Jump to content

இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவனிடம் எதோ இருக்கிறது - ஆர்.வி. லோஷன்

image-19.png

எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்தின் பங்களிப்பு பற்றி, இலங்கையின் சிரேஷ்ட வானொலிக் கலைஞர் ஆர்.வி.லோஷன் முகநூலில் எழுதிய குறிப்பை வாசகர்களுக்காக தருகிறது வணக்கம் லண்டன்.. உண்மையில் இவரிடம் ஏதோ இருக்கிறது…

“எம்மில் அநேகருக்கு எமக்கு பிடித்த விடயங்களை மட்டுமே வாசிக்க, கேட்கப் பிடிக்கும்

கற்பனை உலகத்தில் எமக்குப் பிடித்தவை பிறகு பொய்யாகிவிடும் எனத் தெரிந்தும் அவற்றுள் வாழ்வதில் இப்போதைக்கு சுகம் காணலாம், பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம் என்றிருந்துவிடுவோம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் – ஒரு போட்டியாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று காத்திருந்து மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டான் இந்த இளம் சுழல்.

கிடைத்த வாய்ப்புக்களில் பலரையும் ஈர்த்திருக்கிறான்.

திறமை இருக்கிறது, ஆற்றலும் இன்னும் கற்றுக்கொண்டால் அனுபவத்தின் மூலமாக மெருக்கூட்டிக்கொள்வான் என்று அனைவருக்குமே நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த மூன்றாவது போட்டி தான் வியாஸ்காந்த் இந்தப் பருவகாலத்தில்

Jaffna Stallions க்காக ஆடிய கடைசிப் போட்டி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். (என்னுடைய Jinx வாயினால் இது மாறினால் மகிழ்ச்சியடையப்போகின்ற முதலாமவன் நானே )

காரணம் Knock outsக்குத் தேவையான அணியின் பலமான சமநிலையைப் பேண சரியான combinationஐ தேடுவதற்கு முதல் நான்கு போட்டிகளை வென்ற பிறகு ஒவ்வொரு போட்டியையும் JS பயன்படுத்திக்கொண்டது.

முக்கியமான, முன்னணி வீரர்கள் அனைவரும் பூரண உடற்தகுதியோடு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டால், இன்றைய அரையிறுதிக்குத் தமது மிகச்சசிறந்த பதினொருவரையே அவர்கள் தெரிவு செய்துகொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

திசர, அவிஷ்க, வனிது, தனஞ்சய டீ சில்வா, லக்மல், அசலங்க ஆகிய உறுதியான வீரர்களோடு, Shoaib Malik, Duanne Olivier, Usman Shinwari, Charles (or Moores) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் உறுதியான நிலையில், அந்தப் பதினோராவது இடம் எங்களுக்கு கொஞ்சம் ஆசையைக் காட்டினாலும், அதில் மினோத் பானுக அல்லது சத்துரங்க டீ சில்வாவைப் பயன்படுத்துவார்கள் என்பது உறுதி.

வியாஸ்காந்துக்கு இந்த மூன்று போட்டி அனுபவமும், இந்த ஒரு மாத கால பயிற்சிகளும் அறிமுகமும் புதிய வழியைக் காட்டியிருப்பதோடு, தொடர்ந்து வரும் காலங்களில் டினோஷன், கபில்ராஜ், விஜயராஜ், தேனுரதன் மட்டுமில்லாமல் வேறு மாவட்டங்களில் இருந்தும் நம்மவர்களை அடையாளம் காட்டும் என்று நம்பலாம்.

காரணம் வியாஸ்காந்த் தான் விளையாடிய போட்டிகளில் காட்டிய அந்தப் பெறுபேறு இவனிடம் எதோ இருக்கிறது..

இவனைப் போன்றே இவனோடு வந்த மற்றவர்களிடமும் நிச்சயம் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

Teen age, பாடசாலை கிரிக்கெட், matting cricketஇலிருந்து வந்தவன், பதினோராம் இலக்கக்கத்தில் துடுப்பு பிடிக்கத் தெரியுமா என்ற பார்வைகளை எல்லாம் உடைத்தெறிந்தான், கிடைத்த சொற்ப வாய்ப்புக்களில்.

என்ன இன்னும் கொஞ்சம் களத்தடுப்பிலும் கலக்கியிருந்தால் முதல் தெரிவுகளில் ஒருவனாக எப்போதுமே இருக்கக்கூடியவன் தான்.

ஆனால் இது way too early. Just first introduction season.

இந்த LPL season இப்போதைக்கு அவனுக்கான visiting card.

அடுத்த #LPL 2021 ஜூலை – ஓகஸ்ட்டில் திரும்பும்போது இன்னும் புதிய Spin variation ஆயுதங்களோடும், துடுப்பாட்டத்தில் புதிய நேர்த்தியோடும், தான் இன்னும் செப்பனிடவேண்டிய களத்தடுப்போடும் ஒரு மேம்பட்ட சகலதுறை வீரனாக வியாஸ்காந்த் திரும்புவான் என்று நம்புகிறேன்.

இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் இன்னொரு match winning leg spinner தேவை என்பதை அழுத்தமாக VV உள்வாங்கிக்கொள்வான் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை

வனிது மட்டுமில்லை வியாஸும் இருக்கிறான் என்று திசரவும் கண்டம்பியும் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவனது முன்னேற்றம் இருக்கவேண்டும்.

அத்துடன் இந்த Jaffna Stallions, Lanka Premier League ஓடு வியாஸ்காந்த் நின்றுவிடப்போவதில்லை.

(டெஸ்ட் கிரிக்கெட்டில் வியாஸ்காந்த் விளையாடவேண்டும் என்பதே எனது மிகப்பெரும் அவா. அதற்கான முழுமையான ஆற்றலைப் பார்க்கிறேன்.)

தேசிய அணியில் ஒரு நிரந்தர இடத்தைக் குறிவைக்க இந்த ஏழெட்டு மாதங்களுக்கு அவன் சரியான அடித்தளத்தை இந்த அனுபவத்தையும் அறிமுகங்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தனது வளர்ச்சியையும் இருப்பையும் தக்கவைக்கும் கழகம் ஒன்று தேவை. #JaffnaStallions நிர்வாகம் இதற்கான அடித்தளத்தை முன்னெடுக்கும், முன்னெடுக்கவேண்டும்.

மற்ற நால்வருக்கும் கூட இந்த வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பாடசாலை காலத்துக்குப் பின்னதான கிரிக்கெட்டைத் தொழில்முறையாக முன்னெடுக்கும் நம்பிக்கையை எதிர்காலத் தலைமுறைக்கு ஊட்டலாம்.

" களமும் காலமும் அமைந்திருக்கிறது.

காத்திருக்கிறேன்..

என்னாலான, எம்மாலான உதவி, ஒத்துழைப்புக்கள் எப்போதும் போல கேட்காமலே கிடைக்கும்.”

https://vanakkamlondon.com/stories/2020/12/94715/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.