Jump to content

வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020

பானுமதி.ந டிசம்பர் 12, 2020 

உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில் நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதிலிருந்து நாம் இந்தக் கட்டுரையைத் தொடங்குவோம்.

மனிதன் பல உயிரினங்களிலிருந்து மாறுபடுவது அவனது சிந்திக்கும் திறனால்தான். உண்ணும் உணவினுக்காய், உலகத்தின் பூபரப்பை, செந்நெல் கழனிகளாய், செங்கரும்புத் தோட்டங்களாய் மாற்றிய வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில்களை இயந்திர மயமாக்கியதும் இயந்திரப் புரட்சியிலிருந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு முன்னேகியதும் அவன் அறிவின் வீச்சிற்குச் சான்று. இவை அனைத்தும் மனித சமுதாயத்திலும் தொழிற்சாலைகளிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தன, மேலும் சில எதிர்மறை விளைவுகளையும்; இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் எத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டுவரும், எத்தகைய அழிவுகளுக்கு இடம்தரும் என்பது பற்றி இக்கட்டுரை பேசுகிறது.

spacer.png

 

மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை நாம் அறிவோம். நம் திசுக்களின் வளர்சிதை மாற்றம், பருவ நிலை மாற்றம் என்பதைப் போலவே தொழில்நுட்ப மாற்றமும் நம் வாழ்வியல் முறைகளுக்குக் காரணியாக அமைகின்றது. ‘காசி நகர்ப்புறத்து பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி’ செய்யச் சொன்னாரே பாரதி!

கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டுவருமென்றும் சிந்திக்க வேண்டும்.

உலகப் பொருளாதார அமைப்பு, ‘மாற்றங்களின் முன்னோடிகள் கூட்டமைப்பு’ வாயிலாக உலகின் தலைசிறந்த அறிவாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்களைப் பொதுமக்களும் ஆள்வோரும் அறியும்வண்ணம் வெளியிடுகிறது. எண்ணம், அதன் விளைவு, அது நன்மையா, தீமையா என்பதைப் பற்றி அலசி ஆராய்ந்து வெளியாகும் கட்டுரைகள், அது எழுப்பும் கேள்விகளுக்கு மேலாகக்கூட ஆர்வங்களை எழுப்பி வேறு வகைமைகளிலும் சிந்திக்கச் செய்கிறது.

உலகில் பல பிரச்னைகள் இருந்தாலும் 2020-ல் சுகாதாரமும் சூழல் சிதைவுகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவை – உடனடித் தீர்வைக் கோருபவை. இவற்றைப் பற்றியே பல தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்பது வள்ளுவர் வாக்கு. நோயை அறிந்து, அதைக் குணப்படுத்துவதில் நம்முடைய திறன் கருவிகள் குறிப்பிடத்தகுந்த வழியில் செயல்படுகின்றன – அல்சைமர், பார்கின்சன்ஸ் போன்றவைகளை முன்கூட்டியே அறிய முடியக்கூடிய திறன் கருவிகள் நோயாளிகளின் இடர்நீக்கும் அருஞ்சாதனங்கள். நிஜ உறுப்புகளுக்கு மாற்றாக மெய்நிகர் உறுப்புகள்கொண்டு நோய்களைக் கண்டறிவது, இலக்க முறையில், நுண் கிருமிகள் அல்லது நுண்ணுயிர்களின் மரபுசார் செய்திகளைப் பதிவது, பின்னர் அவற்றை உடல் ரீதியாக உற்பத்திசெய்து கையாள்வது போன்றவை செய்திறன் மேன்மையைக் காட்டுகின்றன. மருத்துவ உபகரணங்களில் மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளின் விளைவான நுண் ஊசிகள், உலகளாவிய முறையில் தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்லாது, நோய்ப் பரவலை குறைக்கவும் உதவும்.

சூழல் கேடுகளைக் குறைப்பதற்காக, முக்கியமாக, கரிப் பதிவுகளால் ஏற்படும் மாசினைக் குறைக்க, சூர்ய சக்தியின் மூலம் கார்பன்-டை-ஆக்சைடை மதிப்பு மிக்கப் பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன; சிமென்ட் தயாரிப்பில் கார்பன் வெளியேற்றம் குறைந்துள்ளது; தொல்லெச்ச எரி பொருட்களைப் பயன்படுத்தாமல், ஆனால் அதிக மின்சாரம்கொண்டு, ஹைட்ரஜனை உற்பவிக்கிறோம்; வான் பயணங்களில், மின் இயந்திரங்களை விமானத்துறை பயன்படுத்துவதன்மூலம் எரிபொருள் செலவீனங்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் – கரியுமிழ்வையும்.

spacer.png

இலக்கமுறை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைத் தூண்டும் செயற்பாடுகள், தொழிற்சாலைகளிலும் நம் அன்றாடத்திலும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மிகை யதார்த்தங்களும் மெய் நிகர் உண்மைகளும் நம் வாழ்விலும் தொழிலிலும் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. இடஞ்சார் கணினி இதை இன்னமும் முன்னேற்றும் – மேகத்தில் இணையும் உருவப் பொருட்களை இலக்கமாக மாற்றவும், நம் திறன் கருவிகளின் மூலம் புறவய உலகில் தாக்கம் ஏற்படுத்தவும் ‘ஸ்பேஷியல் கம்ப்யூடிங்’ உதவும். மேலும், புது வகை உணரிகள் (க்வாண்டம் சென்சார்ஸ்) பற்பல செயல்களை ஆற்றுகின்றன – எரிமலைச் செயற்பாடுகள், நில நடுக்கம் பற்றிய முன்னறிவிப்புகள் போன்றவை தொடங்கி நிகழ் நேரத்தில் மூளை இயக்கங்கள் வரை.

ஆர்வத்தைத் தூண்டும் இவ்வகையான தொழில்நுட்பங்கள் ஆய்வகங்களிலிருந்து வெளிவந்துவிட்டன; பெரும் சிக்கல்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகில், சரியான முதலீடும் சட்ட வரையறைகளும் அறிவான பயன்பாடும் நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

1) நுண் ஊசி உபகரணங்கள் தொற்றுப் பரவலைக் குறைக்கும்; மேலும் மருத்துவ வசதிகள் அற்ற இடங்கள் அல்லது மருத்துவர்கள் செல்ல இயலாத இடங்களில் மனித நலத்தினைப் பரிசோதிக்கவும் தேவையெனில் அதற்கான தீர்வினை அளிக்கவும் இவை பெரிதும் பயன்படும்.

2) நோயினைக் கண்டறிய அந்த நோயாளியின் உடலிலேயே ஆபத்துத் தரக் கூடிய கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மெய்நிகர் உறுப்புகளைப் பயன்படுத்தி, நோய் எது, அதைத் தீர்ப்பது எப்படி எனக் கண்டறியலாம்.

3) திறன் பேசிகளைப் பயன்படுத்தி, சுவாசக் கோளாறுகள், மனச்சிதைவு, பார்கின்சன்ஸ், அல்சைமர், ஆடிஸம் போன்ற பல நோய்களைக் கண்டறியலாம்

4) விமானங்களில் மின் இயந்திரத்தைப் பயன்படுதுவதால், கரி உமிழ்வு கட்டுப்படுத்தப்படுகிறது – மேலும் 90% வரை எரி பொருள் சிக்கனம், 50% வரை பராமரிப்பு, கிட்டத்தட்ட 70% சத்தக் குறைப்பு சாத்தியமாகிறது.

5) வளர்ந்து வரும் மரபணு வரைவியல் நம்முடைய மரபணுவில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி, நம்மைப் பெரும்பாலும் நலமுடன் வாழவைக்க மருத்துவருக்கு உதவும்.

நன்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா?

spacer.png

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிற்சாலைகளிலும் சமூகத்திலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற போதிலும் தன்னளவில் மாற்ற முகவர்களாகச் செயல்படப் போதுமானவைதாமா என்பதையும் நல்லது செய்வதற்கு மட்டுமே பயனாகுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நம்முடைய தொழில்களிலும் சமூகத்திலும் அவற்றை இயல்பாகப் பொருத்துவதற்கும் அதைப் பரவலாக்குவதற்கும் எளிய செயல்பாடுகளின் மூலமாக அவற்றை நிரந்தரப் பயன்பாட்டில் இலாபகரமாக இணைப்பதற்கும் பெருமளவில் நிதி தேவைப்படும் என்பது ஒருபுறம். ஒரு தனி நிறுவனமோ, அரசாங்கமோ இதைத் தனியே செய்ய இயலாது. வட்டார அளவிலும், உலகளவிலும், பொது – தனியார் கூட்டமைப்புகள், வளங்களையும், தரவுத் தகவல்களையும் ஒன்றிணைத்து இதைச் சாத்தியப்படுத்த வேண்டும். இதன் வழியாக இந்தத் தொழில்நுட்பங்களின் பயன்கள் முடிந்த அளவு விரைவாக சமுதாயத்தைச் சென்றடைய முடியும்.

இந்தத் தொழில் நுட்பங்களுடன் கூடவே வரும் முக்கியக் கேடுகளைக் களையும் தீர்வுகளை, கொள்கை அமைப்பாளர்கள் விரைந்து செயல்பட்டுக் கண்டடைய வேண்டும். உதாரணமாக, நோயைக் கண்டறியும் திறன் கருவி, மிகச் சரியாகத்தான் குறிப்பிட்ட நோயைக் கண்டறிந்துள்ளதா, அது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டின் நலத் துறை நிபுணர்களால் அலசப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட ஒன்றா, யார் அதைக் கையாள்வது, யாரிடம் அதற்கான உரிமை உள்ளது, தகவல் திருடப்பட்டால் சட்டப்படி அதற்கு யார் பொறுப்பாளர்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மரபணு வரிசைகளைக் கையாண்டு, இலக்க முறையில் புறவயமாக அதைக்கொண்டு உடற்கூறுகள் அமைப்பதில், கடும் கொடும் செயல்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும் ஆபத்துக்கள் இருக்கின்றன. இந்தத் தொழில் நுட்பம் விடுக்கும் சவால்கள், இதை அழிவிற்காகப் பயன்படுத்தும் சாத்தியங்கள் பற்றிக் கவனித்து அதைப் போக்கும் வழிகளைச் சொல்வது அறிவியலாளர்களின் முக்கியப் பொறுப்பு என்பது ஒருபுறம்; மறுபுறம், இந்த நுட்பங்கள் தேச எல்லைகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதால் அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்து உலகம் முழுமைக்கும் பொதுவான நெறிகளை வடிவமைக்க வேண்டும்.

கொள்கை மற்றும் தொழிலிலளவில் இணைந்து எடுக்கப்படும் முன்திட்ட நடவடிக்கைகள், இந்தத் தொழில் நுட்பங்களிலிருந்து நன்மைகளையும் இவற்றில் சில தவறாகப் பயன்படுத்தப்படுமெனின் வரும் தீமைகளைக் குறைக்கவும் பெருமளவில் உதவும். இடர்களை விரைவாகப் போக்கவேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம் இன்று; இந்தத் தொழில்நுட்பத்தில் பல அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவை; இதில் சிலவற்றில் ஆபத்துக்களும் பொதிந்துள்ளன; முடிவுசெய்யும் இடத்தில் இருப்போர், சீர் தூக்கிச் செயல்படும் சமயமிது என்பதை உணரவேண்டும்.

சந்தர்ப்பங்களைத் தவறவிடலாமா?

இந்த உலகை இவ்வாறு கற்பனை செய்வோமா?

பசுமை ஹைட்ரஜனில் ஓடும் சிற்றுந்துகள், மின் இயந்திரங்களில் இயங்கும் விமானங்கள் இவற்றினால் குறையக்கூடிய கரியுமிழ்வு மாசு; மரபணு நோய்களை நீக்கி, வரவிருக்கும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து அதைத் திறமையான மருத்துவ வழிகளில் போக்குவது; இலக்க உலகில் வாழும் நம்மைப் புற பௌதீக உலகுடன் இணைத்து அனுபவத்தை மேம்படுத்துவது – நன்றாக இருக்கிறதல்லவா? இது தொழில்நுட்பரீதியாக நடக்கக்கூடிய ஒன்று. அதை உண்மையெனச் செய்வது நம் கரங்களிலும் ஆள்வோரின் கரங்களிலும் இருக்கிறது. வளர்ந்துவரும் சிறந்த 10 தொழில் நுட்பங்கள் 2020 பற்றிய இக் கட்டுரை ஆர்வமூட்டும்.

சாத்தியங்களை அடைவதற்கு உதவும்.

அந்தத் தொழில்நுட்பங்கள் என்னென்ன?

வலியற்ற நுண் ஊசிகள்

சூர்ய சக்தி வேதியியல்

மெய்நிகர் நோயாளிகள்

இடவெளிக் கணினி

இலக்கமுறை நலஆய்வும் மருந்தும்

மின் வான்வெளிப் பயணம்

சிமென்ட் தயாரிப்பில் குறைந்த கரிப்பதிவு

குவாண்டம் உணரிகள்

பசுமை ஹைட்ரஜன்

முழு மரபணு வரிசை

இவற்றைப் பற்றி விரிவாகத் தொடர்ந்து பார்ப்போம்.

https://solvanam.com/2020/12/12/வளர்ந்து-வரும்-பத்து-சிற/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம்.

திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் கூட வன்மையாக மேனியை நிரடும் ஊசிகள் பலருக்கு வலி நிறைந்த ஒன்றுதான். நுண் ஊசிகள் வலி ஏற்படுத்தாமல் உங்கள் உடலில் உங்களுக்குத் தேவையான மருந்தினை செலுத்தும் என்றால், நீங்கள் ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிட்டீர்கள் என்று பொருள்.

spacer.png
 
 

தீ நுண்மியினால் மனித இனம் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்டறிவது முதல் அதற்கான தடுப்பூசிகளை உண்டாக்குவது வரை தன்னார்வல மனிதர்களை நாம் ‘சோதனை மாதிரி’ யாகக் கொள்ள வேண்டியுள்ளது. ‘இலக்க’ (Digital) முறைகளில் இவற்றை பரிசோதித்துப் பார்ப்பது தடுப்பூசியின் திறனை நன்கு அறியவும், மேம்படுத்தவும், பக்க விளைவுகளை அறியவும், அவற்றைப் போக்கவும் மிக ஏற்புடைய ஒன்றாகப் பரிணமிக்கும் அல்லவா? தன்னார்வலர்கள் இல்லாமல் எண் இலக்க வழி முறைகளைப் பயன்படுத்தும் போது நேர விரயங்கள் குறைந்து துல்லியமானத் தரவுகளைக் கொண்டு சிறந்த இறுதியை அடைய முடியும். ‘அறிவியல் அமெரிக்கன்’ (Scientific American)  மற்றும் ‘உலகப் பொருளாதார அமைப்பு’ (World Economic Forum) முன்னெடுத்த, வளர்ந்து வரும் தொழில் நுட்ப மாநாட்டில் பரிசீலிக்கப்பட்ட 75-ல், இடம் பெற்ற பத்தில், ஒன்று நுண் ஊசி தொழில் நுட்பமாகும்.

நுண் ஊசிகள் வலியற்ற முறையில் மருந்தை செலுத்துவதற்கும், இரத்தப் பரிசோதனைக்காக உறிஞ்சப்படும் குருதியை நோயாளியே அறியாமல் எடுப்பதற்கும் பயன்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் மிகவும்  தேவையான இது, பெரு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. உறிகுழலில் உள்ளதோ, ஒட்டோ, நுண் ஊசிகள் நரம்பு முடிவுகளை அணுகாததால், வலி ஏற்படுத்துவதில்லை. நீளத்தில் 50-2000 மைக்ரான்தான் அவை ( ஒரு தாளின் ஆழ அளவு) 1-100 மைக்ரான் அகலம் (மனித முடியின் அகலம்) இறந்த, வெளித் தோல் அடுக்கை ஊடுருவி, இரண்டாவது அடுக்கான மேல் தோலில் நுழைகின்றன. இந்த இரண்டாவது அடுக்கில் திசுக்களும், இடையிடையே திரவமும் உள்ளது; இந்த நுண் ஊசிகள் உள் தோலை, எங்கே நரம்புகளின் இறுதி உள்ளதோ, அதைப் பெரும்பாலும் தொடுவதில்லை. அந்த உள் தோலில்தான் குருதிக் குழாய்களும், நிண நீர்க் குழாய்களும் இணைப்புத் திசுக்களும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. எனவே அவைகள் உட்செலுத்தப்படும் ஊசியால் சேதமடைவதில்லை.

spacer.png

 

இந்த நுண் ஊசி உறிகுழல்களும், ஒட்டுக்களும் ஏற்கெனவே தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கின்றன. நரம்பு சார்ந்த வலிகளுக்கும், நீரிழிவு நோய்க்கும், புற்று நோய்க்குமான குணப்படுத்தும் மருத்துவ முன் செயல்பாடுகளில் இடம் பெறும் வகையில் அமைந்துள்ளன. மரபான முறையில் தோலில் பரந்து ஊடுறுவும் மருந்துகள், அத்தகைய பரவு முறையினாலேயே ஆற்றலைச் சிறிது இழந்துவிடுகின்றன. ஆனால், மேல் தோலிலோ, உள் தோலிலோ நேரே மருந்தைச் செலுத்தும் நுண் ஊசிகள், குறியை நோக்கிச் செயல்படும் அம்புகளைப் போன்றவை. தோல் நோய்களான தடிப்புத் தோல் அழற்சி, மரு, பாலுண்ணி, சில வகையான புற்று நோய் இவற்றைக் குணப்படுத்துவதற்காக நக்ஷத்திர வடிவிலுள்ள ஊசிகளுடன் பிணி நீக்கும் பூச்சுகளைச் செலுத்தும் புது மாதிரி செயல் முறையை இந்த வருடம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மென்மையான உள் நுழைவுகள் கொண்ட இந்த ஊசிகள், தோலை வலியில்லாமல் துளைத்து பிணி போக்கும் மருந்தை சிறப்பாகச் செலுத்துகின்றன.

விரைவாக, வலியற்ற முறைகளில் இரத்தத்தையும், திரவத்தையும் (இடைவெளிகளில் உள்ளவை) உடல் நலப் பரிசோதனைகளுக்காகவும் நோயைக் கண்டறியும் பரிசோதனைகளுக்காவும் பயன்படுத்தும் வகையில் இந்த ஊசிகள் வணிகமுறைப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.  இந்த ஊசி ஏற்படுத்தும் நுண் துளைகள், மேல் தோலிலோ, உள் தோலிலோ இடம் சார்ந்த அழுத்தத்தை உண்டாக்கி சேமிப்புக் கலனில் குருதியோ, திரவமோ  சேர வழி செய்கின்றன. இவ் ஊசிகள் உயிர் உணரிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால், சில நிமிடங்களில் நம் உடல் நலம் சார்ந்த சில முக்கிய அடிப்படை விவரங்களான சர்க்கரை, கொழுப்பு, மது, மருந்துகள் கொண்டு வந்திருக்கும் சில விளைவுகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அறிந்து துரிதமாகச் செயல் பட முடியும்.

நலப் பரிசோதனை செய்யும் ஆய்வகத்திலோ, நம் வீட்டிலோ, நாம் இருக்கும் இடத்திலோ இவற்றைப் பயன்படுத்த முடியும். நாம் இருக்கும் இடத்தில் இருக்க, நம் பரிசோதனை முடிவுகள் உடனடியாகத் தெரிய வரும் வகையில் சில வகைகள் உள்ளன; அல்லது அதை ஆய்வகத்திற்கு அனுப்பி விடையறியும் வழிகளும் உள்ளன. ஒழுங்கு முறைத் தடைகளை வென்று ஒரு பொருள் இன்று பயன்பாட்டிற்கு வந்து விட்டது. செவென்த் சென்ஸ் பயோசிஸ்ட்த்தின் (Seventh Sense Bio System) டேப் (TAP-push button system) என்ற குருதி சேகரிப்புக் கலன் அமெரிக்காவாலும் யூரோப்பாவாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது; தனி மனிதர் தானே தன் அடிப்படை நலத்தை அறியவோ, தொடர்ந்து கண்காணிக்கவோ, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவோ உதவும் வகையில் இக்கருவி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆய்வகச் சூழல்களில், நுண் ஊசிகள், கம்பியற்ற தொடர்பு சாதனங்களுடன் இணைக்கப்பட்டு, உயிரின் மூலக்கூறை (Molecules) அளவிடும் வகை உருவாகியுள்ளது. தத்தம் உடல் நிலைக்கேற்ற அளவில் மருந்து என்ற கனவு இதில் நனவாகும்; மூலக்கூறின் அளவின் படி, மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படும், அது ஊசியின் மூலம் வழங்கப்படும். அனைவருக்கும் பொருந்தும் ஆயத்த ஆடைகள் அல்ல, நமக்கென்றே தைக்கப்பட்டவை, சரியாகத்தானே இருக்க வேண்டும்?

spacer.png

நுண் ஊசிகள் அதிக செலவு வைக்கும் ஒன்றல்ல; அவற்றைப் பயன் படுத்துவதும் எளிதே. மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களிலும், புவியியல் ரீதியாக உடனடியாக அணுக முடியாத இடங்களிலும் இதன் பயன்பாடு மனித நலத்தைக் காக்கும். எளிதாகப் பயன் படுத்தும் வகையில் மைக்ரான் பயோ மெடிகல் (Micron Biomedical) அப்படி ஒரு கருவியை வடிவமைத்துள்ளது- மென்மையான கட்டு ஒட்டுத் துணி (Bandage) அது; எவரும் உபயோகிக்க முடியும். விலங்குகள் மற்றும் (ஆரம்ப நிலை) மனித முன்னோட்டங்களில் பரிசோதித்து Vaxxas வடிவமைத்துவரும் நுண் ஊசி ஒட்டு (Patch), வழக்கமான மருந்தில் ஒரு சிறு பகுதி அளவே எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பது நற்செய்தியே. விருந்தும், மருந்தும் அளவு கெட, கேடதிகம். நுண் ஊசிகள் குருதித் தொற்றினை ஏற்படுத்தாது; மேலும், மரபார்ந்த ஊசிகளை நாம் கழிவுகளாக்குவதில் சூழல் கேடுகள் உண்டாகின்றன.

சிறு ஊசிகள் எப்போதுமே நன்மை செய்பவையா? அதிக அளவில் மருந்து செலுத்த அவை பயன்படாது. எல்லா மருந்துகளையும் நுண் ஊசிகளால் செலுத்த முடியாது. உயிர்சுட்டுக் குறிகள் (Bio Markers) அனைத்தையும் இதன் மூலமே கண்டறிவதும் இயலாததே. நோயாளியின் வயது, எடை, ஊசி போட வேண்டிய இடம், அதன் நுட்பம் ஆகியவை பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும். ஆனாலும், இந்த வலி தரா செல்லக் கிள்ளல்கள், மருந்தினைச் செலுத்துவதிலும், நோயைக் கண்டறிவதிலும் திறம்படச் செயல்பட்டு விரிவடையும் சாத்தியங்கள் உள்ளன. தோலையும் தாண்டி இவை உறுப்புகளை அணுகுவதற்கும் ஆய்வாளர்கள் வழிவகை செய்வார்கள்.

பச்சைக் குத்துதல் என்ற ஒரு பழக்கம் பழங்குடி காலத்திலிருந்து உலகில் உண்டு. காதுகளில் துளையிட்டு தோடுகள் அணிவிப்பது இன்று வரை தென் இந்தியாவில் நிலவுகிறது. குலம், இனம், பெயர், நாடு அனைத்தும் பச்சை குத்துவதில் தென்பட்டுவிடும். அவை நரம்பு முடிச்சினை சீண்டாத வண்ணம் திறமையானவர்களால் ஆரோக்கியத்தின் பொருட்டு குத்தப்படும். அவை அழியாமலும் இருக்கும். ஆனாலும், பச்சைக் குத்துவதை மருத்துவ அறிவியல் ஏற்கவில்லை.

அக்யூ பஞ்சர் மருத்துவம், ஊசிகளை பயன்படுத்தி கழுத்து வலி, முதுகு வலி, தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் ஆகியவைகளைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது. பழையன புது வடிவெடுத்து எந்தத் துறையிலும் வருகிறது. வலி தரா ஊசிகளை வரவேற்போம்.

https://solvanam.com/2020/12/27/வலிதரா-நுண்-ஊசிகள்/

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சூர்ய சக்தி வேதியியல்

பானுமதி ந.

banu.jpg?resize=600%2C246&ssl=1

 

 

சூர்ய நமஸ்காரம் செய்வது நம் உடலுக்கும் உள்உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது என யோக சாத்திரங்கள் சொல்கின்றன. வால்மீகி இராமாயணத்தில், அகஸ்தியர் இராமனுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் சொல்லிக்கொடுக்க, அதை உச்சாடனம் செய்து இராவணனை அவர் ஆதவனின் சக்திகொண்டு வெற்றிகொள்கிறார் எனச் சொல்லப்பட்டுள்ளது. கண் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் இந்தத் துதியைச் சொல்லிவர குறைபாடு நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது. அந்தச் சொற்களுக்கு நரம்பினைச் சரிசெய்யும் ஆற்றல் இருக்கலாம். இதைத் தனிப்பட்ட முறையில்தான் புரிந்துகொள்ள முடியும்.

கரிவளியைப் (Carbon dioxide) பழங்கும் பொருட்களாக மாற்றம் செய்யும் செயல்முறையில் அவனுடைய சுடரொளி பயன்படுத்தப்படுகிறது என்கிறது நவீன அறிவியல்.

மனித நலத்திற்கும் அவனது சுகத்திற்கும் தேவையான வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கையில், தொல்லெச்ச எரிபொருள் (fossil fuels) பயன்படுத்தப்படுவதால், பிரித்தெடுக்கும் செயல்முறைகளும் கரி உமிழ்வும் (Carbon emission) சூழல் கேடுகளும் ஏற்படுகின்றன. வீணாகும் கரிவளியை, சூர்ய சக்தியை உபயோகித்துத் தேவையான வேதிப் பொருட்களை உருவாக்கும் ஒரு புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது; இது இரு வகையான நன்மைகளைச் செய்யும் சாத்தியங்கள் உள்ளன – ஒன்று, இந்தத் தேவையற்ற வாயுவை இடு பொருளாகப் பயன்படுத்துவது; இரண்டு, சூர்ய சக்தியை உபயோகிப்பதால், தொல்லெச்சப் பொருட்களை உபயோகிக்காமல், இயற்கை சக்தியைக்கொண்டு மற்றப் பொருட்களை உற்பத்தி செய்வது.

ஒளிச்சேர்க்கை வினையூக்கிகள் (Photo catalysts) இன்று அடைந்துள்ள மேம்படுதலால், இந்தச் செயல்முறை நடைமுறைச் சாத்தியங்களுடன் இருக்கிறது. கரிவளியில், ஆக்ஸிஜனுக்கும் கார்பனுக்கும் இருக்கும் அந்த இறுகிய இரட்டைப் பிணைப்பை அகற்ற உதவும் ஒளிச்சேர்க்கை வினையூக்கிகளை அறிவியலாளர்கள் வடிவமைத்துள்ளனர். சூரியச் சுத்திகரிப்பு (Solar Refineries) நிலையங்கள் அமைக்க இது மிகத் தேவையான ஒன்று; இந்த நிலையங்கள், வீணாகும் வாயுவிலிருந்து உபயோகப்படும் கலவைகளை, முக்கியமாக இயங்குதள மூலக்கூறுகளை (Platform Molecules) உருவாக்கும்; இந்த மூலக்கூறுகளை இடுபொருளாக்கித் தொகுப்பு அல்லது சேர்க்கையின் வழி மருந்துகள், சோப்புகள், உரங்கள், ஜவுளி ஆடைகள் ஆகியவற்றை உற்பத்திசெய்யலாம்.

