Jump to content

சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்!

December 20, 2020

Politics.jpg

ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ஏற்றுக் கொள்ளும். பல்வகைமையின் மீது கட்டியெழுப்பப்படுவதே ஜனநாயக அரசியல். எனவே இதில் அரசியல் எதிரியோடு அமர்ந்து தேனீர் அருந்துவதை சபை நாகரீகமாக ஏற்றுக் கொள்ள முடியும்  ” என்று.  

ஆனால் அரசியல் எதிரிகளோடு தேநீர் அருந்துவது வேறு வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிப்பது வேறு. வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து ஆவேசமாக உரையாற்றி விட்டு அந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவது வேறு. ஏனெனில் நாடாளுமன்ற அரசியலில் உரைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதைவிட முக்கியத்துவம் வாக்கெடுப்புக்கு உண்டு. வாக்கெடுப்பில் யார் பக்கம் நிற்கிறோம் யாரை ஆதரிக்கிறோம் யாரை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்பதில் குறிப்பிட்ட கட்சியின் கொள்கை நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுத்தப்படும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் நடந்து முடிந்த வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது ஒரு அகமுரண். இது தொடர்பில் கூட்டமைப்பு பின்வருமாறு விளக்கம். கூறுகிறது “ கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம்.அதன் பின்னர் சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதும், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போதும் அதை எதிர்த்து நாம் உரையாற்றினோம். கோட்டாபய அரசின் மிக மோசமான வரவு – செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியே தீரும் என்பதும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்தநிலையில், வாக்கெடுப்பில் நாம் பங்கேற்று அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை…” இது  கூட்டமைப்பின் கருத்து.

விக்னேஸ்வரன் அவருடைய கூட்டுக்குள் அவர் இது தொடர்பில் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்றே தெரிகிறது. அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையை விடாமலே விட்டிருக்கலாம். அவர் பேசிய பேச்சுக்களின் புனிதத்தை அவரே கெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்களை அவரே தோற்கடித்து விட்டார். அப்படித்தான் கூட்டமைப்பினரும்.கூட்டமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஏகபோகம் வகித்த காலகட்டத்தில் ஆற்றிய உரைகளோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் கூர்மையாகவும் ஆழமாகவும் பேசினார்கள்.இதனால் தூண்டப்பட்டு ஸ்ரீதரன் சாணக்கியன் உட்பட ஏனையவர்களும் மாற்று அணியை சேர்ந்தவர்களின் பாணியிலேயே உரத்துப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.

குறிப்பாக சாணக்கியனின் பேச்சு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது; பாராட்டப்பட்டிருக்கிறது. மும்மொழிப் புலமை மிக்க ஒரு இளம் தலைவர் உருவாக்கிவிட்டார் என்று பலரும் கொண்டாடினார்கள். சாணக்கியனின் மும்மொழிப் புலமை பலரையும் கவர்ந்தது. சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் கூறிய பதில் பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் சாணக்கியனும் சிறீதரனும் ஏனையவர்களும் ஆற்றிய உரைகளின் புனிதம் அவர்களுடைய கட்சி எடுத்த நிலைப்பாட்டால் கெடுக்கப்பட்டு விட்டது. அவர்களும் அவர்களுடைய உரைகளைத் தோற்கடித்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்றத்திலும் சிறிதரன் இவ்வாறு ஒரு வரவு செலவுத் திட்டத்தில் வாக்களித்துவிட்டு மனச்சாட்சியை இழந்து வாக்களித்தோம் என்ற தொனிப்பட விளக்கம் கூறியிருந்தார். இப்பொழுதும் அதே விளக்கந்தானா? இது விடயத்தில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளோடு கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு.டெலோ இயக்கம் பாதுகாப்பு அமைச்சு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தது.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதன் அர்த்தம் அதை எதிர்க்கவும் விரும்பவில்லை ஆதரிக்கவும் விரும்பவில்லை என்பதே. அதாவது இரண்டுங்கெட்டான். மேலும் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டபின் நடந்த உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில் சம்பந்தர் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கூட்டமைப்பு தனது வாக்காளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன?

