Jump to content

சபீதா-சிறுகதை-சாத்திரி


sathiri

Recommended Posts

சபீதா-சிறுகதை-சாத்திரி

இம்மாத நடு  இணைய சஞ்சிகையில் .

சாத்திரி

இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு  சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க,  ‘ச்சே  ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன்.

கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து  வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா  வணக்கம் சொல்லிவிட்டு  ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன்.  என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால்,

“அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?”  என்றதும்,

“அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம்,

“நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…”  நான் சொல்லி முடிக்க முதலே,

“எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு  விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன்.

சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள்.  அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால்  வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள்.

‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.

“உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர  மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது,

’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு  சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை  கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம்  ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை  எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால்  இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே,

“இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள்.

“இதுவரை  எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு,  இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள்  கண்ணில் கெஞ்சல் தெரிந்தது.

வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும்,

“பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக்.

“உனக்குத்தான்  ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?”

“அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….?

“உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் .

அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான்  வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின்  மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது.

அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில்  மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது  பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை  நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம்  ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க,  மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.

வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை  கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில்  இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட  சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் இரு பால் குழந்தைகளுக்கும் உண்டு என்பது தான் மிகுந்த சோகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, sathiri said:

சபீதா-சிறுகதை-சாத்திரி

இம்மாத நடு  இணைய சஞ்சிகையில் .

சாத்திரி

இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு  சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க,  ‘ச்சே  ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன்.

கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து  வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா  வணக்கம் சொல்லிவிட்டு  ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன்.  என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால்,

“அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?”  என்றதும்,

“அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம்,

“நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…”  நான் சொல்லி முடிக்க முதலே,

“எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு  விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன்.

சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள்.  அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால்  வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள்.

‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.

“உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர  மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது,

’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு  சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை  கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம்  ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை  எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால்  இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே,

“இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள்.

“இதுவரை  எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு,  இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள்  கண்ணில் கெஞ்சல் தெரிந்தது.

வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும்,

“பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக்.

“உனக்குத்தான்  ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?”

“அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….?

“உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் .

அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான்  வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின்  மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது.

அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில்  மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது  பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை  நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம்  ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க,  மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.

வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை  கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில்  இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட  சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….

நல்ல கதை சாத்திரியார்.

ஒரு முக்கிய பிரச்சனையை மிகவும் லாவகமாக சொல்லியுள்ளீர்கள்.

இதைபோல அண்மையில் யூடியுப்பில் ஒரு குறும்படம் பார்த்தேன்.

தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள். பெட்டிகடை வைத்திருக்கும் தாய், 12-14 வயது மகன், கூடவே ஒட்டிகொண்ட தாயின் காதலன். 

பெட்டிகடைக்கு பக்கத்தில் ஒரு பிரியாணி கடை. அந்த கடை முதலாளி அவசரமாக ஊருக்கு போய்விடுவார். பெட்டி கடையில் மகன் இருக்கும் சமயம் ஒரு பெரிய குடும்பம் வந்து மறு நாளுக்கு 500 பிரியாணி ஓடர் பண்ண, கடை பூட்டு என தெரியாத மகனும் (போனை நோண்டியபடியே) ஓடரை ஏற்று கொள்வான்.

இரவு தாயிடம் சொல்ல, இப்போ பிரியாணிக்கு என்ன செய்வது என எகிறும் தாய். நாளை காலை போய் அந்த குடும்பத்திடம் சொல்லும் ஐடியாவில் தூங்க போவார்.

தூங்கபோகையில் குடிகார காதலன் அருகே வர கடுப்பில் விரட்டி விடுவார்.

மூவரும் தூங்கிய பின் நடு நிசியில் எழும்பும் காதலன், மகனிடம் சில்மிசம் செய்ய அவன் ஆளை ஒரே போடாக போட்டு விடுவான்.

