Jump to content

இந்தியாவில் தயாரான கொரோனில்: பிரிட்டனில் போலி கொரோனா மருந்து விற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'கொரோனா வைரஸ் பாதுகாப்பு' - லண்டனில் விற்கப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து

  • கரீஷ்மா படேல் 
  • பிபிசி ஏசியன் நெட்வொர்க் 
பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள பதஞ்சலி நிறுவனத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது) மற்றும் பாபா ராமதேவ் ஆகியோர் நிறுவினர்.

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள பதஞ்சலி நிறுவனத்தை ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது) மற்றும் பாபா ராமதேவ் ஆகியோர் நிறுவினர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்தும் என்று கூறப்படும் போலி மருந்துகள் லண்டனில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் விற்கப்பட்டு வருவது பிபிசி புலனாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 'பதஞ்சலி ஆயர்வேத்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கொரோனில் மருந்து லண்டனில் ஆசிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் "கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்தும்" என்ற விளம்பரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனில் மருந்தை உற்பத்தி செய்யும் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், இந்த மருந்து மூச்சுக் குழாயில் உள்ள தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறுகிறது.

பிபிசி மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக எந்த வகையான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

பிபிசிக்காக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் இந்த மருந்தை சோதனைக்கு உட்படுத்தியது.

செடி-கொடிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மருந்து கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்காது என்பது இந்த சோதனையில் தெரியவந்துள்ளது.

 

பதஞ்சலியின் கொரோனில் கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று எந்த ஆதாரப்பூர்வ ஆய்வும் இல்லை.

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, 

பதஞ்சலியின் கொரோனில் கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று எந்த ஆதாரப்பூர்வ ஆய்வும் இல்லை.

பிரிட்டனில் உள்ள விளம்பர விதிகளின்படி கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போரிட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான மருந்து எனும் கூற்றுடன் எந்த மருந்தையும் விற்பனை செய்யக்கூடாது.

ஆனால், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் பெரும் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் அவ்வாறு விளம்பரம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இந்த மருந்து வாங்குபவர்களில் சிலரை பிபிசி சந்தித்தது. 

"எனக்கு 78 வயதாகிறது. அதனால் நான் இந்த மருந்தை உட் கொள்கிறேன். நான் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொழுது யாரிடமிருந்தாவது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாக வாய்ப்பு இருக்கிறது; அதனால் என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் இதை வாங்குகிறேன், என்று அந்த முதியவர் கூறினார். 

வெம்ப்லே பகுதியில் உள்ள ஒரு மருந்தகம் தனது கடை மற்றும் இணையதளத்தில் கோவிட்-19 நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்து எனும் கூற்றுடன் கொரோனில் மருந்தை விற்பனை செய்து வருகிறது.

அங்கு இந்த மருந்தை விற்பனை செய்யும் குறைந்தது நான்கு கடைகளை பிபிசி பார்த்தது. 

கொரோனில் மருந்துக்கு பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான மெடிசின்ஸ் அண்ட் ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி (எம்.ஹெச்.ஆர்.ஏ) அனுமதி வழங்கவில்லை.

முறையான அனுமதி பெறாமல் இந்த மருந்தை பிரிட்டன் சந்தைகளில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனில் கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்தும் தன்மை உடையது என்று பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் சாமியாருமான பாபா ராம்தேவ் இந்த ஆண்டு ஜூன் மாதம் கூறியிருந்தார். 

"எங்கள் மருந்தை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்ட பின்பு 69 சதவீத கோவிட்-19 தொற்றாளர்களுக்கு மேற்கொண்டு உடலில் தொற்று இல்லை என்று சோதனை முடிவில் தெரிய வந்தது. ஏழு நாட்கள் எடுத்துக் கொண்ட பின்பு 100 சதவிகித தொற்றாளர்ககளின் உடலிலும் வைரஸ் மேற்கொண்டு இல்லை என்பது தெரிய வந்தது," என்று பாபா ராம்தேவ் அப்போது கூறியிருந்தார்.

பதஞ்சலி ஆயுர்வேத மருந்தை நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்த கூடியது என்று கூறி வேண்டுமானால் சந்தையில் விற்கலாம்; ஆனால் குணப்படுத்தக் கூடியது என்று கூறி விற்க கூடாது என்று இந்திய அரசு கூறியது.

அதன் பின்னர் தங்கள் கொரோனில் கோவிட்-19 தொற்றைக் குணப்படுத்தக்கூடியது எனும் கூற்றை பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
https://www.bbc.com/tamil/global-55374876

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.