Jump to content

செயற்கை உடல்வலு, நுண்ணறிவு மூலம் படைகளைப் பலப்படுத்த பச்சைக்கொடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை உடல்வலு, நுண்ணறிவு மூலம் படைகளைப் பலப்படுத்த பச்சைக்கொடி!

 
  • பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன்

ரபுப் போர் முறை வடிவங்கள் அடியோடு மாற்றம் பெறவுள்ளன.மனிதனிடம் இயற்கையாக உள்ள உடல், உள நுண்ணறிவு வலுக்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது இனிமேல் காலங்கடந்த பழைய தத்துவம் ஆகிவிடப்போகிறது.

994-2.jpgஇயற்கைக்குப் புறம்பாக உருவாக்கப்படும் “பயோனிக்” வீரர்களும் (bionic soldiers) செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட(artificial intelligence) துப்பாக்கிகளும் மோதுகின்ற அரங்குகளாகப் போர்க்களங்கள் மாறப்போகின்றன.

எதையும் நிச்சயித்துக் கூறமுடியாத தொற்றுநோய்ப் பேரனர்த்தம் உலகைச் சூழ்ந்துள்ள நிலைமையிலும் கூட படைவலுப் பெருக்கங்களும் பரீட்சார்த்த சோதனைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பிரான்ஸின் ஆயுதப் படைகளில் செயற்கையாக உடல்வலு, நுண்ணறிவு ஊடப்பட்ட வீரர்களை உருவாக்குவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கிறது.

எதிர்காலப் போர்க் களங்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் “மேம்படுத்தப்பட்ட சிப்பாய்களை” (enhanced soldiers) உருவாக்குவதற்கான உயிரியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு ஆயுதப்படைகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

நவீன இராணுவ உத்திகளை வகுப்பதற்காக அரசினால் அமைக்கப்பட்ட நெறிமுறை வல்லுநர் குழு(ethical experts) ஒன்று இந்த வாரம் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.

படைவீரர்களது உடல்வலு, அறிவாற்றல் , புலணுணர்வு மற்றும் உளவியல் திறன்களை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உள்ளீடுகள் (implants) மூலம் செயற்கையாக மேம்படுத்துவதே புதிய திட்டமாகும்.

காயங்களின் வலிகளைத் தாங்குதல், ஒலிகளைச் செவிமடுக்கும் திறனைக் கூட்டுதல், களைப்பு, மன அழுத்தம், தனிமை உணர்வு என்பனவற்றை நீக்குதல் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளும் இவற்றில் அடங்குகின்றன.

ஏனைய சக்தி மிக்க நாடுகளைப்போன்று பிரான்ஸும் பயோனிக் சிப்பாய்களையும் (bionic soldiers) வலுவுள்ள சுப்பர் படைவீரர்களையும் (super soldiers) கொண்டிருக்கத் தக்க வகையிலான எதிர்கால இராணுவ உத்திகளை இத் திட்டங்கள் உள்ளடக்குகின்றன.

தற்போது இராணுவத்திடம் இத்தகைய திட்டங்கள் இல்லை என்றபோதிலும் எதிர்காலம் அவற்றை நோக்கியே உள்ளது என்று நாட்டின் இராணுவ அமைச்சர் கூறியிருக்கிறார்.

படை வீரர்களை செயற்கையாக மேம்படுத்துகின்ற இவைபோன்ற திட்டங்களை அமெரிக்காவும் சீனாவும் ஏற்கனவே தொடங்கி விட்டன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்றி ஒன்றினது மூளையை வெளியே இருந்து கணனி மூலம் கட்டுப்படுத்தும் அதி நவீன உயிரியல் தொழில் நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருந்தது. அதே போன்று மண்டை ஓட்டினுள் செருகப்படக்கூடிய ஒரு சிறு கருவி (microchip) மூலம் மனித மூளைக்கு வெளியே இருந்து கட்டளைகளை வழங்கும் ஆராய்ச்சிகளிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க இராணுவம் மனித மூளையை கணனியுடன் இணைக்கும் நவீன ஆராய்ச்சிகளுக்காக பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட்டு வருகிறது.

அண்மையில் ஈரானிய அணு விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட- முக அடையாளம் (face-recognition)கண்டறியும் சூம் (Zoom) கமெராவுடன் கூடிய தானியங்கித் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டிருக்கிறார் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

காரில் 25 சென்ரி மீற்றர் இடைவெளியில் அமர்ந்திருந்த அவரது மனைவிக்கு சின்னக் கீறல் கூட விழாதவாறு விஞ்ஞானியின் முகத்தை மட்டும் சரியாக அடையாளம் கண்டு சுட்டுத் தள்ளியிருக்கின்றது அந்த நவீன துப்பாக்கி.

விஞ்ஞானியின் முகத்தை மட்டும் சூம் கமெரா மூலம் சரியாக அடையாளம் கண்டு (face-recognition) தன்பாட்டில் செயற்பட்டிருக்கிறது அத் துப்பாக்கி.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஊட்டப்பட்ட இத்தகைய ஆயுதங்கள் புழக்கத்துக்கு வந்திருப்பது உலக அளவில் ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தற்சமயம் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிடக்கூடிய இத்தகைய நவீன ஆயுதங்களின் பாவனை உலகத்தை நினைத்துப்பார்க்க முடியாத அச்சுறுத்தலுக்குள் தள்ளிவிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) ஒருபோதும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒப்பமிட்ட ஆவணம் ஒன்று வலியுறுத்துகிறது.

மறைந்த விஞ்ஞானி பேராசிரியர் ஸரீபன் ஹாக்கிங் (Stephen Hawking) தலைமையிலான அறிவியலாளர்களது அந்தக் கோரிக்கை புறந்தள்ளப்படுவதை தற்போதைய உலக இராணுவ நடப்புகள் கோடிகாட்டுகின்றன.

 

https://thinakkural.lk/article/97596

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.