவதைத் தடுப்பதே அதன் மூலமாச் சட்டமாக அப்போது இயற்றப்பட்டதே தவிர, பசுவதை தொடர்பாக ஏதும் இருக்கவில்லை.

மேலும் வருடத்தில் ஓரிரு தடவை நடக்கின்ற பலி கொடுத்தலில் வைத்துக் கிடைக்கின்ற உணவை மட்டும் வைத்து ஒரு மனிதனுக்குப் புரதம் கிடைத்து விடாது. புரத உணவுகள் என்பன வெறுமனே இறைச்சிகளில் மட்டும் தான் இருக்கின்றன என்றில்லை.

நீங்கள் சம்பந்தமில்லாமல் ஊர்க்கதை எல்லாம் சொல்லிவிடடு, இந்துத்துவ என்று முடிப்பது பகுத்தறிவு என்று ஏமாற்ற ஆரம்பித்தில் இருந்து தொடருகின்ற பாணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு மக்கள் இந்தளவுக்கு முட்டாளாய் இருப்பதற்கு காரணம் அங்கு சிறந்த அரசியல் தலைமை இல்லை.

தற்போதைய முதலமைச்சர் முந்தைய முதலமைச்சர் இவர்களே முதல் நாள் படம் பார்க்கும் போது மற்றவர்கள் என்ன செய்வார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

பலி கொடுப்பது தவறுதான். அதை தடை செய்யத்தான் வேண்டும்.

ஆனால் ஒரு பக்கம் ஆரிய தெய்வங்களையும் ஆரிய மயப்படுத்தப்பட்ட தெய்வங்களையும் வணங்குகின்ற கோயில்கள் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் ( அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல், தமிழில் வழிபாடு, சிதம்பரத்தில் தமிழில் தேவாரம், திருவாசகம், தமிழில் குடமுழுக்கு போன்ற பல பல விடயங்கள்) செய்ய முன்வராத அரசு தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குகின்ற கோயில்களில் மட்டும் சீர்திருத்தம் செய்ய முன்வந்தது சந்தேகத்தை கொடுத்தது.

தூயவன்! நீங்கள் கூட தமிழர்களின் சைவம் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டது என்றும், அது தமிழர்களின் குற்றம் என்றும் ஆதங்கப்பட்டிருந்தீர்கள்.

பலித் தடை என்ற பெயரில் மெதுமெதுவாக மிச்சமிருக்கும் தமிழர் வழிபாடுகளும் ஆரிய மயப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் திராவிட இயக்கங்கள் அதற்கு எதிராக இருந்தன.

மற்றையபடி ஆரிய தெய்வங்கள் வழிபடுகின்ற கோயில்களில் நடக்கின்ற மனிதர்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு தெய்வ வழிபாடுகளில் நடக்கின்ற மிருகங்களுக்கு எதிரான குற்றங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

சரி! இது போதும்.

மீண்டும் ரஜனிகாந்தின் சிவாஜி பற்றி பேசுவோம்

பலித்தடை பற்றி தொடர்ந்து பேச வேண்டும் என்றால் தனித் தலைப்பை உருவாக்குவோம்.

சிவாஜி படத்தை விழுந்தடித்து கலைஞர், ஜெயலலிதா, வைகோ என்று பல அரசியல் தலைவர்கள் பார்த்தனர். அதைப் பற்றி தமது ஊடகங்களில் செய்தியும் வெளியிட்டனர்.

இவர்கள் தமிழ்நாட்டின் தலைவர்கள் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டி இருக்கிறது.

ரஜனிகாந்த் ஒரு நடிகன் மட்டும் அல்ல என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாகவும் அமைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படம் உலகத் தமிழினத்தின் ஒரு முன்னேற்றப் பாய்ச்சல்போலத் தென்பட்டதால் நானும் அந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்துவிட்டேன். அதனால் உண்மையில் நானும் என்னைத் தலைவனெனச் சொல்ல வெட்கப்படுகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.