Jump to content

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலயும் ஏதோ பரிசுதாறனெண்டு குழப்பப் பார்க்குது. என்னெண்டு பாருங்கோ

Link to comment
Share on other sites

  • Replies 217
  • Created
  • Last Reply

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா? :blink::unsure:

Link to comment
Share on other sites

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா? :blink::unsure:

இப்படி எல்லாம் சொல்ல கூடாது அதை எல்லாம் ஒரு செய்தியா போட்டு வாசிகிறதுக்கு நாங்க இருக்கும் போது அவை இதுவும் செய்வீனம் இதுக்கு மேலையு சேய்வீனம்

:P :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘சிவாஜி’ மீது பாயும் இஸ்லாம் அமைப்புகள்...

‘‘கறுப்புப் பணம் என்றால் முஸ்லிம்கள் தானா?’’

மொட்டை போட்டு, வேல் குத்தி, காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து, மண்சோறு சாப்பிட்டு... ஏதோ குலசாமி கோயில் கொடைமாதிரி ‘சிவாஜி’ பட தியேட்டர்களை மாற்றியிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகக்கோடிகள்.

ஆனால், அவர்கள் கொண்டாட்டத்துக்கு வேட்டு வைப்பதைப்போல், ‘சிவாஜி படம் இஸ்லாமியர்களைக் கடுமையாகக் காயப்படுத்துகிறது’ என்று அனல் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

படத்தில் இடைவேளைக்குப் பிறகு ஆக்ரோஷமாக முகம் காட்டும் ரஜினி, பெரிய மனிதர்கள் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை அபகரிக்கிறார். பிறகு, அவர் மட்டும் அமெரிக்காவுக்குப் பறந்துவிடுகிறார். அபகரிக்கப் பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற திட்டமிடும் ரஜினியின் தளபதிகள், பணத்தை பீட்ஸா கொண்டுபோகும் பாக்ஸ்களில் வைத்து சில புரோக்கர்களிடம் கொடுக்கின்றனர். அப்போது அந்த புரோக்கர்களிடம்,

‘இந்தப் பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி, வெள்ளையா மாத்தணும். ஒரு நல்ல காரியத்துக்காக இதை நீங்க பண்ணிக் கொடுக்கணும்’ என்று சொல்கிறார், ரஜினியின் மாமாவாக வரும் விவேக்.

அந்த புரோக்கர்கள், அமெரிக்காவில் இருக்கும் ரஜினிக்கும் அங்கிருக்கும் தங்கள் ஆளுக்கும் சில ரகசிய எண்கள் மூலம் லிங்க் ஏற்படுத்தி, இந்திய கறுப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றி விடுகிறார்கள். பிறகு, அந்தப் பணம் சின்னச் சின்ன தொகைகளாகப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் சிவாஜி ஃபவுண்டேஷன் அக்கவுன்ட்டுக்கு நன்கொடையாக அதாவது, ‘வெள்ளை’யாக வந்து சேர்கிறது. இது படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள். இதில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் புரோக்கர்களாக இஸ்லாமியர்களைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இதுதான் இப்போது இஸ்லாமியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பின ரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முகமது ரஃபீக்,

‘‘சினிமாவை முற்றிலுமாகப் புறக்கணிக்கச் சொல்வதுதான் எங்கள் கொள்கை. ஆனாலும் பவர்ஃபுல் மீடியாவாக இருக்கிற சினிமா, பல கருத்துக்களை மக்கள் மனதில் எளிதாகப் பதித்துவிடுகிறது. அதுவும், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கின்றனர். ரஜினியின் வார்த்தைகளை வேதமாகக் கருதுகிற ரசிகப் பட்டாளங்கள் அவருக்கு உண்டு. அப்படிப்பட்டவரின் படத்தில் இஸ்லாமியர்களைப்பற்றி இப்படி அவதூறான காட்சி அமைத்திருக்கத் தேவையில்லை.

‘சிவாஜி’ படத்தில் வேறெந்தக் காட்சியிலும் இஸ்லாமியர் களையோ, கிறிஸ்தவர்களையோ, இந்துக்களையோ குறிப்பாக சுட்டிக்காட்டும் காட்சி அமைப்புகள் எதுவும் இல்லை. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும், சட்டத்துக்குப் புறம்பான தொழில் செய்பவர்களாக இஸ்லாமியர்களை ஏன் காட்ட வேண்டும்..?

ஒரு இந்துகூட கள்ள நோட்டு அச்சடிக்கலாம். கறுப்பை வெள்ளையாக்கலாமே.

தமிழ் சினிமாவில் தீவிரவாதி என்ற பாத்திரம் வந்தாலே, அந்தக் கேரக்டரை இஸ்லாமியராகவோ, இஸ்லாமியரைப்போல உடை யணிந்தவராகவோ காட்டும் போக்கு வளர்ந்துவிட்டது. மீடியாக்களும் தங்கள் பங்குக்கு, ‘முஸ்லிம் தீவிரவாதி கள்’ என்று, தனி நபர் தீவிரவாதத்தை மதத்தின் பெயர் சொல்லிப் புண்படுத்தி வருகின்றன. எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் இஸ்லாமியர்கள் குண்டு வைத்திருக்கலாம். அதற்காக முஸ்லிம் சமுதாயமே குண்டு வைக்கும் சமுதாயம்போல சித்திரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன், இந்துக்கள் யாருமே குண்டு வைத்ததில்லையா? தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதில்லையா? அதற்காக ஒட்டுமொத்த இந்துக்களையும் தீவிரவாத சிந்தனையுடையவர்களாகச் சொல்ல முடியுமா?

