Jump to content

அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும், 17 வருடங்களுக்கு முந்தைய எனது வெள்ளைமாளிகைப் பயண படிப்பினைகளும், நினைவுப் பகிர்வுகளும்


Recommended Posts

 

அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும், 17 வருடங்களுக்கு முந்தைய எனது வெள்ளைமாளிகைப் பயண படிப்பினைகளும், நினைவுப் பகிர்வுகளும் -
 
#ஞாபகங்கள் - இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க (Ravinatha aryasinha)அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
சர்வ மத பிரார்த்தனையின் பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்ற தூதுவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வோசிங்டனில் அமைந்துள்ள இலஙகை தூதரகம் தெரிவித்துள்ளது.
1988ல் இலங்கையின் வெளியுறவு சேவையில் இணைந்துகொண்ட ரவிநாத ஆரியசிங்க இதற்கு முன்னர் பல நாடுகளின் தூதுவராகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருக்குறார். குறிப்பாக September 2002ல் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் Washington, D.Cயில் அரசியல் விவகாரங்களுக்கான செயலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், முக்கியத்துவம் பெற்று விளங்கிய இந்தக் காலப்பகுதியிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தது.
அந்தக் காலப்பகுதியின் நினைவுகளை பின்னோக்கிச் சென்ற போது மனதில் தோன்றிய ஞாபகங்களே இந்தப் பதிவு.
செப்டம்பர் 13, 1961 இல் பிறந்த ரவிநாத ஆரியசிங்க 1984 ஆம் ஆண்டில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் 1990 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டம் பெற்றார். 2001-2002 ஆம் ஆண்டில் அவர் ஒரு ‘Hurst Fellow’வில் வோஷிங்டன் டி.சி.யின் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் சேர்வீஸில் (School of International Service (SIS), American University, Washington DC) “புலம் பெயர்ந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கு” குறித்தே இவரது ஆராய்ச்சி அமைந்திருந்தது.
இவ்வாறான ஒருவரையே அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தின் அரசியல் விவகாரங்களை கையாள Washington DCயில் இறக்கி இருந்தார்.
இதேகாலப்பகுதியில் 2002 யூனிலும், 2003 நவம்பரிலும் குறுகிய காலத்தில் 2 தடவைகள் அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பணயத்தை மேற்கொண்டிருந்தார்.
2003 நவம்பர் 3ல் அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களை வெள்ளைமாளிகையில் சந்திப்பதற்காக சென்ற போது சூரியன் எவ்.எம் வானொலி சார்பாக செய்தியாளனாக நானும் இணைந்துகொண்டேன்.
புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் செய்தியாளராக கலந்துகொண்ட நான், டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு, இலங்கைப் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் வெள்ளை மாளிகை பயணம், பிரித்தானிய பிரதமர் ரொணி பிளயர் அலுவலகத்திற்கான பயணம் ஆகியவற்றிலும் செய்தி சேகரிப்பாளனாக கலந்துகொண்டேன்.
ஒரு புறத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னேடுத்த, ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைவர் றணில் விக்கிரமசிங்க, மறுபுறத்தில் இராஜதந்திர ரீதியாக சர்வதேச அளவில் மிக நுணுக்கமான அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு இருந்தார். அதன் ஒரு பகுதியாகவே றணிலின் இரண்டாம் கட்ட அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இடத்தில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் குறிப்பிட்ட விடயம் கவனிக்கத்தக்கது.
1997ல் அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகளை இணைத்தது. எனினும் 23 பெப்ரவரி 2003 ல் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலர் ஆமிரேஜ் கூறும் பொழுது,
“விடுதலைப்புலிகள் தமது கடந்தகாலப் பயங்கரவாத உத்திகளுக்கு அப்பால் நகர்ந்து தமது நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, ஒரு அரசியல் தீர்வுக்கும் சமாதானத்திற்குமான பற்றுறுதியுடன் செயற்படுவதற்கான விருப்பையும் நடத்தையும் வெளிப்படுத்தினால் வெளிநாட்டு பயங்கரவாத நிறுவனங்களின் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் அமைப்பை அகற்றுவதனைப்பற்றி அமெரிக்கா நிச்சயமாகப் பரிசீலிக்கும்” என்றார்.
எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை முன்வைத்த பின்பே வன்முறைகளைக் கைவிட முடியும் எனக் கூறிய புலிகள் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் அனைத்து அழைப்புகளையும் நிராகரித்திருந்தனர்.
இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளின் ஊடாக புலிகளுக்குச் சொந்தமான ஏறத்தாள 4 பில்லியன் டொலர்கள் சர்வதேச அளவில் முடக்கப்பட்டன. இதனால் புலிகள் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட பல இராணுவ நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவைச் சந்தித்தனர். என ஆமிரேஜ் குறிப்பிட்டிருந்தார்
