Jump to content

2008இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினர்: பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2008இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினர்: பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது இன்று வழக்கு விசாரணை

 
Untitled-1-696x289.jpg
 57 Views

2008இல் விடுதலைப் புலகளுக்கு ஆதரவாக பேசியதாக பெ.மணியரசன், சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை, ஈரோடு நீதிமன்றில் இன்று காலை இடம்பெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 டிசம்பர் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு. சீமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் மீது அப்போதைய தி.மு.க. அரசு வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தது.

கோவை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்மூவரும் பின்னர் பிணையில் விடுதலை ஆனார்கள். தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (17.12.2020) காலை ஈரோடு நீதிமன்றத்தில் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நேர்நின்றார். நீதிபதி மணிவேல் அவர்கள் இவ்வழக்கு விசாரணையை 05.01.2021 அன்று ஒத்தி வைத்தார்

 

https://www.ilakku.org/?p=37466

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...கறுமமே, 12 வருசமாய் இந்த வழக்கு நடக்குதா? 🥸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அட...கறுமமே, 12 வருசமாய் இந்த வழக்கு நடக்குதா? 🥸

தேர்தல் வரும் நேரம் இந்த வழக்குகளை வைத்து வாயை அடைக்கப்பார்ப்பினம் இந்த வழக்கு போகும் திசையை வைத்து கண்டுபிடிக்கலாம் திமுகா காங்கிரஸ் உடன் கூட்டணி இருக்குமா இருக்காதா என்று பிஜேபி என்ன மெண்டலுகளை வைத்தும் தமிழ்நாட்டில் உள்ள வரணும் என்பதில் ஒத்தைக்காலில் நிக்கினம் .

Link to comment
Share on other sites

இப்படியாக வழக்குகளை வாங்கி அலைந்து திரிகிறார்கள். இதை எம்மில் சிலர் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. நாம் கவனத்துடன் முன் நகர்ந்து செல்வோம். 🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

இப்படியாக வழக்குகளை வாங்கி அலைந்து திரிகிறார்கள். இதை எம்மில் சிலர் தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. நாம் கவனத்துடன் முன் நகர்ந்து செல்வோம். 🚶🏻‍♂️

நீண்ட நாட்களுக்கு பிறகு தோழரை கண்டதில் மகிழ்ச்சி.!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.