கறுப்புப் பணம் என்றதும் மட்டும் இஸ்லாமியர்களை ‘சிவாஜி’ படத்தில் காட்டுகிறார்கள். அப்படி காட்டும்போது, பார்ப்பவர்கள் மனதில் என்ன தோன்றும்? ‘ஓ... கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லும் காரியத்தில் ஈடுபடுகிறவர்கள் முஸ்லிம்கள்தானா?’ என்றுதானே எண்ணத் தோன்றும். இதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம். சரி, இத்தனைதூரம் சமூக சிந்தனையோடு கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் பற்றி படம் முழுவதும் வாய்கிழிய வசனம் பேசும் ரஜினியிடம் ஒரு ரூபாய்கூட கறுப்புப் பணம் இல்லையா..? ‘சிவாஜி’ படத்தில் எத்தனை கோடிகளை சம்பளமாக வாங்கினார் என்பதை முதலில் வெளிப்படையாக ரஜினி அறிவிப்பாரா? அப்படியே சொன்னால்கூட, அதை வாங்கும்போது முழுதும் வெள்ளையாகத்தான் வாங்குவாரா? சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, இரண்டரை கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். அதற்கு இன்று வரையில் ரஜினி தரப்பிலிருந்து பதில் இல்லையே... அப்படி இருக்கும்போது ‘சிவாஜி’ படத்தில் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சமூகக்காவலனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமூக சிந்தனையோடு நாட்டில் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று சொல்லி உண்ணாவிரத போராட்டமெல்லாம் நடத்தும் ரஜினி, படத்தில் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் சமூகக்காவலனாக இல்லாமல், நிஜத்திலுமே அப்படியரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தால், எங்களைப் போன்ற மிகப் பெரிய பட்டாளம் அவருக்குத் துணையாக வருவோம் என்பதையும் அவருக்கு உறுதிமொழியாகத் தருகிறேன்...’’ என்று பட படத்த முகமது ரஃபீக், ‘‘இந்த ‘சிவாஜி’யில் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை அமைத்ததில் ரஜினியின் பங்கைவிட, இயக்குநர் ஷங்கர் மற்றும் வசனகர்த்தா சுஜாதாவின் பங்கே அதிக மாக இருந்திருக்கிறது என்பதுதான் எங்கள் கருத்து. தனது முதல் படத்திலிருந்து தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்து சொல்லி வரும் ஷங்கர்தான், இப்போது சுஜாதாவுடன் கைகோத்துக்கொண்டு இஸ்லாமியர்களைக் கொச்சைப் படுத்தியுள்ளார்.

ஷங்கர் தனது முந்தைய படமான ‘அந்நிய’னில், மற்ற சாதியினர் தவறு செய்தால் கருடபுராணத்தின்படி கும்பிபோஜன தண்டனை கொடுத்தார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதியினர் தவறு செய்யும்போது மட்டும் பெரிய மனதோடு மன்னித்தார். இந்த உயர்சாதி ஆதரவு மனோபாவம்தான், இப்போது முஸ்லிம்விரோத மனோ பாவமாக உருவெடுத்துள்ளது. சிவாஜி படத்தைக் கண்டித்து எங்கள் எதிர்ப்பைக் காட்டியே தீர்வோம்’’ என்றவரிடம்,

‘‘சிவாஜி படத்தின் இசையமைப்பாள ரான ஏ.ஆர்.ரஹ்மான்கூட ஒரு இஸ்லா மியர்தானே...’’ என்று ஒரு கேள்வி போட்டோம்.

‘‘மார்க்கத்தின் மீது அவருக்கு முழு பற்றிருப்பதாக சொல்ல முடியாது. அவர் இசையமைப்பதை ஒரு தொழிலாக வைத் திருக்கும்போது, இதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்றார் முகமது ரஃபீக் கொதிப்புடன்.

இதெல்லாம் போக, சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக அங்கவை, சங்கவை என்ற இரண்டு பாத்திரங்களைக் கரிக்கட்டையாகப் படைத்து, கறுப்பு நிற மனிதர்களையும் ஏகத்துக்கும் கிண்டல் செய்திருக்கிறார்கள். ‘என்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்கு. வாங்க, வந்து பழகுங்க...’ என்று பாப்பையா, ரஜினியை அழைப்பதாக வரும் காட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப் புகளிடம் சர்ச்சையை உண்டுபண்ணி இருக்கின்றன.

பரபரப்பாகப் பேசப்படும் படங்கள் இப்படிப்பட்ட சர்ச்சைகளில் அடிபடுவது வாடிக்கைதான். பா.ம.க. புகைச்சல்...