தாயை எழுப்பி விபரம் சொன்னதும் தாய் இப்போ என்ன செய்வது என ஒரு தரம் விழிப்பா.

மறுநாள் காலை பெரிய குடும்பத்து விருந்தில் தடல்புடல் பிரியாணி விருந்து அமர்களபடும். எல்லாரும் புதிய சமையல்காரியாகிய தாயை புகழ்வார்கள்.

தாயோ காசை வாங்கிகொண்டு போவதிலேயே குறியாக இருப்பார்.

போகும் தறுவாயில் விருந்துக்கு வந்த ஒரு பொலீஸ் அதிகாரி கூப்பிட்டு தன் பங்குக்கு பிரியாணியை பாராட்டி அனுப்புவார் 🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட  மனிதர்களாலும் இணைந்ததுதான் சமூகம். இதில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பது அனுபவத்தின் மூலம்தான் தெரிய வருகின்றது ......பாராட்டுக்கள் சாத்திரியார்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சாத்து வாழ்த்துக்கள் 

அந்த கிளாஸ் உடைத்த ரபீக்க மட்டும் விட்டு விட்டுள்ளீர்கள் நாலு சாத்து சாத்தாமல் கதையில் 

Link to comment
Share on other sites

6 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பிரச்சனைகள் இரு பால் குழந்தைகளுக்கும் உண்டு என்பது தான் மிகுந்த சோகம்.

கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

நல்ல கதை சாத்திரியார்.

ஒரு முக்கிய பிரச்சனையை மிகவும் லாவகமாக சொல்லியுள்ளீர்கள்.

இதைபோல அண்மையில் யூடியுப்பில் ஒரு குறும்படம் பார்த்தேன்.

தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள். பெட்டிகடை வைத்திருக்கும் தாய், 12-14 வயது மகன், கூடவே ஒட்டிகொண்ட தாயின் காதலன். 

பெட்டிகடைக்கு பக்கத்தில் ஒரு பிரியாணி கடை. அந்த கடை முதலாளி அவசரமாக ஊருக்கு போய்விடுவார். பெட்டி கடையில் மகன் இருக்கும் சமயம் ஒரு பெரிய குடும்பம் வந்து மறு நாளுக்கு 500 பிரியாணி ஓடர் பண்ண, கடை பூட்டு என தெரியாத மகனும் (போனை நோண்டியபடியே) ஓடரை ஏற்று கொள்வான்.

இரவு தாயிடம் சொல்ல, இப்போ பிரியாணிக்கு என்ன செய்வது என எகிறும் தாய். நாளை காலை போய் அந்த குடும்பத்திடம் சொல்லும் ஐடியாவில் தூங்க போவார்.

தூங்கபோகையில் குடிகார காதலன் அருகே வர கடுப்பில் விரட்டி விடுவார்.

மூவரும் தூங்கிய பின் நடு நிசியில் எழும்பும் காதலன், மகனிடம் சில்மிசம் செய்ய அவன் ஆளை ஒரே போடாக போட்டு விடுவான்.

தாயை எழுப்பி விபரம் சொன்னதும் தாய் இப்போ என்ன செய்வது என ஒரு தரம் விழிப்பா.

மறுநாள் காலை பெரிய குடும்பத்து விருந்தில் தடல்புடல் பிரியாணி விருந்து அமர்களபடும். எல்லாரும் புதிய சமையல்காரியாகிய தாயை புகழ்வார்கள்.

தாயோ காசை வாங்கிகொண்டு போவதிலேயே குறியாக இருப்பார்.

போகும் தறுவாயில் விருந்துக்கு வந்த ஒரு பொலீஸ் அதிகாரி கூப்பிட்டு தன் பங்குக்கு பிரியாணியை பாராட்டி அனுப்புவார் 🤣.

