Jump to content

மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இப்பவே மருந்துகளை கண்டு பிடிக்க இந்த முக்கு முக்கீனம். இதை பாக்கேக்கை  எங்கடை முன்னோர்கள் வலு கெட்டிக்காரர். அதிலும் இயற்கை வைத்தியம். பக்க விளைவுகள் அறவே இல்லை....

இப்போது இருக்கும் கோவில்களும் வழிபாட்டு தலங்களும் வியாபார நிலையங்கள்  போன்றது. இது உலகறிந்தவிடயம். அதை வைத்து நீங்கள் கருத்து எழுதுவதால் உங்களின் இயலாமை  தெட்டத்தெளிவாக தெரிகின்றது.🤣

விளைவே இல்லையென்றால், பின்னர் பக்க விளைவு, பின்விளைவு, முன்விளைவெல்லாம் எப்படி வரும்? 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாரும் முன்னோர்களை கேலி செய்யவில்லை.

முகமது சொன்னதுதான் இறுதி என்று வாதாடாடும் முல்லாக்களை போல, ஆதி காலத்து, ஆயிரம் ஆண்டுகளிக்கு முந்திய விளக்கத்தை வைத்து கொரோனா அம்மன் மருந்து கண்டுபிடிக்க விழைந்த இங்கிலாந்தை ( மருந்து முதலில் கண்டுபிடித்தது.... wait for it.....ஜேர்மனி 🤦‍♂️) தண்டிகிறாவா என்று எழுதியதுக்கே அந்த விளக்கம்.

அப்புறம் போற போக்கில் இன்னும் மருந்து கண்டு பிடிக்க வில்லை என்று விஞ்ஞானத்தின் மீது நக்கல் வேறு.

கொரோனா வைரஸ் ஒரு புத்தம் புதிய உயிரி. அது கண்டு பிடிக்க பட்டு ஒரு வருடத்துக்கு சற்று அதிகமான காலத்தில் ரெண்டு வக்சீன் தயார் இன்னொன்று அடுத்த கிழமை வருகிறது. இது ஒரு இமாலய சாதனை. முன்னெப்போதும் இல்லாத வகையில்.

விஞ்ஞானம் இல்லை என்றால் கூடி இருந்து வேப்பிலைதான் அடித்திருக்க வேண்டும்.

கொரோனா தானாக போகாது. அம்மனும் அதை விட்ரோ பண்ணப் போவதில்லை.

தடுப்பூசி அடித்து படிபடியாக கூட்டு நோயெதிர்ப்பை கூட்டித்தான் கொரோனா வெல்லப்படும்.

இங்கே எழுதுபவர்கள் எல்லாம் அரசாங்கம் கூப்பிட்டவுடன் முதல் ஆளாய் ஓடிப்போய் தடுப்பூசி போடபோவபர்கள்தான்.

சும்மா பொழுது போக்குக்கு இங்கே வந்து அம்மாள், வேப்பிலை, முன்னோர் என்று சாமியாடுவார்கள் 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கண்ட தொழிற்சாலைகளால் சூழல் மாசுபடுகின்றது.கண்ட கண்ட கண்டு பிடிப்புகளால் தேகாரோக்கியம் கெடுகின்றது. கண்ட கண்ட உணவுகளால் இனம் புரியாத நோய்கள் வருகின்றது.

இன்றைய விஞ்ஞான/மருத்துவ வளர்ச்சியை வைத்து நோய்களை உருவாக்கி மருந்து வியாபாரம் செய்கின்றார்களே தவிர வேறொன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தொழிற்சாலை நாடுகளே தங்கள் தவறுகளை தெரிந்து சூழல் சுற்றாடல் நலன்களை சட்டங்கள் மூலம் சரி செய்ய முற்படுகின்றன. ஆனால் இங்குள்ள ஜாம்பவான்களோ அழிவைத்தரும் விஞ்ஞானம் சொர்க்கமானது என கனவில் மிதக்கின்றார்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான சொர்க்கம் என யாரும் சொல்லவும் இல்லை. இப்போதைக்கு அறிவுக்கு எட்டிய வழியை விஞ்ஞானம் காட்டுகிறது என்பது மட்டுமே சொல்ல படுகிறது.