‘சிவாஜி’ படத்தில் தமிழ்நாட்டின் பின்தங்கிய பகுதியாக தர்மபுரி மாவட்டம் காட்டப்படுகிறது. தர்மபுரி, பா.ம.க. வலுவாக உள்ள பகுதி என்பதால், அந்தக் குறிப்பிட்டக் காட்சி தங்களை குறிவைத்து எடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் கிளப்புகிறார்கள் அந்தக் கட்சியினர்.

‘‘ரஜினி நடித்த ‘பாபா’ படப் பிரச்னைக்குப் பிறகு நாங்கள் பாட்டுக்கும் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தேவையில்லாமல் இப்போது எங்களை சீண்டியிருக்கிறார் ரஜினி. இந்த சிவாஜி சீண்டல் குறித்து, எங்கள் மருத்துவர் ஐயாவிடம் சொல்லியிருக்கிறோம். அவரது உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்..’’ என்று சிடுசிடுக்கிறார்கள் தர்மபுரி பா.ம.க&வினர்.

& கே.ராஜாதிருவேங்கடம்

‘சிவாஜி’ கறுப்புப் பண சர்சை!

‘சிவாஜி’ திரைப்படத்தில் கதாநாயகனான ரஜினி, நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை வைத்து ரஜினிக்கு எதிராக வம்பு கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள், ‘இந்தியன் மக்கள் மன்றம்’ அமைப்பினர்.

‘சிவாஜி படத்தில் கறுப்புப் பணம் பற்றி பேசும் ரஜினியே... முதலில் உன்னிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவா!’ என்று துண்டுப் பிரசுரங்கள் அடித்து ‘சிவாஜி’ படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று விநியோகித்து வருகிறார்கள். கூடவே, போஸ்டரும் அடித்து ஒட்டிவிட, ரஜினி ரசிகர்கள் இந்தியன் மக்கள் மன்றத்தினர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம்.

சில நாட்களுக்கு முன்னால் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கவில்லை என்பதற்காக அரசியல்வாதிகளை விமர் சித்து போஸ்டர் அடித்து ஒட்டி தூத்துக்குடியில் கலாட்டா செய்த இந்த அமைப்பினரின் ‘சிவாஜி’ அதிரடியால், போலீஸாரும் அவர்கள் மீது ஏகக் காட்டத்தில் இருக்கிறார்களாம்.

‘‘சீரியஸாக எடுக்க வேண்டாம்..’’

இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தரப்பில் நம்மிடம் பேசினார்கள் அவர்களது உதவியாளர்கள்.

‘‘இந்த ‘சிவாஜி’ படத்தைப் பொறுத்தவரையில் கறுப்புப் பணம் என்னும் சமூக அரக்கனை ஒழிக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தை மையமாக வைத்து தான் படம் எடுத்திருக்கிறோம். அந்த நல்ல நோக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் இஸ்லாமி யர்கள் அதற்கு உதவுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நல்ல விஷயத்துக்குக் கைகொடுப்பவர்களாகத்தான் இஸ்லாமியர் களை நாங்கள் காட்டியிருக்கிறோமே தவிர, அவர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. மற்றபடி கறுப்புப் பணத்தைப் பற்றி கதை அமைத்திருப்பதை வைத்து தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் பலரும் கேள்வி கேட்டு, சர்ச்சைகளை எழுப்பினால் அதற் கெல்லாம் நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?

படம் என்பது ஒரு மெஸேஜோடு கூடிய பொழுதுபோக்குத்தானே தவிர, அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு வம்பு பேசக்கூடாது...’’ என்றார்கள்.

நன்றி விகடன்

Link to comment
Share on other sites

வெற்றிகரமா புறக்கணித்து ஆன்லைனில பாக்க விரும்பும் நேயர்களே....

உங்களுக்காக...டைகர் வானொலி வழங்கும் காட்சியை பார்த்து மகிழுங்க

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

காடுவெட்டியின் சுயநலம் இன்னும் சில தினங்களில்

Link to comment
Share on other sites

வெற்றிகரமா புறக்கணித்து ஆன்லைனில பாக்க விரும்பும் நேயர்களே....

உங்களுக்காக...டைகர் வானொலி வழங்கும் காட்சியை பார்த்து மகிழுங்க

http://www.yarl.com/forum3/index.php?showt...0&start=500

அது என்ன ஒன்லைனில புறகணிப்பு பார்க்காமலே விடுறது தானே இல்லை என்னை மாதிரி நேரா பார்த்டுவிட்டு வந்து துணிவா சொல்ல வேண்டும்

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்...........

பல எதிர்பார்புகளில் மத்தியில் தொடங்கிய சிவாஜி திரைபட பணிகள்.................அவர்களை கண்டு கொள்ளாத நிலையிலும் நாங்கள் புறகணித்து அந்த படதிற்கு மிகவும் நல்ல பெயர் எடுத்து கொடுதிருகிறோம் :icon_idea: .............அதற்காக லேடிஸ் அன்ட் ஜேன்டிமண்சுக்கு ரஜனி சார்பாக நன்றிகளை நானே தெறிவித்து கொள்கிறே .....................சும்மா சொல்ல கூடாது மனிசன் இந்த வயசிலும் நல்ல தான் டூயட் பாடுகிறார் நல்லா தான் சண்டை பிடிகிறார் அதற்காக ஒரு சபாஷ் போடலாம்..............ரகுமான் இசை என்னத்த்தை தான் நனிசன் போட்டு அடிகிறதோ தெறியாது தியேடரில காது வெடித்தாலும் அந்த அடியிலும் ஒரு சுகம் உள்ளது...................