 

அந்தப் படம் நானும் பார்த்தேன்    ..நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சாத்து ,உடைந்த கிளாஸ்க்கும் சேர்ந்துதான் பணம் அறவிடுவீரகளா? உங்கள் ஊர்ஐயார் சகோதரஙகள்  எனக்குயருகிலதானிருக்கிறார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பையும் ஆதரவையும் கொடுக்கவேண்டியவர்கள் குழந்தைகளை குலைத்துப்போடுவது அடிக்கடி செய்திகளில் வருகின்றது. இவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள் என்பதை கதையில் வரும் சிறுத்தை சொல்லுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பாதுகாப்பையும் ஆதரவையும் கொடுக்கவேண்டியவர்கள் குழந்தைகளை குலைத்துப்போடுவது அடிக்கடி செய்திகளில் வருகின்றது. இவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள் என்பதை கதையில் வரும் சிறுத்தை சொல்லுகின்றது.

எனக்கும் அந்த சிறுத்தை உவமானம் நன்கு பிடித்தது. இப்படி எழுதமுடிவது ஒரு கொடைதான்.

Link to comment
Share on other sites

On 19/12/2020 at 16:09, suvy said:

பலதரப்பட்ட  மனிதர்களாலும் இணைந்ததுதான் சமூகம். இதில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பது அனுபவத்தின் மூலம்தான் தெரிய வருகின்றது ......பாராட்டுக்கள் சாத்திரியார்......!  😁

நீண்ட நாளின் பின்னர் ..  நன்றி அண்ணா

On 19/12/2020 at 23:34, Kandiah57 said:

நல்ல கதை சாத்து ,உடைந்த கிளாஸ்க்கும் சேர்ந்துதான் பணம் அறவிடுவீரகளா? உங்கள் ஊர்ஐயார் சகோதரஙகள்  எனக்குயருகிலதானிருக்கிறார்கள்.

 

 

கிளாசுக்கு பணம் வாங்க முடியாது   .கருத்துக்கு நன்றி .யாரந்த ஐயர்

Link to comment
Share on other sites

On 19/12/2020 at 18:13, தனிக்காட்டு ராஜா said:

நல்ல கதை சாத்து வாழ்த்துக்கள் 

அந்த கிளாஸ் உடைத்த ரபீக்க மட்டும் விட்டு விட்டுள்ளீர்கள் நாலு சாத்து சாத்தாமல் கதையில் 

கருத்துக்கு நன்றி  அவனை அடிச்சா .எனக்கு வேலை கிழிஞ்சிடும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி ,இடம்.சுதிமலை ,பெயர். வரதர்  ஊரில்லுள்ளவர் காலில்லை

அவர் உயிருடனில்லை. நன்றி மீண்டும் வணக்கம்

 

அவர் இப்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, sathiri said:

நீண்ட நாளின் பின்னர் ..  நன்றி அண்ணா

கிளாசுக்கு பணம் வாங்க முடியாது   .கருத்துக்கு நன்றி .யாரந்த ஐயர்

நன்றி நல்லதொரு சமூக கதை பகிர்வுக்கு.

ஏன் உங்கள் கதைகளில் எல்ல நாயகிகளும் கடைசியில் கொலை செய்கின்றார்கள்?  அத்துடன் ஏன்  உங்களுடன் மட்டும் அன்பாக இருக்கின்றார்கள்😁

அடிக்கடி கிளாசை உடைத்தால் என்ன செய்வீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த கதைக்கு நன்றி சாத்திரியார்...! 

அப்பப்ப யாழுக்கு வந்து  அங்கையங்கை கையை நனைச்சால் குறைஞ்சா போவியள்?😁

Link to comment
Share on other sites

On 20/12/2020 at 17:46, கிருபன் said:

பாதுகாப்பையும் ஆதரவையும் கொடுக்கவேண்டியவர்கள் குழந்தைகளை குலைத்துப்போடுவது அடிக்கடி செய்திகளில் வருகின்றது. இவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள் என்பதை கதையில் வரும் சிறுத்தை சொல்லுகின்றது.

நன்றி கிருபன்

On 20/12/2020 at 20:24, goshan_che said:

எனக்கும் அந்த சிறுத்தை உவமானம் நன்கு பிடித்தது. இப்படி எழுதமுடிவது ஒரு கொடைதான்.

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரபீக்கிடம் உடைத்த கிளாஸ்களுக்கு காசு வாங்கவும்😄 சோனி பயல் .