சூழல் மாசடைகிறது, ஓசோனில் ஓட்டை விழுகிறது, வளிமண்டலத்தின் காபன் மொனொக்சைட் துகளள்கள் கூடுகிறது, அது சுவாச மற்றும் இதர நோய்களை தருகிறது. துருவ பனிகட்டி உருகுகிறது. காபனீரொக்சைட் கூடுவதை, மீதேன் கூடுவதை எப்படி தடுப்பது....

இவையெல்லாம் எந்த மத புத்தகத்திலும் இல்லை. விஞ்ஞானம் சொன்னதுதான். 

விஞ்ஞானம் இன்றில் சூழல் மாசடைவது என்றால் என்ன என்பதே எமக்கு தெரிந்திராது.

ஆம் தொழில் புரட்சியை, உலக மயமாதலை விஞ்ஞானம்தான் தந்தது. அப்படி இல்லாவிட்டால் நாமெல்லாம் யாழ்பாணத்யில் புகையிலைதான் நட்டபடி இருப்போம்.

ஆகவே,

ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் ....எல்லாமும் விஞ்ஞானமே.

மதமும், கலாச்சார அனுஸ்டாங்களும் அவரவர் தனியுரிமை அதற்க்காக, பொது இடங்களில் ஒரு pandemic நடுவில் வந்து எமது அரைகுறை விளக்கங்களை முன்வைக்க கூடாது.

இது மிக ஆபத்தான போக்கு.

நான் ஏலவே சொன்னபடி இப்படியாக ஒரு திரிலுக்கு எழுதுபவர்கள் நாளைக்கு முதல் ஆளாய் போய் ஊசி போட்டு தப்பி விடுவார்கள்.

இவர்கள் எழுதியதை உண்மை என நம்பி அப்பாவி சீவன் ஒன்று, வேப்பிலையை கட்டி கொண்டு கும்மியடித்து கொரோனாவில் போய் சேர்ந்துவிடக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம். இதற்குள் கொரோனா ஊசி போட்டு தப்பிவிடுவார்களாம்....😁  கொரோனா மருந்துகளை ஏற்றிக்கொண்டு போன லொறி றைவர் அலர்ஜி வந்து இன்னும் எழும்பவேயில்லையாம்.🙃

அது கிடக்கட்டும்.....😎

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

அதுதான்......கொரோனா தானாய் போனால் உண்டு. போகும். அதுக்கு பிறகு எங்கடை வெள்ளை கோட்டு போட்ட  பரியாரிமார் பாத்தியா....பாத்தியா எங்கடை மருந்து கண்டியா எண்டுவினம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம்

 

அது இந்தியாவில் தயாரித்த கோரோனாவில் என்ற போலி மருந்தாக இருக்கும்😁 அல்லது கொரோனா மீதான எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சுமே ஆன்ரி குடித்த மூலிகை கஷாயமாக இருக்கும்😃

போலியோவுக்கு வக்சீன் போட்டு இளம்பிள்ளை வாதத்தில் இருந்து தப்பி நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டு கொரோனோ வக்சீனால் பக்கவிளைவு என்று பூச்சாண்டி காட்டினால்தானே கொஞ்ச சனத்தை வக்சீன் எடுக்காமல் சாகடிக்கப்பண்ணலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

சீனாவில்.. வைரஸ் அடங்கினதாகத் தெரியவில்லை. வைரஸ் பரவல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதனால்.. தான் அவுஸி சீனர்களுக்கான விசாவை முற்றாக நிறுத்தி வைத்துள்ளதாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கோரோனாவுக்கென  தயாரிக்கப்பட்ட மருந்துகளின் பக்கவிளைவுகளே எக்கச்சக்கம். இதற்குள் கொரோனா ஊசி போட்டு தப்பிவிடுவார்களாம்....😁  கொரோனா மருந்துகளை ஏற்றிக்கொண்டு போன லொறி றைவர் அலர்ஜி வந்து இன்னும் எழும்பவேயில்லையாம்.🙃

அது கிடக்கட்டும்.....😎

சீனாவிலை இப்ப கொரோனா அடங்கீட்டுது. இது உலகம் அறிஞ்ச விசயம்.சனம் நோர்மல் வாழ்க்கைக்கு திரும்பீட்டுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சொல்லி வேலையில்லையாம். இவ்வளவத்துக்கும் சீனக்காரன் கொரோனா ஊசி போடவுமில்லை. ஊசிக்கு தவம் கிடக்கவும் இல்லை.