நெஸ்ட் போயின்ட் ஸ்ரெயா சும்மா சொல்லகூடாது அப்பாவும்,மகளும் நடிகிற மாதிரியே தெறியவில்லை அவ்வளதிற்கு நல்லா நடிகிறா அவாவுக்கும் நாங்கள் ஒரு ஓ போடலாம்.......................இதை எல்லாம் தாண்டி சங்கர் அவ்ரை சொல்ல தேவையில்லை எல்லாருக்கும் தெறிந்திருக்கும்..............தெறியா

?? ஆட்களுக்கும் நாங்கள் சிவாஜியை புறகணித்து அவரையும் பிரபல்யபடுத்தி விட்டோம்.....................அது வேற கதை.................மொத்தத்தில கதை என்ன என்று விளாங்கட்டியும் சலிபில்லாம 3மணித்தியாலங்களும் போகுது அதற்காக எல்லாரும் பாராட்டுகளை நான் தெரிவிகிறேன்................விருபினா நீங்களும் தெறிவித்து கொள்ளுங்கோ..............

இவ்வளவு ரசிப்பா பார்த்து கொண்டிருகும் போது உடனே எனக்கு யாழ் ஞாபகம் வந்துட்டுது....................சா எல்லாரும் புறகணிக்கும் போது நான் எப்படி பார்பது என்று............................நண்பரிட்ட இதை சொல்ல,அங்கே பாரு இவை தான் புறகணிக்க முனுக்கு நின்ற ஆட்கள் இவையளின்ட மகள்மார்,மகன் மார் பாஎகும் போது நாங்கள் ஏன் பார்க்க கூடாது என்று................பிறகு எனக்கு ஒரே சந்தோசம் நான் மிகவும் எஞ்ஜோய் பண்ணி படத்தை ரசித்தேன்.....................................இதை விடுங்கோ.................

மொத்தத்தில சிவாஜிக்கு 65 புள்ளிகள் நான் கொடுகிறேன் ஆனால் புறகணித்து அந்தப் உள்ளைகளி சில பேர் 80க்கு உயர்தியது வேற கதை அது நம்மளுக்கு என்ன.............என்றூ விடுவோம் என்று நினைத்தா முடிய இல்லை சோ சொல்ல வந்ததை சொல்லி போட்டு போறேன்...........

1)இவ்வளவு நாளும் படத்தை நன்றாக பார்த்துவிட்டு இந்த படத்தை எல்லாரும் புறகணிக்கிறோம் என்று நடிக்க வேண்டாம் உங்களுக்காக வாழுங்கோ பிறருக்கா வாழவேண்டாம்...................

2)படத்திற்கு ஒருக்கா போக மாட்டேன் என்று சொன்னா அது காணும் தானே அது என்ன போக மாட்டேன் போக மாட்டேன் என்று எத்தனை தரம் தான் சொல்லுறது...................இதை நான் நினைகிறேன் சுயவிளமபரம் என்று............

3)அண்ணண்மார்களே,அப்புமார்களே சிவாஜி புறகணிகிற நேரம் சிஅவாஜிக்கு ஏற்ற மாதிர் நாங்கள் ஒரு படத்தை எடுத்து எங்கள் பெருமையை காப்போம் என்று நினைத்தீர்களா...........

4)அல்லது சிவாஜிக்கு போட்டியாக எம்ம்வரின் படத்தை ரீலிஸ் பண்ணி இருந்தா அதுவும் ஏற்ககூடிய காரணம்.......

5)அது என்ன தியேட்டரில பார்க்க மாடீங்கள் வீட்டை பார்பீங்கள் யாரையப்பா ஏமாற்றுகிறீங்கள்.........................

6)சினிமா கலைஞர்கள் வந்தால் படயெடுக்கும் நீங்கள் சிவாஜியை புறகணித்து என்ன செய்ய போறீங்கள்.........................நான் கேட்கிறேன் சிட்னியில் ஒரு கலை நிகழ்ச்சியிலும் எம்மவர்கள் பாடல்கள் ஒலிபதை யாரும் கேட்டிருக்கிறீங்களா.......................

??ந்த அமைப்பு இந்த அமைப்பில இருகிறவர்கள் பெயருக்காக இருக்காமல் இப்படியான விசயங்களை நடக்க ஏற்பாடுகளை செய்யலாமே அது உங்களுக்கு முடியாது...........................

7)அடுத்தது இந்த தலைப்பை போட்டு நேரத்தை வீணாக்கிய நேரம் என்னையும் சேர்த்து தான் சொல்லுறேன் அவுஸ்ரெலியாவில் பிடிபட்ட 3பேர்களை பற்றி நாங்கள் மறந்து போய் உள்ளோம் அதை பற்றி உலகுக்கு அறிய தந்திருக்கலாம்........................எனி சொல்லுவார்கள் அரட்டை அடிகிற உறுபடாத கருத்து எழுதுற நான் இதை சொலுறேன் என்று................அதையும் மனபூர்வமாக ஏற்க தயார்..............

