Jump to content

மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி; 20 கோடி டோஸ்கள் வாங்க ஒப்புதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி: மாடர்னா கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

A researcher works in a lab run by Moderna Inc

பட மூலாதாரம், MODERNA

 
படக்குறிப்பு, 

மாடர்னா நிறுவனத்தின் ஆய்வகம் ஒன்றில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்.

மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசின் ஒப்புதலை பெறும் இரண்டாவது கோவிட்-19 தடுப்பு மருந்தாகிறது மாடர்னா.

மாடர்னா தடுப்பு மருந்து ஒப்புதலைப் பெற்று உள்ளதால் மேலும் பல கோடி அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது விநியோகிக்கப்படும் ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்கு பின்பு தற்போது மாடர்னா தடுப்பு மருந்தும் அந்த ஒப்புதலை பெற்றுள்ளது.

மாடர்னா தடுப்பு மருந்தின் 20 கோடி டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் தற்போது விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக கருதப்படுகிறது.

மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகள் - ஒற்றுமை, வேறுபாடு என்ன?

மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளுமே RNA - வைரஸ் ஜெனிடிக் கோட் வகையைச் சேர்ந்தவை. 

mRNA தடுப்பு மருந்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் மிகமிகச் சிறு பகுதியைப் பயன்படுத்தி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டும் என்றும், இந்தத் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடலுக்கு கற்பிக்கும்.

மாடர்னா, ஃபைசர் / பயோஎன்டெக் ஆகிய இரு தடுப்பூசிகளும் இரு டோஸ்கள் உடலில் செலுத்தப்பட வேண்டும். 

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கு இடையே 21 நாள் இடைவெளியும், மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளியும் இருக்க வேண்டும். 

மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95% பேருக்கு பலனளித்துள்ளது என்றும் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி 90% பேருக்கு பலனளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

A researcher works in a lab run by Moderna Inc

பட மூலாதாரம், MODERNA

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி -75 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும்; மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. ஒப்புதல் பெற்றபின் பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும்.

ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி அமெரிக்கா மட்டுமல்லாது ஜெர்மனி, பெல்ஜியம் என உலகின் பல நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. 

ஹெர்ட் இம்யூனிட்டி எப்படி சாத்தியம்?

ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்க அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டம் குறைந்தபட்சம் ஐந்து கோடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அந்நாட்டு அரசு இலக்கு வைத்துள்ளது.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுவது திங்களன்று (டிசம்பர் 14) தொடங்கியது.
 

coronavirus symptoms

அமெரிக்க மக்கள் தொகை 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறனை பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென்று அமெரிக்க ஒன்றிய அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டமான ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்-இன் தலைமை அறிவியலாளர் மான்செஃப் ஸ்லாவி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு, மரணத்தில் அமெரிக்கா முதலிடம்

கோவிட்-19 தொற்றால் உலகிலேயே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இதுவரை கோவிட்-19 தொற்றின் காரணமாக குறைந்தபட்சம் 31 லட்சம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்; 1,72,69,000 பேருக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 மற்றும் அதற்கு அதிக வயதானவர்களுக்கு மாடர்னா தடுப்பு மருந்தால் உண்டாகும் அபாயங்களைவிட நன்மைகளே அதிகம் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அமைப்பின் ஆலோசனைக் குழு ஒன்று கடந்த வியாழனன்று 20 - 0 என்ற கணக்கில் வாக்களித்தது. ஆலோசனைக் குழுவின் ஓர் உறுப்பினர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதன்பின்பு வெள்ளியன்று இந்த தடுப்பு மருந்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 94 சதவிகிதம் திறன் மிக்கது என்றும் இந்த வார தொடக்கத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

Twitter பதிவின் முடிவு, 1

மாடர்னாவுக்கு பெருவாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படும் என்று மாடர்னா தடுப்பு மருந்தின் ஒப்புதல் குறித்த அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

https://www.bbc.com/tamil/global-55374293

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.