அரசாங்கத்தை எதிர்ப்பதால் ஒரு பயனும் இல்லை அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வரவுசெலவுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவார்கள் என்று கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும்  கூறுகின்றார்கள்.எதிர்ப்பதால் பலனில்லை என்றால் எதிர்த்துப் பேசி மட்டும் என்ன பலன்? அடுத்த நாள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வருவதா? அல்லது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதா? ஆவேசமாக எதிர்த்து உரை நிகழ்த்தியபின் வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை என்பது குழப்பமான  நிலைப்பாடே.

இதுவிடயத்தில் கூட்டமைப்பை விடவும் விக்னேஸ்வரனுக்கே பொறுப்பு அதிகம். தனது அரசியல் அடித்தளத்தை அதிக பட்சம் அறநெறிகளின் மீது கட்டியெழுப்பியிருக்கும் அவர் கூட்டமைப்பின் நேர்மைக் குறைவைச் சுட்டிக்காட்டியே அக்கட்சியிலிருந்து விலகினார். எனவே இந்த விடயத்தில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தன்னுடைய பேச்சுக்கு முரண்பாடு இல்லாத விதத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.இது கஜேந்திரகுமார் அணி அவருக்கு எதிராக வைக்கும்  குற்றச்சாட்டுகளுக்களை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

 இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு இல்லாத ஒரு முடிவை எடுத்து எதிர்த்து வாக்களித்தது. எனவே அது பேசிய பேச்சுக்கள் இப்பொழுதும் அவற்றின் புனிதத்தை இழக்கவில்லை.அதேசமயம் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு பின்வரும் அடிப்படைக் கேள்விகளை  எழுப்புகின்றது.

முதலாவது கேள்வி- இவ்வாறு சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ள ஓர் அரசியற் சூழ்நிலையில் கொள்கை அடிப்படையிலான கூட்டுக்களை உடனடிக்குக் கற்பனை செய்ய முடியுமா ?

கேள்வி இரண்டு- கொள்கை அடிப்படையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது கடந்த பத்தாண்டுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது உருவாக்கலாம் என்று சிந்திக்கும் ஒரு பின்னணியில் அதற்குரிய வாய்ப்புகளும் குறைவா?

ஆம். வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் கட்சிகள் நடந்துகொண்ட விதம் கொள்கை ரீதியாகத் தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் பருமனைக் காட்டுகிறது. மட்டுமல்ல விவகாரங்களை மையப்படுத்தி தந்திரோபாயக் கூட்டுக்களை அல்லது சமயோசிதக் கூட்டுக்களை உருவாக்குவதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் அது உணர்த்துகிறது.

எனினும் இப்பொழுதுதான் விவகார மையக் கூட்டுக்களைக் கட்டியெழுப்புவதர்கான தேவை அதிகரித்திருக்கிறது எனலாம். ஏனெனில் வழுவழுக்கும் கட்சிகளை ஏதாவது ஒரு பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குள் கட்டிபோட வேண்டிய தேவை முன்னரை விட அதிகரிப்பதை இது உணர்த்துகிறதா?

புதிய யாப்புருவாக்கம்; ஐ.நாவை எதிர் கொள்ளல் உள்ளிட்ட வெளிவிவகார நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு பொதுக் கட்டமைப்பும் பொதுப் பொறிமுறையும் அவசியம்.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறுவது போல அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் அவ்வாறு ஒரு பொதுப் பொறிமுறை அவசியம்.அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவதால் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவித்துவிடும் என்று நம்புவது அரசியல் அப்பாவித்தனம்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டு வரப்போவதாக ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால் அதுவிடயத்தில் தமிழ்த்தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டோடு இல்லை. எனவே தீர்வு விடயத்திலும் வெளிவிவகாரக் கட்டமைப்பும் உட்பட முக்கிய விவகாரங்கள் பொறுத்தும் விவகார மையக்  கூட்டுக்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தனியோட்டம் ஓடக்கூடிய கட்சிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தீர்வை முன்வைக்கும். ஒவ்வொரு கட்சியும் வருகிற வெளிநாட்டு தூதுவரோடு ஒவ்வொரு விதமாகக் கதைக்கும். வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவாக் கூட்டத்தொடரிலும் தமிழ்த் தரப்பு தனித் தனி நிலைப்பாட்டோடு அங்கு போய் நிற்கும்.இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்ற செய்தியை வெளித் தரப்புக்கு கொடுக்கும். அதுமட்டுமல்ல அதிக தொகை பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனியோட்டம் ஓடித் தமிழ் மக்களையும் தோற்கடித்து தன்னையும் தோற்கடித்து விடும்.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது ஒருபுறம் தமிழ் ஐக்கியம் குறித்த சந்தேகங்களை அவநம்பிக்கைகளை அதிகப்படுத்தி யிருந்தாலும்கூட இன்னொருபுறம் குறைந்தபட்சம் விவகார மையக்  கூட்டுக்களையாவது உடனடிக்கு உருவாக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதே சரி.  #விக்னேஸ்வரன் #மிழ் தேசிய மக்கள் முன்னணி #கூட்டமைப்பு