அதுதான்......கொரோனா தானாய் போனால் உண்டு. போகும். அதுக்கு பிறகு எங்கடை வெள்ளை கோட்டு போட்ட  பரியாரிமார் பாத்தியா....பாத்தியா எங்கடை மருந்து கண்டியா எண்டுவினம்.😂

சீனா மிக கடுமையாக பாதிக்க பட்ட பகுதிகளை தனிமை படுத்தி, ராணுவ நேர்த்தியோடு கையாண்டமையால் பரவலை தடுத்தது. இப்போதும் விமான நிலையங்களில் இன்னும் பல இடங்களில் அவர்கள் மிக கடுமையான நடவடிக்கைதான் எடுக்கிறார்கள். தவிர மக்கள் சொல் கேட்டு நடப்பார்கள். 

ஜப்பானிலும் கொரியாவிலும் கூட இதுதான் நிலைமை.

அதிக சுதந்திரம், கட்டுபாடற்ற மக்கள் உள்ள நாடுகள்தான் பெரும்பாலும் அதிக அடி வாங்குகிறன.

சீனா சைனோவாக்ஸ் என்ற வக்சீனை தயாரிக்கிறது.

மேற்கிற்கு COVID 19 இன் genome வரை படத்தை கொடுத்தவர்கள் கூட சீன விஞ்ஞானிகள்தான்.

ஆகவே கொரோனா தானாக போகும், கடவுள் அருளால் போகும் என்பது சுத்த அம்புலிமாமா கதை.

ஆனால் சிலருக்கு இந்த விடயங்கள் ஜென்மத்துக்கும் விளங்காது, அல்லது விளங்காதது போல் நடிப்பார்கள்,  ஆகவே விஞ்ஞானம் கொரோனாவை வென்றபின், மெதுவாக தலையை வெளியே நீட்டி, தடுப்பூசி போட்ட தழும்பை மறைத்தபடி (😀)பார்த்தாயா அம்மன் கொரோனாவை வாபஸ் வாங்கி கொண்டார் என சொல்லத்தான் போகிறார்கள், உலகம் எப்போதும் போல ஒரு நமிட்டு சிரிப்போடு அவர்களை கடந்து போகும்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்.. சிங்கப்பூரும் சீனர்களுக்கு உள்நுழைவு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அது இந்தியாவில் தயாரித்த கோரோனாவில் என்ற போலி மருந்தாக இருக்கும்😁 அல்லது கொரோனா மீதான எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சுமே ஆன்ரி குடித்த மூலிகை கஷாயமாக இருக்கும்😃

போலியோவுக்கு வக்சீன் போட்டு இளம்பிள்ளை வாதத்தில் இருந்து தப்பி நெஞ்சை நிமிர்த்தி நடந்துகொண்டு கொரோனோ வக்சீனால் பக்கவிளைவு என்று பூச்சாண்டி காட்டினால்தானே கொஞ்ச சனத்தை வக்சீன் எடுக்காமல் சாகடிக்கப்பண்ணலாம்!

இது மிக மோசமான உயிரோடு விளையாடும் விளையாட்டு. Antibodies எப்படி உருவாகிறது, நோயெதிர்பு சக்தி எப்படி உருவாகிறது, அலர்ஜியின் அடிப்படை என்ன என தெரியாதவர்கள் தாமும் குழம்பி, மற்றயோரயும் குழப்புதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

சீனாவில்.. வைரஸ் அடங்கினதாகத் தெரியவில்லை. வைரஸ் பரவல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதனால்.. தான் அவுஸி சீனர்களுக்கான விசாவை முற்றாக நிறுத்தி வைத்துள்ளதாம். 

