Jump to content

யாரவது Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்கள்?


Recommended Posts

 Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்களோ? 

எவ்வளவு காலத்திற்கு பிறகு கை இயல்பான செயற்பாடு வரும்? 

6 வாரம் முதல் Carpal tunnel surgery செய்தேன். காயம் ஆற 5 வாரங்கள் சென்றது. Carpal tunnel surgery செய்த கையில் 2 விரல்கள் ஏற்கனவே உணர்வு இல்லாமல் போய் விட்டது.

தற்போது உணர்வு வந்துள்ளது ஆனால் விரல்கள் மடிக்கவோ வேலை செய்யவோ முடியாது இருக்கிறது. 

மணிக்கட்டு உள்ளங்கை தேனீ குற்றினால் இருக்கும் வலிபோன்று வலிக்கிறது. 

உங்கள் அனுபவங்களை பகிருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அனுபவமில்லை. ஆனால் physiotherapy சத்திர சிகிச்சைக்குப் பிறகு செய்திருக்க வேண்டுமே? செய்தீர்களா?

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

எனக்கு அனுபவமில்லை. ஆனால் physiotherapy சத்திர சிகிச்சைக்குப் பிறகு செய்திருக்க வேண்டுமே? செய்தீர்களா?

2தடவை மட்டுமே தந்தார்கள். நானே அந்தப் பயிற்சிகளை செய்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 

நடுவிரல் மோதிர விரலில் இன்னொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என இன்று சொன்னார்கள். அடுத்த வருடம் தான் மேற்கொண்டு வைத்தியரிடம் போக வேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 22 ஆவது  அகவையில்  இதற்க்குவெனயெரு திரியுண்டு....அங்கு  யாழ்களவுறுப்பனர்...நில்மினி.....என்பவர்...கேள்விகளுக்கு பதிலாலிக்கிறர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

பலரின் ஊன்றுகோலாய் இருப்பவர் நீங்கள், உங்கள் கை விரைவில் சுகம் பெறும்.

எனக்கு அனுபவமில்லை.

பெரிய விடயம் போல தெரிகிறது - உங்கள் மருத்துவர்களிடம் இதை escalate பண்ண பாருங்களேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதைப்பற்றி தெரியா, அக்கா விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த சகோதரி ஒருவரும் இதே மாதிரி சத்திர சிகிச்சை செய்தவர். சுகம். ஆனால் குளிர் நீரில் கை கழுவினால் அல்லது குளிரான பொருட்களுடன்  வேலை செய்தால் வலி வேதனை இருப்பதாக கூறினார்.

நலமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

அக்கா விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன். 

 

splint அல்லது wrist brace போட வேண்டும் அக்கா. முற்று முழுதாக மாற வருடம் கூட எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

சாந்தி அக்கா

பெரிய விடயம் போல தெரிகிறது - உங்கள் மருத்துவர்களிடம் இதை escalate பண்ண பாருங்களேன்?

கருத்திற்கு நன்றி goshan Che.

இந்த சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர் அடுத்து விரல்களை வெட்டிப் பார்க்கவே ஆலோசிக்கிறார். 

செய்யப்பட்ட சிகிச்சை மூலம் கை முழுமையாக குணப்படுத்தும் என்று தான் சொல்லிச் செய்தார்கள்.  ஆனால் இப்போது கை எதுவும் செய்ய முடியாது இருக்கிறது.  அடுத்து புது வருடத்தின் பிறகு தான் மாற்றம் பற்றி பார்க்க வேண்டும்.

15 hours ago, உடையார் said:

எனக்கும் இதைப்பற்றி தெரியா, அக்கா விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்🙏

அன்புக்கு நன்றி உடையார்.

15 hours ago, பெருமாள் said:

விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

நன்றி பெருமாள்.

14 hours ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்த சகோதரி ஒருவரும் இதே மாதிரி சத்திர சிகிச்சை செய்தவர். சுகம். ஆனால் குளிர் நீரில் கை கழுவினால் அல்லது குளிரான பொருட்களுடன்  வேலை செய்தால் வலி வேதனை இருப்பதாக கூறினார்.

நலமோடு இருங்கள்.