ஒளிச்சேர்க்கை வினையூக்கிகள் குறைக்கடத்திகள். (Semi conductors.) கரிவளியின் மாற்றத்திற்குத் தேவையான எதிர் மின்னணுக்களை (electrons) உண்டாக்குவதற்கு இந்த வினையூக்கிகளுக்கு மிகு சக்தியுள்ள புறஊதாக் கதிர்கள் (ultraviolet rays) தேவை. சூர்ய ஒளியில் புறஊதாக் கதிர்கள் 5%தான்; அதனால் அது பற்றாக்குறையாக இருக்கிறது; மேலும் புறஊதாக் கதிர்கள் தீங்கு செய்பவை. அபரிமிதமானதும் தீங்கற்றதுமான ஒளியைக்கொண்டு மாசற்ற வேதிப் பொருட்களை உற்பத்திசெய்ய இந்தப் புதிய வினையூக்கிகளைக் கண்டறிவது ஒரு முக்கியக் குறிக்கோளாக இருந்தது. தற்போது இருக்கும் டை(ட்)டானியம் டயாக்ஸ்சைட் (Titanium dioxide) போன்ற வினையூக்கிகளின் கலவை சார்ந்த வடிவம் மற்றும் உருவமைப்பில் கவனமான பொறியியல் மாற்றங்களைச் செய்து இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் வினையூக்கிகளை வடிவமைத்துள்ளார்கள். இது புறஊதாக் கதிர்களினாலேயே கரிவளியை ஆற்றலுடன் மூலக்கூறாக மாற்றினாலும் அதைச் சற்று மயக்கமூட்டி நைட்ரஜனையும் சேர்க்கையில், அதை உண்டாக்குவதில் செலவு செய்யப்படும் சக்தி மிகக் குறைகிறது. பிசின்கள், நுரைகள், ஒட்டுப் பலகைகள், அறைகலன்கள், தரைகள், கிருமி நாசினிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கையில் உபயோகப்படுத்தப்படும் வேதிப் பொருட்களான மெதனால், ஃபார்மால்டிஹெய்ட், ஃபார்மிக் அமிலம் போன்றவைகளைக் கட்புலனாகும் ஒளியுடன் இப்போது சொல்லப்படும் வினையூக்கிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும்.

தற்சமயம் கல்வி ஆய்வகங்களிலேயே சூர்ய வேதியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. லாரன்ஸ் பெர்க்லே (Lawrence Berkeley) தேசிய ஆய்வகத்துடன் கூட்டணி அமைத்துக் கலிஃபோர்னியா தொழில்நுட்ப அமைப்பு நடத்தும் செயற்கை ஒளிசேர்ப்பு இணைப்புக் கூட்டமைப்பு (Joint Center for Artificial Photosynthesis) இவற்றில் ஒன்று; சூர்யோதயக் கூட்டமைப்பு (Sunrise Consortium) என்று சொல்லப்படும், நெதர்லேன்ட்ஸ் சார்ந்த பல்கலைகள், தொழிற்கூடத் தொழில்நுட்ப ஆய்வகங்களின் கூட்டணி மற்றொன்று; முல்ஹைம், ஜெர்மனியிலுள்ள (Mulheim, Germanay) பன்முக எதிர்வினைத் துறையின் (Heterogeneous reactions) மேக்ஸ் ப்ளேங்க் (Max Planck) வேதிசக்தி மாற்றுத் துறையும் (Chemical Energy Conversion) இத்தகைய ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றன. சில தொழில் – தொடங்கு நிறுவனங்கள் (Start-ups) கரிவளியை மாற்றம்செய்துப் பயன்படுத்துவதற்கு மாறுபட்ட வழிகளைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளன – உதாரணமாக, மின்சாரத்தைச் செலுத்தி வேதி மாற்றங்களைக் கொணர்வது. ஆனால் இம்முறையில், மின்சாரம் சூர்ய சக்தியைப் பயன்படுத்தாமல், தொல்லெச்சப் பொருட்களை எரித்துத் தயாரிக்கப்பட்ட ஒன்றென்றால் அது சூழல் மாசுகளை ஏற்படுத்தும்; ஒளி மின்னழுத்தங்கள் (Photovoltaics) மூலம் இந்தக் குறைபாட்டைச் சரி செய்யமுடியும்.

சூர்ய ஒளியைப் பயன்படுத்தி கரிவளியினை தகுந்த வேதிப்பொருட்களாக மாற்றும் இந்த அறிவியல் முறை முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது; இது வணிக மயமாக்கப்படும்; வரும் ஆண்டுகளில் தொழில் – தொடங்கு நிறுவனங்களாலும் மற்ற குழுமங்களாலும் மேலும் வளரும். வேதிப் பொருள் தயாரிக்கும் தொழில் அமைப்புகள், இன்றைய வீணாகும் கரிவளியிலிருந்து உபயோகமாகும் வேதிப் பொருட்களை உற்பத்திசெய்து, கழிவுகளற்ற, சுழல் முறைப் பொருளாதாரமுள்ள, நச்சு உமிழ்வுகளற்ற இலக்கை நோக்கி முன்னேறும் சாத்தியங்கள் மெய்ப்படும்.

 

https://solvanam.com/2021/01/10/சூர்ய-சக்தி-வேதியியல்/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மெய்நிகர் நோயாளிகள்

பானுமதி ந.

மனிதர்களை உருவகப்படுத்துதலால் மேம்படும் பாதுகாப்பும் துரித உயிர் காத்தலும்

onsiteR.jpg?resize=600%2C336&ssl=1

 

 

 

 

‘பல சக்திகளைக் கொட்டும் முகிலாய், அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய், தூல அணுக்களாய், சூக்குமமாய், சூக்குமத்தில் சாலவுமே நுண்ணியதாய்’ எனப் பரசிவ வெள்ளத்தைப் பாடுகிறார் பாரதியார்.

‘அணுவிற்கணுவாய், அப்பாலுகப்பாலாய், கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி..’ என்கிறது விநாயகர் அகவல். நம் உடலின் உள்உறுப்புகளை மெய்நிகரில் காட்டி நம் மருத்துவமுறைகளில் ‘இன் சிலிகோ’ (in silico) புதுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளது.

மனித உடலை, அதன் உள் உறுப்புக்களை, உயிரை, தன்னுணர்வை, மனதை ஆராய்வதில் மெய்ஞானமும் விஞ்ஞானமும் வெவ்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகின்றன. உயிர் குடியிருக்கும் உடலை ஓம்பச் சொல்கிறார் திருமூலர். உடலில் ஏற்படும் நோய்ச் சிக்கல்களைக் கையாள்வதில் இன்று, மருத்துவத் துறையின் உடலியல் துறை மட்டும் ஈடுபடவில்லை. நுணுக்கமான மேம்பட்ட கணிதம், திரவ இயங்கியல், உயிர் தொழில்நுட்ப இயல், வேதியியல், பொறியியல் என்று பல்வகைப்பட்ட அறிவியல் துறைகள் இணைந்து கைகோர்த்து மனித நலத்தைக் குறைந்த செலவில், குறைந்த பின்விளைவுகளோடு, உலகளவில் மிகப் பரந்துபட்ட மனித உயிரினங்களைக் காப்பதற்கான கடமைகளைச் செய்துவருகின்றன.

உடல் நம்முடையது என்றாலும் உள்ளே என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நோயின் அறிகுறிகள் நம் உறுப்புகளில் ஒன்று அல்லது பல, சில வகைச் சிரமங்களில் இருப்பதைச் சொல்லவே காலமெடுக்கிறது. அதிலும், மிகச் சிக்கலான அல்லது தீவிரமான நிவாரணம் கோரும் வியாதியால் அவதியுறும்போது, ‘இதுவா, இப்படியா’ என்ற கேள்விகள் மருத்துவர்களையும் அசைத்துப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட மருத்துவச் செயல்முறை எத்தகைய பக்க விளைவுகளைக் கொண்டுவருமோ எனச் சுற்றமும் நட்பும் பயந்து திகைக்கும்போது, மெய்நிகர் வழிகள் எத்தனை அற்புதமானவை என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.

கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன. அவை ஏன் மருத்துவரின் இடத்தை மட்டும் பிடிக்கவேண்டும்? நோயாளிகளின் பிரச்சனையை அறிவதற்கு அவை மருத்துவர்களாகவே ஆகிவிட்டால்தான் என்ன? இந்தத் தீநுண்மிக் காலத்தில், இது எத்தகையதொரு வரமாக அமைந்திருக்கக்கூடும்? கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதிலும் அதை மெய்நிகர் உறுப்புகளில் செலுத்தி அதன் பக்க விளைவுகளை அறிந்து அதை மேம்படுத்துவதிலும் இவை அரும்பங்காற்றி இருக்கக்கூடும்; நேர விரயம், பொருட் செலவு, உயிரிழப்புகள், தொற்றுப் பரவல் ஆகியவற்றை மிகவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்க முடியும். 

இதைப்போலவே, சில தடுப்பூசிகள் எதிர்பார்த்த வகையில் இந்தத் தொற்றுப்பரவலைத் தடுக்கமுடியாது என்பதையும் அவற்றை உருவாக்குவதற்கான நேர, பொருள் விரயங்களைத் தவிர்ப்பதற்கும் அதி முக்கியமாகத் தன்னார்வல மனிதர்களுக்கு இவற்றைச் செலுத்தவேண்டிய அவசியம் நேரிடாமலும் இந்த மெய்நிகர் நோயாளிகள் மிக எளிதாகச் சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். நிகர்நிலை உறுப்புகள் அல்லது உடல் அமைப்புகளில் ‘இன் சிலிகோ’ மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தரும் மிகப்பெரும் பயன் இது. கணினியின் ‘சிப்’பிற்கு சிலிக்கான் எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல இந்த மருந்துகள் நிகழ்நிலையில் நோய், அதற்கான மருந்து, மருத்துவ முறை, அதன் எதிர்வினை ஆகியவற்றை அறிய உதவுவதால், ‘இன் சிலிகோ’ மருந்து அல்லது மருத்துவமுறை என்றழைக்கப்படுகின்றன. (மரபியல், உயிர் தொழில்நுட்பம், பெருந்தரவுகள், ஆழ் கற்றல் ஆகியன இடம்பெறும் உயிர் தொழில்நுட்பக் கம்பெனியான பாக் ஷெக் காக் [Pak Shek Kok] ஹாங்காங்கில், ‘இன் சிலிகோ’ மருந்துகளை மெய்நிகர் உறுப்புகளில் செலுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.)

பரிசோதனைக்காக மனிதர்களைப் பயன்படுத்துவது இதனால் குறையும்; உடனடி வருங்காலத்தில், உண்மையான நோயாளிகளிடம்தான் தீவிர நோய்த்தன்மையைக் கண்டறிய முடியும் என்ற நிலையில் தற்போது நாம் இருந்தாலும், முதல் நிலைச் சோதனை, பாதுகாப்பு, குறைந்தபட்சச் செலவுகள், நேரச் சேமிப்பு, துல்லியமான முடிவுகள், சிகிச்சை முறையின் திறனை அறிய உடனே கிடைக்கும் தரவுகள் ஆகியவை, இம்முறையினை வரவேற்கச் செய்கின்றன.

ஆமாம், இந்த நிகழ்நிலை உறுப்புகள் எப்படி அமைக்கப்படுகின்றன? இங்கேதான் கணிதம் வருகிறது. ஓர் உறுப்பின் செயல்பாட்டினைச் சிக்கலான கணித மாதிரியில் அமைக்கிறார்கள்; குறிப்பிட்ட நபரின் உடலைத் துளைத்து உட்செல்லாமல் பெருந்தெளிவுக் காட்சிப்படுத்தலின் மூலம் பெறப்படும் உடலியல் தரவுகளை மேற்கூறிய சிக்கலான கணித மாதிரியிடம் சேர்ப்பிக்கிறார்கள். திறன் வாய்ந்த கணினிகள் இந்தத் தரவுகளைக்கொண்டு பெறப்படும் சமன்பாடுகளையும் அறியாதவைகளையும் ஆராய்ந்து ஒரு நிகழ்நிலை உறுப்பைச் சமைக்கின்றன. அது உண்மையைப்போலவே தோன்றுகிறது; நடந்தும்கொள்கிறது.

‘இன் சிலிகோ’ முறை, மருத்துவச் சோதனைகளில் தற்சமயம் ஓரளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. நவீன ‘முலை ஊடுகதிர்’ அமைப்பில், நிஜ மனிதர்களுக்குப் பதிலாகக் கணினி ‘உருவகப்படுத்தல்’ முறையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பயன்படுத்துகிறது. மருந்து மற்றும் கருவிகளைச் சோதனை செய்வதற்கு இத்துறை வழங்கியுள்ள வழிகாட்டி மெய் நிகர் நோயாளிகளையும் உள்ளடக்கிய ஒன்று.

சில நோய் நிலைகளைக் கண்டறிவதில், அவற்றிற்கான மருத்துவ முறைகளைத் தீர்மானிக்கையில், ‘இன் சிலிகோ’ முறை வேகமானது மட்டுமன்று, மருத்துவப் பரிசோதனைகளில் ஏற்படும் ஆபத்துக்களையும் தவிர்க்க உதவுவதும்கூட. சி டி ஊடு கதிரால் (CT Scan) மருத்துவர்கள், இதய நோயாளியின் இரத்தக் குழாய் நோயை இதய ஓட்டப் பகுத்தாய்தல் (Heart Flow Analysis) மூலம் உடனே அறியமுடிகிறது. இந்த மேகம் சார்ந்த சேவை (நோயாளியின் இதய சந்தேசம்!) உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒன்று. இதய ஓட்டப் பகுத்தாய்தல், இந்தக் காட்சிப்படுத்தலைக் கொண்டு, கரோனரி இரத்தக் குழாய்களில் பாயும் குருதியைத் திரவ இயங்கு மாதிரியாக (Fluid Dynamic Model) அமைக்கிறது; இதன் மூலம், அசாதாரண நிலைகளையும் அதன் தீவிரத்தையும் அடையாளப்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம் இல்லையென்றால் மருத்துவர்கள், அந்த இரத்தக் குழாய்களை எப்படிச் சரிசெய்வது, எப்படிக் கையாள்வது என்பதையே உடலின் மார்புப் பகுதியில் கத்தியைச் செலுத்தி உள்நுழைந்து ‘ஆஞ்சியோகிராம்’ செய்துதான் கண்டுபிடிக்க நேரிடும். தனிப்பட்ட நோயாளிகளின் இலக்க முறை மாதிரிகளில் நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகள் அந்தந்த நோயாளிகளின் உடலுக்கேற்ற, நோயின் தீவிரத்திற்கேற்ற தனிப்பட்ட சிகிச்சை முறைகளைக் கட்டமைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கான மருத்துவத்தில் இப்போது நடைமுறையில் உள்ளது.