8)அடுத்தது முக்கிய சில பேர் இதை வாசிப்பார்கள் என்று எனக்கு தெறியும் அவர்களுக்கு நான் சொல்லி கொள்வதென்றா மற்றவனை திருத்த முன்னம் தங்கள் தங்கள் வீடுகளை திருத்த பாருங்கோ ஒருத்தர் புறகணிபாராம் வீட்டில இருகிற மற்றவை எல்லாரும் போவீனமாம் நல்ல ஜோக்.....................................

விமர்சனம் என்று தொடங்கி கொஞ்சம் உணர்ச்சிவசபட்டு உண்மை எல்லாத்தையும் சொல்லி போட்டேன் .................யாரிட்ட இருந்து தொல்லை பேசி வருதோ தெறியவில்லை ஆனால் சொல்ல வந்ததை சொல்லியாச்சு..............................மீண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூசுக்கூட்டங்களின் செய்கைகள்

sivaji4hs7.jpg

sivaji5jv8.jpg

sivaji6my0.jpg

sivaji7ff0.jpg

கூல்ல்ல்ல்ல்ல்ல... கந்தப்பு

Link to comment
Share on other sites

2)படத்திற்கு ஒருக்கா போக மாட்டேன் என்று சொன்னா அது காணும் தானே அது என்ன போக மாட்டேன் போக மாட்டேன் என்று எத்தனை தரம் தான் சொல்லுறது...................இதை நான் நினைகிறேன் சுயவிளமபரம் என்று............

:lol: என்ன இருந்தாலும் நீங்கள் கந்தப்புவை இப்படிக் குத்திக்காட்டக்கூடாது.:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு

சிவாஜி படம் உலகத் தமிழினத்தின் ஒரு முன்னேற்றப் பாய்ச்சல்போலத் தென்பட்டதால் நானும் அந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்துவிட்டேன். அதனால் உண்மையில் நானும் என்னைத் தலைவனெனச் சொல்ல வெட்கப்படுகிறேன்

ஈழத்திருமகன்- பதில்

இப்படியும் முட்டாள்கள் இருக்கிறார்களா?

கரு - பதில்

சிவாஜி படத்தை இரண்டு தடவை பார்ப்பதிலிருந்து அந்தப் படத்தை அடியோடு புறக்கணித்தால் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அது வலுச்சேர்க்கும் என்று எண்ணுபவர்கள் வரை முட்டாள்கள் நிறையப் பேர் நம்முள் இருக்கிறார்கள். முக்கியமான விடயம் யாருடைய முட்டாள்த்தனம் டிகிரியில் கூடியது என்பதுதான். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நமது புத்திஜீவிகளின் கணிப்பீட்டுக்கும் மேதாவிலாசத்திற்கும் தலைவணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

:lol: என்ன இருந்தாலும் நீங்கள் கந்தப்புவை இப்படிக் குத்திக்காட்டக்கூடாது.:lol:

வசபண்ணா என்னோட என்ன கோபம்

:D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://rajinifans.blogspot.com/2007/06/blog-post_19.html

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளைத் தொடரந்து இலங்கையிலும் சிவாஜி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும்

டென்மார்க், நார்வே ,சுவிஸ்,இத்தாலி,ஹாலந்து,பிரான

Link to comment
Share on other sites

ஜயோ மேலே பார்த்த படங்களை பார்த்தபோது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது இது என்ன கொடுமை தமிழனுக்கு விடிவே இல்லையா?

வாழ்க தமிழகம் நலமுடன் .வளர்க தமிழ்

Link to comment
Share on other sites

சென்ற ஞாயிறு நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விசேடம் ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு குடும்ப நண்பர் ஒருவர் பிள்ளைகளுடன் வந்திருந்தார். இவர்கள் குடும்பத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் தனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் நண்பர் உறுதியுடனிருந்தார்.

இவரின் 16 வயது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பரிஸுக்கு அண்மையில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி என்னிடம் விபரித்துக்கொண்டிருந்தான். நான் அதைப் பார்த்திராதபடியால் சிறுவன் கூறிய சுவாரிசமான தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் என்னிடம் "நான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் டிக்கட் வாங்கினேன். இன்னும் ஒரு யூரோ அதிகமாக இருந்தால் சிவாஜி பார்த்திருக்கலாம்" என்றான் சிரித்துக் கொண்டே.

"ஒரு யூரோவை அப்பாவிடம் கேட்டால் தரமாட்டாரா ?" என்றேன்.

அதற்கு அவன் கூறிய பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.

"ஒரு யூரோ பெரிய விடயம் அல்ல. ஆனால், சிவாஜியா கண்காட்சியா என்ற கேள்வியில் கண்காட்சியையே தெரிவு செய்தேன். அதனால் பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்த்து கொள்ள முடிந்தது. சிவாஜி பார்க்கவில்லை என்பது பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை." என்றான்.

இந்தச் சிறுவன் ஏதோ ஒரு காரணத்திற்காக சிவாஜியைப் புறக்கணித்து விட்டான். எனது மனதிற்குள்ளேயே அவனுக்கு நன்றியைத் தெரிவித்தேன்.

