Jump to content

நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன்

Screenshot-2020-12-17-23-09-06-729-com-a

1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில் 'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தினர். தேசிய சேவையில் கணீரென ஒலிக்கும் செந்தில்மணி மயில்வாகனம், வர்த்தக சேவையில் ஒலிக்கும் மயில்வாகனன் ஆகியோரின் குரல்களுக்கு ஒரு தனித்துவமான பிரபலம் நிலவியது. அவர்கள் காலத்திலும் சரி, அவர்கள் காலத்துக்குப் பின் வந்த காலப் பகுதியிலும் சரி, அவர்களுடன் பணியாற்றிய அவர்களுக்குப் பின் பணியாற்றிய இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கெனத் தனிப்பாணி கொண்டவர்களாகவும் ஒவ்வொருவரும் மக்கள் மனதில் உயர்வான இடத்தை வகித்தவர்களாகவும் தாம் சார்ந்த துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி மேலும் மேலும் தமது திறமையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் இலங்கை வானொலியின் பெருமையை உச்ச நிலைக்கு உயர்த்தியவர்களாகவும் விளங்கினர். அந்நாட்களில் இலங்கை வானொலியே அனைவராலும் விரும்பிக் கேட்கும் வானொலியாக விளங்கியமைக்கு அவர்களின் அர்ப்பணிப்பான பணியே காரணம் என்றால் மிகையாகாது.

1922ல் தபால் தந்தித் திணைக்களத்தில் பொறியியலாளராகக் கடமையாற்றிய எட்வேட் ஹப்பர் என்பவரால் தபால் தந்தித் திணைக்களத்தில் ஒரு அறையில் ஒரு ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்பட்டு பரீட்சார்த்தமாக இயக்கப்பட்டது.

16.12.1925ல் அப்போது ஆளுராயிருந்த கியூ கிளிபேட் என்பவரால் 'கொழும்பு வானொலி' என்ற பெயரில் வெலிக்கடையில் உள்ள கட்டிடமொன்றில் ஒலிபரப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச ஒலிபரப்புச் சேவையான லண்டன் பி.பி.ஸி. ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் மட்டும் இடம்பெற்ற இச்சேவை இரண்டாம் உலக யுத்தம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையினரின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

எனினும் இது மீண்டும் 1949ல் மக்கள் சேவையாக இலங்கை வானொலி என்ற பேரில் மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. 1966ல் இது கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு சுதந்திர அமைப்பாக இயங்க ஆரம்பித்தது. 22.06.1972ல் இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயர் மாற்றப்பட்டதுடன் மும்மொழிகளிலும் ஒலிபரப்பு நேரங்கள் அதிகரிக்கப்பட்டன.

1950இல் வர்த்தக சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்பு இலங்கையில் மட்டுமின்றி தமிழர்கள் வாழுமிடமெங்கும் விரும்பிக் கேட்கப்படும் வானொலியாக இலங்கை வானொலி மாறியது. அதன் முதல் அறிவிப்பாளராகப் பணியாற்றிய மயில்வாகனனின் அறிவிப்புகளும் அவர் நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் ஒலிபரப்பிய விதங்களும் மக்களுக்கு இலங்கை வானொலி பற்றிய பெரும் அபிமானத்தை உருவாக்கின. வர்த்தக சேவை சினிமாப் பாடல்களையும் விளம்பரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்ட முறைகள் பயனுள்ள வகையிலும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தன.

இலங்கை வானொலி கலை இலக்கியத்துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியதும் காத்திரமானதுமாகும். பல்வேறு துறைகளிலும் ஆற்றல் பெற்ற கலைஞர்கள், இலக்கியவாதிகள் அங்கு பணியாற்றி தங்கள் ஆற்றலால் வானொலியின் தரத்தை உயர்த்தியதுடன் பல புதிய கலைஞர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை வளர்த்து உயர்நிலை அடையவைக்கும் வகையிலும் பணியாற்றினர்.

வர்த்தக சேவையில் சினிமாப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும் தேசிய சேவை மூலம் கர்நாடக இசைக் கச்சேரிகள், தவில் நாதஸ்வரம், வயலின் போன்ற வாத்திய நிகழ்ச்சிகள் என்பன மூலம் பல சாஸ்திரீய சங்கீதக் கலைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்பட்டனர்.

இன்னொருபுறம் கிராமிய நிகழ்ச்சிகள் மூலம் விவசாயம், எமது பண்பாட்டு வாழ்வியல் அம்சங்கள் என்பன தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டதுடன் நாட்டார் பாடல்களும் இணைக்கப்பட்டன. இன்னொருபுறம் வி.வி.வைரமுத்துவின் அரிச்சந்திரா மயான காண்டம், பொன்.விவேகானந்தனின் காந்தவராயன் கூத்து உட்படப் பல பாரம்பரிய மேடை நாடகங்கள் வானொலிக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. அதேபோன்று வில்லுப்பாட்டுகள், கதாப்பிரசங்கங்கள், மலையகத்தின் காமன் கூத்து போன்றவற்றுக்கும் முக்கிய இடங்கள் வழங்கப்பட்டன.