‘இன் சிலிகோ’ முறையின் விஞ்ஞானம் புதிதன்று. ஒரு பொருளைக் கட்டமைப்பதிலும் அதன் உருவகத்திலும் பல்வகைப்பட்ட சூழல்களில் அதன் செயல்பாட்டுத் தேவைகளால், பொறியியலாளர்களின் முக்கியத் திருப்பு முனையாக பல பத்தாண்டுகளாக இந்த ‘போலச் செய்தல்’ நடப்பில் இருக்கும் ஒன்றுதான். புரோட்டோ டைப்கள்போல என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்; மின்னணுச் சுற்றல்கள், ஆகாய விமானங்கள், கட்டிடங்கள் ‘உருவகங்களாக’ எழும்பி வந்ததை நினைவில் கொண்டுவரலாம். பரவலாக இம்முறையை மருத்துவச் சிகிச்சையிலும் ஆய்விலும் மேற்கொள்ளப் பல தடைகள் உள்ளன.

முதலாவதாக, இதன் கணிக்கும் திறனும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படத் தேவையான பலவிதமான முன்னேறங்கள் வேண்டும். பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த நோயாளிகளான ஆண்கள், பெண்கள் இவர்களைப் பற்றி மிகத் தரம்வாய்ந்த மருத்துவத் தகவல் தரவுகள் உருவாக்கப்பட வேண்டும். உடலின் உட்செயல்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் கணித மாதிரிகள் செம்மையுற வேண்டும். பேச்சிலும் காட்சி அறிதலிலும் பயன்படும் செயற்கை நுண்ணறிவு மேலும் செறிவூட்டப்பட்டு உயிர் சார்ந்த தகவல்களில் ஒளி பாய்ச்ச வேண்டும். அறிவியலாளர்களும் தொழில் அதிபர்களும் இவற்றிற்கான முன்னெடுப்பைச் செய்துள்ளார்கள்; தஸ்ஸீட்(Dassault) அமைப்பின் ‘வாழும் இதயம் திட்டம்’ (Living Heart Project), ‘உள்ளிணைந்த உயிர் மருத்துவ ஆய்வில் நிகழ்நிலை மனித நல அமைப்பு’ (The Virtual Physiological Human Institute for Integrative Biomedical Research) மற்றும் மைக்ரோசாஃப்டின் ‘அடுத்த உடல் நலம்’ (Healthcare NExT) என்பவை இவற்றில் சில.

பரவலாக வணிகப்படுத்தி, சில நோய்களைக் கணினிகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு FDA மற்றும் யூரோப்பிய நெறிமுறையாளர்கள் சமீப காலங்களில் அனுமதி அளித்திருக்கிறார்கள்; ஆனால், அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அதிக நேரமும் பணமும் செலவாகின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கானத் தேவையை உடல் நலம் சார்ந்த பிரத்யேகச் சூழல்களால் உணர வைப்பதும் சவாலான ஒன்றுதான். மருத்துவர்களும் உடல் நலம் சார்ந்த துறையாளர்களும் இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் பழக்கிக்கொள்ள வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும். நோயாளிகளின் மருத்துவச் செலவுகள் இதனால் கட்டுக்குள் வரும்.

இப்பொருளைக் கண்டார், இடருக்கோர் எல்லை கண்டார்.

 

https://solvanam.com/2021/01/24/மெய்நிகர்-நோயாளிகள்/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இடவெளிக் கணினி

 
 

உலகப் பொருளாதார அமைப்பு, ஒரு சிறப்புக் கட்டுரையை ‘மாற்ற முன்னோடிகளின் மாநாட்டில்’ 10 தொழில்நுட்பங்களை முன்னிறுத்தி நவம்பர் 10, 2020 அன்று வெளியிட்டது. அதன் அறிமுகக் கட்டுரையையும் மூன்று தொழில் நுட்பங்களையும் (வலிதரா நுண் ஊசிகள், சூர்ய சக்தி வேதியியல், மெய்நிகர் நோயாளிகள்) பார்த்துவிட்டோம். இக்கட்டுரை இடவெளிக் கணினி (Spatial Computing) பற்றியது.

நாம் சிறுவயதில் கேட்ட சில மந்திரவாதிக் கதைகளில், இளவரசியின் உயிரை ஏழு மலை, ஏழு குகை, ஏழு கடல் தாண்டி ஒரு கிளியிடத்தில் பத்திரப்படுத்தியிருப்பதாகச் சொல்வார்கள். பின்னர் கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர்கள், ஞானிகள் கதையும் உண்டு. தன் உணர்வை, அறிவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு வேறொரு உடலில் குடிபுகுந்து அந்த அனுபவங்களையும் பெற்றுப் பின்னர் தம் இயற்கை உடலிற்கு அவர்கள் திரும்புவார்கள். இன்றைய விஞ்ஞானம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களையே எண் வடிவமாக்கி, பொருட்களையும் இலக்க முறையில் வகுத்து நம் வாழ்வை மேம்படுத்துகிறது. அத்தகைய ஒரு தொழில்நுட்பம்தான் இந்த இடவெளிக் கணினியியல்.

தனியாக வசிக்கும், சக்கர நாற்காலிகொண்டு இயங்கும், வயது எண்பதற்கும் மேலான மாலினியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அவர் வசிக்கும் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் இலக்கங்களாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன; பொருட்களின் இயக்கம், கருவிகளை உபயோகிப்பது போன்றவை இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ளன; அவர் வீட்டின் இலக்க வரைபடம், அவரது வீட்டுப் பொருட்களின் வரைபடத்தையும் உள்ளடக்கியது. அவர் தன் படுக்கை அறையிலிருந்து சமையல்கூடத்திற்குச் செல்கையில் சுற்றுப்புற வெப்பநிலை சீராக்கப்பட்டு, விளக்குகளும் ஒளிர்கின்றன. அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பாதையில் குறுக்கிடுகையில் சக்கர நாற்காலியின் வேகம் குறைகிறது. அவர் சமையல் அறைக்கு வந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து உணவினை எடுத்துக்கொள்ளவும் அடுப்பினை இயக்கத் தகுந்தாற்போலவும், உணவு உண்ண வசதியாகவும் மேஜை இயங்குகிறது. பின்னர், படுக்கும்போது அவர் தடுமாற்றத்தில் விழப்போனால் அவரது அறைகலன் அவரைத் தாங்கிக் காப்பாற்றுகிறது. உள்ளூர் கண்காணிப்பு மையத்திற்கும் அவரது மகனுக்கும் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.

spacer.png

புற உலகும் இலக்க உலகும் குவியும் அறிவியல் செயல்பாடுகளில் தற்போது சிற்றடி எடுத்துவைக்கும் அடுத்தகட்ட நகர்வுதான் நாம் மேலே பார்த்த இடவெளிக் கணினியின் இதயமெனச் சொல்லலாம். மெய்நிகர் உண்மைச் செயலிகளும் செறிவூட்டப்பட்ட உண்மைச் செயலிகளும் (Virtual Reality and Augmented Reality) செய்வதை இது செய்கிறது: “மேகக் கணினி மூலம் இணையும் பொருட்களை எண்களாக்குவது, உணரிகளையும் இயந்திரங்களையும் ஒன்றுக்கொன்று எதிர்வினையாற்ற அனுமதிப்பது மற்றும் உண்மை உலகை எண்களால் பிரதிநிதிப்படுத்துவது.” இத்தகைய திறன்மிக்கக் கூறுகளை மிகவும் நம்பகத் தன்மைகொண்ட இடவெளி வரைபடங்களாக்குவது முதல் அடி வைப்பதைப் போன்றது; இரண்டாவதாக வருவது இலக்கம் அல்லது புற உலகில் புழங்கும் மனிதருக்கு அவரது இயக்கம் மற்றும் உட்செயல்பாடுகளைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் வழிவகைகள். கணினி மூலம் இவைகளை ஒருங்கிணைப்பவருக்கு இதுவே வழிகாட்டி. வீடு, உடல் நலம், பயணங்கள், தொழிற்சாலைகள் போன்ற வாழ்வியல் அம்சங்களில் மனிதனுக்கும் – இயந்திரத்திற்கும் இயந்திரத்திற்கும் – இயந்திரத்திற்குமான இணை-உட்செயல்பாடுகளின் திறத்தை இந்த இடவெளிக் கணினியியல் மிக விரைவில் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுபோகும். பெரும் நிறுவனங்களான மைக்ரோஸாஃப்ட், அமேசான் போன்றவை இந்தத் தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.

மெய்நிகர் உண்மைச் செயலிகளும் செறிவூட்டப்பட்ட உண்மைச் செயலிகளும் இயங்கும் அடிப்படை ஆதாரமான, ‘கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்’ (Computer Aided Design) என்பதில் பயன்படுத்தப்படும் ‘எண் இரட்டையர்கள்’ (Digital Twins)தான் இடவெளிக் கணினிச் செயலியிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு பொருளின் எண் உருவை பொறியியலாளர்கள் கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதலில் அமைக்கிறார்கள். இந்த இரட்டையர்மூலம் பல வடிவங்களை எளிதாகக் கட்டமைக்கலாம் – முப்பரிமாணத்தில் பொருட்களை அச்சிட்டுப் பார்க்கலாம், அவற்றிற்குப் புதுப்புதுத் தோற்றங்களை உண்டாக்கலாம், நிகர்நிலையில் அதில் பயிற்சி செய்யலாம், மற்ற இலக்கப் பொருட்களோடு இணைத்து நிகர்நிலை உலகை உருவாக்கலாம். இந்த இடவெளிக் கணினி பொருட்களை மட்டுமே இலக்க இரட்டையர்களாக்குவதில்லை; புவிசார் அமைப்பிருப்பு (GPS), லேடார் (Lidar – லேசர் ஒளியைப் பயன்படுத்தி அளவிடும் முறை – ரேடாரைப் போன்றது), காணொலிகள், குறிப்பட்ட இடத்தைப் பூமியில் அறிய உதவும் தொழில்நுட்பம் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி, ஓர் அறையின் எண் வரைபடம், ஒரு கட்டடம், நகரம் என அனைத்தையும் இலக்கங்களாக்கிவிடும். எண்களால் குறிக்கப்படும் பொருட்கள் மற்றும் மனிதர்களின் இலக்க வரைபடங்களை மென்பொருள் செயலிமூலம் உணரித் தரவுகளுடன் இணைத்துக் கண்காணிக்கத் திறமையுடன் கையாள, அளவீடுகள் செய்ய என்று ஓர் எண் உலகம் உருவாகிறது; இது புற நிஜ உலகையும் மேம்படக் கையாள உதவுகிறது. (மாயா பஜார் – கல்யாண சமையல் சாதம் – அது தோற்ற மாயை; இது நிகர்நிலைச் செயல்.)

மருத்துவத்தில் இந்த எதிர்கால நிலையைக் கற்பனை செய்யுங்கள். அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளிக்காகத் துணை மருத்துவக்குழு ஒன்று நகரின் ஓர் அடுக்ககத்திலுள்ள ஒரு வீட்டிற்குச் செல்லவேண்டும். அந்த நோயாளியின் மருத்துவப் பதிவுகள், தற்போதைய அவரது நிலை போன்றவை தொழில் நுட்பவியலாளரின் கைபேசிக்கும் அவசர உதவித் துறைக்கும் அனுப்பப்படும் அதே நேரத்தில், வெகுவிரைவாக அவ்விடத்தை அடைவதற்கான பயண வழியையும் அது சொல்லிவிடும். பயணப் பாதையில் குறுக்கிடுபவர்களைச் சிவப்பு விளக்கு கட்டுப்படுத்தும்; ஆம்புலன்ஸ் அந்த வளாகத்தை அடையும்போதே நுழை வாயிற்கதவு திறந்துகொள்ளும்; மின்தூக்கி தயாராக இருக்கும்; தங்கள் உபகரணங்களோடு மருத்துவர்கள் விரைவாக உள்ளே நுழைகையில் இடைஞ்சலான பொருட்கள் விலக்கப்பட்டுத் தேவையான இடம் கிடைக்கும்; மருத்துவமனையின் அவசரப் பிரிவிற்குச் செல்லும் விரைவுப் பாதையைச் சொல்லும் இந்த இடவெளிக் கணினி, மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அறையின் அமைப்பு வடிவத்தையோ அல்லது நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அறுவை சிகிச்சை மருத்துவப் பாதையையோ அறிவுறுத்திவிடும்.

ஆற்றுப்படுத்திய உணரிகள், இலக்க இரட்டையர்கள், பொருட்களின் இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சிறந்த உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள், இந்த இடவெளிக் கணினிகளின் செயல்திறத்தை உபயோகிப்பதில் முன்னணியில் இடம்பெறுகின்றன. ஒரு கருவி இருக்கும் இடஞ்சார் செய்திமுதல் ஒரு முழு தொழிற்சாலையின் அமைப்புவரை இதில் காணலாம். செறிவூட்டப்பட்ட உண்மையால் வடிவமைக்கப்பட்டுள்ள தலை அணியினாலோ அல்லது முப்பரிமாண படிமம் காட்டும் காட்சியாலோ, இயந்திரப் பழுதுகளை மட்டுமல்லாமல் இயந்திரப் பாகங்களின் இடவெளியைச் சுட்டிக்காட்டும் இந்தத் தொழில்நுட்பம், குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் எவ்வளவு செம்மையாகச் செய்ய முடியுமோ அவ்வளவுத் திறமையாகச் செய்யத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும். இப்படி ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள் – ஒரு தொழிற்சாலையைத் தொலைவிடத்திலிருந்து ரோபோக்கள் மூலம் கட்டுகிறோம்; இதில் இடவெளிக் கணினிச் செயலி ஒவ்வொரு ரோபாவிற்கும் குறிப்பிட்ட பணிகளைப் பிரித்துத்தந்து அவ்வாறு இயங்குவதில் ஓர் ஒத்துணர்வை ஏற்படுத்தி, விபத்துக்களைத் தடுத்து பொருட்சேதமும், நேர விரயமும் இல்லாமல் செய்துவிடும். தங்கு தடையற்ற வேலைகள் நடைபெற தொழிற் பொறியியலோடு இடவெளிக் கணினிச் செயலியை இணைத்துத் துரித உணவகங்களும் வர்த்தக நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்படமுடியும். நிகர்நிலையையும் செறிவூட்டப்பட்ட உண்மை நிலையையும் கடந்து தடம் பதிக்கும் உன்னதத் தொழில்நுட்பம் இது.