Link to comment
Share on other sites

சிவாஜி பார்ப்பதே இல்லை, சீடியிலென்ன இணையத்திலென்ன ஏன் இலவசமாக தந்தாலும் பார்ப்பதில்லை என்ற என் சபதத்தில் இடி விழுந்தாற் போல் ஒரு சம்பவம்!

வழமைக்கு மாறாக வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது குடும்பத்தினர் அனைவரும் எனக்காக காத்திருக்கின்றனர், "கெதியன வாங்கோ, டீ போட்டிருக்கு, குடிச்சிட்டு லேட்டாக்காம வெளிக்கிட்டு வாங்கோ, நாங்கள் எல்லாம் ரெடி" என்றாள் மனைவி. வழமையாக கெஞ்சிக் கேட்டாலும் கிடைக்காத டீயே எனக்காக காத்திருக்கிறது! என்ன விசயம் என்று பார்த்ததில் மனைவியின் அலுவலகத்தில் ஒரு சலுகை அறிவித்துள்ளனராம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தடவையில் சிவாஜி பார்த்து டிக்கட்டை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் டிக்கட்டின் பெறுமதியான பணம் மீளளிக்கப்படுமாம்!

ஏன் என்று கேட்டால், அந்த நிறுவனத்திற்கு வியாபாரத்தில் லாபமாம், அதற்காக இந்த அறிவிப்பை ரஜனி ரசிகரான மேலாளர் அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை, இனி சனி ஞாயிறு என்றால் கூட்டம் அதிகம் என்பதால் அந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்ட அன்றே மொத்தக் குடும்பமும் புறப்பட ஆயத்தம்!

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னார்கள்?

நான் வரமாட்டேன் என்று சொன்னால் என்னையும் விட்டுவிட்டுப் போக தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது அவர்களின் ஆயத்த நிலையிலிருந்து நன்கு தெரிந்தது. அவர்கள் எல்லோரும் போக நான் மட்டும் வீட்டில் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருப்பதை நினைக்க வெறுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே இந்தப் புறக்கணிப்பு பற்றி சாடைமாடையாக கதைத்தபோது யாருமே கண்டு கொள்வில்லை. எனவே இப்போது இதைப்பற்றி சொல்லி ஆகப்போவது எதுவுமில்லை. எனது குடும்பத்தையே என்னால் தடுக்க முடியவில்லை என்றால் பிறகு மற்றவர்களிடம் சொன்னதெல்லாம் என்னாவது?

ஒரே குழப்பத்துடன் டீயை குடித்து முடித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தேன். முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு சொன்னேன் "நான் வரேல்ல நீங்கள் போறதென்டா போங்கோ.......ஒருக்கா நான் இதுக்கு போகமாட்டான் எண்டு சொன்னா சொன்னதுதான்....நீங்கள் போய் வடிவா பாத்திட்டு வாங்கோ!" என்று சொல்லி விட்டு, துவாயை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு வெளியில் நடக்கும் சம்பாசனையை ஒட்டுக் கேட்டேன்.

சிறிது நேரம் நிசப்தம் ........ தங்கைதான் முதலில் வாய்மலர்ந்து...... "அவர் வராட்டி பறவாயில்லை, நாங்க போவம்" என்றாள். அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை .... இதுவரை கலகலப்பாக இருந்த இடத்தில் மயான அமைதி. நடந்ததை அறியாத என் இளைய மகள் சிணுங்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவளுக்கு பால் கரைக்கவில்லை என்று ஞாபம் வந்த மனைவி ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குச் சென்றாள். அவள் என்னை விட்டு விட்டு போகமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றக் கோஸ்டியை பற்றி சொல்ல முடியாது.

அவர்களுக்கும் ஆப்பு வைத்தது போல ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "வீட்டதானே நிக்கிறியள்! ஒருக்கா அங்காலை பக்கம் வருவம் எண்டு பாத்தம்" என்று வெளியில இருந்து வந்து நின்ற பெரியம்மா குடும்பத்தினர். அப்புறம் என்ன மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெளிக்கிடும் அவசரத்தில் தாறுமாறாக கிடந்த பொருட்களை எல்லாம் கூடத்தில் ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார் அம்மா. அப்போதே மணி ஏழாகிவிட்டது இனி போகமுடியாது என்ற நிம்மதிப் பெருமுச்சுடன் குளிக்க ஆரம்பித்தேன்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

(யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை)

Link to comment
Share on other sites

சென்ற ஞாயிறு நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற விசேடம் ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு குடும்ப நண்பர் ஒருவர் பிள்ளைகளுடன் வந்திருந்தார். இவர்கள் குடும்பத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் தனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் நண்பர் உறுதியுடனிருந்தார்.

இவரின் 16 வயது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். பரிஸுக்கு அண்மையில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியைப் பார்த்த அனுபவத்தைப் பற்றி என்னிடம் விபரித்துக்கொண்டிருந்தான். நான் அதைப் பார்த்திராதபடியால் சிறுவன் கூறிய சுவாரிசமான தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் என்னிடம் "நான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் டிக்கட் வாங்கினேன். இன்னும் ஒரு யூரோ அதிகமாக இருந்தால் சிவாஜி பார்த்திருக்கலாம்" என்றான் சிரித்துக் கொண்டே.

