Jump to content

அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்

 
%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%
 35 Views

கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. “இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா.

இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள ஆற்றாமை, குழறல் இலங்கையில் நடைபெறும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குள் இருந்து மீளமுடியாமல் முஸ்லிம்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றது.

“நான் மனமுடைந்துள்ளேன். வெறுப்புணர்வின் எல்லையைக் கடந்து விட்டேன்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், “நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் கோட்டாபய அரசாங்கம் செல்லும் பாதையையும், யார்த்த நிலைமையையும் இது வெளிப்படுத்துகின்றது.

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை (உடல்களை) அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்ற சர்ச்சை இலங்கை அரசியலில் உச்ச நிலையில் இருந்த போதுதான் அந்த 20 நாள் குழந்தை கொழும்பிலுள்ள லேடி றிச்வே வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தது.  மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மரணத்துக்குக் காரணம் கொரோனா எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து குழந்தையின் தந்தையிடம் சில ஆவணங்களில் கையொப்பமிடுமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், தந்தை மறுத்துவிட்டார். தொடர்ந்தும் அவர்கள் வலியுறுத்தியதால், குழந்தையின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவர் வெளியேறி விட்டார். பின்னர், குழந்தையின் உடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யபடுவதாக தந்தைக்குத் தெரிவிக்கப்பட்டது. தந்தை உடனடியாக மயானத்துக்கு ஓடிச்சென்ற போதிலும், தனது குழந்தை தகனம் செய்யப்படுவதை அவர் பார்க்க விரும்பவில்லை. பார்க்கும் மன நிலையில் அவர் இருக்கவில்லை.

PicsArt_11-30-12.59.18.jpg

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது அவர்களது வழமை. இஸ்லாத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. பாவம் செய்பவர்களை மட்டுமே தகனம் (எரித்தல்) செய்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால்தான்,  “அந்த 20 நாள் குழந்தை என்ன பாவம் செய்தது?” என்ற கேள்வியை அலிஸாஹிர் மௌலானா எழுப்பியிருந்தார்.

குழந்தையின் மரணத்தையடுத்து கொரோனா வைரஸினால் மரணமடையும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற சர்ச்சை பாராளுமன்றத்தில் மீண்டும் எதிரொலித்துள்ளது. பிரச்சினை இலங்கையின் எல்லையைத் தாண்டி சர்வதேச அரங்கிலும் பேசுபொருளாகியிருக்கின்றது.

திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், இவ்விடயத்தில் முஸ்லிம்களுடைய கரிசனையை வெளிப்படுத்தியதுடன், “அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது” என்று அரசாங்கம் நியமித்த தொழில் நுட்பக் குழுவின் பிடிவாதமான நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தினார். தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தின் பின்னணி குறித்த பல கேள்விகளை அவரது உரை எழுப்பியிருக்கின்றது.

இவ்விடயத்தில் மனித உரிமை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்து விட்டது. தகனம் செய்வதைத்தான் கட்டாயமாக்கியிருக்கின்றது. சிறுபான்மையினரின் மத நம்பிக்கைக்கு எதிரான இந்த ஒடுக்குமுறை இப்போது சர்வதேச கவனத்தையும் பெற்றுவிட்டது.

இலங்கையில் கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தப் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாகத்தான் இருந்து வருகின்றது. இந்த விடயத்தில் தமக்கு இருக்கக்கூடிய பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுவதற்கான உபாயமாகத்தான் தொழில்நுட்பக் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்ததா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து விட்டது. உண்மையில், பிரச்சினை சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டது அல்ல. இது அரசியல் ரீதியான ஒரு பிரச்சினை. இதனை அரசியல் ரீதியாகத்தான் அணுக வேண்டும்.

அரசாங்கம் இவ்விடயத்தில் நழுவல் போக்கிலேயே செயற்படுகின்றது. அதனை சவாலுக்கு உள்ளாக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியளவுக்கு முஸ்லிம் தலைமைகளும் பலமானதாக இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிகழ்வுகள் முஸ்லிம்களை முற்றகவே வலுவிழக்கச் செய்து விட்டது.

“இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் மத உரிமைகளை உறுதி செய்வதற்கும், அவர்களுடைய பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏதுவான வகையிலேயே அரசாங்கம் செயற்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவும் உறுதியளித்திருந்தாலும் கூட, நிலைமைகள் அவ்வாறில்லை.

ஆனால், “கொரோனா வைரஸினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான தீர்மானம் சுகாதாரப் பிரினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை” எனவும் மஹிந்த கூறியிருப்பது அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதைத்தான் உணர்த்துகின்றது.

கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூட கூறியிருக்கின்றது. இதன் அடிப்படையில் 180 இற்கும் அதிகமான நாடுகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமையைக் கொடுத்திருக்கின்றன. “மரணிப்பவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் ஒருபோதும் நீருடன் பரவப்போவதில்லை” என உலக சுகாதார அமைப்புடன் சம்பந்தப்பட்ட மருத்துவர்களே தெளிவாகக் கூறிவிட்டனர்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது அதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இதற்குப் பின்னரும் தொழில்நுட்பக் குழு எடுத்த தீர்மானமும், அத்தீர்மானத்தைத்தான் நடைமுறைப்படுத்தப் போவதாக அரசாங்கம் சொல்லிக்கொள்வதும், முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. “ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கான செயற்பாடா இது?” என பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் கேள்வி எழுப்பியிருப்பது அனைத்து முஸ்லிம் மக்களினதும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது.

“ஒரு நாடு, ஒரு சட்டம்” என்பதைத் தமது பிரதான கோசமாக முன்வைத்திருக்கும் கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கம், சிறுபான்மையினருடைய மத நம்பிக்கைகளுக்கு இடமளிக்கும் ஒரு நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. பௌத்த மதக்கோட்பாடுகளின் அடிப்படையில்தான் அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. தற்போதைய அரசாங்கம் அந்த அடிப்படையில்தான் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு பௌத்த மதம் தவிர்ந்த அனைத்தும் மதங்களும் இரண்டாம் பட்சம்தான். அதுபோலத்தான் மத நம்பிக்கைகளும். மற்றொரு மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு இடமளிப்பது அதற்கான அங்கீகாரத்தைக் கொடுப்பதாக அமைந்துவிடும் என்ற அச்சம் பௌத்த மதத்தினரிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை இலக்கு வைத்த செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அமைக்கப்படும் குழுக்கள் கூட, அரசாங்கத்துக்குச் சங்கடத்தைக் கொடுக்கும் முடிவுகளை எடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் அவற்றின் பணியாக இருக்கும். அந்தவகையில்தான் அரசாங்கம் நியமித்த தொழில்நுட்பக்குழு கூட, அரசு விரும்பக்கூடிய பதிலைத்தான் கொடுத்திருக்கின்றது.

அலி ஷப்ரி என்ற முஸ்லிம் ஒருவரையே நீதி அமைச்சராக நியமித்திருக்கும் நிலையில்தான் இந்த செயற்பாட்டை கோட்டாபய முன்னெடுக்கின்றார். தமிழ் மக்களின் குரல் வளையை நெரித்த பேரினவாதம் இப்போது முஸ்லிம் மக்களுடைய குரல் வளையை நெரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

 

https://www.ilakku.org/அந்த-20-நாள்-குழந்தை-செய்த-ப/

Link to comment
Share on other sites

  • உடையார் changed the title to அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்
  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ அந்த பிள்ளையை அரசு உயிரோடு கொலை செய்த  துள்ளுகிறார்கள் ...எத்தனை தமிழ் குழந்தைகள் தாயின் வயிற்றினில் இருக்கும் போது கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்...ஒரு கண்டனம் ,அனுதாபம் தெரிவித்து இருப்பார்களா?  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னவோ அந்த பிள்ளையை அரசு உயிரோடு கொலை செய்த  துள்ளுகிறார்கள் ...எத்தனை தமிழ் குழந்தைகள் தாயின் வயிற்றினில் இருக்கும் போது கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்...ஒரு கண்டனம் ,அனுதாபம் தெரிவித்து இருப்பார்களா?  
 

இது எப்ப எங்கு நடந்தது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.