Jump to content

கூகுள் சேவைகள் ஸ்தம்பிதம் சைபர் தாக்குதல் காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள் சேவைகள் ஸ்தம்பிதம் சைபர் தாக்குதல் காரணமா?

 
  • கார்த்திகேசு குமாரதாஸன்

மெரிக்காவின் பல்தேசிய இணையத் தொழில் நுட்ப ஜம்பாவானாகிய கூகுள் நிறுவனத்தின் சேவைகள் உலக அளவில் இன்று பல மணிநேரம் முடங்கி உள்ளன.இதனால் பல நூறு மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

google.jpgயூ டியூப் (YouTube) , ஜீமெயில்(Gmail) , மற்றும் கூகுள் ட்ரைவ் (Google Drive) அன்ரொயிட் பிளேய் ஸ்ரோர் (Android Play Store,) கூகுள் மப்ஸ் (Maps) உட்பட தொடர்புடைய பல சேவைகள் முடங்கி உள்ளன.

கூகுள் வரலாற்றில் இத்தகைய சேவை முடக்கம் மிக அரிதான ஒன்றாகும்.

பிரான்ஸில் இன்று காலை முதல் மதியம் வரை 12 மணித்தியாலங்களுக்கு கூகுள் சேவைகளில் குழப்பம் காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் நாளாந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூகுள் சேவைகளின் இந்தக் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவர வில்லை.

பராமரிப்புகளில் ஏற்பட்ட தவறா அல்லது பிரமாண்டமான அதன் வலைப்பின்னல் மீது நடத்தப்பட்ட மாபெரும் சைபர் தாக்குதலா காரணம் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் தனிநபர்களதும் நிறுவனங்களினதும் நாளாந்தப் பணிகளை முடக்கியுள்ள இந்த ஸதம்பிதத்துக்குக் காரணம் என்ன என்பதை கூகுள் நிறுவனம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

 

https://thinakkural.lk/article/97978

Youtube - நேற்று இரவு இங்கு வேலை செய்யவில்லை 🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.