இடவெளிக் கணினியின் ஆதாரம் இலக்க இரட்டையர்கள். ஆகவே, அதைப் பற்றி ஓரிரு வரிகள். 2002-ம் ஆண்டுமுதல் பேசப்பட்டிருந்தாலும் 2017-ல் அதிகக் கவனம்பெற்றது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு செயல் முறை, ஒரு பொருள் அல்லது சேவையை இலக்கமாக மாற்றிப் புற உலகிற்கும், இலக்க உலகிற்கும் இடையே பாலமெனச் செய்வதெனப் புரிந்துகொள்ளலாம். நாஸா தன் விண்வெளிப் பயண ஆய்வுகளில் இதை முதலில் பயன்படுத்தியது. தொலைதூரப் பயணம்செய்யும் விண்வெளிக் கப்பலில் இருக்கும் பல்வேறு சாதனங்களில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இந்த இணைப்புப் பாலமான இலக்க இரட்டையர்கள் உதவினர்.

https://solvanam.com/2021/03/14/இடவெளிக்-கணினி/


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.......நல்ல தகவல்கள்.......!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்

வளர்ந்து வரும் சிறந்த 10 தொழில்நுட்பங்கள் – பகுதி 6

‘சீத்தே’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தார் அப்புசாமி.

‘கன்ட்ரி மேன், என்னவொரு டெஸபில்ல கத்தறேள்?’

‘என்னப் புடிக்க வராடீ.’

‘யாரு போலீசா, சி.பி.யை.யா இல்ல எஃப்.பி. ஐ லெவெலுக்குப் போய்டேள்ளா?

‘சீத்தே, ஏதோ என் உடம்புலேந்து கத்தித்தாம். ஆம்புலன்ஸ் போட்டுண்டு…’

‘ஓ, சோ சூன்; ட்ரிபிள் எம்லேந்து வந்துட்டாளா?’

‘அடிப்பாவி, நீதான் வரவழச்சையா? போச் சொல்லு. நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்.’

‘உங்க கைலேந்து சவுண்ட் வரது பாருங்கோ.’

‘ஐயோ, இதை நீ எனக்குக் கட்டிவிட்றச்சே கெழவிக்கி நம்ம மேல லவ்வுன்னு நெனச்சேன். இந்தக் கொரானால ரசகுண்டு, பீமாராவ் கிட்டெல்லாம் இதக் காட்ட முடியாம தவிச்சேன். நீ சிக்னல் கொடுத்திருக்க’

‘யூ இங்காரிஜிபில் ஃபெல்லோ, கோ டு ஹாஸ்பிடல். நானா கிழவி? ஹைஜீனே இல்லாம கண்ட இடத்ல தின்னேளோல்யோ? அந்த வாட்ச் காட்டிக் கொடுத்துடுத்து. போங்கோ ட்ரிபிள் எம்க்கு’

 

spacer.png

***

இலக்கச் செயலிகள் நம் அலைபேசியுடன் இணைந்து நிகழ்த்தும் ஓர் அற்புதத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன. பொதுவாக இலக்க மருந்துகள் என அழைக்கப்படும் இவைகள், மரபுசார் சிகிச்சை முறையினை மேம்படுத்தவும், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் அல்லது அணுக இயலா தொலைவில் உள்ள தூரங்களில் செயல்படும் சாத்தியங்கள் உள்ளவை என்பதால் தேவ தூதர்கள் எனக் கொண்டாடப்பட வேண்டியவையே. இந்தத் தீ நுண்மிக் காலத்தில் இந்த மென்பொருள் செயலிகள் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே பாலமெனச் செயல்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதன் செயல் முறை எப்படி அமைகிறது? நம் கைபேசிகள் நம்மைப் பற்றிய தகவல்களை, கண்டறியும் கருவிக்கு வழங்குகிறது. பயனாளர்களின் குரல், முக பாவம், பேசும் இடம், அவரது உடற்பயிற்சி, உறக்கம், செய்திகள் பகிர்தல் போன்ற குண நலன்கள் பதிவாகின்றன; செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு, நிகழக் கூடுமென கணிக்கப்பட்ட ஒரு இடர் அல்லது இருக்கும் நோய் தீவிரப்படுவதை இவை அறிவிக்கின்றன. திறன் கடியாரங்களில் இடம் பெற்றுள்ள ஒரு உணரி, இதயத்தின் வேகத் துடிப்பு நடுக்கங்களை (Arterial Fibrillation) உடனே அறிந்து எச்சரிக்கை செய்கிறது. இதைப் போலவே பல்வேறு கருவிகள் மூச்சுத் திகைப்பு, மனச் சோர்வு, ஆடிசம், அல்ஸெய்மர், பார்கின்ஸன் போன்ற இன்ன பிற நோய்களைக் கண்டறிகின்றன. இந்த ‘எண் தோற்றவமைப்பு’ (Digital Phenotyping) அல்லது இந்தச் செயலிகள் மருத்துவரின் தேவையை நெருங்கும் வருங்காலத்தில் இல்லாமல் செய்துவிடாது. ஆனால், ஒரு உற்ற தோழனைப் போல், நோயாளியை, குறிப்பாக நோய் இடருக்குப் பின்னான கால கட்டத்தில் அவரை இலக்க முறையில் கண்காணித்தும், கவனித்தும் மருத்துவருக்குத் தகவல் சொல்லிவிடும். இந்தக் கண்டறியும் கருவிகள், நுண் உயிர் மின்னணுவியல் பொருட்களாகவும் இருக்கும்- சில நோய்க்கூறுகளுக்கு உட்கொள்ளத் தகுந்த, உணரும் திறன் வாய்ந்த மருந்துகள் தேவை. புற்று நோய்க் காரணியான டி.என்.ஏ, வாயுக்களை வெளிவிடும் குடல் நுண்ணுயிரிகள், வயிற்றில் ஏற்படும் குருதிக் கசிவு, உடல் வெப்ப நிலை மற்றும் உயிர் வாயு அளவு போன்றவற்றை அறியவும் செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உணரிகள் தரும் தகவல்கள், செயலியால் பதியப்படுகின்றன.

பல்வகையான பிணி நீக்கங்களுக்கான சிகிச்சைச் செயலிகள் இவ்வாறே அமைக்கப்படுகின்றன. ‘பியர் தெரப்டிக்’சின் (Pear Therapeutics1) பொருட்சாரப் பயன்படுத்தலின் சீர்கேடுகள் (Substance Use Disorder2) என்ற ‘ரீசெட்’(reSET) தொழில் நுட்பம் தான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முதன் முதலில் அனுமதித்த எண் மருந்துச் சீட்டு. 2018-ஆம் ஆண்டில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. உடல் நலச் செயல்பாட்டாளருக்கு இணையாக இயங்கும் ‘ரீசெட்’ நோயாளிகளுக்கு ஏற்படும் ஆவலாதிகள், அவை எவ்வாறு தூண்டப்படுகின்றன போன்றவற்றை 24/7 கவனிக்கிறது; மருத்துவர்களுக்கு நிகழ் நிலையில் தகவலைத் தெரிவிக்கிறது. நோயாளிகளுக்கு அறிவாற்றல் நடத்தை சிகிச்சையையும் அளிக்கிறது. தூக்கமின்மை நோய்க்கான ‘சம்ரெஸ்ட்’(Somryst3) என்ற செயலி இருக்கிறது; கவனக் குறைபாடுள்ள குழந்தைகள், மிகு வேகச் செயல்பாடுள்ள சிறுவர்கள் போன்றோர்க்கான ஒரு செயலி ‘முயற்சி செய்’ (EndeavoRX) என்ற பெயரில் காணொலி விளையாட்டு வடிவில் வந்துள்ளது. இவ்விரண்டிற்கும் 2020 தொடக்கத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி வழங்கியது.

குழந்தைகள் உடல் நலம் சார்ந்த ‘ஓடின்’(Odin) என்ற தொழில் தொடங்கு நிறுவனம், கண் ஒட்டிற்குப் (Eye patch) பதிலாக நிகர்நிலைப் பயன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இரு கண்களின் செயல்பாட்டு வேக பேதத்தை நிகர் நிலையில் சமன் செய்து, ஓடும் எழுத்துக்களை குழந்தைகள் சமமாகப் படிப்பதற்கு இது உதவும். ‘ஆம்ப்லோபியா’ (Amblyopia) என்ற சோம்பேறிக் கண்ணிற்கு இது நல்ல மாற்றாகச் சொல்லப்படுகிறது.

ஒரு நாள் இப்படியும் நடக்கலாம். சிறு மனச் சோர்வில் இருக்கும் கல்லூரி மாணவரா நீங்கள்? யாருடனும் பழகப் பிடிக்கவில்லையா? உங்கள் திறன் கடிகாரம் உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்; உங்களை அறிவு சார் நடைமுறைக்குக் கொண்டு வர நீங்கள் ‘வோபாட்’(Woebot) செயலியின் ‘பேசும் பாட்டிடம்’ பேசி மீளலாம்.

நலம் நாடும் அத்தனைப் பயன்பாட்டுச் செயலிகளும் இலக்க முறை மருத்துவமாகாது. சுகவீனங்களைக் கண்டறிவதோ, அதற்கான எண் மருத்துவ முறைகளோ மருத்துவ சோதனை ஒட்டங்களில் பாதுகாப்பானவை என்றும், திறன் உள்ளவை என்றும் நிரூபிக்கப்பட வேண்டும். அவை முறையான அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். சிலவற்றிற்கு மருத்துவரின் மருந்துச் சீட்டு தேவை. (தீநுண்மி பேராபத்துக் கட்டத்தில், ஏப்ரல் 2020-இறுதிவரை, குறைந்த ஆபத்துள்ள, மன நல, எண் கருவிகளுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தற்காலிக அனுமதி அளித்தது.)

கோவிட்-19, எண் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. இந்த நோய்க்கிருமி வேகமாகப் பரவ ஆரம்பித்த தருணத்தில் மன பீதியைப் போக்கவும், தகுந்த ஆறுதலுடன் வழி காட்டவும் பலச் செயலிகள் களத்தில் இறங்கின. மைக்ரோசாஃப்ட் நலச் செயலியின் பலவகைமைகளை உலகெங்கும், அரசுகளும், மருத்துவ மனைகளும் பயன்பாட்டில் கொண்டு வரத் துவங்கின. ஒரு அழைப்பு மையத்தை அழைத்துக் காத்திருப்பது, அல்லது துணிந்து நோய்த் தொற்றுக் காலத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்வது போன்றவைகளைத் தவிர்த்து, தங்களுக்கு வந்திருக்கும் இருமல், ஜுரம் போன்றவைகள் கொரோனாவாக இருக்குமோ என ஐயப்படும் மக்கள், தங்கள் வழக்கு அல்லது பேச்சு மொழி பேசும் பாட் செயலியிடம் தங்களின் அறிகுறிகளைச் சொல்ல முடிந்தது; அது செயற்கை நுண்ணறிவு கொண்டு தரவுகளைப் பரிசோதித்து காரணங்கள் இவைகளாக இருக்கலாம் எனச் சொல்லிவிடும்; அல்லது தேவையெனில், உடல் நல மருத்துவருடன் பேசித் தெளிவு பெற வழி செய்யும். கோவிட்டின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய 200 மில்லியனுக்கு மேற்பட்ட விசாரிப்புக்களுக்கு ஏப்ரல் 2020 பிற்பகுதிக்குள்ளேயே ‘பாட்’கள் பதில் சொல்லியிருக்கின்றன. இது நலத்துறையின் அழுத்தங்களை பல மடங்கு குறைத்துள்ளது.

எண் மருத்துவ முறையின் பயன்பாடு சமூகத்திற்கு மிகுந்த பாதுகாப்புகளோடு கொண்டு செல்லப்பட வேண்டும்; செயலிகள் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்; அந்தரங்கங்கள் காக்கப்பட வேண்டும். மருத்துவரின் வேலைச் செயல் முறைகளோடு எளிதில் இணையக்கூடியதாக இருக்க வேண்டும். சரியான ‘எண் தோற்றவமைப்பு’ செயலிகள், அவற்றின் மூலம் அமையப்பெறும் சிகிச்சைகள், நலமற்ற நடத்தைகள் பற்றிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே அறிந்து தெரிவிப்பதால், நலம் சார்ந்த செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதில் மட்டுமின்றி, நோய் என வடிவெடுக்கும் முன்னரே தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள மனிதர்களுக்கு வாய்ப்பையும் தருகின்றன. கிழிசல் சிறிதாக இருக்கும் போதே தைத்து விட வேண்டுமல்லவா? ‘எண் தோற்றவமைப்பு மற்றும் சிகிச்சை செயலிகள்’ உருவாக்கும் மிகப் பெரிய தரவுகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு கொண்டு நோயாளியின் தனிப்பட்ட அமைப்புக்கேற்ற உடல் நல உதவியும் வழங்க முடியும். ஆய்வாளர்கள், இவை தரும் வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு மனிதர்கள், நல்ல பழக்க வழக்கங்களோடு நோய்கள் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ காலத்திற்கேற்ற புதுச் சிந்தனைகளைக் கொண்டுவரவும் முடியும்.

“என்னைப் புதிய உயிராக்கி –எனக்
கேதும் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகத் தெளிவு செய்து-என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடையதாக்கி – உடற்
சோர்வும் பிணி பலவும் போக்கி….” 