கடை உங்களுடையது இல்லை போல் இருக்கு அதான் அவனை கிளாஸ் உடைக்க விட்டு இருக்கிறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2020 at 17:33, உடையார் said:

ஏன் உங்கள் கதைகளில் எல்ல நாயகிகளும் கடைசியில் கொலை செய்கின்றார்கள்?  

இது என் கேள்வியும் கூட , இது உண்மைக் கதையா? நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2020 at 09:10, kumara23 said:

இப்பவும் கோடாலியை வைத்தோ மாவீரர் தினம் நினைவு கூறுவது ?

இல்லை தலைவர் படம் பிறேம் போட்டு வைத்துள்ளார் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை தலைவர் படம் பிறேம் போட்டு வைத்துள்ளார் என நினைக்கிறன் 

பிரான்ஸ் தமிழர் அமைப்புகள் சில (பெயர் அறியேன்) நவம்பர் 26 இல் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்களாம். மாவீரர் நாளான அடுத்த நாள் அஞ்சலி பீடத்தில் பிரபாகரன் படம் இருக்காதாம். இப்படி அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்!

சாத்திரி சில வருடங்கள் முன்பிருந்தே பிரபாகரன் படம் வைத்து அஞ்சலி செய்ய  ஆரம்பித்தார் என்று இங்கே குறிப்பிட்டிருந்தார்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

பிரான்ஸ் தமிழர் அமைப்புகள் சில (பெயர் அறியேன்) நவம்பர் 26 இல் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்களாம். மாவீரர் நாளான அடுத்த நாள் அஞ்சலி பீடத்தில் பிரபாகரன் படம் இருக்காதாம். இப்படி அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்!

சாத்திரி சில வருடங்கள் முன்பிருந்தே பிரபாகரன் படம் வைத்து அஞ்சலி செய்ய  ஆரம்பித்தார் என்று இங்கே குறிப்பிட்டிருந்தார்! 
 

மேலே நான் நினைத்ததை எழுத மறந்து விட்டேன் சாத்திரியார் அஞ்சலி செலுத்த வைப்பதும் மாவீரர் நாளில் வைப்பதும் தலைவர் படமே முகநூலில் கண்டு இருக்கிறன்

Link to comment
Share on other sites

On 21/12/2020 at 00:09, Kandiah57 said:

வணக்கம் சாத்திரி ,இடம்.சுதிமலை ,பெயர். வரதர்  ஊரில்லுள்ளவர் காலில்லை

அவர் உயிருடனில்லை. நன்றி மீண்டும் வணக்கம்

 

அவர் இப்பவில்லை

ஒ வரதன்  ஐயர் குடும்பமா   சரி நன்றி

 

On 21/12/2020 at 00:33, உடையார் said:

நன்றி நல்லதொரு சமூக கதை பகிர்வுக்கு.

ஏன் உங்கள் கதைகளில் எல்ல நாயகிகளும் கடைசியில் கொலை செய்கின்றார்கள்?  அத்துடன் ஏன்  உங்களுடன் மட்டும் அன்பாக இருக்கின்றார்கள்😁

அடிக்கடி கிளாசை உடைத்தால் என்ன செய்வீர்கள்

1)நான் செய்ய முடியாதவற்றை  என் நாயகிகளை வைத்து செய்கிறேன் 😜2)நான் அவர்களோடு அன்பாக இருப்பதால்..3)  நாயகியை வைத்து அவர்களை உடைத்து விடுவேன் ..

On 22/12/2020 at 04:35, theeya said:

இது என் கேள்வியும் கூட , இது உண்மைக் கதையா? நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள் 

என் நகரத்தில் நடந்த சம்பவத்தின் பத்திரிகை செய்தி மட்டுமே என் கதையின் கரு  மிகுதி கற்பனை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, sathiri said:

1)நான் செய்ய முடியாதவற்றை  என் நாயகிகளை வைத்து செய்கிறேன் 😜2)நான் அவர்களோடு அன்பாக இருப்பதால்..3)  நாயகியை வைத்து அவர்களை உடைத்து விடுவேன் ..

ஒரு கலைஞனாக நல்ல பதில் 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.