Jump to content

சமூக இடைவெளியில் கழிந்த 2020 - தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2021 புத்தாண்டு: சமூக இடைவெளியில் கழிந்த 2020 - தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

சமூக இடைவெளி

பட மூலாதாரம், GETTY IMAGES

நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை கட்டி அணைப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ மிஸ் செய்கிறீர்களா? உங்கள் அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு கை கொடுப்பதை மிஸ் செய்கிறீர்களா?

இந்த 2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு 'சமூக இடைவெளி' ஆண்டாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஆண்டின் முக்கால் பகுதி பொது முடக்க கட்டுப்பாடுகளுடனேயே இருந்தது. 

இந்நிலையில் அன்புக்குரியவர்களை நேரில் சந்திப்பது, பேசுவது, அதாவது இந்த கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போல, ஒருவரோடு ஒருவர் இணைந்து பழகுவது போன்ற அனைத்தும் இல்லாமல் பலர் வெற்றிடத்தை உணரலாம்.

இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தது உண்டா?

"குழந்தை பருவத்தில் நான் உணரும் முதல் விஷயம் தொடுதல். அதில்தான் குழந்தைகள் அதன் எண்ணத்தை வெளிப்படுத்தும். அது வளர்ச்சியின் அடையாளமாகவும் இருக்கும். தொடுதல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்கிறார், Unique: The New Science of Human Individuality என்ற புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் லிண்டென். தொடுதலின் மகிமையை நாம் பெரிதும் புரிந்து கொள்வதில்லை என்கிறார் அவர்.

நாம் பிறரை தொடும்போது என்ன நடக்கிறது?

தொடுதல் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது என்கின்றன ஆய்வுகள்.
 

ஒரு குழந்தையை நாம் தொடும்போது, அதன் "இதய துடிப்பு சீராகிறது", "எடை கூடுகிறது" என்கிறார் குழந்தைகளுக்கான நரம்பியல் துறை பேராசிரியர் ரெபெக்கா ஸ்லேட்டர்.

இணைக்கும் சக்தியாக தொடுதல்

தொடுதலின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசும்போது மனிதர்களும் விலங்குகளை போலதான் என்கிறார் பரிணாம வளர்ச்சி குறித்த உளவியல் நிபுணர் ராபின் டன்பர்.

அன்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

விலங்குகள் அதன் வாழ்வில் 10-20% நேரத்தை பிற விலங்குகளை தொடுவதிலோ அல்லது சுத்தப்படுத்துவதிலோ கழிக்கின்றன; இது அவற்றின் நட்புக்கான முக்கிய காரணம்.

"அதன் ரோமங்களில் படும் அந்த தொடுதல், அதன் மூளைக்கு உனது நெருங்கிய நண்பன் உன்னை தொடுகிறான் என்ற உணர்வை கடத்தும். மூளையில் உள்ள எண்டோர்ஃபின் அமைப்பு தூண்டப்படும்"

"நாம் மிகுந்த ஓய்வாக உணருவோம். முக்கியமாக இவ்வாறு தொடும் அந்த நண்பனோ அல்லது தோழி மீதோ ஒரு நம்பிக்கை உணர்வு ஏற்பட்டு, நட்பு அதிகரிக்கிறது," என்கிறார் ராபின் டன்பர்.

தொடுதல் அற்ற சூழலால் என்ன நடைபெறும்?

தொடுவதால் ஒருவரோடு ஒருவருக்கு நட்புணர்வும், நம்பிக்கையும், அமைதித்தன்மையும் ஏற்படுகிறது என்றால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது?

"இது உடனடியாக நமக்குள் பிரிவை ஏற்படுத்தி விடப்போவதில்லை" என்கிறார் எழுத்தாளர் லிண்டென்.

"ஆனால் நமது ஒற்றுமை உணர்வு, பிறர் மீதான நம்பிக்கை, பிறரின் உணர்வை புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவை மெதுவாக குறையும்," என்கிறார் லிண்டென்.


 

அன்பு

பட மூலாதாரம், GETTY IMAGES

"ஒரு விலங்கை நீங்கள் தொடவில்லை என்றால், அது உடல் அளவிலும் மனதளவிலும் வலிமையற்று உணரத் தொடங்கும், மேலும் அவற்றின் ஆயுளும் குறைந்துவிடும்," என்கிறார் மனோதத்துவ நரம்பியல் துறை பேராசிரியர் கடெரினா ஃப்டுபெளலு.

நம்மால் என்ன செய்ய முடியும்?

"பெருந்தொற்று காலத்திற்கு முன்பு மக்கள் பழகியது போலவே மீண்டும் பழகுவர்," என்கிறார் பேராசிரியர் ஸ்லேட்டர்.

இருப்பினும் பரிணாம உளவியல் நிபுணர் ராபின் டன்பர், "பழைய நிலைக்கு திரும்ப அதிக மெனக்கடெல் தேவை," என்கிறார்.

எனவே உங்களால் முடிந்தால், உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றால் உங்கள் அன்புரிக்குரியவரை தொடுவதும் ஒரு நல்ல யோசனைதான். அதன் மூலம் மன நலம் மற்றும் உடல் நலம் இரண்டும் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீங்கள் நேசிப்பவரை தொடுவது என்பது மனதளவிலும், உடலளவிலும் ஒரு நலம் மிக்க சூழலை ஏற்படுத்தும்.

மேலும் பல நாட்களாக பார்க்காத உங்கள் அன்புக்குரியவரை பார்க்கும்போது அவர்கள் பேசுவதை விட அவர்களின் தொடுதலில் பாசம் புரிந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 

 

https://www.bbc.com/tamil/global-55369859

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.