– பாரதி

1.Pear Therapeutics- மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே செயல்படும் வண்ணம், கண்டறிதல், ஆராய்தல் மற்றும் மருத்துவ அங்கீகாரமுள்ள தீர்வுகளைக் குறிப்பிடுதல் போன்ற செயலிகள். முக்கியமாக நோயாளியின் உடல் மற்றும் மன நிலையினை மருத்துவர் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் விதத்தில் இயங்குகிறது.

2.Substanace Use Disorder- குடி மற்றும் போதை மருந்துகளில் சிக்கியுள்ளவர்கள்; அவர்களின் மீட்பிற்கானது இது.

3.Somryst- தூக்கமின்மைக்கான 9 வார சிகிச்சை இது.

https://solvanam.com/2021/03/28/இலக்க-முறை-நல-ஆய்வும்-மரு/

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மின்சக்தி விமானங்கள்

வளர்ந்து வரும் சிறந்த 10 தொழில்நுட்பங்கள் (பகுதி 7)

spacer.png

மனிதன் பலவற்றைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான்; வானை அளக்கிறான், கடல் மீனை அளக்கிறான். ஆனால், சில கண்டுபிடிப்புகள் மனித இனம் முழுமைக்குமாகக் காலம்தோறும் பயனளிக்கின்றன. இழையில் பாய்ந்த சிறு ஒளி இன்று பூமி எங்கிலும் ஒளி வெள்ளமாகப் பாய்கிறது. அத்தகைய மின் ஆற்றலை விமானப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றுவருகின்றன. இக்கட்டுரையில் இதைப் பற்றிப் பார்ப்போம்.

உலகை அச்சுறுத்தும் சூழல் கேடுகளில் கரிப்பதிவு ஒன்று. 2019-ல் நடந்த ஓர் ஆய்வில், விமானப் பயணங்களால் 2.5% கரி உமிழ்வு காற்றில் கலக்கிறது என கண்டறிந்திருக்கிறார்கள்; 2050-ல் இது மும்மடங்காக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. சில விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இந்த அச்சுறுத்தலைக் கணக்கில்கொண்டு சில செயல்களை முன்னெடுத்திருந்தாலும், பயணிக்க வேண்டிய தொலைவு என்னவோ அதிகமே! காற்றில் கலக்கும் கரி மாசிற்கு முதன்மைக் காரணம் விமானத்தின் தொல்லெச்ச எரிபொருளே. (மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மண் எண்ணெய்.) அதனால், மின் ஆற்றலில் இயங்கும் விமானங்களைத் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மின் விசைப் பொறிகள், காற்றில் கலந்து பரவும் கரி உமிழ்வை மட்டும் நீக்குவதில்லை, எரிபொருட் செலவை 90% வரை குறைக்கும், பராமரிப்புச் செலவுகளை 50%, மற்றும் இரைச்சலைக் கிட்டத்தட்ட 70% குறைக்கும்.

ஏர்பஸ் (Airbus), ஆம்பெர் (Ampaire), மேக்னிஸ் (MagniX), ஏவியேஷன் (Eviation) நிறுவனங்கள் தற்சமயம் மின் உந்துப் பொறிகளால் இயங்கும் விமானத்தை அமைத்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பயணிகள், குழுமங்களில் பணி செய்வோர், தனி மனிதர் ஆகியோருக்கான இத்தகைய விமானங்களைப் பறத்தல் பரிசோதனை’ செய்துவருகின்றன. அமெரிக்காவின் ‘கூட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின்’ (Federal Aviation Administration) சான்றிதழைக் கோருகின்றன. ‘ஆலிஸ்’ என்ற, ஒன்பது பயணிகள் செல்லக்கூடிய மின் விமானத்தை ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து வாங்கத் திட்டமிடும் பலரில், பெரும் நிறுவனமான ‘கேப் ஏர்’ (Cape Air) என்ற பிரதேசக் கம்பெனியும் ஒன்று. அதன் தலைமை நிர்வாக அதிகாரியான டான் வுல்ஃப் (Dan Wolf) இரு காரணங்களுக்குகாக மின் விமானத்தைத் தேர்வு செய்கிறார் – எரிபொருள் மற்றும் இயக்கச் செலவுகளின் சேமிப்பு, சூழல் மாசுக் குறைவது. தற்போது அவர் பயன்படுத்தும் விமானத்தில் உபயோக்கிக்கப்படும் எரிசக்தி ஹைட்ரோ கார்பன்; அவற்றிற்கு மின்விசைப் பொறிகளைவிடக் குறைந்த ஆயுள்தான். மின் விமான இயந்திரங்களை மாற்றாமல் 20,000 மணிநேர அளவில் உபயோகிக்கலாம் என்றால் நீரகக்கரிம எரிபொருள் இயந்திரங்களை 2,000 மணிக் கூறளவில்தான் பயன்படுத்தலாம்; மின் கலன்களில் பழுதகற்றும் செயலை அடிக்கடி செய்ய நேரிடாது.

முன் உந்து விசையுள்ள இயந்திரப் பொறிகள் மட்டுமே மின்மயமாவதில்லை. நாசா தற்சமயம் உருவாக்கிவரும் எக்ஸ்-57 மேக்ஸ்வெல் மின் விமானத்தில் பெரிய சிறகுகளுக்குப் பதிலாக மின் உந்து விசைகள் பரவலாகப் பொருத்தப்பட்ட சிறு இறக்கைகள் பொருத்தப்படுகின்றன. வழமையான ஜெட் விமானங்களில் இறக்கைகள் பெரியதாக இருந்தால்தான், குறைந்த வேகத்தில் பயணிக்கையில் மேலெழும்ப முடியும்; அதே நேரம் மிக வேகத்தைப் பாதிக்கும் விதமாக அதன் பரப்பு இருப்பதும் ஒரு பின்னடைவே. பறக்கத் தொடங்கும்போது சிறு சிறகுகளுக்குத் தேவையான மேலெழும் சக்தியைத் தந்து, மின் விமானத்தின் செயற்திறனை மின் இயந்திரப் பொறிகள் மேம்படுத்துகின்றன.

காணக்கூடிய எதிர்காலத்தில் இந்த மின் விமானங்கள் எத்தனைத் தொலைவு செல்லமுடியும் என்பது அதன் மின்கலனைப் பொறுத்ததே. ஜெட் எரிபொருளின் எடை மற்றும் ஆற்றலைச் சிறந்த மின்கலனின் எடை மற்றும் ஆற்றலுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். மின்கலனின் சக்தி அடர்த்தி ஒரு கிலோகிராமிற்கு 250 வாட் (மின் அளவு) மணி நேரம்; அதுவே ஜெட் இயந்திரப் பொறியில் 12,000 வாட் நேரம்! இதனால் கனமான மின் கலன்களை விமானத்தில் பயன்படுத்த நேரிடும்; வழமையான எரிபொருள் மிகு எடையுடன் இருக்காது; அதிக இடத்தையும் கேட்காது. எடை குறைந்த, அதிக இடத்தை ஆக்கிரமிப்புச் செய்யாத மின்கலன்கள் உருவாகவேண்டும். ஏறத்தாழ உலகில் பறக்கும் விமானங்களில் பாதி விமானங்கள், 800 கி.மீ.க்கும் குறைவான போக்குவரத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றன. மின்கலன்கள் 2025க்குள் இந்த ஆற்றலை அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் செலவும் அதிகமெனும் போதிலும் அரசுகள், குழுமங்கள், முதலீட்டாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இதன் வளர்ச்சியால் கிளர்ச்சியுற்று, மின் விமான அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழில்தொடங்கு நிறுவனங்களில் 2017 முதல் 2019 வரையான காலகட்டத்தில் கிட்டத்தட்ட $250 மில்லியன் முதலீடு வந்துள்ளது. தற்சமயம் 170 செயல்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனிப் பயன்பாட்டிற்காக, குழுமங்களுக்காக, பயணிகளுக்காகப் பெரும்பான்மையான மின் விமானங்களைக் கட்டுகிறார்கள்; ஆயினும், 100 பயணிகள் பயணிக்கும் மின் விமானத்தை 2030க்குள் வடிவமைக்கப் போவதாக ஏர்பஸ் நிறுவனம் சொல்கிறது.

மின்கலத் தொழில்நுட்பம் இன்னும் வளரவேண்டிய நிலையில்தான் உள்ளது.. எரிபொருள் கலன்களையும் இயந்திரத்தையும் மட்டும் மாற்றினால் போதாது. மின் விமானங்களின் வடிவமைப்பையும் மாற்ற வேண்டும். இன்றுள்ள லிதியம் மின்கலன்கள் அதிக அடர்த்தியுடன் மின் சேமிப்புச் செய்யப் போதுமானவை அல்ல. உலோகமும் – காற்றுமான துத்தநாகம் – காற்று, அலுமினியம் – காற்று மின் அயனிகள் போன்றவை சிறந்த மின் அடர்வினைக் கொடுக்கும். ஆனால், இதற்குச் சில வருடங்கள் பிடிக்கும்.

இந்தியாவிலுள்ள 449 விமானநிலையங்களில் 100தான் செயல்பாட்டில் உள்ளன. சிறிய மின் விமானங்கள், சிறு தொலைவுப் பயணங்களை அதிகச் செலவில்லாமல் எளிதாக்கும். மேலும் இவைகளுக்கு 200 – 300 மீட்டர் ஓடுதளம் போதுமானது. எனவே, அதிக விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும்.

நாம் மின்கலன்களைச் செம்மைப்படுத்தி விமானக் கட்டமைப்பில் ஈடுபடுவது நல்லதே. அமெரிக்கா 1975-ல் சூர்ய சக்தியில் இயங்கும் பயணிகளற்ற விமானத்தை வெற்றிகரமாக இயக்கியது. 1975-ல் பிரிட்டன் பயணிகளுடன் சூர்ய சக்தியால் விமானத்தை இயக்கியது. ஆயினும், இந்தத் தொழில்நுட்பம் செயற்கோளில் செயல்படுவதுபோல், விமானக் கட்டமைப்பில் உபயோகமாக இல்லை. அதிக எடையுள்ள, திறம்பட நிர்வகிக்கப்படவேண்டிய சூர்ய சக்திச் சேமிப்புத் தகடுகள் செயல்முறைக்கு ஒத்துவரவில்லை. எனவே, நாம் மின்கலன்களின் திறத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் வானத்தில் அதிக செலவின்றிப் பறக்கலாம். சமீபத்தில் சாலைகளில் செல்லும் கனரக மின் வாகனங்களுக்கானத் தடைப் பொறியில் புது விதமான தடை அமைத்தலை சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு Vehicle System Dynamics-ல் வெளியாகியுள்ளது.

https://solvanam.com/2021/04/10/மின்சக்தி-விமானங்கள்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஜீ...  பிரயோசனமான  கண்டுபிடிப்புகளை,  எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும்

வளர்ந்து வரும் சிறந்த பத்து தொழில் நுட்பங்கள் – பகுதி 8

spacer.png

 

அகிலத்தில் உயிர்கள் வேறெங்கிலும் இருக்கிறதா என்ற கேள்வி நம்மிடையே நிலவுகிறது. செவ்வாய்க் கோளில் உயிரினங்களைத் தேடியும் நம் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், நம்மைப் போன்ற பல்வகை உயிரினங்களைக் கொண்டுள்ள கோள் ஒன்றை இதுவரை நாம் அறியவில்லை. இப்புவியைப் போற்றிப் பாதுகாக்காமல் நாம் வளர்ச்சி என்ற பேரிலும், முன்னேற்றம் என்ற செயலிலுமாகச் சூழல் சீர் கேடுகளைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறோம்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம் என்பவை அடிப்படைத் தேவைகளே. இவை அனைத்திலும் நாம் செயற்கை முறைகளைப் பெரும்பாலும் பின்பற்றி வருகிறோம். காங்க்ரிட் கட்டடங்கள் நம்முடைய வசிப்பிடத்தின், அலுவலகங்களின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. காங்க்ரிட்டின் முக்கியப் பொருளாகிய சிமென்ட் உற்பத்தி, உலகக் கரிவளி வாயு உமிழ்வில் 8% என லண்டனைச் சேர்ந்த அறிவுச் சிந்தனை கூடமான ‘சாத்தம் ஹவுஸ்’ (Chatham House) சொல்கிறார்கள். சிமென்ட் உற்பத்தியை ஒரு நாடென உருவகித்தோமானால், அது சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரும் கரி உமிழ்விற்கான மூன்றாவது இடத்தில் இருக்கும்! ஒவ்வொரு ஆண்டும் 4 பில்லியன் டன் சிமென்ட் உற்பத்தியாகிறது. நகரமயமாக்கலின் விளைவாக எதிர்வரும் முப்பது ஆண்டுகளில் அதன் உற்பத்தி 5 பில்லியன் டன் ஆக அதிகரிக்கும் என அனுமானித்துள்ளார்கள். சிமென்ட் உருவாகத் தேவையான வெப்பத்தை உண்டாக்குவதற்கு உபயோகிக்கப்படும் தொல்லெச்ச எரி பொருட்கள், மற்றும் சுண்ணாம்புக் கல்லை சூளைகளில் கரிய ஓடென்று மாற்றும் வேதியல் செயல்பாடு, இவற்றால் சிமென்ட் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் கரி உமிழ்கின்றன.