சீனா பழைய நிலமைக்கு திரும்பிக்கொண்டிருப்பதாக இங்குள்ள ஊடகங்களில் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்போது இருக்கும் கோவில்களும் வழிபாட்டு தலங்களும் வியாபார நிலையங்கள்  போன்றது. இது உலகறிந்தவிடயம். அதை வைத்து நீங்கள் கருத்து எழுதுவதால் உங்களின் இயலாமை  தெட்டத்தெளிவாக தெரிகின்றது

உண்மைதான். இப்ப ஆன்மீகமும், ஒழுக்கமும், நன்னெறியும் முகப்புத்தகத்திலும், யூரியூப்பிலும், ருவிற்றரிலும் தாராளமாக இருக்கும்போது கோயில்கள் யாவாரம் செய்துதானே கொஞ்சமாவது பணம் பார்க்கலாம். கொரோனாவுக்கு ஒரு குளிர்த்தி செய்தால் எல்லாம் போய்விடும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

உண்மைதான். இப்ப ஆன்மீகமும், ஒழுக்கமும், நன்னெறியும் முகப்புத்தகத்திலும், யூரியூப்பிலும், ருவிற்றரிலும் தாராளமாக இருக்கும்போது கோயில்கள் யாவாரம் செய்துதானே கொஞ்சமாவது பணம் பார்க்கலாம். கொரோனாவுக்கு ஒரு குளிர்த்தி செய்தால் எல்லாம் போய்விடும்!!

இதை நீங்களும் உங்களைப்போன்றவர்களும் தான் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.
நாங்கள் இயற்கையும் அதன் நடைமுறைகளையும் வைத்துத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மீண்டுமொருமுறை இப்போதைய  வழிபாட்டு தலங்கள் வியாபார நிலையங்கள் ஆகி விட்டது. அதை வைத்து இங்கே கருத்தெழுதி உங்கள் திறமையை காட்டாதீர்கள்.

😂

14 minutes ago, goshan_che said:

நன்றி

வணக்கம்

என்ன இது? நான் ஏதோ இழுத்து புடிச்ச மாதிரி???????🤣

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

என்ன இது? நான் ஏதோ இழுத்து புடிச்ச மாதிரி???????🤣

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

🤣🤣🤣 நீங்கள் இழுத்து பிடிக்கேல்லத்தான். நான் கனக்க எழுதிவிட்ட உணர்வு ஆகவேதான் நன்றி வணக்கம்.

மனிதர் என்ன, நாம் வியக்கும் இந்த இயற்கையும், உலகும், கோள்களும் சூரியனும் கூட இந்த பிரபஞ்சத்தில் ஒரு துளிதானும் இல்லை. 

ஒரு தேன்கூட்டின் ஒற்றை அறையை விட சிறியது எம் பால்வெளி. ஆகவே மனித புழுக்களின் இயலுமை பற்றி எனக்கு ஒரு மிகை மதிப்பீடும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நல்ல காலம் சூறாவளியையும் சுனாமியையும் நில நடுக்கத்தையும் மனித புழுக்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஏலுமெண்டால்.......ஐயையோ என்ர சிவனே....😎

சிவமூலிகை வேலை செய்யும்போது இப்படி ஆற்றொழுக்காக வரும்தானே!😆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

,

32 minutes ago, கிருபன் said:

சிவமூலிகை வேலை செய்யும்போது இப்படி ஆற்றொழுக்காக வரும்தானே!😆 

இங்கு அனேகமானவர்கள் கபசுர குடிநீர் என்று ஒரு வித பவுடரை அவித்து குடிக்கிறார்கள்..இதன் தன்மை சாடையான கைப்பாக இருக்கும் என்று அறிய முடிகிறது.வெளியே நின்று பார்ப்பவர்கள் சண்டைக்கு வராதீங்கோ உங்களின் விடுப்பு பார்க்கும் நேரம் .😆
 

Link to comment
Share on other sites

இங்கு இயற்கை வைத்தியம் போதும் என்றும் அம்மன்  சிவன் எல்லாம் காப்பாற்றுவார் என்று மற்றவர்களை மடையராக்கி   புலம்புபவர்கள் தமக்கு  மாரடைப்பு வந்தால் உடனடியாக  அம்புலன்ஸிற்கு போன்பண்ணி நவீன வைத்தியசாலையை நோக்கி  தலை தெறிக்க ஓடுவாரகள். ஏனென்றால் சிவன் காப்பாற்றமாட்டான் என்பது மற்றவர்களை விட  இந்த சிவனே என்று புலம்பும் கும்பலுக்கு தான் மிகத் தெளிவாக தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிழை திருத்தமும் விளக்கமும்

கொரோனா தானாகவே ஒழியாது என நான் எழுதியது முற்றிலும் சரியில்லை.