ஆயுதப்போராட்டத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருந்த புலிகள் அரசியல் தளத்தில் தம்மீது விரிக்கப்பட்டிருந்த சர்வதேச வலைப் பின்னலை அறிந்திருந்தனரா?
ஒன்ற‌ன் பின் ஒன்றாக புலிகளின் சர்வதேச இராணுவ வழங்கற்பாதைகள் அடைக்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட சமிக்கைகளை அவர்கள் புரிந்து கொண்டனரா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்ட ரீதியான அதிகாரத்தைக் கொண்ட சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட அரசாங்கம் ஒன்றையும், ஆயுதம் தாங்கிப் போராடும் அமைப்பு ஒன்றையும் ஒரே தராசில் வைத்து சர்வதேசம் நோக்காது என்ற யதார்த்தத்தை புலிகள் புரிந்திருந்தனரா?
இவை குறித்து தம்மீது இணைத்தலைமை நாடுகளாக தொழிற்பட்ட நோர்வே, யப்பான், அமரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெரிதும் சீற்றம் கொண்டிருந்ததை கணக்கில் எடுத்தனரா?
ஜோர்ஜ் புஷ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற புதிய உலக ஒழுங்குக்குள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற தமது செல் நெறி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் மிளாய்வு செய்தனரா? என்ற கேள்விகள் என்னுள் அப்போது எழுந்தன.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த அமெரிக்க பயணத்தின் போது செய்தி சேகரிப்பிற்குச் சென்றவர்களில் ஒருவர் மூத்த முஸ்லீம் ஊடகவியலாளரான அமீன் மற்றயது நான். நாமிருவர் மட்டுமே தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள். சுட்டுக்கொல்லப்பட்ட லசந்தவிக்கிரமதுங்க, ஸான் விஜயதுங்க, தினித், உள்ளிட்ட பல சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர்.
புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் தான் கடவுச் சீட்டை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்தேன். அமெரிக்க தூதரகமும் விரைவாகச் செயற்பட்டு பயண அனுமதியைத் தந்தது. வாசிங்டன் சென்று அங்கிருந்து அனைவரும் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்வதற்கான ஒழுங்கை இலங்கை வெளிநாட்டு அமைச்சினூடாக பிரதமரின் ஊடக இணைப்பாளர் செய்திருந்தார்.
வாசிங்டன் சென்று இறங்கியபோது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தில் இருந்து தூதரக வாகனச் சாரதி வந்து என்னை அழைத்துச் சென்றார். அவரது பார்வையில் நான் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் அதனால் விடுதி செல்லும் வரை அதற்குரிய மரியாதைகள் கிடைத்திருந்தன.
இந்தக்காலக் கட்டத்தில் அமரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக Devinda R. Subasinghe இருந்தார். அப்போது வெளிநாட்டு ராஜதந்திர சேவையில் இரண்டாம் நிலை அதிகாரியாகவும் தற்போது அமெரிக்காவுக்கான தூதராகபொறுப்பேற்றுள்ள ரவிநாத ஆரியசிங்கவும் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் குறித்த முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
நான் சென்று சேர்ந்த அடுத்தநாள் முக்கிய சந்திப்புக்கள் தொடங்கின. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின் முதன் முறையாக அமரிக்காவின் இராசதந்திர மற்றும் இராணுவப் பொருளாதார உள்ளக வட்டத்துள் இலங்கையை அனுமதிக்குமளவுக்கு ரணிலின் இந்த பயணத்தின் போது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.
“உள்ளக வட்டம்” என்ற பிரிவுக்குள் நுழைகின்ற நாடுகள் அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய நாடுகளாகவும் அவற்றின் தலைவர்கள் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ்வந்தஸ்த்து சுதந்திர இலங்கையில் முதன் முதலில் றணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைத்தது.
இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற நாடுகளுக்கே அமெரிக்கா நேரடி மற்றும் மறைமுக இராணுவ உதவிகளை அதிகபட்ச அளவில் வழங்கும். இராணுவப் பயிற்சி, இராணுவத் தொழில் நுட்பம், புலனாய்வு, மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த விசேட பயிற்சிகள் ஆயுதத் தளபாட விற்பனை இராணுவ மேம்பாட்டுக்கான நேரடி பண உதவி என அனைத்து உதவிகளும் தேவைப்படும் பட்சத்தில் இந்த உள்ளக வட்டத்துள் உள்ள நாடுகளுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் இவை தொடர்பான ஒப்பந்தங்களும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி குறித்த பல ஒப்பந்தங்களும் றணிலின் இந்த விஜயத்தில் அமெரிக்காவில் கைச்சாத்தாகின. றணிலின் அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே அமெரிக்கா முக்கியமான யுத்தக் கப்பல் ஒன்றை இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்தது.
இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த றணிலின் இந்த பயணத்தின் போதே மிக முக்கிமான அதிர்ச்சி ஒன்றை றணிலுக்கு ஏற்படுத்திய் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவரை நிலைகுலையச் செய்தார்.