இந்த ஆலைகள், சூழல் சீர்கேடுகளில் தங்களின் கரி உமிழ்வின் அபாயங்களை உணர்ந்துள்ளபோதிலும், பல காரணங்களுக்காக, குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையைக் கோடிட்டு மாற்றங்களை எதிர்கொள்ளத் தயங்கினாலும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக சிமென்ட் மற்றும் காங்க்ரிட் குழு (Global Cement and Concrete Association) என்ற அமைப்பில், உலக சிமென்ட் உற்பத்தியாளர்கள் 30% அங்கம் வகிக்கிறார்கள். இது முதன் முறையாக 2018-ல் ‘நிலை நிறுத்தும் வழிகாட்டி முறைகள்’ (Sustainability Guidelines) என்பதை வெளியிட்டது. இந்த அறிக்கை, செயல்பாடுகளில் முன்னேற்றத்தையும் வெளிப்படைத் தன்மையையும் காட்டும் முகமாக, கரி உமிழ்வுப் பதிவுகளும், தண்ணீர் பயன்பாடும் அளவீடுகளாகக் காட்டப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இடையே குறைந்த பட்ச கரி உமிழ்விற்கான சாத்தியங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளவை, போன்றவை கவனத்தில் வந்தன. ந்யூ ஜெர்ஸி, பக்ஸ்காடவேயில்(Piscataway) உள்ள தொழில் தொடங்கு நிறுவனமான ‘சாலிடியா’,(Solidia) ரட்கஸ் பல்கலையிலிருந்து(Rutgers University) உரிமம் பெற்று பயன்படுத்திய வேதியியல் முறையால் கரி உமிழ்வு 30% வரை குறைந்தது. வழக்கமான முறையை சற்று மாற்றி அதிகக் களிமண், குறைந்த அளவில் சுண்ணாம்புக் கல், குறைந்த வெப்பமூட்டல் முறையில் உற்பத்தி நடக்கிறது. நோவா கோஷா, டார்ட் மவுத்தில் உள்ள ‘கார்பன் க்யூர்’, தொழிற்சாலைகளில் காங்க்ரீட் உற்பத்தியில் வெளிவரும் கரிவளியினை, வளி மண்டலத்தில் கலக்க விடாமல் சிறைபிடித்து, ஒரு உபப் பொருளாக, (தாதுப் பொருளென) மாற்றுகிறது. மான்ட்ரீயாலிலுள்ள ‘கார்பிக்ரீட்’, சிமென்ட்டை காங்க்ரீட்டில் முழுவதுமாகப் புறந்தள்ளி,எஃகு உற்பத்தியின் உபப்பொருளான எஃகு கசடினைப் பயன்படுத்துகிறது. நார்வேயிலுள்ள மிகப் பெரும் சிமென்ட் உற்பத்தியாளரான ‘நார்செம்’, தன் ஒரு தொழிற் சாலையில், கரி உமிழ்வு ஏற்படாமல் செயல்படத் தேவையான முனைப்புகளை முன்னெடுத்துள்ளது. இந்த, ‘மாதிரித் தொழிலகத்தில்’ கழிவுகளிலிருந்து எரி பொருள் எடுத்து அதை சிமென்ட் உற்பத்தியில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முழுதும் கரி உமிழ்வை 2030க்குள் அகற்றும் முகமாக, கரியை வளி மண்டலத்தில் கலக்க விடாமல் பிடித்து சேகரிக்க அவர்கள் நினைத்துள்ளனர்.

காற்றின் தரத்தை மேம்படுத்தவும், அதில் கலந்து விடும் கரி உமிழ்வை உறிஞ்சும் திறனுடைய பாக்டீரியாக்களை காங்கிரீட் உருவாக்கத்தில் இணைத்து அதன் செயல் திறனை மேம்படுத்தவுமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வாழும் கட்டுமானப் பொருட்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல தொழில் தொடங்கு நிறுவனங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில் ரெய்லீயில் (North Carolina, Raleigh) உள்ள ‘பயோ மேசன்’ சிமென்ட் போன்ற செங்கற்களை, பாக்டீரியாவையும், ‘அக்ரிகேட்’ என்ற துகள் பொருட்களையும் இணைத்து உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்துடன் களத்தில் உள்ளது.

மேம்பட்ட இராணுவ ஆய்வுத் திட்டக் குழுவின் (Defense Advanced Research Projects Agency) நிதி உதவியுடன் கோலராடோ போல் டா (Colorado Boulder) பல்கலை ஒரு புதுமைப் பொருளை படைத்துள்ளது. அது பற்றி ‘நேச்சர்’ இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஆய்வாளர்கள் ‘சைனோ பாக்டீரியா’ (Cyano Bacteria) எனப்படும் ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர்களைக் கொண்டு குறைந்த கரி உமிழ்வில் காங்க்ரீட்டை உற்பத்தி செய்துள்ளார்கள். அவர்கள் மணல் – நீர்க்களிம்பில் பாக்டீரியா தடுப்பூசியைச் செலுத்தி, தன்னைத்தானே விரிசல்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் செங்கற்களை வடிவமைத்துள்ளார்கள்.

இன்றைய நடைமுறையில், இத்தகு கற்கள், சிமென்ட் மற்றும் காங்க்ரீட் பயன்பாட்டினை உடனடியாக மாற்ற இயலாது. ஆனால், தற்காலிகமானக் கட்டுமானங்கள், கட்டிட முகப்புகள், நடை பாதைகள் ஆகியவற்றில் குறைந்த எடையும், நிறைந்த வலுவும் கொண்ட இவை பயன்பாட்டிற்கு வரும் காலம் நெருங்கும் எனச் சொல்லலாம்.

‘அங்கு தூணில் அழகியதாய், நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தர வேண்டும்.’-பாரதி.

இந்தியாவின் பழம் நகர்களில் உள்ள பழம் பெரும் வீதிகளில் ஒரு பக்கச் சுவர் மட்டுமே உரிமையாளரின் பெயரில் இருக்கும், அவ்வீட்டின் மறுபக்கச் சுவர் இதைத் தொடரும் உரிமையாளருக்கு. அவ்வமைப்பு வெப்பத்தால் ஏற்படும் கதிர் வீச்சினைத் தடுப்பதாகவும், குறைப்பதாகவும் கட்டுமானத் துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். பனையோலை, தென்னையோலை, களிமண் போன்ற கட்டுமானப் பொருட்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்புவரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன.

 

https://solvanam.com/2021/04/25/__trashed-7/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குவாண்டம் உணர்தல்

பானுமதி ந.

[வளர்ந்து வரும் தலை சிறந்த தொழில் நுட்பங்கள்- பாகம் 9]

 

குவாண்டம் கணிணிகள், மேல் நிலையில் உள்ள மனிதர்கள்; குவாண்டம் உணரிகளுக்கு அதற்குச் சமமான அந்தஸ்து கிடைப்பதில்லை. இத்தனைக்கும் இவைகள், தானியங்கி வாகனங்களை ஓரப்பார்வை பார்க்க வைக்கும் இசைக் குயில்கள்; கூர்ந்து பார்த்து நீரடிப் பயணத்தை மேம்படுத்தும் கழுகுகள்; மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழிப்பதைப் போன்ற எரிமலைகளும், அகழ்வாரைத் தாங்கும் நிலம், தாளாது, கம்ப நடுக்கம் கொண்டு வெடிக்கப் போவதையும் முன் உணர்த்தும் சாகுருவிகள்; உடல் உறுப்புகளைப் போல உடன் தொத்தும் ஊடு கதிர் கருவியினையும் எளிதாக எடுத்துச் சென்று மூளையின் தினசரி செயல்பாடுகளை அறிய உதவும் செல்லப் பிராணிகள்.

இவை எப்படி அமைக்கப்படுகின்றன? பொருட்களின் குவாண்ட இயல்பு தான் அடிப்படை. மாறுபட்ட சக்தி நிலைகளில், மின்னணுக்களின் செயல்திறன்களின் வேறுபாட்டினை அலகாகக் கொண்டு உருவாக்கப்பட்டு பின்னர் அதி நுட்பமாக மேம்படுத்தப் படுகின்றன. இக்கொள்கையினை  அணுக்கடிகாரங்கள் விளக்குகின்றன. உலக தரநிலை நேரமானது, ஒரு விநாடியில், சீசியம் 133 அணுக்களில் உள்ள மின்னணுக்கள், 9,192,631,770 என்ற அளவில் இடம் பெயர்கின்றன என்ற அறிவியல் ஆதாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றக் கடிகாரங்கள் இந்த ஊசலாட்டத்தைப் பின்பற்றி அமைகின்றன. மின்சார, காந்த, புவியீர்ப்புப் புலங்களில் ஏற்படும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளையும், அசைவுகளில் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றங்களையும் அறிவதற்கு, மற்றைய குவாண்டம் உணரிகள், அணு ஓட்டங்களைப் பயன் படுத்துகின்றன.

spacer.png

 

இவைகளை வேறு முறைகளிலும் உருவாக்க முடியும். உட் பிரதேசம் சார்ந்த புவியீர்ப்பில் நிகழும் சிறிய மாறுதல்களை அளப்பதற்காக, மிகக் குளிரூட்டப்பட்ட, தடையற்று ஈர்க்கப்படும், அணுக்களை உருவாக்குவதற்கு யூ. கே.யிலுள்ள பர்மிங்ஹாம் பல்கலையில் முயன்று வருகின்றனர். இவ்வகையிலான குவாண்டம் ஈர்ப்புமானி, புதைந்துள்ள குழாய்களை, கம்பிவடங்களை, மற்றும் பலப் பொருட்களை பூமியைத் தோண்டாமலே நம்பகமாகக் காட்டிக் கொடுத்து விடும்; ஆனால் இன்று நாம் தோண்டித்தான் அறிகிறோம். கடலில் பயணிக்கும் கப்பல்கள், நீரடிப் பொருட்களை இந்த நுட்பத்தின் மூலம் அறிய முடியும்- என்ன ஒன்று, மற்றொரு டைடானிக் காணக் கிட்டாது!

பெரும்பான்மையான குவாண்ட உணரிகள் செலவு பிடிப்பவை, நிறை மிகுந்தவை, சிக்கலானவை; ஆனால், புதிய தலைமுறை உணரிகள் அளவில் சிறியதாய், ஆற்றல் மிக்கதாய், செலவு குறைவானவைகளாய் அமைந்தால் பலப் புதியத் துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். 2019-ல், மாஸச்சூசெட்ஸ் தொழில் நுட்பக் கழக ஆய்வாளர்கள், வழமையான முறைகளில், வைரத்தை அடிப்படையெனக் கொண்ட குவாண்டம் உணரியை, சிலிகான் சிப்பில் பதித்தார்கள். 1 அதன் மூலம், ஒரு மில்லி மீட்டரில், பத்தில் (கிட்டத்தட்ட) ஒரு பங்கு அளவு அகலத்தில், ஒரு சதுரத்திற்குள், பலவகைப்பட்ட நிறை மிகுந்த உட் பொருட்களை கட்டுக்கோப்பாய் அமைக்க முடிந்தது. குறைந்த செலவு, அதிக உருவாக்கம், அறையின் தட்ப வெப்பச் சூழலில் பயன் படும் திறன், ஆகிய அனைத்தும் கொண்ட, இந்த முன் மாதிரியைச் சார்ந்த குவாண்டம் உணரிகள், சக்தி குறைந்த காந்தப் புலங்கள், மற்றும் செம்மையான முறையில் எடுக்கப்பட வேண்டிய அளவுகள் பயன்படும் எந்த ஒரு செயல்பாட்டிலும் உபயோகப்படும் என்பது நற்செய்தி.

குவாண்டம் அமைப்புகள் மிக எளிதாகப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதால், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவைகளைப் பயன் படுத்த நேரிடுகிறது. ஆனாலும், அரசுகளும் முதலீட்டாளர்களும் இதை ஒரு கை பார்ப்பதில் மும்முரமாக உள்ளார்கள். யூ.கே தனது இரண்டாம்பகுதி  ‘நேஷனல் குவாண்டம் கம்ப்யூடிங் திட்டத்திற்காக’ (2019-2024) 315 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. மருத்துவ மற்றும் இராணுவத் துறைகளின் செயல்பாடுகளை முன்னிறுத்தி, வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் குவாண்டம் உணரிகள் சந்தைக்கு வரும் என தொழிற்துறை வல்லுனர்கள் சொல்கிறார்கள். அணுவகத்துகள்களின் விந்தைகள், மிகத் துல்லியமான அளவியல் துறையினை விரைவில் ஏற்படுத்தும்.

மிகச் சமீபத்தில் அமெரிக்காவின் ஃபெர்மிலேப் ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளது.  ‘ம்யூவான்’ என்பவை ‘கொழுத்த மின்னணுக்கள்’ என அறியப்படுபவை. இவைகளைக் காந்தப் புலத்தில் வைக்கையில், அவை சுழல்கின்றன, தள்ளாடுகின்றன. இப்படி இவை சுழல்கையில், சுற்றுச் சூழலுடன் இணைவினையாற்றுகின்றன. அந்தச் சூழலிலோ, குறைந்த ஆயுள் உள்ள துகள்கள் வெற்றிடத்திலிருந்து உள்ளே- வெளியே ஆட்டம் ஆடுகின்றன. மரபார்ந்த அறிவியலில் சொல்லப்பட்ட மதிப்பிலிருந்து இந்த ம்யூவான்களின் ஜி-2 மதிப்பு வேறுபடுவதால், குவாண்ட இயற்பியல், கணிணி, உணரிகள் ஆகியவற்றில் பெரும் செயல் திறனைக் கொண்டு வர முடியும் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது. (The Hindu Dt 11/04/2021 Science & Technology)

2020 நிதி நிலை அறிக்கையில் ரூ.8000 கோடியை குவாண்டம் நுட்பத் தொழிலிற்காகவும், அதைப் பயன் படுத்தும் செயல் முறைகளுக்காகவும் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பிடத் தகுந்த எட்டு தொழில் தொடங்கு நிறுவனங்கள்  குவாண்ட  கணிணி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் ஒன்றான QpiAITeck  குறைகடத்தி செயல் முறையைப் பயன்படுத்தி, அதிகக் குளிர் நிலையில்  செயல்படும் கலவையான சிப்களை வடிவமைக்கிறது. ஒரு மில்லியன் க்யூபிட்ஸ்ஸை ஒரு சிப்பிற்குள் அடக்கும் தொழில் நுட்பத்தில் இது ஈடுபட்டு வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைகளுக்கு உதவிகரமாக விளங்கும். (https://analyticsindiamag.com/8-top-quantum-technology-startups-in-india/) பெங்களூருவில் உள்ள நிறுவனம் இது.