 

https://globaltamilnews.net/2020/154590/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

ஏன் இந்த திடீர் மாற்றம்?

-கபில் -

விக்னேஸ்வரன் கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை, இரண்டுக்கும் நடுவே உள்ள சாம்பல் நிற அரசியலை செய்ய முனைகிறார். கடந்த ஆட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு, எதிர்க்கட்சி என்றால் எதிர்க்க வேண்டும் என்றில்லை யெனக் கூறிய நியாயத்தை, அப்போது, விக்னேஸ்வரன் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது அவரும் அதே போர்வைக்குள் மறைந்து கொள்ள முனைந்திருக்கிறார்.

வரவு, செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் பங்கேற்காமல் ஒதுங்கியது ஏன் என்பதை விளக்கி, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வழக்கம்போல, கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

spacer.png

இந்த அறிக்கையில், தான் வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டதற்கான காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார்.  அந்த முடிவை எடுத்தமைக்காக அவர் கூறியிருக்கின்ற காரணங்கள் பல, பூமராங் போல, அவருக்கு எதிராகவே திரும்பக் கூடியவை. அவர், சில தர்க்க நியாயங்களை முன்வைத்தே, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். கூடவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்  இழுத்து வந்து, விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் முடிவுக்கான காரணத்தை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும், விக்னேஸ்வரன், கூட்டமைப்பை அல்லது எம்.ஏ.சுமந்திரன் என்ற அளவுகோலை வைத்தே, தனது நிலைப்பாடு உயர்வானது என்று காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார். சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கின்ற நியாயப்பாடுகளை இவ்வாறாக வரிசைப்படுத்தலாம்.

1. இணக்க அரசியலும் இல்லை, எதிர்ப்பு அரசியலும் இல்லை.

2. போர்களை வென்ற தமிழ்த் தலைமைகள் யுத்தத்தின் தோற்று விட்டன.

3. எல்லாவற்றையும் எதிர்ப்பதால் பலனில்லை, விளைவுகளை ஏற்படுத்தாத செயலோ, பேச்சோ அர்த்தமற்றது.

4. எதிர்க்கட்சி என்பதால் எல்லா நேரங்களிலும் எதிர்க்க வேண்டும் என்றில்லை.

5. இந்த அரசுடன் பேச வேண்டியுள்ள தேவைகள் உள்ளன.

இந்த ஐந்து விடயங்களையும் முன்னிறுத்தியே விக்னேஸ்வரன் தனது நியாயப்பாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த அறிக்கையில் அவர் சிலவேளைகளில் தன் மீதான தாக்குதலுக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இணக்க அரசியல் செய்தும் பயன்கிட்டவில்லை, எதிர்ப்பு அரசியல் செய்தும் பயனில்லை என்ற சலித்துப் போனவராக, வாதத்தை முன்வைத்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

முன்னைய அரசாங்க காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலை முன்னெடுத்தது.  அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும், இணக்க அரசியல் செய்தவர்கள் தமது நலன்களைப் பூர்த்தி செய்ததே அவர்கள் பெற்ற பலன் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தும், எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதனால் தான், இரண்டுக்கும் நடுவே பொதுவான ஒரு வழியைப் பற்றி அவர் பேச முனைந்திருக்கிறார். வரவு,செலவுத் திட்டத்தின் போது தாராளமாக எதிர்த்துப் பேசி விட்டதாகவும், அதனால் எதிர்த்து வாக்களிப்பேன் என்று பலரும் நம்பிவிட்டனர் எனக் கூறியுள்ள, விக்னேஸ்வரன், தான் அவ்வாறு இருக்கப் போவதில்லை என்ற புதியதொரு சமிக்ஞையையும் காண்பித்திருக்க்கிறார்.