மெல்லிசைப் பாடல்களில் இலங்கை வானொலியின் சாதனைகள் அற்புதமானவை. தென்னிந்திய சினிமாப் பாடல்களின் ஆதிக்கம் நிலவிய போதே மக்களின் அபிமானம் பெற்ற பல பாடல்கள் உருவாக்கப்பட்டன. கலாநிதி சண்முகலிங்கனால் எழுதப்பட்டு எஸ்.கே.பரராஜசிங்கத்தால் பாடப்பட்ட 'சந்தனமேடையின் இதயத்திலே' என்ற பாடல் இன்று வரைப் பிரபலமாக விளங்குகிறது. முத்துச்சாமி, ரொக்சாமி, செல்வராஜா, லத்தீப் போன்ற இசையமைப்பாளர்களும் முத்தழகு, கலாவதி போன்ற பாடகர்களும் இலங்கை வானொலி மூலமே வெளிக்கொண்டுவரப்பட்டனர். இப்போது அவர்களெல்லாம் சிங்கள சினிமாவில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், விவாத மேடைகள் என்பன மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் இலகுவான மொழியில் வழங்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டன. பல சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகப் பிரதி இயக்குனர்கள் இலங்கை வானொலி மூலம் அறிமுகமாகியே பின்பு பிரபல படைப்பாளிகளாக உயர்வு பெற்றனர். இன்று பிரபலமாக விளங்கும் சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் வர்த்தக சேவையின் 'இசையும் கதையும்' நிகழ்ச்சியூடாகவே இலக்கிய உலகில் பிரவேசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பான சமய நிகழ்ச்சிகள், சமய போதனைகள் என்ற வட்டத்திற்குள் முடங்கி விடாமல், பண்ணிசை, கதாகாலட்சேபங்கள், பாடல்கள். நாடகங்கள், வில்லுப்பாட்டு என்ற பல்வேறு பக்திரசம் கொண்ட அம்சங்களை உள்ளடக்கி கலைத்துவம் கொண்டவையாக விளங்கின.

அந்த நாட்களில் நண்பர் ஒருவர் இலங்கை வானொலியின் நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும்போது 'வேறு வானொலிகளில் நாம் நாடகங்களைக் கேட்பதுண்டு. ஆனால் இலங்கை வானொலியில் நாடகங்களைக் கேட்பது மட்டுமின்றிப் பார்க்கவும் முடியும். காதுகளுக்கும் பார்க்கும் சக்தியைக் கொடுக்கும் வல்லமை இலங்கை வானொலி நாடகங்களுக்கு உண்டு' என்றார். அவர் கூறியது நூறு வீதம் உண்மை. நாடகங்களின் தயாரிப்பு, நெறியாள்கை, ஒலிச்சேர்க்கைகள் என்பனவுடன் நடிகர்கள் தங்கள் குரல் மூலம் வெளிப்படுத்தும் உணர்வுகள் என்பன கேட்பவர்களுக்கு நாடகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.

அந்நாட்களில் ஒலிபரப்பான கிராம சஞ்சிகை என்ற நிகழ்ச்சியில் விதானையார் வீட்டில், லண்டன் கந்தையா என இரு நாடகங்கள் 'சானா' என்றழைக்கப்பட்ட சண்முகநாதன் தயாரிப்பில் அடுத்தடுத்து ஒலிபரப்பப்பட்டன. அவை யாழ்ப்பாண சமூகத்தின் இயல்பான பேச்சு மொழி, ஒரு கிராமிய வாழ்வு, மரபு வழியான பழக்க வழக்கங்கள், போலிப் படாடோபம் என்ற விடயங்களை நடிகர்களின் நடிப்பாற்றல் மூலம் கண்ணில் கொண்டு வந்து நிறுத்துமளவுக்குத் தத்ரூபமாக விளங்கின. பின்னாட்களில் உலகப் புகழ்பெற்ற மேதைகளான கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாயிருந்தபோது அவற்றில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானாவின் பின்பு நாடகத்துறையைப் பொறுப்பேற்ற எழுத்தாளரும் பிரபல மேடை நாடகக் கலைஞருமான கே.எம்.வாசகர் பல அற்புதமான நாடகங்களைத் தயாரித்தார். கே.எஸ்.பாலச்சந்திரன், ராஜகோபால், ஜவாகர், யேசுரத்தினம், தர்மலிங்கம், ஜோக்கின் பெர்னாண்டோ, விஜயாள் பீட்டர், யுனைதாபரீத், செல்வம் பர்னாண்டோ. அருமைநாயகம், மார்க்கண்டன் போன்ற ஒப்பற்ற கலைஞர்களின் ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து மறக்கமுடியாத நாடகப் படைப்புக்களைத் தயாரித்தார். சில்லையூர் செல்வராசனின் மூலக்கதைக்கு கதை, வசனம் எழுதி வாசகர் 'தணியாத தாகம்' என்ற பேரில் தொடர் நாடகமாகத் தயாரித்தார். அந்த நாடகம் ஒலிபரப்பாவதன் ஆரம்ப இசையாக 'அத்தானே அத்தானே' என்ற பாடல் ஒலிபரப்ப ஆரம்பிக்கும்போதே எங்கு நிற்பவர்களும் ஓடி வந்து வானொலியைச் சுற்றி இருந்து விடுவர். அந்த நாடகத்தின் கடைசிக் காட்சியில் கதாநாயகியின் சடலம் ஒரு வாங்கில் கிடத்தப்பட்டிருக்க தலைமாட்டில் குத்துவிளக்கு எரிய, மணியத்தார் திருவாசகம் படித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் அக்காட்சியை அருகில் இருந்து காண்பவர்கள் போன்று விம்மி விம்மி அழுததை என்னால் மறக்கமுடியாது. அது வாசகரின் ஆற்றல். அவ்வாறே வரணியூரானின் 'இரை தேடும் பறவைகள்' நேயர்களை தன்னுடன் கட்டி வைத்த நாடகங்களில் ஒன்றாகும்.