ஒரு க்யூபிட்டின் செயல் திறன் குவாண்டம் நிலைகளின் பகுப்பாய்வைச் சார்ந்திருக்கிறது; அது பின்னலைப் பொருளைச் (Entanglement) சார்ந்திருக்கிறது. இந்தப் பின்னலைப் பொருள் குவாண்டம் நிலைகளை உணர்வதற்கு பயன்படும் ஒன்று. இதன் மூலம் குவாண்டம் உணரிகளை மேம்படுத்தலாம். விஞ்ஞான தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னதிகாரமுள்ள இராமன் ஆய்வுக் கழகம் இம்முயற்சியைச் செய்திருக்கிறது. (https://dst.gov.in/pressrelease/new-test-quantum-coins-computers-quantum-sensing)

1(மிகச் சமீபத்தில் ஒரு கம்பெனி வைர பேட்டரிகள் எனப் பெயரிட்டு 28000 ஆண்டுகள் வரை அவை வேலை செய்யும் எனவும், இவை  அணுக் கழிவுப் பொருட்களில் கதிர் வீச்சினை நீக்கிப் பின்னர் பயன்படுத்தப்படுவதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.)

மந்திரம் கோடி இயக்குவோன் நான்;                              

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;                                

தந்திரம் கோடி சமைத்துளோன் நான்;                              

சாத்திர வேதங்கள் சாற்றினேன் நான்;                          

அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்;                                   

அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;                                    

கண்ட நற் சக்தி கணமெலாம் நான்;                            

காரணமாகிக் கதித்துளோன் நான்;                                       

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;                               

ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்.

– பாரதி

_____________

பார்க்க: WEF Top 10 Emerging Technologies Quantum Sensing Author: Carlo Ratti

 

https://solvanam.com/2021/05/09/குவாண்டம்-உணர்தல்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பசும் நீர்வாயு (Green Hydrogen)

 

ஹைட்ரஜன் எரிந்தால் என்ன உபப் பொருள் வரும்? நீரல்லவா? இதனால் தான் கரியற்ற எரிசக்தியைக் கொணர்வதில் பல முன்னெடுப்புகள் பல காலகட்டங்களாக நடந்து வருகின்றன. மரபார்ந்த வழியில் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் முறைகளில், தொல்லெச்ச எரி பொருட்கள் ஆவியாக்கப்படுகின்றன. கார்பன் அற்று இதைச் செய்ய முடிவதில்லை; இம்முறையில் உற்பத்தியாவதை ‘க்ரே ஹைட்ரஜன்’ என்றழைக்கிறார்கள். இதே முறையில் கரிவளியைக் கையகப்படுத்தி தனிமைப்படுத்தினால் கிடைப்பது ‘ப்ளூ’ ஹைட்ரஜன்.

ஆனால், பசும் நீர்வாயு என்பது வேறு ஒன்று. இயந்திரங்கள் மூலமாக நீரினை மின்பகுப்பாய்வு (Electrolysis) செய்து, அதை வேறு எந்த உபப் பொருட்களுமில்லாமல், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எனப் பிரிக்கிறார்கள். ஒரு காலத்தில் இம்முறையில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய மிகுந்த மின்சக்தி தேவையாக இருந்தது. தமிழில் ஒரு பழமொழி உண்டு— “சுண்டைகாய் அரைப் பணம்; சுமை கூலி முழுப் பணம்.” இப்போது இந்த நிலை இரு காரணங்களால் மாறியுள்ளது; ஒன்று மின் வினியோக அமைப்புகளில் இருக்கும் குறிப்பிடத்தகுந்த புதுப்பிக்கப்படும் மின்சக்திகளில்(Renewable Electricity) கிடைக்கும் உபரி மின்சக்தியை மின்கலன்களில் சேமிப்பதற்குப் பதிலாக, தண்ணீரை மின்பகுத்தல் செய்து நீர்வாயுவென சேமிக்கும் சாத்தியங்கள்; மற்றொன்று, மேம்பட்ட மின்பகுப்புக் கருவிகள் (Electrolysers) இப்போது உள்ளன.

spacer.png

 

‘க்ரே’ மற்றும் ‘ப்ளூ’ ஹைட்ரஜன் உற்பத்தியைக் குறைந்த செலவில் செய்வதைப் போலவே ‘க்ரீன்’ ஹைட்ரஜன் உற்பத்திக்கான மின்பகுப்பிகளைச் செய்வதில் பலர் மும்முரமாக இருக்கின்றனர். வரும் பத்தாண்டுகளில் இந்த இலக்கு அடையப்படும் என்று இத்துறையாளர்கள் சொல்கிறார்கள். இதற்கிடையே புதுப்பிக்கப்படும் சக்தி ஆற்றல்  திட்டங்களில், மின்பகுப்பிகளை நேரடியாக இணைக்கும் செயல்களில், சக்தி உற்பத்தித் துறை இறங்கியுள்ளது. தொழில்முறை பசும் நீர்வாயு  உற்பத்திக்கான ‘கிகாஸ்டேக்’(Gigastack) என்ற கூட்டமைப்பு, கரை சாரா  காற்றாலையுடன் (Off shore wind farm) 100 மெகாவாட் (பத்து இலட்சம் மின் ஆற்றல் விசை அலகு சக்தி) திறன் கொண்ட மின்பகுப்பிகளை  இணைக்கும்  செயலில் ஈடுபட்டுள்ளது. ஆர்ஸ்டெட் ஹார்ன்ஸீ 2 (Orsted’s Hornsea 2) என்ற இந்தக் காற்றாலை, யார்க்க்ஷயர் (Yorkshire) கரையிலிருந்து 89 கி மீ தொலைவில் நார்த் ஸீயில்(North Sea) ஹார்ன் ஸீ ஒன்றுக்கு (Hornsea 1)அருகில்  அமைந்துள்ளது. 2022 ல் முழுச் செயல்பாட்டிற்கு வரும் எனச் சொல்கிறார்கள்.

நிலக்கரி மற்றும் இதர வாயுக்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கரி உமிழ்வு மாசுகளிலிருந்து தப்பிக்க சூர்ய சக்தியும், காற்று சக்தியும் 85% வரை உதவுகின்றன. அடர் வெப்பம் மற்றும் அடர்த்தி தேவைப்படும் உற்பத்தித் துறைகள், கப்பல் கட்டுமானம் போன்றவற்றில் பசிய நீர்வாயு மிகப் பெரிய சக்தி ஆற்றலைத் தருவதுடன், காற்று மாசுகளைக் குறைத்துவிடும். சுரங்கங்கள், கட்டுமானங்கள், வேதிப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற துறைகள் அதிக அளவில் கரிவளியினை வெளியிடுகின்றன. சூழல் மாசுகளைக் கட்டுப்படுத்த செய்யப்பட்டுள்ள பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கு ஒவ்வொரு வருடமும் 10 கிகாடன்களுக்கும் (Gigatonnes) மேலான கரிவளியினைக் குறைப்பது என்பதே. இந்த இலக்கை அடைய உதவும் 4 தொழில் நுட்பங்களில் பசிய நீர்வாயு ஒன்று என்று ‘சக்தி மாற்றுமுறைக் குழுமம்’ (Energy Transitions Commission) சொல்லியுள்ளது. 

(Author : Jeff Carbeck Ref: WEF_Top_10_Emerging_Technologies_2020)

தேசிய நீர்வாயு ஆற்றல் பணி மையம் என்ற ஒன்றை இந்தியா தொடங்க உள்ளது. இந்த ‘நீர்வாயு சக்தி ஆற்றல் துறைச் செயல்பாடுகளில்’ 15 நாடுகள் உள்ளன. 2023-ம் வருடத்திற்குள் 1.45 மில்லியன் டன் பசும் ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது இலக்கு. தற்சமயம் இந்தியா 5.5 மில்லியன் டன் ஹைட்ரஜனைப் பயன்படுத்துகிறது. இந்தக் ஹைட்ரஜன், இறக்குமதி செய்யப்படும் தொல்லெச்சப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் காற்று மாசு கூடுகிறது. எனவே பசும் ஹைட்ரஜன் உற்பத்தி அவசியம் என அரசு உணர்ந்துள்ளது. இதில் சவால்கள் அதிகமுள்ளன.

  1. புதுப்பிக்கப்படும் சக்தி ஆற்றலைத் தடைகளில்லாமல் மின் பகுப்பிகள் அணுக வழி வகை செய்ய வேண்டும்.
  2. பரவலாக (Decentralise) ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதற்கு, 24 மணி நேரமும் கிடைக்கும் விதமாக புதுப்பிக்கப்படும் மின்/சூர்ய/ காற்று சக்தி வேண்டும்.
  3. ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள ஹைட்ரஜன் பயன்பாட்டுத் துறைகளில் பசும் நீர்வாயுவை இணைப்பதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
  4. இந்தத் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முதலீடுகளைச் செய்ய வேண்டும். அரசு அல்லாத தொழில் முனைவோர் இதில் முதலீடு செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும்.
  5. மின்பகுப்பிகள் உற்பத்தியில் சிறப்புக் கவனம் வேண்டும்.

(Ref: The Hindu dt 22-01-2021)

spacer.png

2050க்குள் கரி உமிழ்வே இல்லாத பூமி என்ற குறிக்கோள் நல்லதே. அதற்கான ஆயத்தங்கள் பல்வேறு வகைகளில் எடுக்கப்படுகின்றன. வழக்கம் போலவே வளரும் நாடுகளை, இவ்விஷயத்தில் தங்களுக்குச் சமமாக நிறுத்தி வளர்ந்த நாடுகள் பல கட்டளைகளை நேர்முகமாகவும், மறை முகமாகவும் போட்டிருக்கின்றன. அதைப் பற்றி பின்னர் பேசுவோம்.

கரி உமிழ்வை வானத்தில்(!) பிடிக்க ‘ஹை ஹோப்ஸ்’ என்ற இஸ்ரேலிய தொழில் தொடங்கு நிறுவனம் ஒரு திட்டம் சொல்லியுள்ளது. “கரி வாயு -80 டிகிரி செல்சியஸ்ஸில் உலர் பனியாகிறது. சரி, இத்தகைய சூழலுக்கு நெருக்கமாக எந்த இடம் இருக்கிறது? கடல் மட்டத்திற்கு மேலே 10 முதல் 15 கி மீட்டரில் உள்ள வளி மண்டலம், காற்றில் கலந்திருக்கும் கரியைப் பிடிக்க ஏதுவாக இருக்கிறது. இதைச் செய்வதற்கு குறைந்த மின் ஆற்றல் போதும்-அழுத்தமோ, வெப்பமோ தேவையில்லை.”

“மிகுந்த உயரங்களுக்குச் செல்லக்கூடிய பலூன்களில், கரி பிடிப்பு உறைகளை, பாய்மரங்கள் போன்றவற்றை இணைத்து அனுப்பினால், அவை கரியினை உலர் பனியாக மாற்றும். உலர் பனி நிறைந்ததும் அழுத்த தொட்டிகளை பூமிக்குக் கொண்டு வர வேண்டும்; வெப்பம் ஏறுவதால், உலர் பனி தொட்டிகள் கரிவளியால் நிரம்பத் தொடங்கும். அந்த வாயுவை தனிமைப்படுத்தி பூமியில் தேவையான பயன்பாடுகளைச் செய்யலாம். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பலூன் தொழில் நுட்பமே இதற்குப் போதுமானது- என்ன ஒன்று- பெரிய அளவில் வேண்டும். Cryodistillation முறை தான் இது. வளி மண்டலத்தில் இந்த பலூன் உறைகளில் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைட், சிறிதளவு சக்தி ஆற்றலைச் செலவிட்டு, அலுமினியத் தகடுகளில் உறிஞ்சப்பட்டு உறைய வைக்கப் படும். தகடுகளில் பனிச் சிதறல்களாகப் படிபவை அழுத்தத் தொட்டிகளில் சேகரிக்கப்படும்.”

https://newatlas.com/environment/high-hopes-carbon-capture-balloons/

ஓன்றை நினைவில் கொள்ள வேண்டும்- கரிவளி ஒரு வில்லனல்ல. வளிமண்டலத்தில் அது 150 பிபிஎம்ற்கு(Parts per million) வந்துவிட்டால் உயிர் வாழ்தல் இயலாமல் போகலாம்.

புவியின் வளி மண்டலத்தில் கரிவளி 0.04% மட்டுமே. அந்த 0.04%-லிலும், 95% இயற்கையாக வருவதே. அதாவது எரிமலைகளால், மற்றும் உள்ளிருக்கும் கரிப் படுக்கைகள் தங்கள் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டு எரிவதால் வெளியேறும் கரிவளி போன்றவை இயற்கை நிகழ்வுகள். ஆஸ்திரேலியாவின் எரியும் மலையை நினைவில் கொள்ளுங்கள். தாவரங்களுக்கு, நுண்ணிய விதத்தில் இந்தக் கரிவளி, ஒளி சக்தியை, வேதிய சக்தியாக மாற்றி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதால்  தாவர உணவு கிட்டுகிறது. கரிவளியை முற்றாகக் குறைக்க நினைக்கும் இன்றைய சிந்தனைகளால் தாவர உணவுகள் இயற்கையாக உற்பத்தி ஆகாது அல்லவா? இந்தத் தீ நுண்மிகாலத்தில் உலகம் தன் வழமையான உற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபடாத போதும், கரிவளி காற்றில் குறையவில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. 

1750 களிலிருந்து கரிவளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால், உலக வரலாறு இவ்விதமாகச் சொல்கிறது- பனி 2.6 மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து, இயந்திரங்களால் உண்டாகும் கரிவளிகள் இல்லாமலேயே உருகி வந்துள்ளதே! ( James Matkin-Quora Apr 24,2021)

இதற்குப் பொருள் காற்று மாசினைப் பற்றி பொருட்படுத்தக்கூடாது என்பதல்ல. ஆனால், வளி மண்டலத்திற்குச் சென்று கரிவளியைப் பிடித்து உலர் பனியாக்கி என்ற ‘ஹை ஹோப்ஸ்’ சிந்தனையை மறு பரிசீலனை செய்வதும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை அவற்றின் இயற்கைப் பொருளான நிலக்கரி போன்ற தொல்லெச்ச எரிபொருளை உபயோகிக்க அனுமதிப்பதும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் இராணுவ மற்றும் விண்வெளிப் போட்டிகளை நிறுத்துவதும் இன்றைய அவசியத் தேவை.


 

https://solvanam.com/2021/05/23/பசும்-நீர்வாயு-green-hydrogen/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.