நாங்கள் அமரிக்கா சென்று இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் என நினைக்கிறேன் ஓர் அதிகாலைப் பொழுது எல்லோருடைய விடுதி அறைகளினதும் தொலைபேசிகள் அலறின. உடனடியாக பிரதமர் றணில் விக்ரமசிங்கவின் அறைக்கு வரும்படி கூறப்பட்டது. வோஷங்டன் டி சியின் முக்கிய நட்சத்திர விடுதியின் மூன்றாவது மாடியில் நாங்கள் தங்கியிருந்தோம். றணிலும் அவரது உதவியாளர்களும் இரண்டாவது மாடியில் தங்கியிருந்தனர். நாங்கள் விழுந்தடித்துச் சென்ற போது றணில் விக்கிரமசிங்க இரவு உடையில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஏனைய அமைச்சர்களான மிலிந்த மொறகொட, ஜீ.எல் பீரிஸ், டிரோன் பெனான்டோ, உள்ளிட்டவர்களும் அமர்ந்திருந்தனர்.
ஜே.வீபியின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் பிரதானமான ஊடகம், பாதுகாப்பு, மற்றும் உள்துறை அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்தெடுத்து விட்டதாக றணில் அறிவித்தார்.
அது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கண்டன அறிக்கையை உடன் தயார் செய்து வழங்க உள்ளதாகவும் அதனை உடனடியாக அவரவர் ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கும்படியும் தெரிவித்தார்.
இதே வேளையில் இரண்டாம் மாடியில் றணில், லசந்த விக்கிரமதுங்க, மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்திரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிரான அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டு இருந்தனர்.
லசந்தவே அந்த அறிக்கையை வடிவமைப்பதில் முன்னின்றார். ஒருவாறு அறிக்கை தயார் செய்யப்பட்டு அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது.
மிக உயர்ந்த எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் அமரிக்கா புறப்பட்ட றணிலை சந்திரிக்கா மேற்கொண்ட அதிர்ச்சி வைத்தியம் நிலைகுலைய வைத்தபோதும் அமெரிக்காவின் உள்வட்டத்துள் நுழைந்த பெருமிதத்துடனும் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் குறித்த மகிழ்வுகளுடனும் றணில் இலங்கை திரும்பியிருந்தார். அவருக்கு கொழும்பில் பெரு வரேவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நாடு திரும்பிய ஒரு சில நாளில் நாமும் நாடு திரும்பினோம்...
(துர்அதிஸ்டவசமாக வெள்ளைமாளிகை உள்ளிட்டு நாம் சென்ற முக்கிய இடங்களின் ஒளிப்படங்கள் ஒளிப்படச் சுருள் சேதமானதால் சிதைவடைந்து போயின...
*1In July 2002, President Bush met with Sri Lankan PM Wickremesinghe at the White House and pledged U.S. support for peace and economic development in Sri Lanka. It was the first visit to Washington by a Sri Lankan leader since 1984. In Colombo in August, Deputy Secretary of State Armitage pledged to “re-energize” bilateral relations through increased cooperation in defense, education, commerce, justice, and human rights. In September, a U.S. defense assessment team was sent to examine the training needs of the Sri Lankan military, and State Department Coordinator for Counterterrorism Taylor went to Colombo to discuss ways to integrate “intelligence, law enforcement, legal and diplomatic efforts against terrorism.” The United States and Sri Lanka held their ninth consecutive joint military exercises from January-March 2003, with training focused on combined arms operations and medical techniques. (Report for Congress 2003)
Bilateral Relations
(*2)The U.S. State Department first designated the LTTE as a Foreign Terrorist Organization in 1997.23 In February 2003, Deputy Secretary of State Armitage reiterated that “if the LTTE can move beyond the terror tactics of the past and make a convincing case through its conduct and its actual actions that it is committed to a political solution and to peace, the United States will certainly consider removing the LTTE from the list of Foreign Terrorist Organizations, as well as any other terrorismrelated designations.” The LTTE continues to reject all calls that it renounce violence, saying it will do so only when “the aspirations of [the Tamil] people are met by a political settlement.”24 The global anti-terrorism campaign, which reportedly has resulted in the international withholding of roughly $4 billion from the LTTE and made it more difficult for the group to acquire weapons, has been cited as a likely factor in the rebel’s decision to enter into peace negotiations.
(Report for Congress 2003)
(*3) US Admiral Thomas Collins hands over
US Coast Guard Vessel “Courageous” to Sri Lanka Navy