அதேவேளையில் மரிக்கார் ராமதாசால் எழுதப்பட்டு அப்துல் ஹமீதால் நெறியாள்கை செய்யப்பட்டு ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன் ஆகியோரின் நடிப்பில் உருவான கோமாளிகள், கோமாளிகள் கும்மாளம், ஏமாளிகள் போன்ற நகைச்சுவை நாடகங்களும் மிகவும் பிரபலம் பெற்றிருந்தன.

இன்னொருபுறம் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் அனைவராலும் விரும்பி ரசிக்கப்பட்டன. அஸ்வத்கான் எழுதிய, தயாரித்த நாடகங்கள் மிகவும் தரமாக அமைந்திருந்தன.

தேசிய சேவையில் கே.எம்.வாசகரின் பின்பு பி.விக்னேஸ்வரன், காவலூர் ராஜதுரை, ஜோர்ஜ் சந்திரசேகரன், வி.எச்.அப்துல்ஹமீத் ஆகியோர் நாடகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாணியில் ஒருவரை ஒருவர் வெல்லும் வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஜோர்ஜ் சந்திரசேகரன் எழுதித் தயாரிக்கும் நாடகங்கள் வித்தியாசமானவையாகவும் நவீன இலக்கியப் போக்கிற்கு உட்பட்டவையாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானொலி அறிவிப்புத் துறையில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவருமே கொடி கட்டிப் பறந்தவர்கள்தான். மயில்வாகனம் சர்வானந்தா, காதர், புண்ணியமூர்த்தி, விவியன் நமசிவாயம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், ரேலங்கி செல்வராஜா, ஜோக்கின் பெர்னாண்டோ, ஜுனைதா பரீத், இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, கனிஷ்டா, திருச்செல்வம், நாகபூஷணி போன்ற இன்னும் பலர் தங்களுக்கென நேயர் கூட்டங்களை வைத்திருக்குமளவுக்குக் குரலாலும் ஆற்றலாலும் மக்களை வசப்படுத்தி வைத்திருந்தனர். ஒரு காலத்தில் சினிமா உலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போல் கே.எஸ்.ராஜாவும் அப்துல் ஹமீத்தும் விளங்க ஜோக்கின் பெர்னாண்டோ ஜெமினி கணேசனாக ஒரு நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருந்தமையை மறந்து விடமுடியாது.

இவ்வாறு இலங்கை வானொலி செய்தி வழங்குவது, விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள், பாராளுமன்ற நடவடிக்கைகள், சர்வதேச அரசியல் என்பவற்றை தொகுத்துச் சிறந்த முறையில் வழங்குவது, இலக்கியப் படைப்புக்களைத் தயாரிப்பது, ஒலி பரப்புவது, கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களை வளர்ப்பது எனப் பல முனைகளிலும் ஒப்பற்ற சாதனைகளைப் படைத்து 95 வருடங்களைக் கடந்து வந்த இலங்கை வானொலியை மனமார வாழ்த்துகிறோம்.

அதேவேளையில் 1983இன் பின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது காத்திரத் தன்மையில் குறைவடைந்து வருவது பற்றி எமது வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். நிறுவனத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காட்டப்பட்ட இனப்பாகுபாடு காரணமாகப் பலர் வெளியேறி விட்டனர். மேலும் யாழ்.குடாநாட்டில் தேசிய சேவை தெளிவாகக் கேட்பதில்லை. சில நாட்களாக தென்றல் ஒலிபரப்பும் கேட்பதில்லை. எப்படியிருந்தபோதிலும் இலங்கை வானொலி கடந்த காலத்தில் கலை, கலாசார, இசை, இலக்கியத்துறைகளில் வழங்கிய பங்களிப்புகள் என்றும் மறக்கமுடியாதவை என்ற வகையில் மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்

http://aruvi.com/article/tam/2020/12/17/20488/

டிஸ்கி

கை வலிக்க சிலோன் இருக்கும் பக்கம் (எங்கட ஊரில் இருந்து தென் கிழக்கு திசை ) நோக்கி கை ரெடியோவை தூக்கி பிடித்து கேட்பது தனி கலை .. 

மலரும் நினைவுகள்  .. 😢..😢

மீண்டும் வராது ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.