"ஒரு யூரோவை அப்பாவிடம் கேட்டால் தரமாட்டாரா ?" என்றேன்.

அதற்கு அவன் கூறிய பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.

"ஒரு யூரோ பெரிய விடயம் அல்ல. ஆனால், சிவாஜியா கண்காட்சியா என்ற கேள்வியில் கண்காட்சியையே தெரிவு செய்தேன். அதனால் பல பயனுள்ள தகவல்களைத் தெரிந்த்து கொள்ள முடிந்தது. சிவாஜி பார்க்கவில்லை என்பது பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை." என்றான்.

இந்தச் சிறுவன் ஏதோ ஒரு காரணத்திற்காக சிவாஜியைப் புறக்கணித்து விட்டான். எனது மனதிற்குள்ளேயே அவனுக்கு நன்றியைத் தெரிவித்தேன்.

சிவாஜியை எப்போ வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் கண்காட்சி அது நடைபெறும்போது மட்டுமே பார்க்கலாம். இதை அந்தச் சிறுவன் உணர்ந்துதான் கண்காட்சியை தெரிவு செய்திருக்கின்றார். ஆனால் சிவாஜி திரைப்படத்தை இனி பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. உண்மையில் எனக்கேற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இங்கு தியேட்டரில் அலைமோதிய கூட்டத்தில் முக்கால்வாசி இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள். அவர்கள் திரையில் ரஜனி தோன்றும் போதெல்லாம் விசிலடித்து ஆர்ப்பரித்தது இன்னுமொரு ஆச்சரியம். ஏதோ புதிதாக வந்த சிலந்திமனிதன் படத்தை பார்த்தது போல் சந்தோசம் அவர்களுக்கு. :):rolleyes:

Link to comment
Share on other sites

TM_15-06-07_E1_08-0320CNI.jpg

சேலத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள், ஆடு வெட்டி ரத்தத்தை தெளித்து கட்-அவுட்டுக்கு திருஷ்டி கழிப்பு செய்தனர்.

Link to comment
Share on other sites

சிவாஜி பார்ப்பதே இல்லை, சீடியிலென்ன இணையத்திலென்ன ஏன் இலவசமாக தந்தாலும் பார்ப்பதில்லை என்ற என் சபதத்தில் இடி விழுந்தாற் போல் ஒரு சம்பவம்!

வழமைக்கு மாறாக வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது குடும்பத்தினர் அனைவரும் எனக்காக காத்திருக்கின்றனர், "கெதியன வாங்கோ, டீ போட்டிருக்கு, குடிச்சிட்டு லேட்டாக்காம வெளிக்கிட்டு வாங்கோ, நாங்கள் எல்லாம் ரெடி" என்றாள் மனைவி. வழமையாக கெஞ்சிக் கேட்டாலும் கிடைக்காத டீயே எனக்காக காத்திருக்கிறது! என்ன விசயம் என்று பார்த்ததில் மனைவியின் அலுவலகத்தில் ஒரு சலுகை அறிவித்துள்ளனராம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே தடவையில் சிவாஜி பார்த்து டிக்கட்டை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் டிக்கட்டின் பெறுமதியான பணம் மீளளிக்கப்படுமாம்!

ஏன் என்று கேட்டால், அந்த நிறுவனத்திற்கு வியாபாரத்தில் லாபமாம், அதற்காக இந்த அறிவிப்பை ரஜனி ரசிகரான மேலாளர் அறிவித்திருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை, இனி சனி ஞாயிறு என்றால் கூட்டம் அதிகம் என்பதால் அந்த வாய்ப்பு அறிவிக்கப்பட்ட அன்றே மொத்தக் குடும்பமும் புறப்பட ஆயத்தம்!

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னார்கள்?

நான் வரமாட்டேன் என்று சொன்னால் என்னையும் விட்டுவிட்டுப் போக தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பது அவர்களின் ஆயத்த நிலையிலிருந்து நன்கு தெரிந்தது. அவர்கள் எல்லோரும் போக நான் மட்டும் வீட்டில் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருப்பதை நினைக்க வெறுப்பாகவும் இருந்தது. ஏற்கனவே இந்தப் புறக்கணிப்பு பற்றி சாடைமாடையாக கதைத்தபோது யாருமே கண்டு கொள்வில்லை. எனவே இப்போது இதைப்பற்றி சொல்லி ஆகப்போவது எதுவுமில்லை. எனது குடும்பத்தையே என்னால் தடுக்க முடியவில்லை என்றால் பிறகு மற்றவர்களிடம் சொன்னதெல்லாம் என்னாவது?

ஒரே குழப்பத்துடன் டீயை குடித்து முடித்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தேன். முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு சொன்னேன் "நான் வரேல்ல நீங்கள் போறதென்டா போங்கோ.......ஒருக்கா நான் இதுக்கு போகமாட்டான் எண்டு சொன்னா சொன்னதுதான்....நீங்கள் போய் வடிவா பாத்திட்டு வாங்கோ!" என்று சொல்லி விட்டு, துவாயை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு வெளியில் நடக்கும் சம்பாசனையை ஒட்டுக் கேட்டேன்.