இப்போது விக்னேஸ்வரன், கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை, இரண்டுக்கும் நடுவே உள்ள சாம்பல் நிற அரசியலை செய்ய முனைகிறார்.

அவரைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல.

2013 மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலும் இல்லாத- எதிர்ப்பு அரசியலும் இல்லாத, அணுகுமுறையைத் தான் கையாள முனைந்தார். அதற்காக அப்போது கடும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் முன்பாக பதவிப்பிரமாணமும் செய்து கொண்டிருந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல, எதிர்ப்பும் இல்லாத இணக்கமும் இல்லாத- நடுநிலை அரசியலை முன்னெடுக்க முடியாது போனது. ஏனென்றால், அவருக்கு அத்தகையதொரு வழியை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விட்டு வைக்கவில்லை.

விக்னேஸ்வரனை எதிரியாகவே கையாள முனைந்தது. ஆளுநராக இருந்த சந்திரசிறியைக் கொண்டு, அவரை நசுக்கவே முனைந்தது. அதனால் வேறுவழியின்றி அவரும் எதிர்ப்பு அரசியலுக்குள் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

ஒரு கட்டத்தில் அவர் கூட்டமைப்பை விடவும் தானே, தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர் போலவும் காட்டிக் கொண்டார். பொதுத்தேர்தல் வரைக்கும் அவர் அதே நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தினார். இப்போது திடீரென எதிர்ப்பும் இல்லை- இணக்கமும் இல்லை என்று, தனக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பாக வலயத்துக்குள் இருக்க முனைகிறார்.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே இருப்பதன் மூலம், அவர், அரசாங்கத்துடன் பேசவும், இணக்கம் காணவும் தயாராக இருப்பதான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசுடன் பேசுவது தவிர்க்க முடியாதது. அரசுடன் பேசாமல் பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அதற்கான சூழலும் இல்லை.

ஆனால், விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போல, பேசுவதற்கு அரசாங்கம் இடமளிக்குமா – வாய்ப்புக் கொடுக்குமா என்பது தான் பிரச்சினைக்குரிய விவகாரம். வடக்கு மாகாணசபையில் அவரை செயற்பட விடாமல் ஆளுநரைக் கொண்டு அடக்கிய நிர்வாகம் தான், இப்போது ஆட்சியில் இருக்கிறது.

அவர்களுடன், அரசியல் கைதிகள் தொடர்பாக அரசியல் தீர்வு தொடர்பாக, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும்.  ஆனால் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று, அவருடன் பேசக்கூடிய நிலையில் அரச தரப்பு இல்லையே. குறைந்தபட்சம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது கூட, அதற்குப் பதிலளிக்கின்ற சம்பிரதாயத்தையாவது கடைப்பிடிக்கக் கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும்.

அந்த சம்பிரதாயத்தைக் கூட தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறான அரசாங்கத்துடன் அரசியல் கைதிகள் குறித்து, அரசியலமைப்பு குறித்து, அரசியல் தீர்வு குறித்துப் பேசி தீர்வு காண்பதென்பது குதிரைக் கொம்பு என்பது இன்னமும் விக்னேஸ்வரனக்குத் தெரியாமல் இருந்தால், அவர் அரசியலில் பாலர் வகுப்பில் தான் இன்னமும் இருக்கிறார் என்றே கருத வேண்டும்.

தான் வாக்களித்தோ வாக்களிக்காமல் விடுவதாலோ எந்த விளைவும் ஏற்படாது என்ற கூறிய விக்னேஸ்வரனுக்கு,  இவருடன் பேசியென்ன, பேசாமல் விட்டென்ன என்ற மனோநிலை தான் அரசாங்கத்திடம் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஏனென்றால், அவர்களிடம் போதிய பலம் இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்துடன் எந்த அரசியலை முன்னெடுத்தாலும், விக்னேஸ்வரனாலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ, பேசித் தீர்க்க முடியாது.

கடந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவிலேயே அது காலத்தைக் கடத்தியது. அப்போதைய அரசாங்கத்துடன் சரியாக பேரம் பேசவில்லை என்றும், சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டது என்றும் கூட்டமைப்பை குற்றம்சாட்டியவர்கள் ஏராளம். அவர்களில் விக்னேஸ்வரனும் விதிவிலக்கல்ல.