Lanka Academic Report, 27 June 2004
“Commander of the Sri Lanka Navy, Vice Admiral Daya Sandagiri ended his visit to the US where the US transferred a 210 foot cutter to the Sri Lanka Navy. During his visit to the US Sandagiri met with Admiral Mike Mullen, Vice Chief of Naval Operations (VCNO) at the Pentagon where the discussions centered on bilateral interests pertaining to the interdiction of illegal arms trafficking, security of the seas and ports, and related naval issues.
Admiral Mullen stated that Sri Lanka is extremely important in the global security arena due to its unique location in the Indian Ocean. Admiral Sandagiri thanked the VCNO for all assistance accorded to the Sri Lanka Navy, especially in field of training.
This visit is considered a historic first by a Sri Lankan Armed Forces Commander to the Pentagon. Sandagiri also met with John Bolton, Under Secretary of State for Arms Control and International Security at the Department of State. During his meeting with Deputy Secretary of State Richard Armitage and Assistant Secretary of State for South Asia Ms Christina Rocca at the Department of State, Admiral Sandagiri thanked Armitage for the US decision to transfer the US Coast Guard Cutter to the Sri Lanka Navy to strengthen the country’s ability to protect its sovereignty and territorial integrity. In particular, the capability to interdict illegal arms shipments in a region increasingly was facing multiple threats.”
” After handing over the US Coast Guard Vessel “Courageous” to the Sri Lankan Navy Commander Vice Admiral Daya Sandagiri, US Coast Guard Admiral Thomas Collins said that the vessel was now in the hands of ‘true professionals’.
Speaking at the signing ceremony, which transferred the ownership to Sri Lanka, the US Admiral noted, “The Sri Lankan Navy’s capabilities would be enhanced by this latest acquisition”. He also said “this was an important step in the burgeoning relationship between the two countries”.
Whilst wishing the Sri Lankan Navy “fair weather and happy tidings” Admiral Collins mentioned that the new Captain of the ship had an enviable task ahead. Sri Lanka Navy Commander Vice Admiral Daya Sandagiri accepted the transfer of the former US Coast Guard 210 foot Cutter “Courageous” at the US Coast Guard Headquarters in Washington DC yesterday. Sri Lankan Ambassador in Washington Devinda R. Subasinghe also attended the handing over ceremony.”
PRIME MINISTER RANIL WICKREMESINGHE'S VISIT TO USA - NOVEMBER 2003
Program
• Visit of Hon. Ranil Wickremesinghe, Prime Minister of Sri Lanka to the United States of America
Agreements
• Minister of Economic Reform, Science and Technology Milinda Moragoda signed a Memorandum of Understanding with the Microsoft Corporation at the U.S. Chamber of Commerce - 05 November 2003
• Minister of Foreign Affairs Tyronne Fernando signed a Memorandum of Understanding between the Government of Sri Lanka and the US Trade and Development Agency (USTDA) at the Office of the U.S. Trade Representative - 04 November 2003
• Minister of Economic Reform, Science and Technology Milinda Moragoda signed documents with the Biotechonomy Group for a study on the development of the biotechnology sector in Sri Lanka - 04 November 2003
• Carnegie Mellon University in Pittsburgh, USA and the Government of Sri Lanka established Information and Communication Technology (ICT) Partnership - 01 November 2003
• Nov. 5, 2003
President Bush to Welcome the Prime Minister to the White House on November 4, 2003
Prime Minister Ranil Wickremesinghe will be visiting Washington DC from the 3rd to 5th November 2003 during which he will meet President George W. Bush at the White House. He is also scheduled to meet senior US administration officials, Senators and Congressmen. A further highlight of the visit will be a visit to the premier biotechnology institutes and companies located in the "Biotechnology Corridor" in the State of Maryland.
131930030_453792146023414_68454087183996
 
 
131915183_453792246023404_40530540855391
 
 
131987916_453792406023388_14327935428246
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.