நான் மேலே இன்னொரு பதிவில் எழுதியது போல, ஒரு வைரசின் முக்கிய நோக்கம் எம்மை கொல்வதல்ல. தன்னை பல்கி பெருகி இனப் பெருக்கம் செய்வது.

கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுக்கும் போது, தொற்று ஏற்பட்ட அதிகம் பேரை கொல்வதால், தொடர்ந்து மனிதருக்கு பரவி தன்னை விருத்தி செய்ய கொரோனாவால் முடியாது போகும் போது, தன்னை தற்காத்து கொள்ளும் பொருட்டு தனது கொல்லும் வலுவை குறைத்து ஒரு அபாயம் குறைந்த விகாரியாக வைரசுகள் விகாரமடைவது இயல்பு.

இப்போ லண்டனில் பரவும் வகை இப்படி கொல்லும் வலு குறைந்ததாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே). 

முதல் அலையின் முடிவிலும் ஒரு இத்தாலிய வைத்தியர் இப்படி ஒரு மாறிலி ஏற்பட்டதாக கூறினார்.

உதாரணதுக்கு சீசனுக்கு சீசன் பரவும் flu காய்ச்சல் வைரஸ் இப்படியானது. இதனாலும் மரணம் நிகழலாம் எனிலும், இப்போ கொவிட் கொல்லும் அளவுக்கு இல்லை.

அதே போல் 1900 இன் ஆரம்பத்தில் வந்த ஸ்பானிய காய்ச்சலும் தடுப்பூசி இன்றியே வழக்கொழிந்து போனது. ஆனால் இப்படி வழக்கொழிய காரணம், அது தொற்றாளர்களை கொன்றொழித்ததே மற்றும் மக்களிடையே கூட்டு நோயெதிர்ப்பு (herd immunity) உருவானதே. அதனால் தொடர்ந்து வாழ வைரசுக்கு வாழிடம் இல்லாமல் போய் அழிந்தது.

ஆகவே கொவிட்டும் இப்படி அழிய கூடும்.

ஆகவே கொவிட் தானாக அழியாது என நான் சொன்னது சரியில்லை.

ஆனால் இப்படி அழிவதற்கு, 1900 போலன்றி மிகவும் சுருங்கி விட்ட இன்றைய உலகு கொடுக்க வேண்டிய மனித உயிர் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஆகவேதான் தடுப்பூசி, சமூக இடவெளி, மேலும் பராமரிப்பு மருத்துவ ஆராய்சி இவை மட்டுமே தகுந்த வழிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

Paanch உங்களுக்காக “கொரோனா அம்மனை” வடிவமைத்திருக்கிறேன்.spacer.png

ஏற்கனவே சிங்கள பெண் வரைந்த மாகாளியின்  படத்தால் இணையமெங்கும்  கொள்ளுபாடு இதுக்குள் நீங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

புலவரே,

மாடன் நம்ம சாமி, கறிய வச்சி, கள்ளையும் வச்சி திங்கு திங்குன்னு குதிச்சு ஆட்டம் போட்டா அடங்கீடும்🤣

இதைதான் இந்த இளம் பராயத்து பிள்ளையள் செய்ய நிக்குதுகள், விசயம் விளங்காத பொலீஸ் illegal lockdown rave எண்டு தடுக்கிறாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மாரடைப்பு புற்றுநோயெல்லாம் ஏதோ தடிமல் காய்ச்சல் போல் சர்வசாதாரணமாக வந்து விட்டது. ஏன் எதனால்?

விஞ்ஞான யுகம் என்ற பெயரில் உடலுக்கு நலன் இல்லாத பயிர் கண்டு பிடிப்புகளும்......நஞ்சு கலந்த காய் கனிகளும்.... நல்ல சுவாத்தியம் இல்லாத பூமியும்....உடல் அசைவில்லா தொழிலும்....இவையெல்லாம் யாரால் வந்தது?
இறைவனாலா? 
மனிதனாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது அம்மன் இல்லை.. வைரசுக்கு மேல நெருப்பு கொள்ளிமாதிரி நிறைய முளைச்சு இருக்கு.. இது சுடலை மாடன் கோவங்கொண்டு வந்திருக்கு..

 உலகிற்கு புதிராக இருக்கும் கோபுரங்களையும் பிரமிட்டுக்களையும் உருவாக்கிய மனிதன் நோய் நொடிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள தெரியாமலா இருந்திருப்பான்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.