இப்போது அவர் எந்த நியாயத்தை கூறி தப்பிக்க முனைகிறாரோ, அதே நியாயம் தான் அப்போது கூட்டமைப்புக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதாவது கூட்டமைப்பு ஆதரவு கொடுக்காமல் போனாலும். முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புகளையும், வரவு,செலவுத் திட்ட வாக்கெடுப்புகளையும் வெற்றி கொள்ளக் கூடிய நிலையில் ரணில் விக் கிரமசிங்க அரசாங்கம் இருந்தது.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் பேரம் பேசக்கூடிய நிலையில், கூட்டமைப்புக்கு வாய்ப்பும் இருக்கவில்லை. சூழலும் வாய்க்கவில்லை. ஆனாலும் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கூட்டமைப்பை மிகக்டுமையாக விமர்சித்தனர். இணக்க அரசியல் செய்வதாக சோரம் போனதாக குற்றம் சாட்டினர்.

அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு, எதிர்க்கட்சி என்றால் எதிர்க்க வேண்டும் என்றில்லை என கூறிய நியாயத்தை, அப்போது, விக்னேஸ்வரன் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது அவரும் அதே போர்வைக்குள் மறைந்து கொள்ள முனைந்திருக்கிறார். இது அவரது அப்பட்டமான அரசியல் குத்துக்கரணம் எனலாம்.

எதிர்ப்பதால் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட பின்னர், எதிர்க்காமல் விடுவதும், எதிர்ப்பதும் ஒன்றுதான் என்று அவர் கூறியிருக்கிறார். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை, எந்தவொரு தமிழ்த் தலைவரிடமும் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஒன்றில் எதிர்க்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்.

விக்னேஸ்வரனும் எதையோ ஒன்றைச் செய்ய முனைகிறார். அதன் மூலமும் விளைவுகளை ஏற்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் தனது அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. அது எவ்வாறு நியாயமானதோ, அதுபோல, தோல்வியா வெற்றியா என்பதை விட போராடுவது தான் முக்கியமானது.

விக்னேஸ்வரனின் பாதை வெற்றி என்றால் மட்டும் போராடுவது போன்றது. அவர் ஏன் திடீரென இவ்வாறு மாறினார் என்ற கேள்வி எழுகிறது. கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவின் ஆலோசனைப்படி தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விட்டது என்று கூறப்பட்டிருந்தது.

தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போது, இலங்கையைக் கையாளுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது என்றும், இது இந்தியாவின் பழைய உத்தி என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறாயின், விக்னேஸ்வரனும் கூட, சாம்பல் நிற அரசியலை தெரிவு செய்திருப்பதற்குப் பின்னால் இந்தியா தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

https://www.virakesari.lk/article/96901

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியையும்,கூட்டமைப்பையும் வழிநடத்தும் ஒரு சக்தி இருக்கிறது. அது இந்தியா.முக்கியமான தருணங்களில் அது அவர்களை அறியாமலே வெளிப்படுத்தப்படும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் மாணவர்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்ட 13 அம்சத் திட்டததை தயாரித்த போது முன்னணியை வெளியேற்றுவதில் விக்கினேஸ்வரன் கூட்டமைப்போடு சேர்ந்து நின்றார். உள்ளுராட்சித் தேர்தலின் போதும் கஜனுடன் கூட்டுச் சேர இருந்த சுரேஸ் திடீரென்று பல்டியடித்து ஆனந்த சங்கரியுடன் இணைந்தார். விக்கி கூட்டமைபபை விட்டு வெளியேறும் போது ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதராக அரசியல் செய்த கஜேந்திரகுமாருடன் சேர்ந்து ஒரு வலுவான கட்சியாக ஒருவாக்காமல் புதிதாக ஒரு கட்சியை உருவாக்கினார். ரெலோவில் இருந்து பிரிந்தவர்களும்இஅனந்தியும் புதிதாக கட்சிகளை உருவாக்கி விக்கியுடன் இணைந்தனர். எல்லாவற்றிற்கும் பின்னணி இந்தியா.இந்தியாவால் இலகுவில் கையாள முடியாதவராக கஜேந்திரகுமார் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.