நன்றி குமாரசாமி. 2வாரத்தில் காயம் மாறிவிடும் ஒருமாதம் முடியும் போது எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யலாம் என்று சொல்லித்தான் சத்திரசிகிச்சை நடந்தது. நானும் புதுவருடத்தோடு வேலைக்கு போகலாம் என்று நம்பிக்கையுடன் தான் சிகிச்சைக்கு சம்மதித்தேன். இப்போது நிலமை தேனீர் கப் கையில் வைத்திருக்கவே முடியாது இருக்கிறது.  

சகோதரிக்கு எவ்வளவு காலத்திற்கு பிறகு இயல்பாக வந்தது என்று கேட்டு சொல்லுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.....! 

Link to comment
Share on other sites

17 hours ago, nunavilan said:

அக்கா விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன். 

 

splint அல்லது wrist brace போட வேண்டும் அக்கா. முற்று முழுதாக மாற வருடம் கூட எடுக்கலாம்.

நன்றி நுணா. சிகிச்சைக்கு முன் சொன்னபடி சிகிச்சை முடிந்த பிறகு இல்லாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

விரைவில் பூரண சுகமடைவீர்கள் சாந்தி. ஒவ்வொருவருக்கும் சுகமாகும் காலம் வேறுபடலாம், ஆனால் கண்டிப்பாக சுகமடைவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் மருத்துவ காப்புறுதி நிலைமைகள் என்னவெனத் தெரியாது. முடிந்தால் இரண்டாவது அபிப்பிராயம் இன்னொரு மருத்துவரிடம் எடுத்துப் பாருங்கள். சத்திர சிகிச்சை செய்யச் சொல்லும் விரல்களில் எதைச் சரி செய்ய முயல்கிறார் இப்போதைய மருத்துவர் என்பதை அறிந்து கொண்டு இரண்டாவது மருத்துவரிடம் செல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி  விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்த சத்திரசிகிச்சையைச் செய்திருந்தார். சிக்கல்கள் எதுவுமில்லாமல் சில மாதங்களில் பழையபடி கையை முழுமையாகப் பாவிக்கத்தொடங்கியிருந்தார்.

சாந்தி அக்கா, தேனீ கொட்டியது மாதிரி கடுக்கின்றதென்றால் மீண்டும் மருத்துவ உதவியை நாடி முழுமையாக பரிசோதனை செய்வது நல்லது.

 விரைவில் பூரண குணமடைவீர்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, shanthy said:

நன்றி குமாரசாமி. 2வாரத்தில் காயம் மாறிவிடும் ஒருமாதம் முடியும் போது எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யலாம் என்று சொல்லித்தான் சத்திரசிகிச்சை நடந்தது. நானும் புதுவருடத்தோடு வேலைக்கு போகலாம் என்று நம்பிக்கையுடன் தான் சிகிச்சைக்கு சம்மதித்தேன். இப்போது நிலமை தேனீர் கப் கையில் வைத்திருக்கவே முடியாது இருக்கிறது.  

சகோதரிக்கு எவ்வளவு காலத்திற்கு பிறகு இயல்பாக வந்தது என்று கேட்டு சொல்லுங்கள். 

 

 இயல்பாக வர அவருக்கு கிடத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சென்றதாம்.வேறு ஒரு சிலரையும் விசாரித்த போதும் உங்களுக்கு இருக்கும் வலிகள் இருந்ததாக தெரியவில்லையாம். எதற்கும் பயப்பிடாமல் வேறு வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்.

வைத்தியர்கள் எல்லோரும் மன தேற்றத்திற்காக  இரண்டு வாரம் மூன்று வாரத்தில் அனைத்தும் சுகமாகும் என்றுதான் கூறுவார்கள். பிரச்சனை என்று வந்தால் புதிய காரணங்கள் ஏதும் கூறுவார்கள்  இது எனது சொந்த அனுபவம்.

நலமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலமாக இருங்கள் அக்கா..வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக அவசரப்படாதீர்கள்..ஒவ்வொருவரது உடல் நிலைகளும் பிரச்சனைகளும் ஒரே மாதிரியாக இருக்காது தானே..சிலருக்கு சில வருடங்கள் குடச் செல்லலாம்..✍️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 

ஆனால் விரல்களை வெட்ட விடாதீர்கள் மருத்துவர்கள் கூட நம்மை சோதித்து பார்ப்பதுதான் சிலருக்கு சில மருந்துகள் பொர்ந்தும் சிலருக்கு சில மருத்துவர்கள் பொருந்தும் 

வேறு வைத்தியரை நாடிப்பார்ப்பதும் நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா நலமடைய வேண்டுகிறேன் ....உடம்பை கவனித்து கொள்ளுங்கள் 

 

Link to comment
Share on other sites

On 22/12/2020 at 19:14, Eppothum Thamizhan said:

சாந்தி அக்கா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

அன்புக்கு நன்றி .💙

On 22/12/2020 at 20:00, suvy said:

சகோதரி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.....! 

அன்புக்கு நன்றி சுவியண்ணா.💙

On 22/12/2020 at 21:01, நிழலி said:

விரைவில் பூரண சுகமடைவீர்கள் சாந்தி. ஒவ்வொருவருக்கும் சுகமாகும் காலம் வேறுபடலாம், ஆனால் கண்டிப்பாக சுகமடைவீர்கள்.

நன்றி நிழலி. 💙

On 22/12/2020 at 22:11, கிருபன் said:

நண்பர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்த சத்திரசிகிச்சையைச் செய்திருந்தார். சிக்கல்கள் எதுவுமில்லாமல் சில மாதங்களில் பழையபடி கையை முழுமையாகப் பாவிக்கத்தொடங்கியிருந்தார்.

சாந்தி அக்கா, தேனீ கொட்டியது மாதிரி கடுக்கின்றதென்றால் மீண்டும் மருத்துவ உதவியை நாடி முழுமையாக பரிசோதனை செய்வது நல்லது.

 விரைவில் பூரண குணமடைவீர்கள் என்று நம்புகின்றேன்.

நண்பரின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி கிருபன். இரண்டு மாதமாகிவிட்டது எனினும் வலி ஒரேமாதிரி இருக்கிறது. 4ம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

On 22/12/2020 at 22:59, குமாரசாமி said:

 இயல்பாக வர அவருக்கு கிடத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சென்றதாம்.வேறு ஒரு சிலரையும் விசாரித்த போதும் உங்களுக்கு இருக்கும் வலிகள் இருந்ததாக தெரியவில்லையாம். எதற்கும் பயப்பிடாமல் வேறு வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்.

வைத்தியர்கள் எல்லோரும் மன தேற்றத்திற்காக  இரண்டு வாரம் மூன்று வாரத்தில் அனைத்தும் சுகமாகும் என்றுதான் கூறுவார்கள். பிரச்சனை என்று வந்தால் புதிய காரணங்கள் ஏதும் கூறுவார்கள்  இது எனது சொந்த அனுபவம்.

நலமோடு இருங்கள்.

தகவலுக்கு நன்றி குமாரசாமி.

On 23/12/2020 at 18:34, யாயினி said:

நலமாக இருங்கள் அக்கா..வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக அவசரப்படாதீர்கள்..ஒவ்வொருவரது உடல் நிலைகளும் பிரச்சனைகளும் ஒரே மாதிரியாக இருக்காது தானே..சிலருக்கு சில வருடங்கள் குடச் செல்லலாம்..✍️
 

அன்புக்கு நன்றி தங்கையே.

On 23/12/2020 at 18:48, தனிக்காட்டு ராஜா said:

சாந்தி அக்கா குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 

ஆனால் விரல்களை வெட்ட விடாதீர்கள் மருத்துவர்கள் கூட நம்மை சோதித்து பார்ப்பதுதான் சிலருக்கு சில மருந்துகள் பொர்ந்தும் சிலருக்கு சில மருத்துவர்கள் பொருந்தும் 

வேறு வைத்தியரை நாடிப்பார்ப்பதும் நல்லது 

நன்றி தம்பி. வேறொரு வைத்தியரிடம் சந்திப்பு நேரம் எடுத்தாச்சு. அடுத்தவாரம் போகிறேன்.

On 24/12/2020 at 22:16, ரதி said:

சாந்தி அக்கா நலமடைய வேண்டுகிறேன் ....உடம்பை கவனித்து கொள்ளுங்கள் 

 

அன்புக்கு நன்றி ரதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.