சிறிது நேரம் நிசப்தம் ........ தங்கைதான் முதலில் வாய்மலர்ந்து...... "அவர் வராட்டி பறவாயில்லை, நாங்க போவம்" என்றாள். அதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை .... இதுவரை கலகலப்பாக இருந்த இடத்தில் மயான அமைதி. நடந்ததை அறியாத என் இளைய மகள் சிணுங்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவளுக்கு பால் கரைக்கவில்லை என்று ஞாபம் வந்த மனைவி ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குச் சென்றாள். அவள் என்னை விட்டு விட்டு போகமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றக் கோஸ்டியை பற்றி சொல்ல முடியாது.

அவர்களுக்கும் ஆப்பு வைத்தது போல ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "வீட்டதானே நிக்கிறியள்! ஒருக்கா அங்காலை பக்கம் வருவம் எண்டு பாத்தம்" என்று வெளியில இருந்து வந்து நின்ற பெரியம்மா குடும்பத்தினர். அப்புறம் என்ன மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வெளிக்கிடும் அவசரத்தில் தாறுமாறாக கிடந்த பொருட்களை எல்லாம் கூடத்தில் ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார் அம்மா. அப்போதே மணி ஏழாகிவிட்டது இனி போகமுடியாது என்ற நிம்மதிப் பெருமுச்சுடன் குளிக்க ஆரம்பித்தேன்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

(யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை)

:):rolleyes:சரி சரி படம் எப்படி?? பிடித்திருந்ததா?? நானும் சம்சாரி தானுங்க வீட்டுக்கு வீடு வாசல்படி இதுகூட புரியாதா என்ன?? :rolleyes::)

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கேற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இங்கு தியேட்டரில் அலைமோதிய கூட்டத்தில் முக்கால்வாசி இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள். அவர்கள் திரையில் ரஜனி தோன்றும் போதெல்லாம் விசிலடித்து ஆர்ப்பரித்தது இன்னுமொரு ஆச்சரியம். ஏதோ புதிதாக வந்த சிலந்திமனிதன் படத்தை பார்த்தது போல் சந்தோசம் அவர்களுக்கு. :):rolleyes:

ஆமாம் இங்கேயும் இதே நிலை தான் நடந்தது...........இவர்களுக்கு ரஜனியை அற்றி சொல்லி கொடுத்தது யார்??அவர்களின் பெற்றோர்கள் தானே............தாங்கள் புறகணித்து கொண்டு பிள்ளைகளை பார்க்க விட்டவையோ??நம்மால முடியாது பாருங்கோ வாயளவில் கதைக்க மட்டும் தான் எம்மால் முடியும்............சிவாஜியை புறகணிபோம் ஆனால் ஸ்ரெயா கட்டின சேலை வாங்க வேண்டும் என்று ஓடுவோம் இப்படி இருக்கும் போது.................வேற என்னத்த சொல்ல

B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் இப்ப நான் சிவாஜி பற்றிய விமர்சனத்துடன் உங்கள் முன்...........

சபாஷ் ஜமுனா, மிகத் துணிச்சலாக உண்மையை உறைக்கும் படி உரத்துச்சொன்னதுக்கு ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்!

இந்த விடயத்தில் நான் உங்கள் பக்கம்!. இப்போதும் அல்ல எப்போதுமே தென்னிந்திய நடிகர்களுக்கு அரசியல் சாயம் பூசுவதை நான் விரும்புவதில்லை!.

உங்கள் கருத்து! வெகு சிறப்பு! :)

Link to comment
Share on other sites

:):rolleyes:சரி சரி படம் எப்படி?? பிடித்திருந்ததா?? நானும் சம்சாரி தானுங்க வீட்டுக்கு வீடு வாசல்படி இதுகூட புரியாதா என்ன?? :rolleyes::)

"யாவும் கற்பனை இல்லை, பாதி உண்மை" என்று கூறி நான்தான் உங்களை குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

ஆரம்பித்த போது சிவாஜியை மட்டும் புறக்கணிப்பது என்றிருந்த என் முடிவு இப்போது தென்னிந்திய தமிழ் சினிமாக்களையே பார்ப்பதில்லை! என்பது வரை வியாபித்து நிற்கிறது. ஏற்கனவே பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டி இரவு நேர தொலைக்காட்சி தொடர்களுக்கு என்வீட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே

மேற்குறித்த கூற்று 100% உண்மை. கொஞ்சம் சுவை சேர்ப்பதற்காக சில சம்பவங்களை மாற்றி அமைத்தேன் அவ்வளவே!

அண்மையில் Will Smith நடித்த "The Pursuit of Happyness" என்ற படம் பார்த்தேன், மிகவும் நல்ல படம். இது ஒரு உண்மைக்கதை! முதன் முதலாக Will Smith சோகமாக நடித்த படம் இதில் ஒரு சாதாரண விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சம்சாரியை பற்றியது. The Pursuit of Happyness தவறாமல் இதனை பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.